search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசு"

    இயேசு இந்த உவமையைக் கூறியதற்கு ஒரு சின்ன பின்னணி உண்டு. அவர் வாழந்த காலத்து யூத மக்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு.
    லூக்கா 13 : 6..9

    “ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார். தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”

    இயேசு இந்த உவமையைக் கூறியதற்கு ஒரு சின்ன பின்னணி உண்டு. அவர் வாழந்த காலத்து யூத மக்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு. யாராவது நோய்வாய் பட்டாலோ, யாருக்காவது அகால மரணம் நேரிட்டாலோ ‘அவர்கள் பாவிகள்’ அதனால் தான் இந்த நிலை என மற்றவர்கள் முடிவு கட்டி விடுகிறார்கள்.

    தன்னை நீதிமான்களாக காட்டிக் கொள்பவர்கள் தான் உண்மையிலேயே பாவிகள். அவர்கள் மனம் திரும்ப வேண்டும். மனம் திரும்புதலின் கனியை அவர்கள் கொடுக்க வேண்டும் என்பதையே இயேசு இந்த உவமையின் மூலம் விளக்குகிறார்.

    திராட்சைத் தோட்டத்தில் அத்தி மரம் என்பதே அத்தி மரத்துக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வரம். திராட்சைத் தோட்டத்தின் வளங்களையெல்லாம் உறிஞ்சி எடுத்து வளர முடியும். ஏகப்பட்ட இடத்தையும் அதிகரிக்கும். அப்படிப்பட்ட ஒரு அத்தி மரம் கனி கொடுக்காவிட்டால் தோட்ட உரிமையாளருக்கு அதனால் பயன் என்ன ?

    இங்கே அத்தி மரம் என்பது யூதர்கள் அல்லாதவர்களுக்குக் கிடைக்கும் மீட்பின் வாய்ப்பு எனலாம். நம்மைப் போன்ற பிற இனத்து மக்கள், கிறிஸ்துவின் மந்தையில் இணைக்கப்பட்டவர்கள் அந்த அத்தி மரம் போன்றவர்கள்.

    தோட்ட உரிமையாளர் என்பவர் தந்தையாம் இறைவன். அவரே நம்மை நடுகிறவர். உயிர்களை அனுமதிப்பவர் அவரே. தோட்டக்காரர் மகனாகிய இயேசு கிறிஸ்து.

    அத்தி மரத்தில் கனி இருக்கிறதா என்று தேடிக் கொண்டு தந்தையாம் கடவுளே வருகிறார். கனி கொடுக்கும் காலம் வந்த பின்புதான் அவர் வருகிறார். அதுவும் தொடர்ச்சியாக மூன்று பருவங்கள் அவர் வருகிறார். கனிகள் காணப்படவில்லை. எனவே அதை வெட்டி விட முடிவெடுக்கிறார்.

    இங்கே. தமது மக்களின் மீது கடவுள் கொள்ளும் அன்பு வெளிப்படுகிறது. கனியைத் தேடி, தானே மனிதனைத் தேடி வரும் எதிர்பார்ப்பு நிறைந்த தந்தையாய் அவர் இருக்கிறார்.

    மகனாம் இயேசுகிறிஸ்து நமக்கும் கடவுளுக்குமிடையேயான இடைநிலையாளராய் இருக்கிறார். பரமனாகவும், பரிந்து பேசுபவராகவும் அவரே இருக்கிறார். அவர் தந்தையிடம் நமக்காகப் பரிந்து பேசி ‘இந்த ஆண்டும் இதை விட்டு வையுங்கள்’ என்கிறார்.

    இங்கே, இயேசுவின் அளவிட முடியாத அன்பு வெளிப்படுகிறது. இது வரை கனிதராத மரத்தையும் அன்பு செய்கிறார். அது இனியாகிலும் கனி தரும் என எதிர்பார்க்கிறார். அதற்காக ,’சுற்றிலும் கொத்தி எரு போடுவேன்’ என களமிறங்குகிறார்.

    இயேசு நாம் கனிகொடுக்க வேண்டுமென இடை விடாமல் பணி செய்கிறார். நாம் வாழ்கின்ற நிலத்தைப் பண்படுத்துகிறார். நாம் வரங்கள் உறிஞ்சும் மரமாய் இருக்க உரத்தை நிரப்புகிறார். ஒரு மரம் கனி கொடுக்க என்னென்ன தேவையோ அனைத்தையும் தொடர்ந்து செய்கிறார்.

    இப்போது கனி கொடுக்காமல் இருக்க நம்மிடம் சாக்குப் போக்கு எதுவும் இல்லை. நிலம் சரியில்லை, நீர் கிடைக்கவில்லை போன்ற சால்ஜாப்புகள் இனிமேல் சொல்ல முடியாது. அப்போதேனும் கனி கொடுக்கிறோமா ?

    கனி உடைய மரங்களைக் கண்டு பிடிப்பது எளிது. வாசனை காற்றில் மிதந்து வந்து நம்மை அழைக்கும். கனிகளின் வசீகரம் கண்ணில் தோன்றி நம்மை ஈர்க்கும். அல்லது பறவைகள் அந்த மரத்தின் தலையில் வட்டமிடும். கனி கொடுக்கும் வாழ்க்கை, மலை மேல் இருக்கும் ஊரைப் போன்றது. அது மறைவாய் இருக்க முடியாது.

    அப்படி எந்த அடையாளமும் இல்லாத வாழ்க்கையை நாம் வாழும் போது நம்மிடம் கனி இல்லை என்று பொருள். எனினும் தந்தை வந்து நம்மிடம் ‘ஒரு கனியாவது’ கிடைக்காதா எனும் ஏக்கத்தோடு தேடுகிறார். கிடைக்கவில்லை.

    இனிமேல் இதை வெட்டி விட வேண்டியது தான் என முடிவெடுக்கிறார் தந்தை. இறைவனின் வரங்களையும், அவரிடமிருந்து எல்லா நன்மைகளையும் பெற்று நாம் வளர்கிறோம். அத்தி மரம் போல எல்லா உரத்தையும், நீரையும், காற்றையும், ஒளியையும் வீணாக்குகிறோம். இலைகளையும், கிளைகளையும் கவனிக்கும் அவசரத்தில் கனிகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து விடுகிறோம்.

    கனி கொடுக்காத வாழ்க்கை என்பது நமக்கு மட்டுமான இழப்பல்ல. சமூக இழப்பு. அத்தி மரம் திராட்சைச் செடிகளுக்கான உரத்தைத் தின்று கொழுக்கிறது. அத்தி மரம் இல்லாமல் இருந்திருந்தால் திராட்சையாவது சில கனிகளை அதிகமாய்க் கொடுத்திருக்கும். இப்போது அதுவும் இல்லை.

    அத்தி மரம் வெட்டப்படும் என்பது இந்த உவமை சொல்லும் முத்தாய்ப்புச் செய்தி. வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டே இருக்காது. வெட்டப்படும் நாள் ஒன்று உண்டு. இப்போது நடப்பவை கூடுதலாய்க் கிடைத்திருக்கும் காலம். கிருபையின் காலம். இந்த கிருபையின் நாட்களிலாவது கனி தராவிடில் மரம் தறிக்கப்படுவது நிச்சயம்.

    ‘கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார், இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார், இனித்தீங்கைக் காணாதிருப்பாய்’ (செப்பனியா 3:15) என்பது இறைவாக்கு ஆகும்.
    ‘உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார், அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார், அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார், அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்’. (செப்பனியா 3:17)

    பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையின் மையத்தில் அருமை ஆண்டவரை நீங்கள் வைக்க வேண்டும். அப்போது அவருடைய அளவற்ற ஆசீர்வாதங்களை நீங்கள் காண முடியும். நம்மில் அநேகர் குடும்பம், பிள்ளைகள், வேலை, தொழில், படிப்பு, நண்பர்கள், கடைசியில் ஆண்டவர் என தங்கள் வாழ்வில் ஏதோ ஒரு இடத்தை ஆண்டவருக்கு ஒதுக்கி விடுகிறார்கள்.

    உங்களை உருவாக்கின சர்வ வல்லவருக்கு ஒரு மூலையை அல்ல, உங்கள் வாழ்வின் மையத்தில் அவரை வைக்க வேண்டும். அப்போது தான் அளவுகடந்த ஆசீர்வாதங்களை அவரிடத்திலிருந்து பெறமுடியும்.

    பரிசுத்தம் பண்ணும்போது...

    ‘தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே, ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்’. (II கொரிந்தியர் 6:16,17)

    ஆம், நம்முடைய தேவன் பரிசுத்தமுள்ளவர். ‘நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்’ என I பேதுரு 1:16 கூறுகிறது. உங்கள் வாழ்வில் பரிசுத்தத்திற்கு முதலிடம் கொடுக்கும்போது உங்கள் மத்தியில் தங்கியிருக்கவும், உங்களுக்குள்ளே உலாவி வரவும் அவர் வல்லமை உள்ளவராய் இருக்கிறார்.

    அன்றைக்கு யோசுவா ஜனங்களைப் பார்த்து ‘இன்று உங்களை பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள். நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்’ என கூறியதை யோசுவா 3:5 ல் வாசிக்கிறோம்.

    ‘அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள், அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்’. (நியாயாதிபதிகள் 10:16)

    துதித்துப் பாடும்போது...

    ‘சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு, இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’. (சகரியா 2:10)

    நம்முடைய கர்த்தர் துதிகளின் மத்தியில் தங்கியிருக்கிறார். எங்கு துதி ஆராதனை இருக்கிறதோ அங்கு அவர் நடுவில் வருவார். அது மட்டுமல்ல, ‘என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்’. (யாத்திராகமம் 20:24)

    நாம் கெம்பீரித்துப் பாடி தேவனைத் துதிக்கும்போது அவர் நம் நடுவில் தங்கியிருப்பது எத்தனை ஆசீர்வாதம்.

    பவுலும் சீலாவும் நடு இரவில் கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையிலும் தேவனைப் பாடி துதித்தபடியால் அங்கு தம்முடைய வல்லமையோடு இறங்கி வந்தார். கட்டுகள் கழன்றது. சிறைச்சாலைக் கதவுகளும் திறந்தது. துதி ஆராதனைக்கு அவ்வளவு வல்லமையுண்டு.

    மேலும், பாடித் துதிக்கும்போது நம் நடுவில் அவர் இறங்கி வருவாரென்றால் நமக்கு விரோதமாய் வருகிற சகல எதிரிகளையும் அசுத்த ஆவிகளையும் அவர் விரட்டி நமக்காக யுத்தம் செய்யவும் சத்துருவை மடங்கடிக்கவும் வல்லவராயிருக்கிறார். ஆகவே அவரை ஒவ்வொரு நாளும் துதிக்க மறவாதீர்கள். அப்போது அவர் உங்கள் நடுவில் வருவார். அதிசயங்களைக் காண்பீர்கள்.

    ‘பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப் பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்’. (II நாளாகமம் 20:22)

    ஜெபம் பண்ணும்போது...

    ‘இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்’. (மத்தேயு 18:20)

    நம் அருமை ஆண்டவரை நம்முடைய வாழ்வின் மையத்திற்குக் கொண்டுவர மற்றொரு முக்கியமான வழி, கூடி ஜெபிப்பது ஆகும். அதாவது குடும்ப ஜெபத்தைக் குறித்து குறிப்பிட விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தில் ஒருமனப்பட்டு இரண்டு அல்லது மூன்று பேர் கூடி வந்தால் நிச்சயம் அவர்கள் நடுவில் அருமை ஆண்டவர் வருவார். ஏறெடுக்கும் ஜெபத்தை நிச்சயம் கேட்பார்.

    குடும்ப ஜெபம் ஒரு கர்த்தருடைய பிள்ளைகளுக்கு மிகவும் அவசியமாகும். குடும்ப ஜெபம் இல்லாத வீடு, நான்கு சுவரும் இல்லாத வீடு என பேட்ரிக் ஜோஷ்வா என்ற தேவ மனிதன் கூறுகிறார்.

    குடும்ப ஜெபம் செய்ய முடியாதபடி சத்துரு பல தந்திரங்களைக் கொண்டு வருவான். ஆனால் அதை மேற்கொண்டு அனுதினமும் கூடி ஜெபிக்க அர்ப்பணிக்க வேண்டும்.

    அன்றைக்கு சாத்ராக், மேஜிக், ஆபேத்நேகோ என்ற தேவமனிதர்கள் அக்கினிச் சூளையில் போடப்பட்டாலும் அவர்கள் நடுவிலே நம் ஆண்டவர் உலாவினார். காரணம் அவர்களுடைய ஒருமனப்பாடு.

    உங்கள் குடும்பத்தில் ஜெப வாழ்க்கையை கட்டி எழுப்புவீர்களென்றால் ஆண்டவர் உங்கள் நடுவில் வந்து வாசம் பண்ணுவார். நிச்சயம் நீங்கள் வேண்டிக் கொள்ளுவதற்கும், நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய் உங்களை ஆசீர்வதிப்பார். எனவே உங்கள் தனிப்பட்ட வாழ்வில், குடும்பத்தில், தொழிலில், படிப்பு, வேலை எல்லாவற்றிலும் கிறிஸ்துவுக்கு மைய இடத்தை ஒதுக்கிவிடுங்கள். ஆச்சரியமான ஆசீர்வாதங்களை நிச்சயம் பெறுவீர்கள்.

    ‘கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார், இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார், இனித்தீங்கைக் காணாதிருப்பாய்’ (செப்பனியா 3:15) என்பது இறைவாக்கு ஆகும்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,

    ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54
    சோதனைகள் நம் எதிரில் நிற்கும்போது, நாம் நம்முடைய நினைவுகளைத் தூக்கத்தாலோ, வேறுவகை தவறான சிந்தனைகளாலோ, மது, போதை போன்றவைகளின் உதவியை நாடியோ அவைகளினின்று தப்பியோடப் பார்க்கிறோம்.
    பிரான்ஸ் நாட்டை ஆண்ட மாவீரன் நெப்போலியன், எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் விழிப்பாக செயல்படக்கூடியவர். எந்த வேலையையும் குறித்த நேரத்தில் முடிக்கவேண்டும் என்ற ஆர்வம் உடையவர். அவர் ஒருபோதும் காலம் தவறியதில்லை. ஆனால் அவருடைய தளபதிகளோ, குறிப்பிட்ட நேரத்தில் வருவதை அசட்டையாய் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

    ஒருநாள் நெப்போலியன் தன் படை வீரர்களுக்கும், தளபதிகளுக்கும் பெரிய விருந்து ஏற்பாடு செய்து அன்போடு அழைப்பு விடுத்தார். விருந்து நேரம் வந்தது, தளபதிகள் வழக்கம்போலவே சற்று தாமதமாகவே வந்தார்கள். ஆனால் நெப்போலியனோ தனியாக உட்கார்ந்து, விருந்தை சாப்பிட்டு முடித்துவிட்டார்.

    அவர் கை கழுவும்போது, ஒவ்வொரு தளபதியாக வந்தார்கள். நெப்போலியன் அவர்களைப் பார்த்து, ‘என் அருமை தளபதிகளே, உணவு நேரம் முடிந்துவிட்டது, இப்போது நம் கடமைக்காக புறப்படும் நேரம் தொடங்கிவிட்டது, இனி ஒரு நிமிடம் கூட தாமதம் செய்ய முடியாது, வாருங்கள் போவோம்’ என்று அழைத்துச் சென்றார்.

    மலைத்து நின்ற தளபதிகள் தலைவனின் வார்த்தையை தட்டவும் முடியாமல், பின்வாங்கவும் முடியாமல் வேறுவழியின்றி பசியோடு யுத்தத்திற்கு சென்றார்கள்.

    அன்றுமுதல் அவர்கள் எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் விழிப்பாகவே செயல்பட வேண்டும் என்ற பாடத்தை நெப்போலியனிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்.

    தன் வாழ்வின் மிகுந்த சோதனையான சூழ்நிலையில் இயேசு தன் சீடர்களிடம் ‘சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்’ என்கிறார்.

    கெத்சமனித் தோட்டத்தில் இயேசு

    ஆண்டவர் இயேசு தன் சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், ‘நான் அங்கே போய், இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்’ என்று அவர்களிடம் கூறிவிட்டு, தம் நெருங்கிய சீடர்களான பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூன்று பேரை தம்முடன் கூட்டிச்சென்றார்.

    அப்போது அவர் துயரமும், மிகுந்த மனக்கலக்கமும் அடைந்தவராய் அவர்களிடம், ‘எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு விழித்திருங்கள்’ என்று கூறினார்.

    பிறகு அவர்களையும் விட்டு, சிறிது தூரம் தள்ளிச் சென்று முகங்குப்புற விழுந்து, ‘என் தந்தையே, முடிந்தால்; இத்துன்பக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்’ என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.

    உறங்கிக் கொண்டிருந்த சீடர்கள்

    மன்றாட்டுக்கு பின் இயேசு தம் சீடர்களிடம் வந்தார். அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவினிடம், ‘ஒரு மணி நேரம் கூட என்னோடு விழித்திருக்க வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையது தான், ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்குட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்’ என்றார்.

    மீண்டும் சென்று, ‘என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்’ என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.

    அவர் திரும்பவும் வந்தபோது, சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவர் அவர்களை விட்டு மறுபடியும் சென்று, இதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.

    பிறகு அவர் சீடர்களிடம் வந்து, ‘இன்னும் ஓய்வெடுக்கிறீர்களா?, பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார், எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்’ என்று கூறினார்.

    விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்

    ஆண்டவர் இயேசு, ‘எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது’ என்று சொல்லி மன்றாடத் தொடங்குகிறார். தனது வாழ்வின் துயர் மிகுந்த தருணத்தில், அவரது வியர்வை பெரும் ரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுமளவிற்கு உருக்கமாய் இறைவனிடம் வேண்டினார். தம் சீடர்களும் சோதனையினிமித்தம் மிகுந்த துயர் கொள்ளாதபடிக்கு, ‘விழித்திருந்து இறைவனை வேண்டுங்கள்’ என்கிறார்.

    சோதனைகளும், வேதனைகளும், அதன் நிமித்தம் உருவாகும் ஆழ்துயரங்களும், நம் வாழ்வில் தவிர்க்க முடியாதவைகளே. இவைகள் மனித வாழ்வில் குறுக்கிட்டு, அதன் ஓட்டத்தையும், நோக்கங்களையும் முறியடிக்கும் சக்தி வாய்ந்த ஓர் எதிரி.

    ஆண்டவர் இயேசு முற்றிலும் பாவமற்றவர், தந்தையாம் கடவுளுடன் நெருங்கிய உறவில் இருந்தவர். எனினும், அவருக்கும் சோதனைகள் வந்தது. இதனால், ஆண்டவரின் மனித வாழ்வு முற்றிலும் மனித வாழ்வாகவே இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது. இறைமைந்தன் மனிதனானார் என்பதால், அவருடைய மனித வாழ்வின் எந்தத் துயரங்களும் எளிதாக்கப்படவில்லை.

    ஆண்டவரின் வேதனையான சூழ்நிலையில் அவருடன் விழித்திருக்கவும் இயலாத நித்திரை மயக்கம் சீடர்களை ஆட்கொண்டது. சோதனைகள் நம் எதிரில் நிற்கும்போது, நாம் நம்முடைய நினைவுகளைத் தூக்கத்தாலோ, வேறுவகை தவறான சிந்தனைகளாலோ, மது, போதை போன்றவைகளின் உதவியை நாடியோ அவைகளினின்று தப்பியோடப் பார்க்கிறோம். இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது தான் சீடர்களின் நித்திரை. நாமும் அப்படியிராமல், ‘விழித்திருந்து இறைவனிடம் வேண்டுவோம். விவேகத்துடன் ஆழ்துயர்களை வெல்வோம்’.

    அருட்பணி.ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.
    படிப்படியாக கர்த்தர் உங்களை உயர்த்தி தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார். ஆகவே சோர்ந்து போகாதீர்கள். உங்கள் முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு.
    ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படியே, உங்களுடைய கையின் பிரயாசத்தை நீங்கள் சாப்பிட்டு ஆசீர்வாதமாய் வாழ்வதுதான் தேவனுடைய சித்தம்.

    ‘தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும், அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்’ (பிரச.5:19) என வேதம் தெளிவாக கூறுகிறது.

    அநேகர் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டு மிகுந்த மனவேதனையுடன் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறார்கள். ஒரு பக்கம் பணவீக்கமும் மறுபக்கம் விலைவாசி உயர்வும் அநேக தேவ பிள்ளைகளின் விசுவாசத்தை தடுமாறச் செய்து கொண்டிருக்கிறது. இதனால் கடன்பாரம் மற்றும் சமாதான குறைவுகள் ஏற்பட்டு சஞ்சலத்தை அனுபவித்து வருகிறார்கள்.

    ‘நீ உன் கையின் பிரயாசத்தை சாப்பிடுவாய்’ என்ற உன்னத தேவனின் வாக்குத்தத்தம் உங்கள் வாழ்வில் முற்றிலுமாய் நிறைவேற வேண்டும் என்பது தான் என்னுடைய ஜெபம். அதே வேளையில் இவ்வாக்குத்தத்தம் உங்களில் நிறைவேற நீங்கள் பாத்திரவான்களாய் இருப்பது மிக மிக முக்கியம்.

    விசுவாசத்தோடு வேலை செய்யுங்கள்

    ‘ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்’. (2.தெச.3:8)

    பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவர் காரணமில்லாமலும், திடீரென்றும் ஒருவரை ஆசீர்வதிப்பது இல்லை. கர்த்தருடைய வசனத்தின்படி நம்முடைய வாழ்வு அமையும் போது நிச்சயம் தேவனுடைய ஆசீர்வாதமும், ஐசுவரியமும் நம்முடைய வாழ்க்கையில் தங்கும். தேவனுடைய ஐசுவரியத்தை பெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று வேலை செய்யாத சோம்பேறித்தனமாகும். நாம் ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும் என வேதம் தெளிவாக கூறுகிறது.

    பவுல் வல்லமையுள்ள அப்போஸ்தலனாக இருந்தும் ‘இரவும் பகலும் பிரயாசத்தோடும், வருத்தத்தோடும் வேலை செய்து சாப்பிட்டோம்’ என கூறுகிறார்.

    குடும்பங்களில் வறுமைக்கு மற்றொரு காரணம், கொடுக்கப்பட்ட வேலையில் உண்மையாக இருப்பதில்லை. அதுமாத்திரமல்ல, மனநிறைவோடு செய்யாமல் ஏனோதானோ என அசட்டையாக செய்தல். இன்னும் சிலரை நான் கண்டிருக்கிறேன், தான் விரும்பின வேலை கிடைக்கும் வரை மற்ற எந்த வேலையும் செய்ய மனதில்லாமல் சோம்பேறித்தனமாக வீட்டிற்குள்ளேயே இருப்பார்கள்.

    அன்பானவர்களே, விதைக்காமல் எப்படி அறுக்க முடியும்? அதைப்போல் வேலைதேட பிரயாசப்படாமல் அல்லது வேலை செய்யாமல் தேவனுடைய ஆசீர்வாதங்களை எப்படி அனுபவிக்க முடியும்? சிந்தித்துப்பாருங்கள், நீங்கள் எப்படி?

    பவுல் சொல்லுகிறார், ‘பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்’. (2.தீமோ.2:6.)

    ஆகவே, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் நமக்கு கொடுத்த பெலன், ஞானம், அறிவின்படியே கட்டாயம் வேலை செய்து பிரயாசப்பட வேண்டும். அப்போது தான் தேவனுடைய வாக்குத்தத்தம் உங்களில் நிறைவேறும்.

    தேவ சித்தப்படி வேலை செய்யுங்கள்

    “அதற்குச் சீமோன்: ‘ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை, ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன்’ என்றான்”. (லூக்.5:5)

    மேலே குறிப்பிட்டுள்ள வசனம் பேதுரு தம் வாயினால் கூறின வார்த்தை ஆகும். இது தோல்விக்குரிய வார்த்தையே தவிர ஜெயத்திற்குரிய வார்த்தை இல்லை.

    நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் வேலை செய்து பிரயாசப்படவேண்டும். அதே வேளையில் நாம் செய்கிற வேலையோ, தொழிலோ தேவ சித்தப்படி செய்கின்றோமா? என்பது மிக மிக முக்கியம்.

    பேதுரு இரவெல்லாம் பிரயாசப்பட்டும் ஒரு மீனும் அகப்படாமல் வெறுமையான வலை, படகோடு கரை திரும்பினார்.

    எத்தனை பரிதாபம், நம்மில் அநேகர் வேலை செய்கிறார்கள் அல்லது தொழில் செய்கிறார்கள், அதனிமித்தம் தங்கள் பிரயாசத்தின் பலனையும் தேவனுடைய ஆசீர்வாதத்தையும் அவர்கள் காண முடியவில்லை.

    இப்படிப்பட்டவர்கள் அடிக்கடி தங்கள் வேலையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். தொழில் செய்கிறவர்களும் கூட நஷ்டமடைந்து பலவிதமான தொழிலில் ஈடுபட்டு எல்லாவற்றிலும் பின்னடைவு ஏற்பட்டு, தங்கள் விசுவாசத்திலிருந்து வழிவிலகிப் போகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவனை குறைகூறவும் தயங்குவதில்லை.

    நாம் செய்கிற ஒவ்வொரு பிரயாசத்திலும், வேலையிலும், தொழிலிலும் தேவ சித்தத்தை கட்டாயம் அறிய வேண்டும்.

    ‘ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்’. லூக்.5:4

    ஆண்டவர் கொடுத்த வார்த்தையின்படியே பேதுரு ஆழத்தில் தள்ளிக் கொண்டு போய் வலையைப் போட்ட போது அவன் கையின் பிரயாசத்தை தேவன் ஆசீர்வதித்தார் என வேதம் கூறுகிறது. ‘அதன்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்’. லூக்.5:6

    இம்மட்டும் தேவ சித்தத்தை அறியாமலேயே நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தால் ஆண்டவர் உங்களோடு பேசுகிறார் என்பதை மறந்து விடக்கூடாது. நன்றாக ஜெபம் பண்ணி தேவனுடைய சித்தத்தை தெளிவாக அறிந்து, பெரிய வேலையோ அல்லது சிறிய வேலையோ, பெரிய தொழிலோ அல்லது சாதாரண தொழிலோ எதுவானாலும் சரி சந்தோஷமாக செய்யுங்கள்.

    படிப்படியாக கர்த்தர் உங்களை உயர்த்தி தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார். ஆகவே சோர்ந்து போகாதீர்கள். உங்கள் முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு.

    பழைய தோல்வியை மறந்துவிட்டு விசுவாசத்தோடு தேவ சித்தத்தை அறிந்து முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்கள் முயற்சிக்கு தக்க பலனை ஆண்டவர் தாமே கட்டளையிடுவார். அதுமாத்திரமல்ல, ‘உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்’ என்ற வாக்குத்தத்தம் உங்களில் நிச்சயம் நிறைவேறும்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,
    ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’,
    சென்னை-54.
    சில உவமைகளை இயேசு சொல்லும் போது அது மக்களுக்கு நேரடியாகவும், முழுமையாகவும் புரிய வேண்டும் என விரும்புகிறார். அத்தகைய உவமைகளின் சாராம்சத்தை இயேசுவே சொல்லி விடுகிறார்.
    அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.

    “ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய்,

    ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.

    பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.”

    பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?

    விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்

    இயேசு சொல்கின்ற சில உவமைகள் நமக்குப் புரியாமல் விளையாட்டுக் காட்டுவதுண்டு. சில உவமைகள் சிலருக்குப் புரியக் கூடாது என்றே இயேசு நினைப்பதும் உண்டு. உண்மையான மனதோடு இறைவார்த்தையை தேடுபவர்களுக்கு இறைவன் அவற்றை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

    சில உவமைகளை இயேசு சொல்லும் போது அது மக்களுக்கு நேரடியாகவும், முழுமையாகவும் புரிய வேண்டும் என விரும்புகிறார். அத்தகைய உவமைகளின் சாராம்சத்தை இயேசுவே சொல்லி விடுகிறார். இதுவும் அத்தகைய ஒரு உவமையே.

    இந்த உவமையில் இயேசு ஒரு விதவையைப் பற்றி பேசுகிறார். வேறு எங்கும் உதவிகள் கிடைக்காத, உதவிக்கு வேறு யாரும் இல்லாத ஒரு விதவை. அத்தகைய பலவீனமான மனநிலையில் நாம் இறைவனை நெருங்க வேண்டும். எனக்கு நீதி வழங்க இறைவனால் மட்டுமே முடியும். எனது நிலமையை மாற்றி மீட்பு அளிக்க இறைவனால் மட்டுமே முடியும் எனும் சிந்தனையை நாம் அடிப்படையாய்க் கொண்டிருக்க வேண்டும்.
    நமது நிலமெனும் மனதில், இறைவார்த்தையெனும் விதைகளைப் போல பரிசுத்த ஆவி எனும் விதைகளை நடுவதையும் இந்த உவமை விளக்குகிறது.
    இயேசு வாழ்ந்த காலத்தில் நிறைய விஷயங்களை உவமைகளாகப் போதித்தார். இயேசுவின் உவமைகள் எப்போதுமே உழைப்பாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் புரிந்து கொள்ளும் வகையிலேயே இருக்கும்.

    “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாட்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது”. (மார்க் 4:26-29)

    விதை, இறைவனின் வார்த்தைகள். அந்த வார்த்தைகள் நடப்படும் நிலம் மனித இதயம். விதைக்கப்படும் இறைவார்த்தை மனித மனங்களில் புதைபட்டு, முளைவிட்டுக் கதிராகவும், தானியமாகவும் மாறுகிறது.

    விதை இருப்பது அவசியம்

    விதைக்க வேண்டுமெனில் முதல் தேவை, கைவசம் விதைகள் இருப்பது. இன்று இறைவார்த்தை பைபிள் வழியாக நமக்கு எளிதாகக் கிடைக்கிறது. இறைவார்த்தை எனும் விதைகள் எந்த அளவுக்கு நம்மிடம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாம் நிலங்களில் நட முடியும். எனவே இறைவார்த்தைகளை தொடர்ந்து படிக்க வேண்டும்.

    விதைத்தல் அவசியம்

    விதைகள் மண்ணில் புதையுண்டால் தான் பலன் தர முடியும். தனியே இருக்கும் விதைகள் முளைகளாவதில்லை. இறைவனின் வார்த்தையும் தனியே இருக்கும் வரை வார்த்தையாகவே இருக்கிறது. அது மனித மனங்களில் பதியனிடப்பட்ட பின்பு தான் உயிர் பெறுகிறது.

    நிலங்கள் அவசியம்

    விதைகள் இருந்தாலும், விதைப்பவன் இருந்தாலும் கூட நிலம் இல்லையேல் அந்த விதைப்பில் எந்த பயனும் இல்லை. எனவே இறைவார்த்தை எனும் விதை நமது இதயங்களில் நுழைவதற்குத் தக்கபடி நமது இதயங்களை உழுது செம்மைப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம்.

    கற்பாறை நிலமாகவோ, வழியோர நிலமாகவோ, முட்புதராகவோ இருக்குமிடத்தில் விதைப்பது பயனளிப்பதில்லை.

    காலம் அவசியம்

    விதைத்த உடனே பயனை எதிர்பார்ப்பது மூடத்தனம். விதைகள் பலனளிக்க காலம் தேவைப்படும். அவை வேரிறக்கவும், முளை விடவும், வளரவும் நேரம் தேவைப்படும். அவசரப்படுவதால் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை. விதைப்பவனைப் போல, விதைக்கும் பணியைச் செய்து விட்டுக் காத்திருக்க வேண்டும்.

    கட்டாயப்படுத்த முடியாது

    சீக்கிரம் முளைத்து வா என நிலத்தையோ, முளையையோ நாம் கட்டாயப்படுத்தி விட முடியாது. இறைவார்த்தை பயனளிக்க இறைவன் ஒரு திட்டத்தை வைத்திருப்பார். அந்த திட்டத்தின் படியே அனைத்தும் நடக்கும். நம்முடைய அழுத்தங்கள் விதைகளையும், நிலத்தையும் பாழ்படுத்தலாமே தவிர எந்த பயனையும் செய்யாது.

    விதை முளைப்பது தெரிவதில்லை

    எந்தக்கணத்தின் விதையின் தோடுடைத்து முதல் வேர் வெளிக்கிளம்பியது?, எந்தக்கணத்தில் மண்ணைக் கீறி முளை வெளியே வந்தது?.... யாரும் அறிவதில்லை. இறைவன் ஒருவரே அதை அறிகிறார்.

    எனவே இறைவார்த்தைகளை நாம் விதைத்தபின் அது எப்போது முளைக்கும் என்பது இறைவனின் சித்தத்தையும், நிலத்தின் தன்மையையும் பொறுத்தது மட்டுமே.

    மூன்று நிலைகள்

    முளையாக, கதிராக, கதிருக்குள் தானியமாக என மூன்று நிலைகளில் விதைகளின் வளர்ச்சி இருக்கும். முளையாக இருப்பது வார்த்தைகளைக் கேட்டு அதை கொஞ்சமாய் வெளிப்படுத்துவது. ஆனால் அந்த முளையினால் பிறருக்கு எந்த பயனும் இல்லை.

    இரண்டாவது கதிர். கதிர் பார்வைக்கு பயனளிப்பது போல தோன்றினாலும் உள்ளுக்குள் எதுவும் இருக்காது. ஒருவகையில் வெளிவேடமான வாழ்க்கை என சொல்லலாம். வார்த்தைகளைக் கேட்டு, உள்வாங்கிக் கொள்வதுடன் நின்று விடும். பயனளிக்கும் அந்த கடைசி நிலையை எட்டாமல் போய்விடும்.

    மூன்றாவது தானியம் நிரம்பிய கதிர். இது தான் கடைசி நிலை. இது தான் தேவையான நிலை. உள்ளுக்குள் முழுமை யடைந்து பிறருக்கு பயனளிக்கும் நிலை.

    பயனளிப்பது நிலம்

    விதைகளை நிலத்தில் போடுகிறோம். விதை தானே பயனளிக்க வேண்டும்? இங்கே நிலம் பயனளிக்கிறது. இறைவனின் வார்த்தைகள் விழுந்த மனிதர்கள் தான் பயனளிக்கத் தொடங்குகிறார்கள். வார்த்தைகள் இருக்கும் இதயங்கள் தங்களுடைய வாழ்க்கையில் அதைப் பிரதிபலித்து பயனளிக்கின்றனர். நமது இதயமெனும் நிலத்தை கவனமாய் பாதுகாப்போம்.

    அறுவடை பயன்

    மனங்கள் பயனளிக்க ஆரம்பிக்கும் போது அந்த விதைகளை விதைத்தவர்கள் பயனடைகின்றனர். நமது இதயமெனும் நிலம் பண்படும் போது அந்த பயன் நமக்குக் கிடைக்கிறது.

    தூய ஆவியெனும் விதை

    நமது நிலமெனும் மனதில், இறைவார்த்தையெனும் விதைகளைப் போல பரிசுத்த ஆவி எனும் விதைகளை நடுவதையும் இந்த உவமை விளக்குகிறது. தூய ஆவியானவரை இதயத்தில் ஏற்றுக்கொள்ளும் வகையில் நமது இதயத்தைப் பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

    -சேவியர், சென்னை.
    தனது பணியைச் செய்பவர்களை இறைவன் வெறுமனே அனுப்புவதில்லை. அவர்களுக்கு நிச்சயம் பரிசுகளைக் கொடுக்கிறார்.
    மத்தேயு 20 : 1..16

    “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

    ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள்.

    மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

    ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார்.

    மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார்.

    எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.

    அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே’ என்றார்கள்.

    அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.

    இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்” என்று இயேசு கூறினார்
    உண்மையாகவே நம் அருமை ஆண்டவர் கரத்திலுள்ள சகல ஆசீர்வாதங்களுக்கும் நீங்கள் பாத்திரவான்கள் என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள். இந்த கிருபையை நினைத்து தேவனை ஸ்தோத்தரியுங்கள்.
    ஆசீர்வாதத்திற்கு பாத்திரவான்களாக மாறுவது எப்படி?. உங்கள் விசுவாசத்தை கிரியையில் கொண்டு வாருங்கள்.

    ‘கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்’. ஆதி.12:4

    ஆம், கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை மறந்து விடாதீர்கள். வாக்குத்தத்தத்தில் உள்ள சகல ஆசீர்வாதங்களும் உங்களிடத்திற்கு வந்து சேர மிகவும் முக்கியம் உங்கள் விசுவாசமே.

    ஆபிரகாம் விக்கிரக ஆராதனை குடும்பத்தில் பிறந்தவன். ஐசுவரியமும் கனமும் இவனுக்குத் தூரமாய் இருந்த காலத்தில் கர்த்தர் இவனை ஆதி.12-ம் அதிகாரத்தில் சந்திக்கிறார். தன்னில் தேவனுடைய ஆசீர்வாதங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக தன் தேசத்தையும், தன் இனத்தையும், தன் தகப்பன் வீட்டையும் விட்டுப் புறப்பட்டுப் போக அவன் தயங்கவில்லை. அவனுடைய விசுவாசமும் நம்பிக்கையும் கர்த்தர் மேல் இருந்தது.

    உங்கள் விசுவாசத்தை தளரவிடாமல் குழப்பமான நேரங்களிலும், எதிர்மறையான வார்த்தைகள் உங்கள் நாவில் வராதபடிக்கு விசுவாசம் நிறைந்த வார்த்தைகளைப் பேசி தேவனை ஸ்தோத்தரியுங்கள். நிச்சயம் அற்புதங்கள் உங்கள் வாழ்வில் நிகழும்.

    விலக்குங்கள்

    ‘இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம், நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன், நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்’. ஆதி.13:9

    வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க ஆபிரகாமும், லோத்தும் புறப்பட்டுப் போகும் பாதையில் லோத்துடைய மந்தை மேய்ப்பருக்கும் ஆபிரகாமுடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று என ஆதி.13:7 சொல்கிறது.

    இந்த வசனத்தை நீங்கள் உற்று நோக்குங்கள். கர்த்தர் சொல்லி, கர்த்தரால் வழிநடத்திக் கொண்டு செல்லும்போது வாக்குவாதங்கள் வந்திருக்கக் கூடாது. ஆனால் அவைகள் சம்பவித்துவிட்டன என நாம் வாசிக்கிறோம்.

    இதற்குக் காரணமென்னவெனில் ‘தன்னோடு லோத்தை அழைத்துக் கொண்டு போ’ என்று ஆண்டவர் சொல்லாதபோது ஆபிரகாம் அவராகவே தன்னோடு லோத்தைக் கூட்டிக் கொண்டு சென்றதே.

    ‘கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான், லோத்தும் அவனோடே கூடப் போனான்’. ஆதி.12:4

    வாக்குத்தத்தம் லோத்துக்கல்ல, ஆபிரகாமுக்கு மட்டும் தான். இச்சம்பவத்திலிருந்து நாம் அறிகிறதென்ன, இவ்வுலக வாழ்வின் பயணத்தில் ஆண்டவருக்குப் பிரியமில்லாதவர்களோடு நாம் தொடர்பு வைக்கும்போது தற்போது இனிமையாக இருந்தாலும் நாளடைவில் அவர்கள் நம் ஆசீர்வாதத்திற்கு இடைஞ்சலைக் கொண்டு வருவார்கள்.

    ஆகவே, இன்றே கர்த்தருக்குப் பிரியமில்லாதவர்களை உங்களைவிட்டு விலக்குங்கள். ஆதி.13:9 -ல் அவர்கள் பிரிந்து விட்டார்கள் என வேதம் கூறுகிறது. இதைத்தான் ஆண்டவர் உங்களிடத்திலும் எதிர்பார்க்கிறார்.

    ஆபிரகாமோடு இடைபட்ட தேவன்

    ‘லோத்து ஆபிரகாமைவிட்டுப் பிரிந்த பின்பு, கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்’. ஆதி.13:14

    மேற்கண்ட வசனம் மிக முக்கியமானது. லோத்து ஆபிரகாமோடு இணைந்திருந்தவரைக்கும் கர்த்தர் ஆபிரகாமோடு பேசவில்லை. எப்போது லோத்து பிரிந்து சென்றானோ அதற்குப் பிறகு தான் கர்த்தர் மறுபடியும் தனது தொடர்பை ஆபிரகாமோடு ஏற்படுத்தினார்.

    உங்கள் ஆசீர்வாதங்களை நீங்கள் அளவில்லாமல் சுதந்தரிக்க தேவன் உங்களோடு இடைபடுதல் அவசியம் தேவை.

    ஆகவே, லோத்தின் ஆவிகளைத் துரத்துங்கள். தேவனுக்குப் பிரியமில்லாதவர்களோடு தொடர்பு, அப்படிப்பட்டவர்களோடு ஐக்கியம் இவை அனைத்தும் லோத்தின் சுபாவங்கள் என ஆதி.13:12,13 கூறுகிறது.

    ஆபிரகாமின் ஒரே நோக்கம் ஆசீர்வாதத்தைச் சுதந்தரிப்பது தான். உங்களின் நோக்கமும் அப்படியே இருக்கட்டும். தீர்மானியுங்கள், நீங்கள்தான் ஆசீர்வாதத்திற்குப் பாத்திரவான்கள், அல்லேலூயா.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    ஒளியின் பிள்ளைகள் ஆன்மீக வாழ்வின் வீழ்ச்சியின் போது தங்கள் ஆன்மீக வெளிச்சத்தைப் பயன்படுத்தி விண்ணகத்துக்கு உரியவற்றைத் தேடுவதில்லை.
    இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு,

    ‘உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.

    அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.

    பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார்.

    அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார்.

    பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை⁕ கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.

    நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.

    “ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.

    மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.

    இயேசு சொன்ன உவமைகளில் அதிகம் அறியப்படாத, அலசப்படாத‌ உவமை இது எனலாம். இவ்வுலகின் மக்கள் என இயேசு குறிப்பிடுவது விண்ணக வாழ்க்கையைக் குறித்துக் கவலைப்படாத, மண்ணுலக வாழ்க்கையே முக்கியம் எனக் கருதி வாழும் மனிதர்களை.

    ஒளியின் மக்கள் என இயேசு குறிப்பிடுவது இறைமகன் இயேசுவின் போதனைகளைக் கேட்டு, ஆன்மீக வெளிச்சத்தில் நடப்பவர்களை. இவர்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாட்டை இயேசு பேசுகிறார்.

    இவ்வுலக மக்கள் ஒரு நெருக்கடி வரும்போது தங்களுடைய புத்தியையெல்லாம் செலவழித்து அந்த சிக்கலிலிருந்து வெளிவர முயல்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.

    ஆனால் ஒளியின் பிள்ளைகள் ஆன்மீக வாழ்வின் வீழ்ச்சியின் போது தங்கள் ஆன்மீக வெளிச்சத்தைப் பயன்படுத்தி விண்ணகத்துக்கு உரியவற்றைத் தேடுவதில்லை.

    இந்த உலகின் செல்வங்கள் அழிந்து போகக் கூடியவை அவற்றால் எந்த பயனும் இல்லை. ஆனால் அந்த பணத்தை வைத்துக் கொண்டு ஆன்மீக வாழ்வுக்கு உரியவற்றைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள் என அறிவுரை சொல்வதற்காக இயேசு இந்த உவமையைச் சொல்கிறார்.

    இறைநீதியை மட்டும் முழுமனதுடன் தேடுபவர்களுக்கு, அவர்கள் கேட்பதைவிட அதிகம் தர இறைவன் தயாராக இருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள் (மத்.6:33).
    உலகில் எல்லாருமே இக்கட்டான நிலைகளைத் தாண்டித்தான் வாழ வேண்டியதுள்ளது. பலரது பேராசைகள், மற்றவர்களின் வாழ்வாதாரங்களில் மறைமுக தாக்கங்களை ஏற் படுத்துகின்றன. உதாரணமாக, பேராசைகளை அடைவதற்கு லஞ்சம், ஊழல் போன்றவை பெரிய அளவில் உதவுவதால் பல்வேறு நன்மைகள், பணம் உள்ளவர்களிடமே சென்று தஞ்சம் அடைந்து கொண்டிருக்கின்றன.

    எனவே நியாயமான நன்மைகளைக்கூட எளியவர்கள் பெறுவதற்கு வழியில்லாமல் போய், தவித்து அலையும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் நல்ல வழிகாட்டுதலை நாடும் இதுபோன்றவர்களை அற்புதம், அதிசயங்கள் தொடர்பான போதனைகள் அதிக அளவில் ஈர்த்துவிடுகின்றன.

    வியாதி, வறுமை, கடன் போன்ற சிக்கல்களில் இருந்து மீட்பது போன்ற போதனைகளை, கனிவான வார்த்தை களுடன் கூறுவதையே அவர்கள் அதிகமாக நம்புகின்றனர். ஏனென்றால், பல்வேறு சிக்கல்களால் தவித்துக் கொண்டிருக்கும் எவருக்கும் இதுபோன்ற ஆறுதலான வார்த்தைகளை சொன்னாலே சிறிது நேரத்துக்கு மனஅமைதி கிடைக்கும். இப்படி கிடைக்கும் தற்காலிக மனஅமைதிதான், உலக வாழ்க்கைக்கான போதனைகளை மட்டுமே நாடிச்செல்ல வழி அமைத்துக் கொடுக்கிறது.

    பாங்களுக்கு எதிரான கண்டிப்பான போதனைகள்தான், தனது இயல்பான பாவ வாழ்க்கையில் இருந்து விலகி, மனந்திரும்பி, இயேசுவின் வழிகளை நோக்கிச் செல்ல பாவிகளுக்கு தூண்டுதலாக உள்ளன. ஆனால் கண்டிப்பான வார்த்தைகள், ஈர்ப்பை ஏற்படுத்தாது.

    போதகங்கள் எதை மையப்படுத்தி இருந்தாலும் சரி, பக்தியை முதல் படியில் இருந்து பின்பற்றுகிறோமா என்பதை ஒவ்வொருவரும் ஆராய வேண்டும். அதிகாலையில் எழுந்து ஜெபி, உபவாசம் இருந்து ஜெபி, வேதத்தை தினமும் வாசித்து தியானம் செய், ஆலயத்துக்கு போகும்போது வேதத்தை கையில் வைத்துக்கொள், பொருளாதார ஆசியைப் பெற காணிக்கை கொடு என்றெல்லாம் மக்கள் போதிக்கப்படுகின்றனர்.

    ஆனால் இறைவனை நோக்கி ஜெபிப்பதற்கும், காணிக்கை கொடுப்பதற்குமான தகுதிநிலை (முதல் படி) பற்றிய ஆலோசனைகள் பல போதனைகளில் இடம்பெறுவதில்லை. அதிகாலை ஜெபம், வசன தியானம், வாரம் தவறாத ஆலய வழிபாடு, காணிக்கையை அள்ளி வழங்குதல் போன்றவற்றை பின்பற்றுவதால் மட்டுமே ஒருவனுடன் இறைவன் இடைபட்டுவிடுவாரா என்றால் இல்லை. அப்படியானால் ஒருவனது வாழ்க்கையில் இறைவன் இடைபடக் கூடிய தகுதிநிலை என்ன? என்பதை ஆராய்ந்து பார்க்கலாம்.

    நீதிமொழிகள் 15:8,9-ம் வசனங்களில், “துன்மார்க்கருடைய பலி, கர்த்தருக்கு அருவருப்பானது. செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். துன்மார்க்கரின் வழி, கர்த்தருக்கு அருவருப்பானது. நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்” என்று கண்டிப்பு வார்த்தைகளுடன் கூறப்பட்டுள்ளது.

    யோவான் 9:31-ம் வசனத்தில், “பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லை என்று அறிந்திருக்கிறோம். ஒருவன் தேவபக்தியுள்ளவனாய் இருந்து அவருக்கு சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்” என்று வாசிக்கிறோம்.

    மேலும், “பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்” என்று மனந்திரும்புவதற்கு ஏற்ற ஜெபத்தை முன்வைத்த பாவியின் ஜெபத்தையே இறைவன் கேட்டார் என்றும் வேதம் சுட்டிக்காட்டுகிறது. ஆக, ஒருவன் செய்யும் ஜெபம் கேட்கப்பட வேண்டும் என்றால், துன்மார்க்கத்தை விட்டு மனந்திரும்ப விரும்பும் பாவியாக அவன் இருக்க வேண்டும்; அல்லது, மனந்திரும்பி பக்திப்பாதையில் செம்மையாக நடக்கிறவனாக இருக்க வேண்டும் என்பதை அறியலாம்.

    துன்மார்க்கன் என்ற வார்த்தைக்கு ஒரு கோணத்தில் மட்டும் அர்த்தத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். பலரை கொலை செய்தவன், கொள்ளை அடிப்பவன், பலாத்காரங்களை செய்பவன், லஞ்ச லாவண்யங்களுடன் சொகுசு வாழ்க்கையில் இருப்பவன் என்றெல்லாம் நினைத்து அப்படிப்பட்டவர்களை மனதில் நிறுத்திக்கொள்கிறோம். அது சரிதான். ஆனால் அந்தக் கோணத்தோடு அந்த அர்த்தம் முடிந்துவிடவில்லை.

    பிறருக்கோ அல்லது தனக்கோ துன்பம் தரக்கூடிய மார்க்கத்தில் (வழியில்) உள்ள பாவங்களைச் செய்யும் அனைவருமே துன்மார்க்கரே. உதாரணமாக, புகைத்தல், மது அருந்துதல், ரகசிய சரீர பாவங்கள் போன்றவற்றை ஒருவன் செய்தால், பிந்தைய காலத்தில் அவனது சொந்த உடல் துன்பமடையும். இறைவன் தந்த உடலை அந்த பாவங்கள் மூலம் துன்பப்படுத்திய அவனும் துன்மார்க்கனே. இது சொந்த சரீரத்துக்கு எதிரான துன்மார்க்கம்.

    மேலும், அதிக எரிச்சல், கோபம் போன்ற சில ஜென்ம சுபாவங்களின் அடிப்படையிலான பேச்சு மற்றும் செயல்பாட்டினால் மற்றவர்களுக்கு ஏற்படும் துன்பமும், அதைச் செய்தவனை துன்மார்க்கனாக்கி விடுகிறது. அதோடு, உள்ளத்தில் இருந்து புறப்படும் பொறாமை, இச்சை, பெருமை, பொருளாசை, பகை போன்றவற்றின் அடிப்படையிலான செயல்பாட்டினால் மற்றவர்களுக்கு துன்பம் ஏற்படும்போது அவன் துன்மார்க்கன் ஆகிறான்.

    ஆக, உடல், உள்ளம், சுபாவம் ஆகிய 3 வகையில் பாவம் செய்யும் எந்தவொரு மனிதனும் துன்மார்க்கனே. இப்படிப்பட்ட நிலையில் இருந்து நீங்குவதற்கான இறைவழியை நாடுவதே, வாழ்க்கையில் இறைவன் இடைபடக்கூடிய தகுதியை நாடும் நிலையாகும். அதுதான் பக்திக்கு முதல்படி. அந்த முதல் படியில் ஏறாமல், அதிகாலை ஜெபம், வசன தியானம், வாரம் தவறாத ஆலய வழிபாடு, காணிக்கையை அள்ளி வழங்குதல் போன்றவற்றை பின்பற்றுவது இறைவனுக்கு அருவருப்பாகிவிடுகிறது என்பதை நீதிமொழிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

    மற்றவனுக்கு துன்பம் இழைத்துவிட்டு, அதை நிவர்த்தி செய்யாமல் ஆலயத்துக்கு காணிக்கை கொண்டு வராதே என்று இயேசு நேரடியாகவே எச்சரித்துள்ளார் (மத்.5:23,24). இறைவனுக்கு அருவருப்பானதை செய்தால் பல்வேறு துன்பத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை பல உதாரணங்கள் மூலம் வேதம் நமக்கு காட்டியுள்ளது.

    எனவே பாவங்களில் இருந்து மனந்திரும்புவது, பாவ நிவர்த்தி ஆகியவற்றுக்கான போதனைகளை மட்டுமே முதலில் நாடுங்கள், அதையே தேடுங்கள். மனந்திரும்பி, பாவநிவர்த்தி செய்யும் இறைநீதியில் நடப்பதுதான் பக்தியில் செம்மையான நிலையாகும். இறைநீதியை மட்டும் முழுமனதுடன் தேடுபவர்களுக்கு, அவர்கள் கேட்பதைவிட அதிகம் தர இறைவன் தயாராக இருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள் (மத்.6:33).

    பணத்தை வைத்துக் கொண்டு ஆன்மீக வாழ்வுக்கு உரியவற்றைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள் என அறிவுரை சொல்வதற்காக இயேசு இந்த உவமையைச் சொல்கிறார்.
    லூக்கா 16 : 1 முதல் 10 வரை

    இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு,

    ‘உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.

    அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.

    பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார்.

    அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார்.

    பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை⁕ கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.

    நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.

    “ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.

    மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.

    இயேசு சொன்ன உவமைகளில் அதிகம் அறியப்படாத, அலசப்படாத‌ உவமை இது எனலாம். இவ்வுலகின் மக்கள் என இயேசு குறிப்பிடுவது விண்ணக வாழ்க்கையைக் குறித்துக் கவலைப்படாத, மண்ணுலக வாழ்க்கையே முக்கியம் எனக் கருதி வாழும் மனிதர்களை.

    ஒளியின் மக்கள் என இயேசு குறிப்பிடுவது இறைமகன் இயேசுவின் போதனைகளைக் கேட்டு, ஆன்மீக வெளிச்சத்தில் நடப்பவர்களை. இவர்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாட்டை இயேசு பேசுகிறார்.

    இவ்வுலக மக்கள் ஒரு நெருக்கடி வரும்போது தங்களுடைய புத்தியையெல்லாம் செலவழித்து அந்த சிக்கலிலிருந்து வெளிவர முயல்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.

    ஆனால் ஒளியின் பிள்ளைகள் ஆன்மீக வாழ்வின் வீழ்ச்சியின் போது தங்கள் ஆன்மீக வெளிச்சத்தைப் பயன்படுத்தி விண்ணகத்துக்கு உரியவற்றைத் தேடுவதில்லை.

    இந்த உலகின் செல்வங்கள் அழிந்து போகக் கூடியவை அவற்றால் எந்த பயனும் இல்லை. ஆனால் அந்த பணத்தை வைத்துக் கொண்டு ஆன்மீக வாழ்வுக்கு உரியவற்றைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள் என அறிவுரை சொல்வதற்காக இயேசு இந்த உவமையைச் சொல்கிறார்.
    நம்முடைய சகல தேவைகளையும் சந்திக்க வல்லவராய் நம் ஆண்டவர் இருக்கிறார். மலை போன்று தோன்றுகிற உங்கள் துன்பங்களை நீக்கிப்போட அவர் வல்லவராய் இருக்கிறார்.
    கர்த்தர் வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய சர்வ வல்லவர். தம்முடைய வார்த்தையினாலே இந்த முழு உலகத்தையும், அதில் இருக்கிற ஒவ்வொன்றையும் உண்டாக்கினார். அதைப்போல் கர்த்தர் நம்முடைய சகல தேவைகளையும் சந்திக்கிறவராய் இருக்கிறார்.

    இந்நாளில் எல்லா தேசங்களிலும் பொருளாதாரத்தில் நெருக்கடிகள், பொருளாதார பின்னடைவுகள் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நெருக்கடியால் பெரிய பணக்காரர்கள் முதல், வறுமை கோட்டிற்குக் கீழே வாழும் ஏழை எளிய ஜனங்கள் வரை பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    இதன் நிமித்தம் பாவம் பெருகுகிறது. சமாதானம் குறைகிறது. தற்கொலை, மரணம் போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றது.

    அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதும் போது ‘என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்’ (பிலிப்.4:19) என்று எழுதியிருக்கிறார்.

    ஆகவே குறைவை நிறைவாக்கும் நம் தேவன் உங்கள் சகல குறைவுகளையும் நிறைவாக்க வல்லவராய் இருக்கிறார். நிச்சயம் கர்த்தருடைய வல்லமை உங்கள் வாழ்வில் வெளிப்பட்டு உங்களின் சகல குறைவுகளும் நிறைவாக்கப்படும்.

    குறைவு எப்போது ஏற்படுகிறது?

    ‘எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி...’ (லூக்.15:14)

    நம்முடைய வாழ்வில் குறைவு அல்லது நெருக்கடி வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் மிக மிக முக்கியமான ஒரு காரணம் தேவனாகிய கர்த்தர் விரும்பாததை நாம் செய்யும் போது நம் வாழ்வில் குறைவு ஏற்படுகிறது.

    மேற்கண்ட வசனத்தை கவனமாய் வாசித்துப் பாருங்கள். தகப்பன் வீட்டில் இளைய குமாரன் இருந்த காலமெல்லாம் அவனுக்குள்ளே எந்த குறைவும் ஏற்படவில்லை. நிறைவான பொருளாதாரம், நிறைவான சந்தோஷம், அவனில் காணப்பட்டது.

    அவன் தகப்பன் வீட்டைவிட்டு தன் சொத்தை எல்லாம் பிரித்துக் கொண்டு பாவிகளும், கெட்ட நண்பர்களும், விபசாரிகளும் நிறைந்த இடத்திற்கு (தூர தேசம்) சென்ற போது தான் எல்லாவற்றையும் அவன் இழந்தவனாய் குறைவுபடத் தொடங்கினான்.

    ஆண்டவர் விரும்பாத காரியங்களில் ஈடுபடும் போது நாமாகவே குறைவுகளில் சிக்கிக் கொள்கிறோம். குறைவு என்ற பிரச்சினைக்கு மூலகாரணமாய் இருப்பவன் பிசாசு. ஆகவே குறைவை உண்டாக்குகிற அவனை இயேசுவின் நாமத்தில் எதிர்த்து நிற்கும் போது குறைவு என்ற ஆவி நம்மை விட்டு ஓடிப்போகும்.

    மேலும், குறைவு வருவதற்கு மற்றொரு காரணம், நமக்கு உண்டான வருமானத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்கிற ஞானம் இல்லாமையே. அநேக குடும்பங்களில் ஞானமில்லாமல், பொறுப்பில்லாமல் வருவாய்க்கு அதிகமாய் செலவு செய்து, கடன்பட்டு, கடைசியில் குறைவுள்ளவர்களாய் மாறுகிறார்கள். இப்படிக் குறைவான வாழ்வு ஒவ்வொரு ஆத்மாவையும் மிகவும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிற இந்நாட்களில் அருமை ஆண்டவரிடத்தில் விசுவாசத்தோடு வருவீர்களேயானால் உங்கள் குறைவை நிறைவாக்கி, சகல தேவைகளையும் சந்திக்க அவர் வல்லவராய் இருக்கிறார்.

    நம் தேவைகளை கர்த்தர் எப்படி சந்திப்பார்?

    ‘என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்’ (யோவான் 14:14).

    நம்முடைய தேவை சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய பார்வையில் எல்லாமே லேசான காரியம். ஏனென்றால் பூமியும் அதின் நிறைவும் ஆண்டவருடைய கரங்களுக்குள் அடங்கியிருக்கிறதல்லவா.

    ஆகவே, ஆண்டவருக்கு நம் தேவைகளை சந்திக்க முடியும். விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்படும் நூறு வயதான ஆபிரகாமிற்கு மகனாக ஈசாக்கைக் கொடுத்தவர் அல்லவா நம் ஆண்டவர்.

    தேவனுடைய வார்த்தையின்படி, கேரீத் என்ற ஆற்றின் அருகே மறைந்து வாழ்ந்த எலியாவிற்கு காகத்தின் மூலம் ஆகாரம் கொடுத்து அவரது தேவைகளை பூர்த்தி செய்தவர் அல்லவா நம் ஆண்டவர்.

    நம் அருமை ஆண்டவர் சொன்ன வாக்குத்தத்தம் என்னவெனில், ‘என் நாமத்தினாலே எதைக் கேட்டாலும் நான் தருவேன்’.

    உங்கள் கண்களுக்கு முன்பாய் தோன்றுகிற சகல பிரச்சினைகளையும், போராட்டங்களையும் கண்டு மலைத்துப் போகாமல் உங்கள் நாவில் இயேசுவின் நாமத்தில் பிரார்த்தனை செய்து அற்புதங்களை எதிர்பாருங்கள். அவரது நாமத்தை உங்கள் நாவில் உச்சரிக்கும்போதே உங்கள் தேவைகளை சந்திக்க அவர் ஆவலோடு வருவார்.

    நம்முடைய சகல தேவைகளையும் சந்திக்க வல்லவராய் நம் ஆண்டவர் இருக்கிறார். மலை போன்று தோன்றுகிற உங்கள் துன்பங்களை நீக்கிப்போட அவர் வல்லவராய் இருக்கிறார். உங்களைச் சுற்றியிருக்கிற தரித்திரத்தின் ஆவியை விரட்டி அடிக்க அவர் ஜீவனுள்ளவராயிருக்கிறார்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,

    இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    ×