என் மலர்
நீங்கள் தேடியது "snowfall"
- பயிர் பாதுகாப்பில் கூடுதல் கவனம்
- நகரங்களை விட மரங்கள் அடர்ந்திருக்கும் கிராமங்களில் கூடுதலாக பனி பெய்கிறது
மடத்துக்குளம்:
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் தக்காளி, மிளகாய், பீட்ரூட், வெண்டை, கத்தரி உள்ளிட்ட காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதாலும், ஈரப்பதத்தாலும் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அதற்கேற்ப விலை ஏற்றம் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில்பயிர் பாதுகாப்பில் கூடுதல் கவனம்செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
இதுகுறித்து குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-
மழைக்குப் பின் நிலவி வரும் குளிர்ந்த வானிலை என்பது பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற பருவநிலையாக இருக்கும். தற்போதைய நிலையில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இலைகளின் அடியில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் வாய்ப்பு உள்ளது. இவை இலையில் உள்ள சாற்றை உறிஞ்சுவதோடு பூஞ்சணங்கள், வைரஸ், பாக்டீரியா, மைக்கோ பிளாஸ்மா போன்ற சில நோய்க் கிருமிகளையும் செடிகளுக்குள் செலுத்தி பலவிதமான நோய்களை உருவாக்குகின்றன. எனவே பூச்சி தாக்குதல் அறிகுறி தென்படாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
பொதுவாக பயிர் சாகுபடி செய்யும்போதே தட்டைப்பயறு, மக்காச்சோளம் போன்ற கவர்ச்சிப் பயிர்களை வரப்புப் பயிராக நடவு செய்து சாறு உறிஞ்சும் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். மேலும் இவற்றின் இயற்கை எதிரிகளான பொறி வண்டுகள் வளர்வதற்கேற்ற சூழலை உருவாக்கலாம். வெள்ளை ஈக்கள் தென்னையில் மட்டுமல்லாமல் பப்பாளி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட 300 விதமான பயிர்களில் சேதத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தும் போது அவற்றின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பலமடங்கு வீரியத்துடன் பெருகும் சூழல் உருவாகலாம்.
எனவே இயற்கை முறையில் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தி அவற்றை கவர்ந்து அழிக்கலாம். மேலும் அசுவினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதவீதம் ஏக்கருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். பூச்சிகளின் பாதிப்பு அதிக அளவில் தென்பட்டால் தோட்டக்கலைத் துறையினரின் பரிந்துரை பெற்று ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மல்லிகை பூ வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ, 1,200 ரூபாய்க்கு மல்லிகை பூ விற்றது. வழக்கமாக திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு 1.5 டன் மல்லிகை பூ விற்பனைக்கு வரும். நல்ல வருவாய் கிடைப்பதுடன் விரைவாக விற்றுத்தீர்ந்து விடுவதால் மொத்த வியாபாரிகள் பலர் மல்லிகை பூ வாங்கி, விற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இரவு, அதிகாலையில் பனி தூறல் மழை போல் பொழிகிறது. நகரங்களை விட மரங்கள் அடர்ந்திருக்கும் கிராமங்களில் கூடுதலாக பனி பெய்கிறது. திருப்பூர் மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ வழங்கி வரும் சத்தியமங்கலம், திண்டுக்கல், சேலம், ஓசூர் பகுதியில் பனி அதிகரிப்பால், செடிகளில் மொட்டுக்கள் பூ ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மல்லிகை பூக்கள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டன் கணக்கில் பூக்கள் வந்த மார்க்கெட்டுக்கு மொத்தம், 350 கிலோ மல்லிகை பூ மட்டும் வருவதால் சீசன் இல்லாவிட்டாலும் தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ, 1,200 ரூபாய்க்கு மல்லிகை விற்கப்படுகிறது. முல்லை, 600 ரூபாய், செவ்வந்தி 120, அரளி 150 ரூபாய்க்கு விற்றது.பூ வியாபாரிகள் கூறுகையில், பனி குறைந்து விட்டால், ஓரிரு நாளில் நிலை சரியாகும். திருக்கார்த்திகை தீபம் வரை விலை உயர்வு இருக்கும் என்றனர்.
- கடுமையான பனிப்பொழிவும், நடுங்க வைக்கும் குளிரும் வீசுகிறது.
- 200 பேர் ஸ்வெட்டர் ரக விற்பனையில் ஈடுபட திருப்பூர் மாவட்டத்தில் வந்து கடை விரித்துள்ளனர்.
திருப்பூர் :
கார்த்திகை, மார்கழி மாதங்களில் வழக்கமாக அதிக அளவில் பனிப்பொழிவு காணப்படும்.அவ்வகையில் திருப்பூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான பனிப்பொழிவும், நடுங்க வைக்கும் குளிரும் வீசுகிறது.குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள பல தரப்பினரும் பல்வேறு நடைமுறைகளை கையாளுகின்றனர்.
இதில் பொதுவான விஷயமாக உடலில் குளிர் பாதிக்காமலும் வெப்பத்தை தக்க வைக்கும் விதமாகவும், உல்லன் ஸ்வெட்டர்கள், குரங்கு குல்லா, மப்ளர், ஜெர்கின், காதுகளை அடைக்கும் ஹியர் கேப் என பல விதமான உடை வகைகளை பயன்படுத்துகின்றனர்.அவ்வகையில் இவற்றின் விற்பனை தற்போது திருப்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. பஞ்சாப் பகுதியில் இருந்து இவற்றை கொள்முதல் செய்து வந்து வட மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். 200 பேர் ஸ்வெட்டர் ரக விற்பனையில் ஈடுபட திருப்பூர் மாவட்டத்தில் வந்து கடை விரித்துள்ளனர்.
- பருவ மழைக்கு முன்பாகவே கரூரில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது
- பொதுமக்கள் கடும் அவதி
கரூர்:
அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த காலக்கட்டத்தில் பெய்யும் மழைதான் ஆண்டின் சராசரி மழையளவான 652.20 எட்ட உதவியாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது. இதனைத்தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் 11 - தேதி அன்று ஒரு நாள் மட்டுமே மாவட்டம் முழுவதும் மிகப் பலத்த மழை பெய்தது. அதற்கு பிறகு கருர் மாவட்டத்தில் மழை எதுவும் பெய்யவில்லை. ஆனால், மழைக்கு பதி லாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக, வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகுதான் பனி பொழிவு இருக்கும்.
ஆனால், வடகிழக்கு பருவமழை சீசனிலேயே பனிப் பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழையின் காலம் ஒரு மாதமே உள்ள நிலையில், இனி வரும் நாட்களில் மழை பெய்யுமா? என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், அதிகாலை
4மணி முதல் 8மணி வரை பனியின் தாக்கம் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள், முதியோர்கள், வேலைக்கு செல்லும் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற னர். எனவே, புயல் சின்னம் உருவாகி மழை வரும் பட்சத்தில்தான் பனியின் தாக்கம் குறையும் என்பதால் அனைத்து தரப்பினர்களும் மழையை எதிர் நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாள் ஒன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே பூ கிடைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
- சீசன் காலத்தில் கிலோ ரூ.50 முதல் 70 வரை கொள்முதல் செய்யப்–படுகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், நெய்விளக்கு, பஞ்சநதிகுளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் வரை இந்த முல்லைப்பூ சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லைப்பூ விளைவிக்கப்படுகிறது .
தற்போது வேதாரண்யம் பகுதியில் கடும் பனிப்–பொழிவால் பூச்செடிகள் இலைகள் உதிர்ந்து பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே பூ கிடைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சீசன் காலத்தில் கிலோ ரூ.50 முதல் 70 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. சீசன் இல்லாத நவம்பர் முதல் பிப்ரவரி வரை கிலோ ரூ.600 முதல் 1000 வரை விற்பனை ஆகிறது.
பனிப்பொழிவால் முல்லைப்பூ அதிகம் விளையாததால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
விலை ஏற்றம் இருந்தாலும் விளைச்சல் குறைவால் விவசாயிகள் அவதியடைந்து உள்ளனர்.எனவே முல்லைப்பூ விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவியும், நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- டெல்லியில் 20 மீட்டர் தொலைவுக்குள் வருபவர்களை மட்டுமே லேசாக காண முடிந்தது.
- டெல்லியில் பல்வேறு இடங்களில் வெண் புகை மூட்டம் சூழ்ந்திருந்தது.
புதுடெல்லி:
வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக மிக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. உத்தரபிரதேசத்தில் நேற்று பனி பொழிவு புகைமூட்டத்தால் 2 இடங்களில் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு 5 பேர் பலியானார்கள்.
இன்று (செவ்வாய்க்கிழமை) பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்களில் மிக கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது.
பனிப்பொழிவு நீடித்ததால் வட மாநிலங்களில் இன்று காலை பல முக்கிய நகரங்களில் நீண்ட நேரத்துக்கு புகைமூட்டம் காணப்பட்டது. டெல்லியில் 20 மீட்டர் தொலைவுக்குள் வருபவர்களை மட்டுமே லேசாக காண முடிந்தது. அந்த அளவுக்கு டெல்லியில் பல்வேறு இடங்களில் வெண் புகை மூட்டம் சூழ்ந்திருந்தது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். அனைத்து வாகனங்களும் முன் விளக்குகளை எரிய விட்டபடி சென்றாலும் கூட மெல்ல ஊர்ந்தபடிதான் செல்ல முடிந்தது. அமிர்தசரஸ், கங்கா நகர், பாட்டியாலா, லக்னோ நகரங்களிலும் பனிப்பொழிவும், புகைமூட்டமும் இன்று காலை மக்களை திணற வைத்தது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவலில் பனிப்பொழிவு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களிலும் காலை மிக மிக கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதிகாலை நேரங்களில் வட மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் வாகன போக்குவரத்து முடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் வாகனங்களில் பயணிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக வட மாநிலங்களில் சில இடங்களில் விமான சேவை ஒத்திவைக்கப்பட்டது. சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
டெல்லி, பஞ்சாப் இரு மாநிலங்களிலும் தெருக்களில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. இதனால் காலை நீண்ட நேரம் வரை மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர்.
- கடந்த மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பட்டியை சிலர் தங்களது வீடுகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள்.
- இருப்பு கருப்பட்டிக்கு விலை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வைத்தோம் என்று உற்பத்தியாளர் ஒருவர் கூறினார்.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் உடன்குடி கருப்பட்டி இங்கு கிடைக்கும் என விளம்பர போர்டு வைத்து விற்பனை செய்வார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது உடன்குடி கருப்பட்டி.
தற்போது கருப்பட்டி உற்பத்தி சீசன் இல்லை. கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பட்டியை சிலர் தங்களது வீடுகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள். தற்போது உட ன்குடி வட்டார பகுதியில் மழை குறைந்து, இரவு-பகலாக பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் இருப்பு வைத்த கருப்பட்டியில் பூஞ்சை என்ற வெள்ளை நிறத்தில் நூல் போன்றபாசி படிகிறது. இதை தடுக்க கருபட்டிக்கு புகைமூட்டம் போடுகிறார்கள், அப்படி இருந்தும் சில இடங்களில் கருப்பட்டி கசிந்து தண்ணீராக வெளி வருகிறது. இது பற்றி கருப்பட்டி உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-
கடந்த காலங்களில் உற்பத்தி செய்த கருப்பட்டியை வீடுகளில் பரன்களில் போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளோம். இருப்பு கருப்பட்டிக்கு விலை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வைத்தோம். ஆனால் தற்போது மழைக்காலத்தில் மழை பெய்யாமல் இரவு-பகலாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.
மழை பெய்தால் கூட கருப்பட்டிக்கு பாதிப்பு அதிகம் இருக்காது. ஆனால் பனிப்பொழிவு கருப்பட்டியை பதம் பார்த்துவிடும். இந்த பனிப்பொழிவால் எல்லா கருப்பட்டியிலும் பூஞ்சை பிடிக்கிறது. புகை போட்டாலும் அதை மீறி பூஞ்சை பிடிக்கிறது. கூடுதல் விலைக்கு ஆசைப்பட்டு இருப்பு வைத்தோம்.ஆனால் பனிப்பொழிவில் எல்லாம் கசிந்து விடும் போல தெரிகிறது என்று கவலையுடன் கூறினார்.
- குளிர், மின்தடை, போக்குவரத்து பிரச்சினை போன்றவற்றை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.
- அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நியூயார்க்கில் மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவை பனிப்புயல் கடுமையாக தாக்கியது. அந்நாடு முழுவதும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் அந்த பனிப்புயலால் பல மாகாணங்களில் மக்கள் முடங்கி போய் கிடக்கிறார்கள்.
இடைவிடாது பனிப்பொழிவு உள்ளதால் சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனி குவிந்து இருக்கிறது. அதனை அகற்ற நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து பனி கொட்டுவதால் மீட்பு பனிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மார்பளவுக்கு பனி கிடக்கிறது.
இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். குளிர், மின்தடை, போக்குவரத்து பிரச்சினை போன்றவற்றை மக்கள் சந்தித்து வருகிறார்கள். இந்த பனிப்புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.
சிலர் காருக்குள்ளேயே உறைந்து உயிரிழந்துள்ளனர். அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நியூயார்க்கில் மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
- வாகன ஓட்டிகள் அவதி
- முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.
ஏலகிரி மலை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளாமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ஏலகிரி மலை ஜோலார்பேட்டை நாட்டறம்பள்ளி பகுதியில் நேற்று முதல் சாரல் மழை பொழிந்து கரு மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
மேலும் தற்போது வரை யிலும் கருமேகத்துடனும் கடுமையான பனிப் பொலிவுடன் காட்சியளிக்கிறது. மேலும் எதிரே வரும் வாகன ஓட்டிகள் கண்ணுக்கே தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு பெய்து வருகிறது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். மேலும் ஊட்டியில் இருக்கும் பருவநிலை போல் தற்போது ஏலகிரி மலையிலும் கடும் பனிப்பொழிவுடன் காணப்படுகிறது.
இன்று காலை விடிந்தும் வெகு நேரமாகியும் பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகள் போட்டுக் கொண்டு செல்கின்றனர்.
கடும் பனிப்பொழிவில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- கரேரி, டிரையண்ட், ஆதிஹிமானி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்தனர்.
- மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள சிறிய மலைகளிலும் பயணிகள் யாரும் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
சிம்லா:
இந்தியாவில் அழகிய மலைகளும், ஏராளமான சுற்றுலா தலங்களும் அடங்கிய மாநிலம் இமாச்சல பிரதேசம்.
இந்த மாநிலத்தில் டிசம்பர் மாதம் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அதன்படி இங்குள்ள குப்ரி, மணாலி, நர்காண்டா பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. கீலாங், ஹன்சா பகுதிகளில் 2 சென்டி மீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது.
சிம்லாவின் புறநகர் பகுதியில் ஒரு சென்டி மீட்டர் அளவுக்கு பனி பெய்தது. அடுத்து வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி காங்கரா மாவட்டத்தில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பனி படர்ந்து காணப்பட்டது. சாலைகளிலும் பனி உறைந்து இருந்தது.
பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை காணப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
இம்மாவட்டத்தின் கரேரி, டிரையண்ட், ஆதிஹிமானி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்தனர்.
இதற்கிடையே இம்மாவட்டத்தில் பெய்த பனிப்பொழிவு காரணமாக பல சுரங்க பாதைகளில் சுற்றுலா வாகனங்கள் சிக்கி கொண்டன. சுமார் 400 -க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுரங்கங்களில் சிக்கி கொண்டன. இது பற்றிய தகவல் அறிந்த மீட்பு படையினர் அப்பகுதிக்கு சென்று வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபோல மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள சிறிய மலைகளிலும் பயணிகள் யாரும் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெறாமல் யாரும் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
- கடும் பனிப்பொழிவு நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதி.
- சம்பா நெற்பயிர்களில் புகையான் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, பூம்புகார், திருவெண்காடு, கொள்ளிடம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்தது. ஆனால் இரவில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. காலை 8 மணி வரையும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர்.
பனிப்பொழிவு காரணமளாக நடைபயிற்சி செய்பவர்கள், கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் குறைந்த அளவே காணப்பட்டனர். சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவதுமாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் சம்பா நெற்பயிர்களில் புகையான் தாக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிருடன் சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.
காங்கயம் :
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் வரை அவ்வப்போது மழை பெய்தது. இதனால் அணைகள், குளம் மற்றும் குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் வறண்ட வானிலை நிலவுகிறது. காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மையில் கடந்த சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிருடன் சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு இருந்து வருகிறது.
காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் காலை 8 மணி வரை மூடு பனி காணப்படுகிறது. இதன் காரணமாக அதிகாலை நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் எதிரே வரும் வாகனம் சரிவர தெரியாத அளவிற்கு மூடுபனி காணப்படுவதால் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனத்தை ஓட்டிச்செல்கின்றனர். அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்பவர்கள் பனிமூட்டம் காரணமாக வீட்டிலேயே நடைபயிற்சி செய்து வருகின்றனர்.
- விவசாய நிலங்களில் பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
- சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக செல்கின்றன.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகாலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் அதிகாலை நேரத்தில் எழுந்து கால்நடைகளை பராமரிப்பது, விவசாய நிலங்களில் பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
காலை நேரங்களில் வாலி–பர் முதல் முதியோர் வரை நடைபயிற்சி மேற்கொள்வோர் நடைபயிற்சி மேற்–கொள்ள முடியாத சூழ்–நிலை ஏற்பட்டுள்ளது. காலை நேரங்களில் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்பவர்கள், வீதிகளில் காய்கறி கீரை விற்பனை செய்வோர் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சாலைகளில் வழக்கமான போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக செல்கின்றன.
இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர் வகைகள் கருகி சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.