search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "start mango season"

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. சந்தையில் ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மாந்தோப்புகள் உள்ளன. இந்த வருடம் கடுமையான வறட்சியின் காரணமாக மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்டுதோறும் மார்ச் மாத கடைசியில் மாம்பழ சீசன் தொடங்கும்.

    இந்த வருடம் போதுமான ஈரம் பூமியில் இல்லாத காரணத்தால் மா விளைச்சலில் பின்னடைவு ஏற்பட்டு தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. முதன் முதலாக பாலாமணி மாம்பழ ரகம் நத்தம் சுற்றுவட்டார கிராமங்களில் அறுவடையாகி சந்தைக்கு வந்துள்ளது. இந்த பழம் 1 கிலோ மொத்த விலைக்கு ரூ.50க்கும் அதே பழம் சில்லரையாக ரூ.80க்கும் விற்பனையாகிறது.

    தற்போது வரும் இந்த மாம்பழம் இனிப்பும், துவர்ப்பும் வாசமும் நிறைந்துள்ளது. மருத்துவகுணம் நிறைந்த மாம்பழம் நத்தத்தில் கிராக்கியாக விலைபோகிறது. மா விவசாயிகள் இதுகுறித்து கூறியதாவது இந்த வருடம் இயற்கையின் ஒத்துழைப்பு இல்லாமல் பருவமழை பொய்த்துவிட்டது. ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறு மூலம் வெளியேற்றப்படும் தண்ணீரால் மட்டுமே மாமரங்கள் பாதுகாக்கப்படுகிறது. அந்த மாமரங்கள் மட்டுமே விளைச்சலை தந்துள்ளது. மற்ற மரங்கள் விளைச்சல் இன்றி காணப்படுகிறது.

    இந்த மாம்பழ சீசன் வருகிற ஜுன் மாதம் வரை நீடிக்கும், பாலாமணியை தொடர்ந்து கல்லாமை, காசா, இமாம்பசந்து, சப் பட்டை உள்ளிட்ட பல்வேறு மாம்பழரகங்கள் அடுத்தடுத்து விற்பனைக்கு வரும். கடந்த சில மாதங்களாக மழையே பெய்யவில்லை. இதனால் மாமரங்களுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாமல் பட்டுப்போய்விட்டது. 

    இவ்வாறு அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    ×