search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "staying at the lodge"

    • அருண்பரசுராம் முக்தா அசைவற்று இருந்துள்ளார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள நேதாஜி சவுக் பகுதியை சேர்ந்தவர் விக்கிமுக்தா (32). இவரது தந்தை அருண்பரசுராம் முக்தா (62). ஜவுளி வியாபாரிகள்.

    இவர்கள் இருவரும் அடிக்கடி ஈரோடு வந்து ஜவுளி கொள்முதல் செய்து கொண்டு செல்வது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் ஜவுளி கொள்முதலுக்காக ஈரோடு வந்த இருவரும் பஸ் நிலையம் பின்புறம் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்தனர்.

    இதில் அருண்பரசுராமுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்து ள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை விக்கிமுக்தா கண் விழித்து பார்த்த போது அவரது தந்தை அருண்பரசுராம் முக்தா அசைவற்று இருந்துள்ளார்.

    உடனடியாக விக்கிமுக்தா அவரை ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று ள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அருண்பரசுராம் முக்தா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    ×