என் மலர்
நீங்கள் தேடியது "subsidy"
- 42 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கி பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் மூலம் தலா ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டாரம் புதுக்குடி ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக பாரம்பரிய தொழிலான பாசிமணி, வளையல், காது வளையம் போன்ற தொழில்களை மேம்படுத்தும் நோக்கில் வங்கி மூலம் தனிநபர் கடன் உதவி கோரி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை அலகு மூலம் மேற்கூறிய தொழில்களை மேம்படுத்த நோக்கில் வங்கி மூலம் தனிநபர் கடன் உதவி கோரிய விளிம்பு நிலை மக்களை நேரில் கள ஆய்வு செய்து 42 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கி பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாரத மாநில வங்கிகளின் மூலம் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு 18 நபர்களுக்கு தனிநபர் கடன் மாவட்ட தொழில் மைய பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் மூலம் தலா ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 42 ேபருக்கு 36 லட்சம் இலக்கு நிர்ணயக்கப்பட்டு 25 சதவீத மானியத்துடன் இதுவரை 15 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
- தற்போது 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன்.
தரங்கம்பாடி:
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஊக்குவித்து வருகிறார். படித்த இளைஞர்களை, முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.149 கோடி மானியத்துடன் 929 திட்டங்களுக்கு நிதி நிறுவனங்களால் இறுதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 4151 பயனாளிகளுக்கு ரூ.41 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறியதாவது:-
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் என்று சொல்லக்கூடிய இந்த திட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டு 42 நபர்களுக்கு 36 லட்சம் இலக்கு நிர்ணயக்கப்பட்டு 25 சதவீத மானியத்துடன் இதுவரை 15 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
2022-2023-ம் ஆண்டிற்கு 1 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 17 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 25 சதவீத மானியத்துடன் 53 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 55 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 25 சதவீத கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திட்டத்தில் பயன் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட பயனாளிகள் தங்களது கருத்துகளை கூறிய விவரம் வருமாறு:-
என்னுடைய பெயர் கார்குழலி. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் வசித்து வருகிறேன்.
நான் இளநிலை வணிகவியல் பட்டதாரி ஆவேன். நான் வேலைக்கு செல்லாமல் சொந்தமாக தொழில் ஆரம்பித்து வளர வேண்டும் என முனைப்புடன் இருந்தேன்.
அந்த சமயத்தில் கலெக்டரின் மாவட்ட தொழில் மையத்தில் தமிழக அரசின் திட்டங்களை பற்றி செய்தி தாளில் வெளியிடப்பட்ட விளம்பர செய்தியை பார்த்து, மயிலாடுதுறை கச்சேரி சாலையில் இயங்கி வரும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை தொடர்பு கொண்டேன்.
அதன் பிறகு ஆயத்த ஆடைகள் தயாரிப்பு தொழில் தொடங்க விண்ணப்பித்தேன்.
எனது விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 53.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.10.09 லட்சம் மானியத்துடன் எனது விண்ணப்பம் பேங்க் ஆப் இந்தியா வங்கி மயிலாடுதுறை கிளைக்கு விண்ணப்பம் பரிந்துரை செய்யப்பட்டது.
அதனடிப்படையில் வங்கி மேலாளர் தொழில் கடன் வழங்கினார்.
தற்போது 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன்.
இது போன்ற திட்டங்களின் வாயிலாக படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை காக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி என்றார்.
குத்தாலத்தை சேர்ந்த சிவபாரதி கூறும்போது, நான் ஒரு பொறியியல் பட்டதாரி. சொந்தமாக தொழில் தொடங்கி அதன் வாயிலாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என உறுதியுடன் இருந்தேன்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற நேர்முக தேர்வில் உரிய பரிசீலனைக்கு பின் எனது விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 136.14 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.38.44 லட்சம் மானியத்துடன் எனது விண்ணப்பம் சிட்டி யூனியன் வங்கி குத்தாலம் கிளைக்கு விண்ணப்பம் பரிந்துரை செய்யப்பட்டது.
அதனடிப்படையில் வங்கி மேலாளர் தொழில் கடன் வழங்கினார்.
தற்போது எனது வாழ்வாதாரம் உயர்ந்து, வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன். முதலமைச்சருக்கு எனது நன்றி என்றார்.
- பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
- ஊட்டச்சத்து அடிப்படையில் உரங்களை மானிய விலையில் வழங்க ஒப்புதல்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எத்தனால் கொள்முதல் செய்யும் முறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 1, 2022 முதல், 31 அக்டோபர் 2023 வரையிலான பருவத்தில் எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோக திட்டத்தின் கீழ், பல்வேறு கரும்புகளின் மூலப் பொருட்களிலிருந்து எத்தனால் பெறப்படுகிறது. இந்த எத்தனாலுக்கான கொள்முதல் மற்றும் அதிகபட்ச விலைக்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, சி வகையிலான எத்தனால் லிட்டர் ரூ.46.66 லிருந்து ரூ.49.41 ஆகவும், பி வகையிலான எத்தனாலுக்கான விலை லிட்டர் ரூ.59.08 லிருந்து ரூ.60.73-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கரும்புச் சாறு, சர்க்கரைப்பாகு மூலம் தயாரிக்கப்படும் எத்தனால் விலை லிட்டர் ரூ.63.45-லிருந்து ரூ.65.61ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல் 2022-23 ரபி பருவத்தில் அக்டோபர் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 ஆம் ஆண்டு வரை ஊட்டச்சத்து அடிப்படையிலால் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ அளவில் நைட்ரஜனுக்கு ரூ.98.02-ம், பாஸ்பரசுக்கு ரூ.66.93-ம், பொட்டாஷூக்கு ரூ.23.65-ம், சல்ஃபருக்கு ரூ.6.12-வும், மானியமாக வழங்கப்படும் என்று மத்திய உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டிவியா தெரிவித்துள்ளார்.
- அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது
- டி.பி.எஸ்.5 ரகம் 110 முதல் 115நாட்கள் வயதுடையது. நல்ல அரவைத்திறன் கொண்டது.
உடன்குடி:
திருச்செந்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் வட்டார விவசாயிகள் பிசான பருவத்திற்கு தேவையான அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தண்டுதுளைப்பான், புகையான், இலைசுருட்டுபுழு உள்ளிட்ட நெல்பயிரை தாக்கும் பூச்சிகளுக்கும், குலைநோய், இலைப்புள்ளி நோய் உள்ளிட்ட நோய்களுக்கும் எதிர்ப்புத்திறன் கொண்ட பிசான பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்களான டி.பி.எஸ் 5 மற்றும் டி.கே.எம்.13ஆகிய சான்று விதைகள் திருச்செந்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது.
டி.பி.எஸ்.5 ரகம் 110 முதல் 115நாட்கள் வயதுடையது. நல்ல அரவைத்திறன் கொண்டது. மேலும் அம்பை 16 ரகத்தை விட அதிக மகசூல் தரக்கூடியது. சராசரியாக 6300கிலோ வரை மகசூல் தரக்கூடியது. டி.கே.எம்.13 ரகம் 130நாட்கள் வயதுடையது. இது கர்நாடக பொன்னி ரகத்தை விட 10சதவீதம் அதிக மகசூல் தரக்கூடியது.
இவ்விதைகள் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகின்றன. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் ஆதார்நகல் மற்றும் சர்வே எண்ணுடன் திருச்செந்தூர் வட்டார வோளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.
- னியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
திருப்பூர் :
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி உள்ளது.
அதன்படி வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் மானியவிலையில் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம், வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தின் மூலம் 2022-23 ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் கருவிகள் வழங்குவது, வாடகைக்கு விடும் மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அதிகபட்சமாக டிராக்டருக்கு ரூ.4.25 லட்சம் , விசையால் களை எடுக்கும் கருவிகள் 35 ஆயிரம் , ரோட்டவெட்டரான சூழற்கலப்பைகள் 45 ஆயிரம் ரூபாய், விசைத் தெளிப்பான் கருவிகள் ரூ.3,100 ரூபாய் அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதர விவசாயிகளுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச மானியம் அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். தனிப்பட்ட வேளாண் எந்திரங்களை மானியத்தில் விவசாயிகள் பெற்றிடும் வகையில் 5 டிராக்டர்கள் 8 பவர்டில்லர்கள், 1 விசையால் களையெடுக்கும் கருவிகள், 3 ரோட்டவேட்டர், தட்டு வெட்டும் கருவி 4, தென்னை மட்டை துகளாக்கும் கருவி 2, இரண்டு விசைத் தெளிப்பான்கள் ஆகியவற்றிற்கு 29 லட்சத்து 53 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அந்தந்த பகுதி விவசாயிகள் மானிய விலையில் வேளாண் கருவிகளை பெற்றிட அந்தந்த பகுதிக்கான உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் உரிய விண்ணப்பத்தினை அளித்து மூதுரிமை அடிப்படையில் விவசாயிகள் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, திருப்பூர் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறுப்பு ) ஆர்.சுப்பிரமணியனின் செல்போன் எண் 9942703222, தாராபுரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் , 7904087490, உடுமலை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கம் , 9865497731 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேளாண்மைப்பொறியியல் துறை மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உழவு பணிகள், அறுவடைப்பணிகள், நிலம் சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ள குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் கருவிகள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விவசாய நிலத்தில் உழவு பணிக்கு தேவைப்படும் டிராக்டர் (உழவுக்கருவியுடன்) 1 மணி நேரத்திற்கு ரூ.500 வாடகையிலும், மண் தள்ளும் இயந்திரம் 1 மணி நேரத்திற்கு ரூ.1,230 ம், சக்கரவகை மண் அள்ளும் இயந்திரம் 1 மணி நேரத்திற்கு ரூ.890 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனத்துடன் இயங்கக்கூடிய தேங்காய் பறிக்கும் எந்திரம் 1 மணி நேரத்திற்கு ரூ.450 என்ற வாடகையிலும் வழங்க வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தேவைப்படும் விவசாயிகள் இ- வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேளாண்மைப்பொறியியல் துறையின் மூலம் நில நீர் ஆய்வுக்கருவியின் உதவியால் நிலத்தடி நீர்மட்டத்தை அறிந்து கொள்ளதிருப்பூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை விவசாய பெருமக்கள்பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவசாயம்நிலங்களுக்கு ரூ.500 வீதம் மற்றும் விவசாயம் அல்லாத பணிகளுக்குரூ.1000 கட்டணமாக உழவன் செயலி (UZHAVAN APP) மூலம்அரசுக்கு செலுத்தப்பட வேண்டும்.இது தொடர்பாக செயற்பொறியாளர் (வே.பொ) வேளாண்மைப் பொறியியல் துறை, திருப்பூர் அலுவலகத்தின் உதவிப்புவியியலாளர் அஞ்சனா மேத்யூவை 7994162692 தொடர்பு கொண்டுபயன்பெறுமாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- மானிய திட்டங்கள் இடுபொருள் முன்பதிவு பயிர் காப்பீடு விவரம்.
- 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பட்டமங்கலம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு உழவர் செயலி குறித்த ஒரு நாள் பயிற்சி மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது.
அனைவரையும் உதவி தொழில் நுட்ப மேலாளர் மதுமனா வரவேற்றார். வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்கள் விவசாயிக்கு எளிதில் கிடைப்பதற்கும் தங்கள் திட்டத்தின் பயனாளியாக பதிவு செய்து கொள்வதற்கும் பல்வேறு வேளாண்மை உழவர் நலத்துறை சார்ந்த தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளும் விதமாக இந்த உழவர் செயல் உருவாக்கப்பட்டது.
இதனை விவசாயிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து உழவர் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்து அதில் உள்ள மானிய திட்டங்கள் இடுபொருள் முன்பதிவு பயிர் காப்பீடு விவரம் உரங்கள்.
விதைகளை இருப்பு நிலை மற்றும் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் வாடகை சந்தை நிலவரம் வானிலை அறிவுரைகள் பண்ணை வழிகாட்டி போன்றவை மற்றும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் இயற்கை பண்ணை பொருட்கள் மற்றும் பொருட்கள் வேளாண்மை செய்திகள் கருத்துக்கள் பூச்சி நோய் கண்காணிப்பு பரிந்துரை அட்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கம் உழவர் ஈ சந்தை, பட்டு வளர்ச்சி பற்றிய விவரம் வேளாண்மை நிதிநிலை அறிக்கை அத்துடன் கலைஞரின் வேளாண்மை திட்டத்துடன் 21 தலைப்புகளில் இந்த செயலி செயல்படுகிறது என்று விவரமாகவும் உழவர் செயலி பயன்படுத்துதல் பற்றியும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் கூறினார்.
இப்பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் பாரி, குணசேகரன், மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை உதவி வேளாண்மை அலுவலர் சுகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.
அட்மா திட்ட உதவி தொழிற்நுட்ப மேலாளர் விஜய் நன்றி கூறினார்.
- விலையில்லா இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணை.
- சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 321 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொ ள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமைதடுப்பு சட்டத்தின் கீழ்கொலை செய்யப்பட்ட வாரிசுதா ரர்களுக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை களும், 3 நபர்களுக்கும், ஆதிராவிடர் நலத்துறை சார்பில் 19 பயனாளிகளுக்கு இலவச வீட்டு பட்டாவிற்கான ஆணைகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பேராவூரணி வட்டத்தைச் சேர்ந்த 1 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளும், மாவட்ட வழங்கல் துறை சார்பில் புதிய குடும்ப அட்டை 1 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி தலா ரூ. 25,000 வீதம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 50,000 மதிப்பிலான காசோலைகளையும் என மொத்தம் 26 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட விளையாட்டு துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்ட வில்வித்தை சங்கத்தில் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-, மாணவிகள் கலெக்டரிடம் வெற்றி பெற்ற பதக்கங்களை காண்பித்து பாராடடு மற்றும் வாழ்த்துக்களை பெற்றனர்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா ,கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
- ஏக்கருக்கு ரூ.10,000/- என்ற மானியத் தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம்கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம்சேலம்:
கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டிற்கான புதிய அறிப்பில் கால்ந டைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ரூ.1.00 கோடி செலவில் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 900 ஆதி திராவிடர் மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 லட்சம் மானியமும், 100 பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம் மானியமும் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது உறுப்பினராக சேர வேண்டும். பயனாளிக்கு விதைத் தொகுப்பு, புல் கறணைகளுடன் அத்தீவனங்களை வளர்க்கத் தேவையான பயிற்சி, கையேடு மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றின் செலவினங்கள் உள்ளிட்டவை ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000/- என்ற மானியத் தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, எருமாபாளையம் சாலை, சீலநாயக்கன்பட்டி, சேலம் என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
- பழங்குடியினா் தனிநபா்களுக்கான திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் விடுவிக்கப்படும்.
- விண்ணப்பதாரா் மற்றும் அவா்களது குடும்பத்தினா் தாட்கோ திட்டத்தில் இதுவரை எந்த மானியமும் பெற்றிருக்கக்கூடாது.
திருப்பூர்:
தாட்கோ திட்டத்தின் மூலமாக ஆதி திராவிடா், பழங்குடியினா் தொழில் முனைவோா் ஆவின் பாலகம் அமைக்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம்) சாா்பில் 2022-23 ஆம் ஆண்டில் 50 ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில் முனைவோா் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைக்க ரூ.45 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் 18 வயது முதல் 65 வயதுக்கு உள்பட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா் மற்றும் அவா்களது குடும்பத்தினா் தாட்கோ திட்டத்தில் இதுவரை எந்த மானியமும் பெற்றிருக்கக்கூடாது. கூடுதல் செலவினத்தை ஈடுசெய்யவும் மற்றும் அதிகப்பட்ச மானியத் தொகை சென்றடைய ஆதி திராவிடா் தனிநபா்களுக்கான திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.2.25 லட்சம் மானிமும், பழங்குடியினா் தனிநபா்களுக்கான திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் விடுவிக்கப்படும்.
இத்திட்டம் தொடா்பாக www.application.tahdco.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடா்பு கொள்ள வேண்டிய முகவரி: மாவட்ட மேலாளா், தாட்கோ, அறை எண்: 501,503, 5வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா்-641604, கைபேசி எண்: 94450-29552, 0421-2971112 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆண்டுக்கு ரூ.6000, மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.
- பி.எம். கிஷான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெருமாநல்லூர் :
தமிழ்நாட்டில் "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி" திட்டமானது 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவித்தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 விதம் ஆண்டுக்கு ரூ.6000, மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பண பரிமாற்றம் அந்தந்த பகுதியின் ஒன்றியங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் 13-வது தவணையாக அதாவது 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத் தொகை பி.எம். கிஷான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது ஊத்துக்குளி வட்டார விவசாயிகள் பொது சேவை மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ தங்கள் ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறையில் பதிவு செய்து கொள்ளலாம். ஆகவே தங்களது அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று தனது பெயரை பி.எம். கிஷான் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியின் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம்.கிஷான் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். மேலும் விவரங்களுக்கு ஊத்துக்குளி வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குனர் சசிரேகா தெரிவித்துள்ளார்.
- வீன விவசாயத்தில் மகசூல் எந்த அளவுக்கு அதிகம் கிடைக்கிறதோ அதே அளவுக்கு பாதிப்புகளும் அதிக அளவில் இருக்கிறது.
- விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இயற்கை இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.
உடுமலை :
முன்னோர்கள் ஒவ்வொரு பகுதியிலுள்ள மண் வளத்துக்கு ஏற்ற விதைகள், பருவத்துக்கு ஏற்ற விதைகள், வறட்சியான பகுதிக்கு ஏற்ற விதைகள் என ஒவ்வொரு பகுதி மற்றும் சூழலுக்கு ஏற்ற விதைகளைப்பயன்படுத்தி வந்தனர். உதாரணமாக கத்தரியை எடுத்துக்கொண்டால் நெகமம் வரி கத்தரி, உடுமலை சம்பா கத்தரி, காரமடை கத்தரி, ஒட்டன்சத்திரம் பச்சைக்கத்தரி, பொள்ளாச்சி புளியம்பூ கத்தரி என்று பகுதிக்கு ஏற்ற ரகங்களைப் பயிரிட்டு வந்தனர். இதனால் இழப்பு இல்லாமல் சிறப்பாக விவசாயம் செய்து வந்தனர்.
ஆனால் இன்றைய நவீன விவசாயத்தில் மகசூல் எந்த அளவுக்கு அதிகம் கிடைக்கிறதோ அதே அளவுக்கு பாதிப்புகளும் அதிக அளவில் இருக்கிறது. எனவே இயற்கையோடு இணைந்து வாழ்வதில் ஆர்வம் காட்டும் பலரும் நமது பாரம்பரிய ரகப் பயிர்களைத் தேடிப்பிடித்து பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுப்பதில் இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து தமிழக அரசும் கைகொடுக்கிறது. பாரம்பரிய நாட்டு ரகங்களை சாகுபடி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி உடுமலை பகுதியில் பாரம்பரிய ரக அவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இயற்கை இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளதாக உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா தெரிவித்துள்ளார்.
- உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம் அல்லது திட்ட அறிக்கையில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
உடுமலை :
உடுமலை அருகேயுள்ள அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் தாங்களாக வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கரும்பு விவசாயிகளுக்கு வருவாய் பெருக்கும் வகையில் உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கரும்பு சாகுபடி செய்து வரும் விவசாயிகள் தங்கள் நிலங்களிலேயே மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி செய்யும் வகையில் உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைத்துக் கொள்ளலாம்.இதில் விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம் அல்லது திட்ட அறிக்கையில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் 10 அச்சு வெல்லம் தயாரிக்கும் மையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
எனவே அச்சு வெல்லம் உற்பத்தி மையம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் தேவையான ஆவணங்கள், போட்டோ, ஆதார் அட்டை, நிலச்சிட்டா மற்றும் கரும்பு சாகுபடி செய்வதற்கான இடப் பற்றிய விவரம், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் பெறப்பட்ட கடன், ஒப்படைப்பு கடிதம் ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண் வணிக உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 75488 16636, 86875 40709, 99979 45711, 8610 752985 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.