என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » suicide death
நீங்கள் தேடியது "suicide death"
பாவூர்சத்திரம் அருகே, கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம்:
தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரை சேர்ந்தவர் சங்கர்ராஜ் மகன் சரவணன் (வயது 32). இவர் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள மகிழ்வண்ணநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்த சுப்புகுட்டி என்பவருடைய மகள் முத்துச்செல்விக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது.
சரவணன் சென்னையில் இருந்து அவ்வப்போது கீழப்புலியூர் வந்து தங்கிச் செல்வார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துச்செல்வி மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் சென்னையில் இருந்து ஊருக்கு வந்த சரவணன், மனைவி முத்துச்செல்வியை தேடி மகிழ்வண்ணநாதபுரத்துக்கு வந்துள்ளார். மனைவியை தன்னுடன் ஊருக்கு வரும்படி அழைத்துள்ளார். இதற்கு முத்துச்செல்வி வர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சரவணன் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சரவணன் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரை சேர்ந்தவர் சங்கர்ராஜ் மகன் சரவணன் (வயது 32). இவர் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள மகிழ்வண்ணநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்த சுப்புகுட்டி என்பவருடைய மகள் முத்துச்செல்விக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது.
சரவணன் சென்னையில் இருந்து அவ்வப்போது கீழப்புலியூர் வந்து தங்கிச் செல்வார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துச்செல்வி மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் சென்னையில் இருந்து ஊருக்கு வந்த சரவணன், மனைவி முத்துச்செல்வியை தேடி மகிழ்வண்ணநாதபுரத்துக்கு வந்துள்ளார். மனைவியை தன்னுடன் ஊருக்கு வரும்படி அழைத்துள்ளார். இதற்கு முத்துச்செல்வி வர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சரவணன் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சரவணன் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே காதல் தோல்வியால் அரசு ஊழியரின் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் அரசு அலுவலர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். அரசு ஊழியர். இவரது மகன் ராஜகுமாரன் (வயது 22). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டின் அருகே ராஜ குமாரன் எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜகுமாரன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், இறந்து போன ராஜகுமாரன் காதல் தோல்வியால் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் அரசு அலுவலர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். அரசு ஊழியர். இவரது மகன் ராஜகுமாரன் (வயது 22). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டின் அருகே ராஜ குமாரன் எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜகுமாரன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், இறந்து போன ராஜகுமாரன் காதல் தோல்வியால் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X