என் மலர்
நீங்கள் தேடியது "suicide threat"
- வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.
- கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் அறை அருகே ரெயில் டிரைவர்கள் அலுவலகம் உள்ளது. இதன் அருகே 80 அடி உயரத்தில் மின்விளக்கு டவர் உள்ளது. நேற்று மதியம் 2 மணி அளவில் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென அந்த 80 அடி உயர மின்விளக்கு டவரில் வேகமாக ஏறினார்.
முதலில் இதைப்பார்த்த ரெயில்வே ஊழியர்கள் அந்த நபர் டவரில் வேலை செய்கிறார் என்று நினைத்து கொண்டனர். ஆனால் நேரம் செல்ல செல்ல அந்த வாலிபர் 80 அடி உயரத்திற்கு மேலே உட்கார்ந்து இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில்வே அதிகாரிகள் இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார், ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சூரம்பட்டி போலீசார் மற்றும் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு போலீசார் வரைந்து வந்தனர். அவர்கள் அந்த வாலிபர் இடம் பேச்சுவார்த்தை கொடுத்தனர்.
அப்போது அந்த வாலிபர் ஹிந்தியில் பேசியதால் ஹிந்தி பேசத் தெரிந்த மற்றொரு வாலிபரை அழைத்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் தனக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகவும், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் எனவும் மிரட்டல் விடுத்தார். சர்ச் பாதிரியாரை வரச்சொல்லுங்கள் அப்போதுதான் கீழே இறங்குவேன் என்றும் கூறினார்.
பின்னர் அந்த வாலிபர் மேலே ஏறுவதும் பாதி தூரம் வரை கீழே வந்து திருப்பி மீண்டும் மேலே ஏறுவதும் என போக்கு காட்டி வந்தார். ஒரு கட்டத்தில் செல்போன் கேட்கவே போலீசார் ஒரு செல்போனை டவர் தகட்டில் வைத்தனர். அதை எடுக்க இறங்கியபோது போலீசார் பிடிக்க முயன்றதால் போனை எடுக்காமல் மீண்டும் டவர் மீது ஏறிக்கொண்டார். பின்னர் போலீசார் ஒருவர் பாதிரியார் போன்று வேஷம் போட்டு மேலே செல்ல முயன்றார். ஆனால் அவர் உண்மையான பாதிரியார் இல்லை என தெரிந்து கொண்ட அந்த வாலிபர் மீண்டும் மேலே ஏறி சென்று விட்டார்.
இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் கனமழை பெய்ய தொடங்கியது. அப்போது அந்த வாலிபர் இறங்கி விடுவார் என்று எதிர்பார்த்த போலீசாருக்கு ஏமாற்றம் மிஞ்சியது. அந்த நபர் மழையில் நடந்தபடி மேலே டவரில் தொடர்ந்து அமர்ந்து இருந்தார். இரவு வரை தொடர்ந்த அந்த வாலிபர் டவரில் அமர்ந்து இருந்தார். பின்னர் இரவு 12 மணி ஆனது. ஆனாலும் அந்த வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.
பின்னர் போலீசார் அங்கிருந்து கிளம்பி செல்வது போன்று அங்கிருந்து சிறிது தூரம் கிளம்பி சென்றனர். பின்னர் நள்ளிரவு 2.45 மணியளவில் அந்த வாலிபர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது டவரில் நன்கு ஏறும் வாலிபர் ஒருவரை போலீசார் அழைத்து வந்து அந்த 80 அடி மின் டவரில் ஏற செய்தனர். வாலிபர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் டக்கென்று இந்த வாலிபர் மேலே இருந்த வாலிபரை பிடித்துக் கொண்டார்.
உடனடியாக தீயணைப்பு துறையினர் வேகமாக சென்று அந்த வாலிபரை மீட்டனர். பின்னர் அந்த நபர் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மத்திய பிரதேசம் மாநிலம் மண்டேல் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் மார்க்கம் (26) என்பதும், கேரளாவில் அவரது நண்பரை பார்க்க ரெயிலில் ஏறி வந்தவர் வழி தவறி ஈரோட்டில் இறங்கி விட்டதும் தெரிய வந்தது. அவருக்கு தமிழ் புரியாததால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் சுற்றி வந்துள்ளார்.
பின்னர் திடீரென 80 அடி மின் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்று அந்த நபரிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.
இதனையேற்று அவரது நண்பர் கேரளாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த பிறகு தான் ராகுல் மார்க்கமுக்கு என்ன பிரச்சனை உள்ளது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என முழு விவரம் தெரிய வரும். கிட்டத்தட்ட 13 மணி நேரம் போலீசாரை அலறவிட்ட வடமாநில வாலிபர் செயலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- செல்போன் டவரில் நின்ற சந்திரனிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பொள்ளாதி கிராமம், சின்னத்தொட்டிபாளையம் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள செல்போன் டவர் உச்சியில் நின்றபடி ஒரு வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுப்பதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில் அந்த வாலிபரின் பெயர் சந்திரன் (வயது 25) என்பதும், இதே பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி என்பதும் தெரியவந்தது.
சின்னத்தொட்டியம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சந்திரன் நேற்றிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அப்போது அங்கு வந்த வார்டு கவுன்சிலர் சுரேஷ் என்பவர், குடிபோதையில் இருந்த சந்திரனை கண்டித்து உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சந்திரன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து வார்டு கவுன்சிலர் சுரேஷை சரமாரியாக தாக்கினார். பின்னர் வீட்டுக்கு சென்ற சந்திரன் அங்கிருந்த கத்தியை எடுத்து தனக்கு தானே கையில் குத்திக்கொண்டு ரத்தக்காயங்களுடன் வெளியேறினார்.
தொடர்ந்து சின்னதொட்டிபாளையம் பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறிய சந்திரன் அங்கிருந்தபடி, நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என மிரட்டல் விடுத்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து செல்போன் டவரில் நின்ற சந்திரனிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் செல்போன் டவரை சுற்றிலும் பாதுகாப்பு வலையமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் நைசாக செல்போன் டவரின் மேல் ஏறி சென்று, அங்கு இருந்த சந்திரனை லாவகமாக பிடித்து பத்திரமாக கீழே இறக்கினார்கள். அப்போது அவருக்கு கையில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. தொடர்ந்து அவரை போலீசார் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவர் என்னை கொன்று விடுவதாகவும் மிரட்டினார்.
- இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டான்.
உத்தர பிரதேச மாநிலத்தின் முசாபர்நகரில் உள்ள தனியார் வங்கியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி ரூ. 40 லட்சம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து கொள்ளையடிக்கப்பட்ட தனியார் வங்கி மேலாளர் காவல் அதிகாரிகளிடம் கூறும் போது, "முகமூடி அணிந்த மர்ம நபர் எனது அறைக்கு வந்து துப்பாக்கியை என் கழுத்தில் வைத்து, ரூ. 40 லட்சத்தை கொடுக்குமாறு மிரட்டல் விடுத்தார். பணத்தை கொடுக்காத பட்சத்தில் அவர் என்னை கொன்று விடுவதாகவும் மிரட்டினார்."
"நான் காசாளர் ரோகித்-ஐ அழைத்து ரூ. 40 லட்சத்தை கொண்டுவரச் சொன்னேன். பணத்தை பெற்றுக் கொண்ட மர்ம நபர் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி, இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டான்," என கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை பெற்று இருப்பதாகவும், அதில் உள்ள வீடியோக்களை கொண்டு குற்றவாளியை விரிவில் பிடிப்போம் என்று காவல் துறை துணை கண்காணிப்பாளர் கௌதம் ராம்சேவாக் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பட்டப் பகலில் வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பம் குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் அவர் தனது பதிவில் இணைத்துள்ளார்.
அதில், "உ.பி. குற்ற செய்தி: வங்கி பாதுகாவலரின் துப்பாக்கி கொள்ளையரின் துப்பாக்கியை கண்டு அஞ்சியது. ரூ. 40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வீடியோவும் உண்மை, பாஜக ஆளும் உ.பி.-யில் சட்டம் ஒழுங்கு நிலைமையின் உண்மையும் இதுதான்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுரை:
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் உள்ளது.
இந்த நிலையில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் செல்போன் கோபுரத்தில் ஏறி நின்றுகொண்டு, “என் மனைவி பிரிந்து சென்று விட்டார். அவரை மீண்டும் என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். இல்லையெனில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன்” என்று கூச்சலிட்டார்.
இதனை கேட்ட பொது மக்கள் திரண்டு வந்தனர். இது குறித்து கீரைத்துறை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் துரை பாண்டியன் சம்பவ இடத்துக்கு வந்தார். அவர் அந்த வாலிபரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
குடிபோதை வாலிபரை மீட்கும் வகை யில் தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக் கப்பட்டு உள்ளனர்.
போலீசாரின் விசார ணையில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கண்ணன் என்பது தெரிய வந்தது.
இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
வாழ்க்கையில் விரக்தி அடைந்த கண்ணன் செல் போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.
வில்லாபுரம் செல்போன் கோபுரத்தில் ஏறிய வாலிபர் குடிபோதையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கும்பகோணம் அடுத்த நாககுடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் சண்முகவேல். ஸ்தபதியான இவர் கும்பகோணம் மாதப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் ஏலச்சீட்டுக்கு சேர்ந்திருந்தார்.
இவருக்கான ஏலச்சீட்டு ரூ.5 லட்சம். இதில் இதுவரை சண்முகவேல் ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 750 கட்டியுள்ளார். இந்த நிலையில் கடந்த 8.5.2018-ல் அவருக்கு ரூ. 3 லட்சம் சீட்டு விழுந்துள்ளது. ஆனால் அவருக்கு அந்த பணத்தை நிதிநிறுவனம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பணத்தை கொடுக்காமல் இவரை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் வேதனையடைந்த சண்முகவேல் மீண்டும் நிதி நிறுவனத்துக்கு சென்று நான் கட்டிய ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 750 திருப்பி தாருங்கள் என்று கேட்டுள்ளார்.
பின்னர் நிதி நிறுவனம் சண்முகவேலுக்கு ரூ.97 ஆயிரத்து 750-க்கான காசோலையை வழங்கியுள்ளது. இதனை அவர் வங்கியில் சென்று போட்டுள்ளார். ஆனால் காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சண்முகவேல் இன்று காலை நிதி நிறுவனம் முன்பு பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்வதாக மிரட்டினார். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சண்முகவேலை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர். #tamilnews
பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில் பிரசித்தி பெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் திருநீர் மலையின் அடிவாரப் பகுதியில் குப்பைகள், கழிவுநீர் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மலையடிவாரத்தில் கழிவுநீர், குப்பைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து குப்பைகள், கழிவுநீர் அங்கு கொட்டப்பட்டு வந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த அதே பகுதி திருமங்கை ஆழ்வார் தெருவை சேர்ந்த விக்கி, பிரபாகர், தீனா ஆகிய 3 பேர் இன்று காலை திடீரென தெற்கு மாட வீதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
திருநீர்மலை அடிவாரத்தில் குப்பை - கழிவுநீர் கொட்டக்கூடாது என்று கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் சங்கர்நகர் போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்களிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க செய்தனர். அவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை அருகே மத்திய பொதுத்துறை மின்மிகு உற்பத்தி நிறுவனமான பெல் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தொடங்குவதற்கு, சுமார் 124 விவசாயிகளிடம் இருந்து பல ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 109 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. கல்வி உள்ளிட்ட தகுதி அடிப்படையில் 15 பேருக்கு வேலை வழங்கப்படவில்லை.
அந்த 15 பேரும் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக குடும்பத்துடன் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், பெல் நிறுவனம் வேலை வழங்க முன்வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த 15 பேரில் 4 பேர் இன்று காலை பெல் நிறுவனத்தின் முன்பு உள்ள செல்போன் டவரில் மண்எண்ணை கேனுடன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
தகவலறிந்ததும், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், வாலாஜா தாசில்தார் விஜயகுமார், ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான சிப்காட் போலீசார், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர்.
செல்போன் டவர் மேல் இருந்த 4 பேரையும் சமரசம் செய்து கீழே வரவழைத்தனர். விசாரணையில், சிப்காட் புளியந்தாங்கல் ஏரிக்கோடி பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 44), பாலு (38) மற்றும் லாலாபேட்டையை சேர்ந்த சம்பத் (40), பாஸ்கர் (45) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
தற்கொலை மிரட்டல் விடுத்த 4 பேரிடமும் உதவி கலெக்டர், தாசில்தார் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், பெல் நிறுவனத்திடம் அவர்களுக்கு வேலை வழங்குவது பற்றியும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. #tamilnews
கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது 46). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் நகர இளைஞரணி துணை செயலாளராக உள்ளார். இவர் நேற்று மாலை 4 மணி அளவில் கடலூர் அண்ணாநகர் நவரத்தினதெருவில் உள்ள குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவரில் திடீரென ஏறினார்.
அரசுக்கு எதிராக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டார்.
தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சுந்தரை செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் சுந்தர் கீழே இறங்கி வரமறுத்து விட்டார்.
வேல்முருகனை விடுதலை செய்யாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.
சுந்தரின் மகள்கள் சம்பவ இடத்துக்கு வந்தார்கள். அவரை கீழே இறங்கி வருமாறு அழுதபடியே கெஞ்சினர்.
இதையடுத்து டவரில் இருந்து சுந்தர் கீழே இறங்கி வந்தார். அவரை போலீசார் பிடித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
45 நிமிடங்கள் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.