search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sun Pictures"

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை திரிஷாவின் நீண்ட நாள் கனவு விரைவில் நனவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Trisha
    திரிஷா நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. தென் இந்தியாவின் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்துவிட்ட திரிஷா இன்னும் ரஜினியுடன் மட்டும்தான் இணைந்து நடிக்கவில்லை.

    எந்த பேட்டி என்றாலும் திரிஷா ஏக்கமாக இதனை குறிப்பிடுவார். அவரது ஏக்கம் தீரும் நேரம் வந்துவிட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் திரிஷாவும் நடிக்கிறாராம். ஏற்கனவே சிம்ரன் ஒரு கதாநாயகியாக நடிக்கும் நிலையில், திரிஷாவும் காதலியாக நடிக்கிறார். ரஜினியின் இளவயது தோற்றத்துக்கு திரிஷா ஜோடியாக இருக்கலாம் என்று செய்தி வருகிறது.



    திரிஷா நடிப்பில் கடைசியான வெளியான மோகினி படம் போதிய வரவேற்பை பெறாத நிலையில், 96, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட படங்கள் திரிஷா கைவசம் உள்ளன. #Rajinikanth #Trisha

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், பாடல் காட்சிக்காக படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். #Vijay #Sarkar
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்த நிலையில், படக்குழு தற்போது அமெரிக்கா விரைந்துள்ளது.

    அங்கு படத்தின் அறிமுக பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்குகின்றனர். இந்த பாடல் காட்சியை நடன இயக்குநர் ஷோபி வடிவமைக்கிறார். முன்னதாக கத்தி படத்தில் `பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா' என்ற பாடலுக்கு ஷோபி நடனம் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    இந்த பாடலில் வரலட்சுமியும் இடம்பெறுவதாக கூறப்படும் நிலையில், `சர்கார்' படப்பிடிப்புக்காக வேகாஸ் வந்துள்ளதாக நடிகை வரலட்சுமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். 

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார். 

    தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற தீபாவளிக்குப் ரிலீஸாகும், இந்த படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை ஏ.ஆர்.ரஹ்மான் செப்டம்பரில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. #Vijay #Sarkar

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடந்தது. டார்ஜிலிங் மலைப் பகுதியில் முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள். பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுக்க சென்னை வந்த ரஜினிகாந்த், அரசியல் நடவடிக்கை குறித்து மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உறுப்பினர் சேர்க்கையையும் தீவிரப்படுத்தினார். 

    அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள டேராடூன் சென்றார். அங்கு 2 வாரங்களாக படப்பிடிப்பு நடந்தது. அதில் ரஜினிகாந்த் - சிம்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. பகலில் விடுதியில் பணியாற்றும் அவர் இரவில் தாதாவாக மாறி சமூக விரோதிகளுடன் மோதுவதுபோல் திரைக்கதை அமைத்து இருப்பதாக சொல்கிறார்கள். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.



    டேராடூனில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இன்று அல்லது நாளை படப்பிடிப்பை முடித்து ரஜினிகாந்த் சென்னை திரும்ப இருக்கிறார்.

    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் பணிகள் குறித்தும் ரஜினி ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மதுரையிலும் சில காட்சிகளை படமாக்குகின்றனர். தற்போது 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #Rajinikanth #VijaySethupathi

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் மூலம் மெர்சல் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. #Vijay #Sarkar
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் `சர்கார்'. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். 

    மெர்சல் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மெர்சல் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் பாடலாசிரியர் விவேக். சர்கார் படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் - விவேக் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்திலும் தான் அனைத்து பாடல்களையும் எழுதுவதாக விவேக் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 



    இதுகுறித்து விவேக் கூறியிருப்பதாவது,

    சர்கார் படத்தில் அனைத்து பாடல்களையும் நான் தான் எழுதுகிறேன். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு பாடல் வரிகள் எழுதுவதும், அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதும் எனக்கு கிடைத்த வரம். எங்களுக்கு உறுதுணையாக, தூணாக இருக்கும் விஜய் சாருக்கு நன்றி. ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் அவரது அழுத்தமான கதைக்கு பாடல் எழுதுவது சிறப்பு. இவ்வாறு கூறியிருக்கிறார்.

    படம் தீபாவளிக்குப் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான வேலைகளை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை அருகே கிழக்கு கடற்கைரை சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    விரைவில் படக்குழு லாஸ் வேகாஸ் செல்கிறது. அங்கு பாடல் காட்சிகளைப் படமாக்க இருக்கின்றனர். ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்கள் வரை அங்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் சமீபத்தில் டப்பிங் பணிகளை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. #Vijay #Sarkar

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜய் தனது போர்ஷனுக்கான டப்பிங் பணிகளை இன்று துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Vijay #Sarkar
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் `சர்கார்'. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். 

    படம் தீபாவளிக்குப் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகிறது படக்குழு. சென்னை அருகே கிழக்கு கடற்கைரை சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. 

    அங்கு முக்கிய காட்சிகளை முடித்த பிறகு, இந்த மாத இறுதியில் படக்குழு லாஸ் வேகாஸ் செல்கிறது. அங்கு பாடல் காட்சிகளைப் படமாக்க இருக்கின்றனர். ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்கள் வரை அங்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது. 



    இந்த நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய டப்பிங் பணிகளை இன்று தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லாஸ் வேகாஸ் கிளம்புவதற்குள் தன்னுடைய போர்‌ஷனுக்கு டப்பிங் பேசி முடித்துவிடத் விஜய் திட்டமிட்டுள்ளாராம். முழு படப்பிடிப்பும் முடிந்த பிறகு விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Vijay #Sarkar

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தில் ரஜினியுடன் முதல்முறையாக இரண்டு முக்கிய பிரபலங்கள் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். #Rajinikanth
    ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டேராடூனில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது டேராடூனில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    ரஜினிகாந்த் நேற்று முன்தினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருவதாக நேற்று தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், படக்குழு அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. 

    இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் நடிகை சிம்ரன் மற்றும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் இருவரும் ரஜினியுடன் முதல்முறையாக இணைவதாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரங்களில் பாபி சிம்ஹா, அஞ்சலி, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரஜினி இந்த படத்தில் பேராசிரியராக நடிப்பதாகவும், மாணவர்களை நல்வழிப்படுத்தும் கதாபாத்திரத்தில் வலம் வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    ரஜினி நடிப்பில் அடுத்ததாக `2.0' வருகிற நவம்பர் 29-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Rajinikanth #Simran #NawazuddinSiddiqui

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் ரஜினி ஜோடியாக சிம்ரன் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth
    காலா படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படாத நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்து, தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு உத்தரகாண்ட்டில் துவங்கி இருக்கிறது.

    இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரங்களில் பாபி சிம்ஹா, அஞ்சலி, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.



    சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விரைவில் ரஜினி, விஜய் சேதுபதி சந்திக்கும் காட்சிகளையும், 2 வாரங்களில் ரஜினி மொத்த சம்பந்தப்பட்ட காட்சிகளையும் முடித்துவிட்டு ஓரிரு மாதங்களில் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #Rajinikanth #Simran

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கும் யோகி பாபுவின் ஒரு கெட்அப் வைரலாகி வருகிறது. #Sarkar #VIJAY
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈ.வி.பி. பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

    இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் யோகி பாபுவின் வீடியோ ஒன்றை நடிகை வரலட்சுமி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் யோகி பாபு பெண் வேடத்திலும், அவரது கண்ணத்தை ஒருவர் கிள்ளுவது போன்றும் அந்த வீடியோ முடிகிறது. யோகி பாபுவை கிள்ளும் அந்த நபர் யார் என்று கண்டுபிடிங்கள் என்று அந்த பதிவில் வரலட்சுமி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்கார் படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Sarkar #VIJAY #YogiBabu

    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் குறித்து பரவிய வதந்திக்கு கார்த்திக் சுப்புராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் காலா படத்திற்கு பின்னர், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை.

    இந்த படத்திற்கான படப்பிடிப்பு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்று இருந்தார். முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், கடந்த 10-ந் தேதி சென்னை வந்தடைந்தார். 

    இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் நிலையில், படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் ரஜினியின் நண்பராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மறுத்துள்ளதுடன், ”படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் பகத் பாசில் இணையவுள்ளார் என்பது பொய்யான தகவலாகும். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக பாபி சிம்ஹா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர்” என்று கூறியுள்ளார். 



    சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajinikanth

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் முக்கிய பிரபலம் ஒருவரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் துவங்க இருப்பதாகவும், தொடர்ந்து காசியிலும் படப்பிடிப்பை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த நிலையில், மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாசில் இந்த படத்தில் ரஜினியின் நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பகத் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவும், பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

    படப்பிடிப்பு இமாச்சல பிரதேசம், மேற்கு வங்காளம் பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் நடந்து வருகிறது. ஆனால் படத்தின் கதை முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் நடப்பது தானாம். அதுவும் ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் நடக்கும் கதை. இதில் கல்லூரியின் பேராசிரியராக ரஜினிகாந்த் நடித்து வருவதாக படக்குழுவில் இருந்து தகவல் வருகிறது.#Rajinikanth #KarthikSubbaraj

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படம் தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் துவக்கியுள்ளது. #Sarkar #VIJAY
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்புக்காக கொல்கத்தா, சென்னை என பிசியாக இருந்த படக்குழு அடுத்ததாக அமெரிக்கா சென்று அங்கு சில முக்கிய காட்சிகளையும், பாடல் காட்சி ஒன்றையும் படமாக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.

    இந்த நிலையில், சர்கார் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் துவங்கியிருக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈ.வி.பி. பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் விஜய், வரலட்சுமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். 

    படப்பிடிப்பு தளத்தில் வைத்து கையில் குடையுடன், காதில் கடுக்கனுடன் நிற்கும் விஜய்யின் புகைப்படம் ஒன்றை நடிகை வரலட்சுமி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
    அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு விரைவில் அமெரிக்கா செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Sarkar #VIJAY

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. #Sarkar #Vijay
    முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் போஸ்டர்களில் விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. இதற்கு சமூகநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து சுகாதாரத்துறை மூலமாக விஜய், முருகதாஸ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பேரில் அந்த போஸ்டர்கள் நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்களின் சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டன. 

    இந்த நிலையில், சர்கார் படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் சர்கார் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதாக படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சென்னை அடையார் புற்றுநோய் மையத்திற்கு தலா ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 



    மேலும் மத்திய, மாநில அரசுகள், நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Sarkar #Vijay

    ×