search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swami Amaranandagiri"

    • மதுரை அருகே கீழமாத்தூரில் நாளை புதிய தியான மந்திர் அர்ப்பணிப்பு விழா நடக்கிறது.
    • இந்த விழாவில் சுவாமி அமரானந்தகிரி பங்கேற்கிறார்.

    மதுரை

    யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பு ஸ்ரீஸ்ரீ பரமஹம்ஸ் யோகானந்தரால் 1917-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு பல்வேறு ஆன்மீக சேவைகளை ஆற்றி வருவதோடு தியானங்களை பற்றியும் கற்றுத்தருகிறது.

    அந்த வகையில் மதுரை அருகே திருவேடகம் வழியில் உள்ள கீழமாத்தூரில் யோகம் நகர் ஷிவானி கார்டனில் புதிய தியான மந்திர் அமைக்கப்பட்டுள் ளது. இதன் அர்ப்பணிப்பு விழா மற்றும் தியானம், ஆன்மீக சொற்பொழிவு, மகா பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நாளை (25-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.

    விழாவில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் மூத்த சன்னியாசி சுவாமி அமரானந்த கிரி கலந்துகொண்டு புதிய தியான மண்டபத்தை அர்ப்பணித்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    ×