என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போராட்டம்"

    • நேபாளத்தில் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர்.
    • இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் மன்னராட்சிக்கு ஆதரவான போராட்டங்களின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காக, முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதன்மூலம் 80 சதவீத இந்துக்களை கொண்ட நேபாளம் மன்னராட்சியில் இருந்து மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக மாறியது.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

    இதனையடுத்து முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவின் ஆதரவாளர்கள் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். போலீசார் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

    • கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா உரையாற்றினார்.
    • நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

    நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டுவரவும், இந்து ராஷ்டிரமாக அதை உருவாக்கவும் கோரி போராட்டம் வெடித்துள்ளது.

    இன்று நேபாள் தலைநகர் காதமாண்டுவில் குவிந்த போராட்டக்காரர்களுக்கும் நேபாள பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. மன்னராட்சி மற்றும் இந்து ராஷ்டிரத்துக்கு ஆதரவான ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) மற்றும் பிற குழுக்களும் போராட்டங்களை நடத்தின.

    காதமாண்டுவின் டிங்குனே பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் படங்களை ஏந்தியபடி, 'ராஜா வா, நாட்டைக் காப்பாற்று', 'ஊழல் அரசாங்கத்தை ஒழிக்க வா' மற்றும் 'முடியாட்சியை மீண்டும் விரும்புகிறோம்' போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

    பிரிகுதி மாண்டப் (Bhrikuti Mandap) என்ற பகுதியில் மன்னராட்சியை ஆதரிப்போரும், மக்களாட்சியை ஆதரிப்போரும் ஒரே நேரத்தில் இன்று போராட்டம் நடத்தினர்.

    போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை உடைத்து காவல்துறையினர் மீது கற்களை வீச முயன்றபோது நிலைமை மோசமடைந்தது. பதிலுக்கு, கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தினர்.

    மோதல்களின் போது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். மோதலுக்கு இடையில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் காயமடைந்தனர்.

    நிலைமை மோசமடைந்துள்ளதால் காத்மாண்டுவின் திங்குனே, சினமங்கல் மற்றும் கோட்டேஷ்வர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகளை மீறியதற்காக பல இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 80 சதவீத இந்துக்களை கொண்ட நேபாள் அதிகாரபூர்வமாக அதுவரை மன்னராட்சியின் இந்து ராஷ்டிரமாக இருந்து வந்தது. ஆனால் பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக நேபாள் மாறியது.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.


    தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மீதும் நேபாள மக்களுக்கு அதிருப்தி முன்னாள் மன்னர் மீது பெரிய அளவிலான ஆதரவு பெருகியது. இதன் உச்சமாக தற்போது அவரது ஆதரவு குழுக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    வரலாற்றில் மன்னராட்சியை ஒழிக்க உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துள்ளன.ஆனால் மக்களாட்சியை ஒழித்து மன்னராட்சியை கொண்டு வர நேபாளத்தில் போராட்டம் நடப்பது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

    • கடந்த வாரம் காசாவின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 600 பேர் கொல்லப்பட்டனர்.
    • 'போரை நிறுத்து', 'போரை முடிவுக்குக் கொண்டு வா', 'நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க விரும்பவில்லை', 'எங்கள் குழந்தைகளின் இரத்தம் மலிவானது அல்ல'

    கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் வரை உயிரிழந்தனர். 200 பேர் வரை பணய கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்டனர்.

    இரத்னனைதொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என ஐநா தெரிவிக்கிறது. காசா நகரம் முற்றாக சிதைக்கப்பட்டு கட்டடங்கள் கற்கலாக மட்டுமே மிஞ்சின. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

     

    இதற்கிடையில் கடந்த ஜனவரியில் ஹமாஸ் - இஸ்ரேல் இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டது. இதன்மூலம் இஸ்ரேலிய பணய கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரிமாற்றம் நடந்தது. ஆனால் கடந்த மார்ச் 1 ஆம் தேதி போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. இன்னும் 59 பணய கைதிகள் ஹமாஸ் வசம் உள்ளனர். அவர்களில் 24 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    அவர்களை மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. காசாவின் கிட்டத்தட்ட 2 மில்லியன் பாலஸ்தீனியர்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தியது.

    மேலும் கடந்த வாரம் முதல் இஸ்ரேல் மீண்டும் காசா மீது குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் காசாவின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 600 பேர் கொல்லப்பட்டனர். காஸாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 50,000 த்தை கடந்துள்ளது.

    இந்நிலையில் போரை நிறுத்த கோரி வடக்கு காசாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

    நேற்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லஹியாவில் சேதமடைந்த கட்டுமானங்களுக்கிடையே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்

    'போரை நிறுத்து', 'போரை முடிவுக்குக் கொண்டு வா', 'நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க விரும்பவில்லை', 'எங்கள் குழந்தைகளின் இரத்தம் மலிவானது அல்ல' போன்ற முழக்கங்களை மக்கள் எழுப்பினர். "ஹமாஸே வெளியேறு!" என்ற கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். ஹமாஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைப்பதை வீடியோக்களில் காண முடிகிறது.

    போராட்டத்தில் சேருமாறு டெலிகிராம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 முதல் ஹமாஸ் காசாவை நிர்வகித்து வருகிறது. காசா மக்களை பாதுகாக்க ஹமாஸ் விரும்பினால் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.

    நினைத்த இடத்தில் குண்டுகளை வீசி நூற்றுக்கணக்கானோரை கொன்றுவிட்டு, ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் சாக்கு சொல்லி வரும் வேளையில் இந்த போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. போர் மற்றும் பட்டினியால் விரக்தியின் உச்சத்தில் உள்ள காசா மக்களுக்கு விடிவுகாலம் எப்போது பிறக்கும் என்பதே சர்வதேச சமூகத்தில் கேள்வியாக உள்ளது. 

    • 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் ஊதியம் உயர்த்தக் கோரி போராட்டம் நடந்தது.
    • இதில் கேரள காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    புதுடெல்லி:

    100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறியும், அதிகரித்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்க அவர்களின் ஊதியத்தை உயர்த்தக் கோரியும் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், சசி தரூர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பிற கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அப்போது பேசிய பிரியங்கா காந்தி, அரசாங்கத்தின் செயலற்ற தன்மை மில்லியன் கணக்கான குடும்பங்களை வாழ்வாதாரமின்றி விட்டுச் சென்றுள்ளது. வறுமை மற்றும் துன்பத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியில் உடனடியாக கவனம் செலுத்தி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஊதியம் இல்லாததால் வாழ்க்கையை நடத்த போராடும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும், நிலுவையில் உள்ள ஊதியங்களை உடனடியாக விடுவித்தல், அதிகரித்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்க ஊதியத்தை அதிகரித்தல், வேலை நாட்களை 150 நாளாக அதிகரித்தல் ஆகியவற்றை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியது.

    • குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார், இரணியலில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்சனைகள் உள்ள நிலையில் பாராளுமன்ற தொகுதி மறு வரையறை கூட்டம் நடத்தப்படுவது தேவையற்றது என பா.ஜ.க. குறை கூறி வருகிறது. இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இன்று பா.ஜ.க. சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று (சனிக்கிழமை) தமிழகத்தில் பா.ஜ.க.வினர் தங்கள் வீட்டு முன்பு கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கருப்புகொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார், இரணியலில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் அவரது வீட்டின் முன்பும், மாநில செயலாளர் மீனாதேவ் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள தனது வீட்டின் முன்பும் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணை தலைவர் தேவ் மற்றும் பலர் கருப்புக்கொடியுடன் பங்கேற்றனர்.

    மாவட்ட பொருளாளர் முத்துராமன், வெள்ளாடிச்சி விளை வீட்டு முன்பு கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். இதேபோல் நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.

    மாநகராட்சி கவுன்சிலர்கள் ரோசிட்டா திருமால், ரமேஷ் உள்ளிட்ட பலரும் கருப்புக் கொடி போராட்டத்தில் பங்கேற்றனர். குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும் ராஜாக்கமங்கலம், அகஸ்தீசுவரம், தோவாளை உள்ளிட்ட பல பகுதிகளிலும் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    • தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான பிரச்சனையை தி.மு.க. உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எழுப்பி வருகின்றனர்.
    • பாராளுமன்ற வளாகத்தில் இன்றும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    மத்திய அரசு பாராளுமன்ற தொகுதிகளை மறு வரையறை செய்யும்போது தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருகிறார். இதையொட்டி, தென் மாநிலங்களை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் சென்னையில் வரும் 22-ம் தேதி நடக்கிறது.

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான பிரச்சனையை தி.மு.க. உறுப்பினர்கள் பாராளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் எழுப்ப முயன்றனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் இன்றும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

    தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் நியாயம் தேவை என்ற பேனரை வைத்து இருந்தனர்.

    மாநிலங்களின் உரி மையை பாதுகாக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்டுகளை அணிந்து தமிழக எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    தொகுதிகளை குறைக்காதே, மத்திய அரசே தமிழகத்துக்கு துரோகம் இழைக்காதே என்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்தக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டதை போல பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை கொண்டு வர வேண்டும் என்று அனைத்து சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர். விடுமுறை நாளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் இருந்து அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்து உள்ளனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

    சென்னையில் எழிலகம் பின்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், மாயவன் ஆகியோர் கூறியதாவது:-

    பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். விடுமுறை நாளில் போராட்டம் நடைபெறுவதால் அரசு ஊழியர்கள் அதிகளவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ஈட்டிய விடுப்பு சரண் சலுகையை 1.4.2026 பதிலாக வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்க வேண்டும்.

    இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட் கூட்டத்தில் வெளியிட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்ற வேண்டும். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்று கூடி ஆலோசித்து அடுத்த கட்டமாக வேலை நிறுத்தம் அல்லது மறியல் போராட்டம் என தீவிரமாக முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் நிராகரிப்பட்டன.
    • வக்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று கோஷம்.

    புதுடெல்லி:

    வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்தும் வகையில் பல்வேறு திருத்தங்களுடன் வக்பு திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதனால் பாராளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி.) அமைக்கப்பட்டது. இதில் எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் நிராகரிப்பட்டன. ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே வக்பு திருத்த மசோதாவின் ஜே.பி.சி. அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மந்திரி சபை கூட்டத்திலும் கூட்டுக்குழு வின் 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் வக்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்த நிலையில் வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டம் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி தலைவரும், எம்.பி.யுமான ஓவைசி பங்கேற்றார்.

    வக்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

    • இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
    • இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை இந்தியில் நடத்தவும், மத்திய அரசின் அலுவலகங்களில் அலுவல் மொழியாக இந்தியை கொண்டு வருவதற்காக ஜனாதிபதிக்கு அனுப்பபட்ட பாராளுமன்ற குழுவின் முடிவை திரும்ப பெற கோரியும், இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தல்லாகுளம் தலைமை தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தி திணிப்புக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மணிகண்டன் கூறுகையில், மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றார்.

    • போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர் .
    • போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரசேகர் உட்பட 11 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    நாகர்கோவில், அக்.27-

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர் .போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரசேகர் உட்பட 11 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    • நிசாலை சீரமைக்க ஒதுக்கப் பட்ட நிதியை கையாடல் செய்து, சாலை முழுமை பெற்று விட்டதாக எழுத்து பூர்வமாக அதி காரிகள் பதில் கூறினார்கள்.
    • நிதியை கையா டல் செய்த அதிகாரிகள் மீது முறையான நடவடி க்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் போடப்ப படாத சாலைக்கு ரூ.43.27 லட்சம் செலவு கணக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் காட்டப்பட்ட தால், நிதி மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி, கிராம மக்கள் சாலையில் செடிகளை நட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    காரைக்கால் அம்மன் கோவில் பத்து பகுதியில் சுமார் 125 குடும்பங்களும், எம்.எம்.ஜி நகரில் 155 குடும்பங்களும், பறவை பேட்டில் 26 குடும்பங்களும் உள்ளன. இப்பகுதி சாலை கள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்ததின் பேரில், கடந்த 2018-ம் ஆண்டு, 3 பகுதியையும் ஒருங்கிணைத்து, ஆதி திரா விடர் நலத்துறை சார்பில், ரூ.43.27 லட்சம் செலவில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்ப ட்டது.

    ஆனால், 26 வீடுகள் உள்ள பறவைபேட் பகுதி யில் மட்டும் சாலை சீரமை க்கப்பட்டது. கோரிக்கை விடுத்து 4 ஆண்டுகள் ஆகியும் சாலை சீரமைக்க ப்படாததால், எம்.ஜி.ஆர். நகரைச்சேர்ந்த பூங்கொடி என்பவர், காரைக்கால் பொதுப்பணி த்துறை, நகராட்சி மற்றும் ஆதிதிரா விடர் நலத்து றைக்கு, சாலையை சீரமைப்பு குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் கேட்டார்.

    இதில், பொதுப்பணி த்துறை, நகராட்சி தங்க ளுக்கு சம்பந்த மில்லை யென பதில் கூறிய நிலையில், ஆதிதிராவிட நலத்துறை மட்டும் 2018-ல் ரூ.43.27 லட்சத்தில் சாலை போடப்பட்டுவிட்டது என பதில் அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இது குறித்து புகார் மனு அளித்தனர்.

    அதில் சரியான பதில் வராத காரணத்தால், கிராம மக்கள் தங்கள் பகுதி சாலையில், செடிகளை நட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் போது, சாலை சீரமைக்க ஒதுக்கப் பட்ட நிதியை கையாடல் செய்து, சாலை முழுமை பெற்று விட்டதாக எழுத்து பூர்வமாக பதில் கூறிய அதி காரிகள், நிதியை கையா டல் செய்த அதிகாரிகள் மீது முறையான நடவடி க்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

    இல்லையேல், தொடர் போராட்டம் நடத்துவோம் என வலியுறுத்தியுள்ளனர். இச்சமவம் நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் என்ற புகார் நகைச்சுவை ஞாபகம்படுத்துவதாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் நகைத்து வருகின்றனர்.

    • தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணை பாட்டிலுடன் வந்த வக்கீல் கைது
    • பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததினால் நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் புனித தேவ குமார் இவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

    இவர் 14.10.2022 அன்று மண்ணெண்ணை பாட்டிலுடன் தான் தீ குளிக்க போவதாக அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டிருந்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது :-

    குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான குழித்துறையில் இருந்து மடிச்சல் செல்லும் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் சுமார் 3 வருடமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சரி செய்ய பல முறை புகார் அளித்தும் குழித்துறை நகராட்சியோ, மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கை எடுக்க வில்லை. அதனால் இந்த மாதம் 30-ந் தேதி சாலையை செப்பனிட வில்லை என்றால் தான் 31-ந் தேதி குழித்துறை சந்திப்பில் தீ குளிக்க போவதாக மண்ணெண்ணை பாட்டிலுடன் அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் விடுத்திருந்தார்.

    அந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் அதிகாரிகள் அவரிடம் சில நாட்களில் சாலையை செப்பனிடுவோம் என்றும், இப்போது எங்களிடம் போதிய நிதி இல்லை என்றும் பேச்சு வார்தையில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு உடன்படாத அவர் இன்று காலை தீ குளிப்பதற்காக மண்ணெண்ணை பாட்டிலுடன் தனது வீட்டில் இருந்து கிளம்பிய போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததினால் அவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×