என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போராட்டம்"

    • தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணை பாட்டிலுடன் வந்த வக்கீல் கைது
    • பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததினால் நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் புனித தேவ குமார் இவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

    இவர் 14.10.2022 அன்று மண்ணெண்ணை பாட்டிலுடன் தான் தீ குளிக்க போவதாக அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டிருந்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது :-

    குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான குழித்துறையில் இருந்து மடிச்சல் செல்லும் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் சுமார் 3 வருடமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சரி செய்ய பல முறை புகார் அளித்தும் குழித்துறை நகராட்சியோ, மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கை எடுக்க வில்லை. அதனால் இந்த மாதம் 30-ந் தேதி சாலையை செப்பனிட வில்லை என்றால் தான் 31-ந் தேதி குழித்துறை சந்திப்பில் தீ குளிக்க போவதாக மண்ணெண்ணை பாட்டிலுடன் அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் விடுத்திருந்தார்.

    அந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் அதிகாரிகள் அவரிடம் சில நாட்களில் சாலையை செப்பனிடுவோம் என்றும், இப்போது எங்களிடம் போதிய நிதி இல்லை என்றும் பேச்சு வார்தையில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு உடன்படாத அவர் இன்று காலை தீ குளிப்பதற்காக மண்ணெண்ணை பாட்டிலுடன் தனது வீட்டில் இருந்து கிளம்பிய போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததினால் அவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக என அ.தி.மு.க. குழு தலைவர் சோலைராஜா பேட்டியளித்துள்ளார்.
    • உள்ளாட்சித் தினமான இன்று மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகர சபா குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    மதுரை

    உள்ளாட்சித் தினமான இன்று மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகர சபா குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகர சபை குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கவுன்சிலர்கள் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

    இது தொடர்பாக மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் குழு தலைவர் சோலைராஜா கூறியதாவது:-

    மதுரை மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேர் உள்ளோம். இன்று உள்ளாட்சித் தினத்தில் மாநகர சபை குழு கூட்டம் நடத்த அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு வார்டுகளிலும் கவுன்சிலர் தலைமையில் 10 பேர் குழு பட்டியல் கேட்கப்பட்டன.

    நாங்கள் அந்தந்த வார்டுகளில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் சேவை மனப்பான்மை கொண்டவரை இந்த பட்டியலில் உறுப்பினராக சேர்த்து ஒப்புதலுக்காக அனுப்பினோம். ஆனால் நாங்கள் அளித்த அந்த 10 பேர் குழு வில் 5 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். மீதம் 5 பேர் தி.மு.க.வை சேர்ந்த வட்ட செயலாளர், ஏற்கனவே கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் மற்றும் தி.மு.க.வினர் சேர்க்கப்பட்டுள்ளனர். நாங்கள் இவர்களுடன் சேர்ந்து எப்படி செயல்படமுடியும்?

    எங்கள் வார்டுகளில் எந்த பணியும் செய்யாமல் திட்டமிட்டு புறக்கணிப்பு செய்கின்றனர். இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மாநகர சபை குழுவிலும் எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திமுகவினரே சேர்க்கப்பட்டுள்ளனர். இது எப்படி நியாயமாகும்.

    ஏற்கனவே மதுரை மாநகராட்சி நிர்வாகம் செயல்படாமல் முடங்கி இருக்கின்றது. வார்டுகளில் எந்த பணியும் நடக்கவில்லை. ஒவ்வொரு மாமன்ற கூட்டத்தின் போதும் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசுகிறோம். ஆனால் அதற்கு முறைப்படியான எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

    தெருவிளக்கு, பாதாள சாக்கடை, சாலை வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை தீர்க்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எங்களது கோரிக்கைகளை கேட்க மறுக்கிறார்கள். இப்படி செயல்படாத மாநக ராட்சியில் கவுன்சிலராக இருப்பதைவிட இந்த பதவியை ராஜினாமா செய்யும் சூழ்நிலைதான் உருவாகப்போகிறது.

    எனவே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேரும் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை. மக்களுக்கு சேவை செய்ய முடியாத பதவியில் எதற்காக இருக்க வேண்டும்?

    தி.மு.க.வினர் தொடர்ந்து பழிவாங்கும் போக்கில் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள். இதனை மதுரை மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வார்டுகளில் எந்த பணியும் நடக்கவில்லை. பணியே நடக்காத வார்டுக்கு குழு ஒரு கேடா? செயல்படாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    முன்னதாக மதுரை மாநகராட்சி ஆணையாளரை நாங்கள் சந்தித்து பேச உள்ளோம்.அவரிடம் நாங்கள் அளித்த மாநகர சபா குழு பட்டியலின்படி மாநகர சபை குழு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவோம்.எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் இந்த கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்.கூட்டத்தையும் நடத்த விட மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேரும் உடனிருந்தனர்.

    • வட்டார வளர்ச்சி அலுவலர் காரை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அடிப்படை வசதிகள் செய்து தர உடனடி நடவடிக்கை கோரி

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆர். பாலக்குறிச்சி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பொதுமக்கள், கடந்த 17 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து தரப்படவில்லை. பேருந்து வசதிகள் இல்லை. இப்பகுதியில் மருத்துவமனை இல்லாத காரணத்தால் சிவகங்கை மாவட்டத்திற்கு மருத்துவம் பார்க்க செல்ல வேண்டிய சூழல் இருப்பதாகவும், கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறி பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை அறிந்து அங்கு வந்த பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி காரில் புறப்படும் போது, அவரின் காரை மறித்து தங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உலகம்பட்டி காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களது கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • வாடிப்பட்டி பேரூராட்சியில் சபை உறுப்பினர்களாக தி.மு.க.வினரை நியமித்ததால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர்.
    • இதில் தி.மு.க. 10 வார்டுகளிலும் 1வார்டில் சுயேட்சையும், 7 வார்டுகளில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி செய்து வருகின்றனர்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 10 வார்டுகளிலும் 1வார்டில் சுயேட்சையும், 7 வார்டுகளில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி செய்து வருகின்றனர்.

    உள்ளாட்சி தினத்தை யொட்டி வாடிப்பட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் நேற்று வார்டு சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வார்டுசபைகூட்டம் நடத்த அந்தந்தவார்டு கவுன்சிலர்கள் தலைவ ராகவும், அலுவலக பணியாளர் ஒருவர் செயலாளராகவும், பொதுமக்களில் 3பேர் சபைஉறுப்பினராகவும் நியமனம் செய்து கூட்டம் நடத்தவேண்டும்.

    வாடிப்பட்டி பேரூரா ட்சியில் 18 வார்டுகளிலும் சபை உறுப்பினர்களாக பொதுமக்களில் இருந்து நியமனம் செய்யப்பட்ட 3பேரும் தி.மு.க.வினராக தேர்வுசெய்யப்ப ட்டுள்ளதை அறிந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து நேற்று நடந்த வார்டுசபைகூட்டத்தை அ.தி.மு.க.கவுன்சிலர்கள் இளங்கோவன், கீதா, சூர்யா, ப்ரியதர்ஷனி, பஞ்சவர்ணம், வெங்கடேசுவரி, அசோக்குமார் ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்து பேரூராட்சிஅலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணிகட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    இது குறித்து கவுன்சிலர் இளங்கோவன் கூறுகையில், வார்டுசபைகூட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்ட 3உறுப்பினர்களில் ஒருவர்கூட பெண்கள் இல்லை. அனைவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். எனவே இந்தகூட்டத்தை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் செய்கிறோம் என்றார். அதன் பின் பேரூராட்சி செயலர் சண்முகத்திடம் மனு கொடுத்தனர்.

    • போராட்டங்கள் நடத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால் போராட்டங்கள் நடத்தினால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
    • தி.மு.க. உள்பட ஒரு சில கட்சிகள் கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில் வேறு இடங்களை தேர்வு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கலாம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தற்பொழுது கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. போராட்டங்கள் நடத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால் போராட்டங்கள் நடத்தினால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்துவதற்கு பதிலாக வேறு இடத்தில் போராட்டங்களை நடத்த அனுமதி வழங்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

    இதுதொடர்பாக அனைத்து கட்சியுடன் கருத்து கேட்பு கூட்டம் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தாசில்தார் சேகர், நாகர்கோவில் டவுண் டி.எஸ்.பி. நவீன்குமார் மற்றும் தி.மு.க. கட்சி சார்பில் மாநகர செயலாளர் ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் வக்கீல் ஜெயகோபால், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் இந்தியன் சுரேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீலன், குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் ஸ்ரீராம் உள்பட பல்வேறு கட்சியினர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    அப்போது அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பதிலாக வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. உள்பட வேறு சில கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் பிரச்சினைகளை அரசுக்கு கொண்டு செல்லும் வகையில் தான் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. எனவே கலெக்டர் அலுவலகம் முன்பே தொடர்ந்து போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். தி.மு.க. உள்பட ஒரு சில கட்சிகள் கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில் வேறு இடங்களை தேர்வு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

    இருதரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த அதிகாரிகள் இந்த பிரச்சனையை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பு தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், "நாகர்கோவில் கலெக்டர் அலுவலக முன் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு கலெக்டர் அலுவலகம் முன் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கலாம். அண்ணா பஸ் நிலையம், மணிமேடை பகுதிகளில் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது. அண்ணா கலையரங்கம் முன் பகுதியில் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கலாம்" என்றார்.

    • கடந்த 1968-ம் ஆண்டு கலைஞரின் ஆட்சி காலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
    • இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில், பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவருக்கு கடந்த 1968-ம் ஆண்டு கலைஞரின் ஆட்சி காலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அப்போது இருந்து வரதராஜன் மற்றும் அவருடைய வாரிசுகளின் பயன்பாட்டில் தான் அந்த இடம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில், பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வரதராஜன், வாரிசுதாரர்கள் வீட்டுமனை வழங்கப்பட்ட இடத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து வரதராஜன் குடும்பத்தினர் கூறுகையில், வாழ்வாதாரமின்றி தவிக்கும் எங்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இலவசமாக வழங்கிய வீட்டுமனையில் அதிகாரிகள் கட்டிடம் கட்ட முயல்கின்றனர்.

    இது எந்த வகையில் நியாயம்? இதனால் நாங்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவிக்கிறோம். எனவே அதிகாரிகள் இந்த நடவடிக்கை கைவிட வேண்டும்.

    இல்லையெனில் ஒட்டுமொத்தமாக குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆதார் அட்டை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • 15 ஆண்டுகளாக பணி செய்து வந்த 28 பணியாளர்களை திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 15 ஆண்டுகளாக பணி செய்து வந்த 28 பணியாளர்களை திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 35 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையிலும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை.

    ஆகையால் ஆதார் அட்டை நகலை எரித்து எங்களுக்கு குடியுரிமை தேவையில்லை கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் நிறுத்தி வைக்கப்பட்ட பிடிப்பு தொகை வழங்க வேண்டும் என கோஷத்தில் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    • தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாளை பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு மனுஸ்மிருதி புத்தகங்களை வினியோகிக்க தொடங்கினர்.
    • தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ராஜபாண்டியன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    பாளை பஸ் நிலையம் பகுதியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி புத்தகம் வினியோகிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணியினர் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப் போவதாகவும் அறிவித்தனர். இவற்றிற்கு போலீசார் தடை விதித்தனர்.

    மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பாளை பஸ் நிலைய பகுதியில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாளை பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு மனுஸ்மிருதி புத்தகங்களை வினியோகிக்க தொடங்கினர். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், செய்தி தொடர்பாளர் முத்துவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உடனே அங்கு துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் புத்தகங்களை வினியோகிக்க கூடாது என்றனர். எனினும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட கரிசல் சுரேஷ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே பாளை வ.உ.சி மைதானம் இந்து மக்கள் கட்சி தென்மண்டல செயலாளர் ராஜபாண்டியன், மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் கட்சியினரும், இந்து முன்னணி நிர்வாகிகள் விமல், பிரம்ம நாயகம் தலைமையில் அமைப்பினரும் திருமாவளவன் குறித்து துண்டு பிரசுரங்களுடன் திரண்டனர்.

    அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ராஜபாண்டியன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • போதகர் அருண் அந்தோணி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
    • சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கலெக்டரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் அருண் அந்தோணி. சபை போதகர். இவர் அதே பகுதியில் பெத்தேல் ஏ.ஜி.சபை என்ற திருச்சபையை நடத்தி வருகிறார். இந்தநிலையில் சபைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியார்பாளையம் பகுதியில் இடம் வாங்கி, சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகளை தொடங்கியபோது, ஒருசிலர் சபை கட்டுமான பணி நடந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டுமான பணிகளை தடுத்ததுடன், அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

    இதுதொடர்பாக போதகர் அருண் அந்தோணி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கடந்த பல மாதங்களாக கலெக்டரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார். இந்த நிலையில் சொந்த இடத்தில் திருச்சபை கட்ட தொடர்ந்து அனுமதி மறுப்பதை கண்டித்தும், கிறிஸ்தவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகளின் செயல்களை கண்டித்தும் பெத்தேல் ஏ.ஜி. சபை போதகர் அருண் அந்தோணி தலைமையில் சபை மக்கள் 50-க்கும் மேற்பட்டோரும், அனைத்து கிறிஸ்தவ சபை போதகர்களும் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ சபைகள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதையும், சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதையும் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பால் விலை ஏற்றத்தை பா.ஜ.க. வன்மையாகக் கண்டிக்கிறது.
    • விடியல் நேரத்தில் பால் விலையை பார்த்தால் கண்கள் இருட்டுகிறது.

    சென்னை :

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குழந்தை முதல் முதியவர் வரை, பாமர மக்கள் எல்லாம் பரவலாக பயன்படுத்தும் அத்தியாவசியமான பால் விலை ஏற்றத்தை பா.ஜ.க. வன்மையாகக் கண்டிக்கிறது. விடியல் நேரத்தில் பால் விலையை பார்த்தால் கண்கள் இருட்டுகிறது. விடியலை தருகிறோம் என்று சொல்லிவிட்டு, பால் விலையை உயர்த்தி இருப்பதுதான் மக்கள் விடியலுக்குத் தரும் விலையா?

    தமிழக அரசின் 'ஆவின்' பால் வழங்கும் நிறுவனம், அதன் நிர்வாக சீர்கேட்டினால், நஷ்டத்தில் நடத்தப்படுகிறது. தவறான நடைமுறையால் ஏற்படும் நஷ்டத்தை மக்கள் தலையிலே சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, தண்ணீர் வரி உயர்வு, பதிவுக்கட்டண உயர்வு, கழிவுநீர் வரி உயர்வு, என்று அத்தனை வரிகளையும் தாறுமாறாக உயர்த்தி விட்டு, இப்போது பச்சிளம் குழந்தைகளுக்கு பயன்படும் பாலுக்கான விலையையும் உயர்த்தி இருப்பது, வாக்களித்த தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

    தமிழகத்தில் வரிகள் எல்லாம் ஏறுமுகம், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எல்லாம் ஏறுமுகம், ஆனால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் மட்டும் இறங்கு முகத்தில் இருக்கிறது. ஆளும் தி.மு.க. அரசு, கலர் கலரான வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, ஆவின் பால் பாக்கெட்களை கலர் கலராக வேறுபடுத்தி கண்டபடி விலையை உயர்த்தி, மக்களை துன்பப்படுத்துகிறது.

    எனவே தி.மு.க. ஆட்சியை கண்டித்து தமிழகத்தின் 1,200 ஒன்றியங்களில் வருகிற 15-ந்தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில், அனைவரும் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கடந்த பல மாதங்களாக கலெக்ட ரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார்.
    • அனைத்து கிறிஸ்தவ சபை போதகர்களும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவ மக்கள், திருச்சபை கட்ட அனுமதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

    திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் அருண் அந்தோணி. சபை போதகர். இவர் அதே பகுதியில் பெத்தேல் ஏ.ஜி.சபை என்ற திருச்சபையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சபைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியார்பாளையம் பகுதியில் இடம் வாங்கி, சுற்றுச்சுவர் கட்டுவதற்கா ன பணிகளை தொட ங்கியபோது, ஒருசிலர் சபை கட்டுமான பணி நடந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டுமான பணிகளை தடுத்ததுடன், அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இதையடுத்து இதுதொடர்பாக போதகர் அருண் அந்தோணி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கடந்த பல மாதங்களாக கலெக்ட ரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார்.

    இந்த நிலையில் சொந்த இடத்தில் திருச்சபை கட்ட தொடர்ந்து அனுமதி மறுப்பதை கண்டித்தும், கிறிஸ்தவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகளின் செயல்களை கண்டித்தும் பெத்தேல் ஏ.ஜி. சபை போதகர் அருண் அந்தோணி தலைமையில் சபை மக்கள் 50-க்கும் மேற்பட்டோரும், அனைத்து கிறிஸ்தவ சபை போதகர்களும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ சபைகள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதையும், சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதையும் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்ட த்திலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சப் கலெக்டர், வரு வாய்த் துறையினர், போலீஸ் உயரதிகாரிகள் பே ச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் எங்களது சொந்த இடத்தில் திருச்சபை கட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும், அனுமதி கொடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறி, அந்த திருச்சபையைச் சார்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட கிறிஸ்தவ மக்கள் விடிய, விடிய கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக நேற்றும் இன்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

    • இந்தி எதிர்ப்பை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்
    • அரசு கலை அறிவியல் கல்லூரி நுழைவு வாயில் முன்பு நடந்தது

    புதுக்கோட்டை:

    மத்திய அரசின்இந்தி திணிப்பை கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி நுழைவு வாயில் முன்பு 100-கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்பு நிற துணி அணிந்து இந்தி திணிப்புக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைக ளை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப ட்டனர்.

    ×