search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானம்"

    • விமானம் புறப்பட தயாரானபோது விமானத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது.
    • விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சியோல்:

    தென் கொரியாவின் பூசன் நகரில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங் நோக்கி இன்று பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்யும் பயணிகள் 169 பேர், விமான பணியாளர்கள் 7 பேர் என அனைவரும் விமானத்தில் ஏறினர்.


    விமானம் புறப்பட தயாரானபோது விமானத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது. பின்னர் மளமளவென விமானத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர். பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என அனைவரும் அவசரகால எஸ்கேப் ஸ்லைடு (ஊதப்பட்ட ஸ்டைடு) மூலமாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.


    எனினும் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் 29-ம் தேதி முவான் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறங்கியபோது லேண்டிங் கியர் வேலை செய்யாததால் விமானம் கான்கிரீட் அமைப்பில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விமான பயணியான பெர்ன்ஹார்டு வார் என்பவர் வீடியோ எடுத்துள்ளார்.
    • வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    பிரேசில் நாட்டின் தெற்கே சாவோ பவுலோ நகரில் கடுமையான இடி- மின்னலுடன் மழை பெய்துள்ளது. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசியது. ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களிலேயே பெய்தது.

    அப்போது அங்குள்ள குவாருலோஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் மீது மின்னல் தாக்கி உள்ளது. இதனை விமான பயணியான பெர்ன்ஹார்டு வார் என்பவர் வீடியோ எடுத்துள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து பெர்ன்ஹார்டு வார் கூறுகையில், பெரிய புயல் வீசியது. இதனால் விமானங்கள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நாங்களும் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது தான் விமானத்தின் வால் பகுதியில் கடுமையாக மின்னல் தாக்கியதை வீடியோ எடுத்தேன் என்றார்.

    • துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய சரக்குகளையும் துரிதமாக ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
    • சர்வதேச சரக்கு விமான போக்கு வரத்தில், சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆலந்தூர்:

    அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் நேஷ்னல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சரக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த, பெரிய ரக சரக்கு விமானங்களில் ஒன்றான 747-400 ரக சரக்கு விமானம், ஜோர்டான் நாட்டின் அம்மான் விமான நிலையத்தில் இருந்து, சுமார் 124 டன் சரக்குகளுடன் புறப்பட்டு, சென்னை சர்வதேச விமான நிலைய சரக்ககம் பகுதிக்கு வந்து தரை இறங்கியது.

    வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் இந்த மிகப்பெரிய சரக்கு விமானம் சென்னையில் தரை இறங்கியது சென்னை விமான நிலைய சரக்கக பகுதியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக சரக்கக பகுதி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, விமானத்தில் வந்த சரக்குகளை இறக்கினர்.

    மேலும் சென்னையில் இருந்து துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய சரக்குகளையும் துரிதமாக ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் அந்த சரக்கு விமானம் சென்னையில் இருந்து துபாய் வழியாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு புறப்பட்டு சென்றது.

    இந்த சரக்கு விமானம் சுமார் 125 டன் சரக்குகளை ஒரே நேரத்தில் கையாளக்கூடியது.

    அதுமட்டுமின்றி இது பயணிகள் விமானமாகவும் இயக்கக்கூடியது. பயணிகள் விமானமாக இயங்கும் போது, ஒரே நேரத்தில் 660 பயணிகள் செல்ல கூடிய விமானமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    சென்னை விமான நிலையம் சரக்குகளை திறம்பட கையாளுவதில் தற்போது உலக அளவில் சிறந்த சரக்கக விமான நிலையமாக செயல்படுவதால் இதைப்போல் வெளிநாடுகளில் இருந்து, மிகப்பெரிய ரக சரக்கு விமானங்கள், சென்னைக்கு வந்து செல்கின்றன. இது சர்வதேச சரக்கு விமான போக்கு வரத்தில், சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தங்கம் கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது.
    • சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    இவை தவிர உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ விமானம் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தங்கம் கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 15-ந் தேதி இலங்கை தலை நகர் கொழும்புவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு சுத்தம் செய்வதற்காக பணியாளர்கள் விமானத்தில் நுழைந்த போது கழிவறையில் கேட்பாரற்று பை கிடந்தது. இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


    இதனைத் தொடர்ந்து விமானத்தில் உள்பகுதிக்கு வந்த சுங்கத்துறை அதிகாரிகள் கழிவறையில் கிடந்த பையை கைப்பற்றி சோதனை நடத்தினர். அப்போது அந்த பையினுள் ரூ.79 லட்சம் மதிப்பிலான 985 கிராம் எடையுள்ள 2 தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இதனை விமானத்தில் விட்டு சென்றவர்கள் யார்? அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து விட்டு சென்றனரா? என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதில் நேற்று ஒரே நாளில் 985 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் நேற்று திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்த போது அவர் தனது உடமையில் மறைத்து வெளி நாட்டிற்கு கடத்த இருந்த ரூபாய் 435 வெளிநாட்டு பணங்கள் அதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 3,72,000 மற்றும் இந்திய ரூபாய் நோட்டுகள் 30000 என மொத்தம் 4,02,000 மதிப்பிளான இந்திய மற்றும் வெளிநாட்டு பணங்கள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது மேலும் அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தல்படி விமானி விமானத்தை மீண்டும் சென்னையில் தரையிறக்கினார்.
    • மாலை 3.54 மணிக்கு புறப்பட்ட விமானம், மாலை 4.28 மணிக்கு மீண்டும் சென்னையிலேயே தரையிறங்கியது.

    சென்னையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி புறப்பட்ட விமானத்ம் நடுவானில் பறந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

    இதனை சரியான நேரத்தில் கண்டறிந்த விமானி, விமானத்தை தொடர்ந்து இயக்குவது ஆபத்தானது என உணர்ந்து உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

    பின்னர், விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தல்படி விமானி விமானத்தை மீண்டும் சென்னையில் தரையிறக்கினார்.

    மாலை 3.54 மணிக்கு புறப்பட்ட விமானம், மாலை 4.28 மணிக்கு மீண்டும் சென்னையிலேயே தரையிறங்கியது.

    நடுவானில் விமானம் பறந்தபோது, விமானி சாதுர்யமாக செயல்பட்டதால், 162 பேர் உயிர் தப்பினர்.

    சம்பந்தப்பட்ட விமானத்தில் 154 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உள்பட 162 பேர் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமானங்களை மாற்று வழியில் இயக்க வலியுறுத்தப்பட்டன.
    • போலி செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    ஸ்பேஸ்எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் முன்மாதிரி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. ராக்கெட் வெடித்து சிதறியதைத் தொடர்ந்து கல்ஃப் ஆஃப் மெக்சிகோ வழியே செல்லக்கூடிய விமானங்களை மாற்று வழியில் இயக்க வலியுறுத்தப்பட்டன.

    ஸ்டார்ஷிப் விண்ணில் ஏவப்பட்ட எட்டு நிமிடங்களுக்கு பிறகு ஸ்பேஸ்எக்ஸ் மிஷன் கட்டுபாட்டு மையத்துடனான தொடரை இழந்தது. சோதனை முயற்சியில் ஏவப்பட்ட இந்த ராக்கெட் முதல் பேலோடு போலி செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    "ஸ்டார்ஷிப் உடனான அனைத்து தகவல்தொடர்புகளையும் நாங்கள் இழந்துவிட்டோம் - இது அடிப்படையில் மேல் நிலையில் எங்களுக்கு ஒரு ஒழுங்கின்மை இருப்பதைக் குறிக்கிறது" என்று ஸ்பேஸ்எக்ஸ் தகவல் தொடர்பு மேலாளர் டான் ஹூட் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் ஸ்டார்ஷிப் தொலைந்து போனதை உறுதிப்படுத்தினார்.

    ஃபிளைட் ரேடார் 24 தளத்தின் படி பதிவுகளின் அடிப்படையில், குறைந்தது 20 வணிக விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. விமானங்களின் மீது சாத்தியமான குப்பைகள் விழுவதை தவிர்க்க பாதை மாற்றியமைக்கப்பட்டன.

    இது குறித்து ஸ்பேஸ்எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வீடியோ ஒன்றை இணைத்து, "வெற்றி நிச்சயமற்றது, ஆனால் பொழுதுபோக்கு உறுதி!" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • விமானத்தின் பராமரிப்பு ஆய்வின் போது இந்த சடலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
    • தெற்கு புளோரிடா விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அமெரிக்காவில் தெற்கு புளோரிடா விமான நிலையத்தில் ஜெட் ப்ளூ விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் இரண்டு அடையாளம் தெரியாத சடலங்களை கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்குப் பிறகு இந்த விமானம் தெற்கு புளோரிடா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

    இந்த விமானத்தின் பராமரிப்பு ஆய்வின் போது இந்த சடலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சடலங்களின் அடையாளங்கள் தெரியாத நிலையில், அவர்கள் இருவரும் எப்படித் தரையிறங்கும் சாதனம் உள்ள பகுதியினுள் நுழைந்தனர் என்பது தெரியவரவில்லை.

    • கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
    • பயணி ஒருவர் சுற்றுலாப் பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்தார்.

    ஆலந்தூர்:

    தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 35 வயது ஆண் பயணி ஒருவர் சுற்றுலாப் பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். சூட்கேசுக்குள் மறைத்து வைத்திருந்த 7 பார்சல்களை பிரித்துப் பார்த்தபோது பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா கடத்தி வந்து இருப்பதை கண்டுபிடித்தனர். மொத்தம் 3½ கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.3½ கோடி ஆகும்.

    இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த பயணியை கைது செய்து உயர்ரக கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே போல் தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்புடைய, 6 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வட மாநில இளம்பெண் கைது செய்யப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில், தற்போது மீண்டும் தாய்லாந்து நாட்டில் இருந்து, கடத்தி வரப்பட்ட ரூ.3½ கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 நாட்களில் ரூ.9.5 கோடி மதிப்புடைய 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் உயரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

    • 2025 ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு ஹாங்காங்கில் இருந்து விமானம் புறப்பட்டுள்ளது.
    • உலகளாவிய நேர மண்டலம் (Global Time Zone) தான் இதற்கு காரணமாகும்.

    உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகள் முதலாவதாகவும், சில நாடுகள் தாமதமாகவும் புத்தாண்டை வரவேற்றன.

    இந்திய நேரப்படி (IST) இந்தியா இயங்குகிறது. இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்தை விட 5 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது (UTC +5:30).

    பூமியின் 2025 புத்தாண்டை முதலில் மத்திய பசிபிக் பெருங்கடலில் கிரிபாட்டி குடியரசின் அங்கமான கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவு இந்திய நேரப்படி 2024 டிசம்பர் 31 மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    அதைத்தொடர்ந்து 52 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் 2025 பிறந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு பிறந்தது.

    இந்நிலையில், 2025 ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று 2024 டிசம்பர் 31ம் தேதி இரவு 8.30-க்கு லாஸ் ஏஞ்சல்ஸில் தரையிறங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீனா தலைநகர் ஹாங்காங்கில் முன்னதாகவே புத்தாண்டு பிறந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸின் நேரம் 16 மணி நேரம் பின்தங்கியிருப்பதால் இந்த அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. உலகளாவிய நேர மண்டலம் (Global Time Zone) தான் இதற்கு காரணமாகும். 

    • மீண்டும் சியாட்டில் விமான நிலையத்திற்கே திருப்பிவிடப்பட்டது.
    • புகை வந்ததை பணியாளர்கள் கண்டறிந்து தெரிவித்தனர்.

    ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் காக்பிட்-இல் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து ஹானோலுலு நோக்கி புறப்பட்ட விமானத்தின் காக்பிட்-இல் திடீரென புகை வந்தது. இதையடுத்து விமானம் மீண்டும் சியாட்டில் விமான நிலையத்திற்கே திருப்பிவிடப்பட்டது.

    திங்கள்கிழமை மதியம் 1 மணி அளவில் சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து 273 பயணிகள் மற்றும் பத்து பணியாளர்களுடன் ஹவாய் ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான ஏர்பஸ் ஏ330 புறப்பட்டது. சியாட்டிலில் இருந்து ஹானோலுலு புறப்பட்ட விமானத்தில் திடீரென புகை வந்ததை பணியாளர்கள் கண்டறிந்து தெரிவித்தனர்.

    இதையடுத்து விமானத்தில் அவசர நிலை ஏற்பட்டதாக விமானி அறிவித்தார். இதையடுத்து, விமானம் சியாட்டில் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கும் முன்பே விமான நிலையத்தில் தீயனைப்பு துறையினர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    விமானம் பத்திரமாக தரையிறங்கியதும், தீயனைப்புத் துறையினர் விமானத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புகை வந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதை கண்டறிந்தனர். இதனை விமான நிலைய செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். 

    • விமானத்தில் பயணி ஒருவர் சக பயணிகளுக்கு தேநீர் வழங்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
    • பயணி ஒருவர் விமானத்தில் தேநீர் வழங்குவதற்கு இண்டிகோ கேபின் குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

    இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் சமயத்தில் பயணி ஒருவர் சக பயணிகளுக்கு தேநீர் வழங்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

    நடுவானில் பயணி ஒருவர் விமானத்தில் தேநீர் வழங்குவதற்கு இண்டிகோ கேபின் குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் எந்த விமான பாதையில் இந்த சம்பவம் நடந்தது என்ற விவரங்கள் தெரியவில்லை.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    • விமான கதவை திறந்து கீழே இறங்க முயன்றுள்ளார்.
    • ஏணிப்படி இல்லாததை கவனிக்காமல் கால் எடுத்து வைத்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    TUI-க்கு சொந்தமான விமானம் இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணிகள் ஏறுவதற்காக ஏணிப்படி வைக்கப்பட்டிருக்கும். விமானம் புறப்படும் முன் கதவு அடைக்கப்பட்டு, அந்த ஏணிப்படிகள் அகற்றப்படும். அதன்பின் விமானம் புறப்படும்.

    அந்த வகையில் ஏணிப்படிகள் பொருத்தப்பட்டு பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறினர். விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அப்போது விமான பணிப்பெண் ஒருவர் கதவை திறந்து கீழே இறங்க முயன்றார். ஆனால் படிக்கட்டு விமானத்துடன் இணையாமல் தனியாக இருந்துள்ளது. விமானம்தான் புறப்படவில்லையே என அந்த பணிப்பெண் கதவை திறந்தது படிக்கட்டில் கால் வைப்பது போல் வைக்க, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். விமான ஓடுதளத்தில் விழுந்த பணிப்பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக ஆம்புலன்ஸ் சர்வீஸ் அழைக்கப்பட்டு முதலுதவி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமான பணிப்பெண் கீழே விழுந்தது எப்படி என விசாரணை நடத்து வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விமான பணிப்பெண் கதவை திறந்து, ஏணிப்படி இருக்கும் என காலை எடுத்து வைத்தார். ஆனால் அங்கே இருக்க வேண்டிய ஏணிப்படி இருக்கவில்லை. அது ஏன் எனத் தெரியவில்லை. அதனால் கீழே விழுந்தார். அவருக்கு பயங்கர காயம் ஏற்பட்டது என விமான நிலையத்தில் இருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ×