என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா"

    • ஐஏஎஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்தார்
    • விடுப்பை நீடிப்பதற்காக அவரது விண்ணப்பத்தை புதிதாக அமைந்த பாஜக அரசு நிராகரித்தது

    கடந்த வருடம் ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலின்போது அங்கு அரசியல் களத்தில் அதிகம் ஒலித்த பெயர் வி.கே. பாண்டியன். தமிழரான இவரை முன்வைத்தே பெரிய பிரச்சாரங்களை பாஜக முன்னெடுத்தது.

    24 வருடங்களாக ஒரிசாவை ஆட்சி செய்து வந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள அரசு கடந்த தேர்தலில் பாஜகவிடம் தோல்வியடைய முக்கிய காரணங்களில் அதுவும் ஒன்று.

    ஐஏஎஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்தார். பின் 2023 இல் தனது சொந்த விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்த வி.கே. பாண்டியன் பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார்.

    "நவீன் பட்நாயக் அவரது அரசியல் வாரிசாக வி.கே. பாண்டியனை அறிவிப்பார், ஒடிசா ஒரு தமிழனின் கையில் சென்றுவிடும்" என்பதே பாஜக தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் மீண்டும் ஒடிசா மக்களிடம் பதிய வைத்த பிம்பம். ஆனால் நவீன் பட்நாயக் அதை முற்றிலுமாக மறுத்தார்.

    நவீன் பட்நாயக் ஆட்சியை இழந்து பாஜக கோட்டையை பிடித்த பின்னர், தீவிர அரசியலில் இருந்து விலகி இருப்பதாக பாண்டியன் அறிவித்தார்.

    இந்நிலையில் தற்போது வி.கே. பாண்டியனின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சுஜாதா ஆர். கார்த்திகேயன், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.

    2000 பேட்ச் ஒடிசா கேடர் அதிகாரியான சுஜாதா, தற்போது அம்மாநில நிதித்துறையில் சிறப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார். தகவலின்படி, அவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார்.

    சர்ச்சை என்ன?

    கடந்த வருடம் வரை மிஷன் சக்தி துறையில் ஆணையர் மற்றும் செயலாளராகப் பணியாற்றி வந்த சுஜாதா, மே 2024 இல், பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இதன் காரணமாக சுஜாதாவை பொதுமக்கள் சாராத துறைக்கு மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    இதற்குப் பிறகு, தேர்தலில் பிஜு ஜனதா தளம் தேர்தலில் தோல்வியடைந்ததால் 6 மாத விடுப்பு எடுத்தார் சுஜாதா. கடந்த வருடம் நவம்பர் 26 வரை அவர் விடுப்பில் இருந்தார்.

    அதன்பிறகு விடுப்பை நீடிப்பதற்காக அவரது விண்ணப்பத்தை புதிதாக அமைந்த பாஜக அரசு நிராகரித்தது. இந்நிலையில் சுஜாதா விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளார். 

    • அவர்கள் வெற்றி பெறும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
    • மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கிரிக்கெட் கோப்பை போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    ஒடிசாவை சேர்ந்த 95 வயதான மூதாட்டி சபித்ரி மஜ்ஹி, பல வருடங்களாக விளையாடுவதற்கு GROUND இல்லாமல் இருந்த கிராமத்து சிறுவர் மற்றும் இளைஞர்களுக்காக தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

    ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் சிங்கஜார் என்ற கிராமம் அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, இந்த கிராமத்தில் கிரிக்கெட், கால்பந்து மற்றும் கபடி போன்ற மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    சிங்கஜார், விளையாட்டுகளை விரும்பும் கிராமமாக மாநிலத்தில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளது. இருந்தபோதிலும், கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தனியார் விளையாட்டு மைதானங்களை புதுப்பித்து மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கிரிக்கெட் கோப்பை போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    எனவே விளையாட தங்களுக்கென ஒரு மைதானம் இல்லாதது குறித்து குழந்தைகளின் ஏக்கத்தை பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த விளையாட்டு ஆர்வலரான 95 வயது மூதாட்டி சபித்ரி மாஜி, விளையாட்டு மைதானம் கட்டுவதற்காக தனது ஐந்து ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்போது, நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தில் அரசாங்கம் ஒரு அரங்கம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோருகின்றனர்.

    தனது முடிவு குறித்து பேசிய மூதாட்டி சபித்ரி மாஜி ''எங்கள் கிராமத்தின் குழந்தைகள் விளையாட்டுகளில் பங்கேற்பதைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவர்கள் வெற்றி பெறும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் அவர்களுக்கு வழங்கிய விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் விளையாடுகிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள், ஆரோக்கியமாக இருக்கிறார்கள்'' என்று தெரிவிக்கிறார்.

    முன்னதாக மூதாட்டி, கிராமத்தில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் கோவிலுக்கு நிலங்களை நன்கொடையாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சபித்ரி மாஜியின் கணவர் நிலம்பர் மாஜி 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். 

    • தங்கள் மகள்கள் ஓடிப்போய்விடுவார்கள் என்ற பெற்றோரின் பயம் ஆகியவை குழந்தைத் திருமணத்துக்கு வழிவகுக்கிறது.
    • பெண் 18 வயதை எட்டும்போது வரதட்சணையும் அதிகம் தர வேண்டியிருக்கும் என அஞ்சுகிறார்கள்.

    ஒடிசாவில் கடந்த 6 ஆண்டுகளாக தினமும் 3 குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக அம்மாநில அரசின் தரவறிக்கை தெரிவிக்கிறது.

    அரசு தரவுகளின்படி மட்டுமே, 2019 முதல் 2025, பிப்ரவரி வரை ஒடிசா முழுவதும் 8,159 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. 30 மாவட்டங்களை கொண்ட ஒடிசாவில் அதிகபட்சமாக நபரங்பூரில் 1,347 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன.  

    பழங்குடி பழக்கவழக்கங்கள், வரதட்சணை, தொழிலாள வர்க்க குடும்பங்களின் இடம்பெயர்வு மற்றும் தங்கள் மகள்கள் ஓடிப்போய்விடுவார்கள் என்ற பெற்றோரின் பயம் ஆகியவை குழந்தைத் திருமணத்துக்கு வழிவகுப்பதாக அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

    குழந்தை திருமணத்தைத் தடுக்க, ஒடிசா அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் பஞ்சாயத்து, தொகுதி மற்றும் அங்கன்வாடி மட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. இது தவிர, குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழுக்களின் கூட்டங்களை அரசாங்கம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நடத்தி வருகிறது.

    "குழந்தை திருமணத்தை ஒரே இரவில் முற்றிலுமாக நிறுத்த முடியாது. பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க, அவர்களுக்கு ஒரு சூழலையும் சமூகத்தையும் நாம் உருவாக்க வேண்டும் . இவ்வகை திருமணங்கள் பழங்குடியினரின் பாரம்பரிய நடைமுறையாகவும் உள்ளது" என்று சமூக ஆர்வலர் நம்ரதா சத்தா கூறுகிறார்.

    வாழ்வாதாரத்திற்காக வேறு இடங்களுக்கு தொடர்ந்து புலம்பெயரும் பெற்றோர்கள் தங்கள் பெண்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும், புலம்பெயர்ந்த இடத்தில் அவள்  யாருடனாவது ஓடிப்போய், குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சுகிறார்கள். மேலும் பெண் 18 வயதை எட்டும்போது வரதட்சணையும் அதிகம் தர வேண்டியிருக்கும் என அஞ்சி இளவயதிலேயே அவர்களை திருமணம் செய்து தந்துவிடுகின்றனர்

    இளவயது திருமணத்துடன், குழந்தைத் தொழிலாளர் முறையின் சவாலையும் ஒடிசா எதிர்கொள்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், தொழிலாளர்களாக வேலை செய்த 328 குழந்தைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 1986 இன் கீழ், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியவர்கள் மீது இதுவரை 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    • ரெயில் விபத்தில் பலருக்கும் கை, கால்கள் உடைந்தும், தலையில் அடிபட்டும் ரத்தம் வீணாகி உயிருக்கு போராடி வருகிறார்கள்.
    • ஒரே நாள் இரவில் மட்டும் சுமார் 500 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டதாகவும், இன்னும் ஏராளமானோர் ரத்த தானம் செய்ய காத்திருக்கிறார்கள்.

    ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் மாவட்டம் பஹானகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு நடந்த ரெயில் விபத்தில் 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    அவர்களில் பலரும் பாலாசோர் மற்றும் அதை சுற்றியுள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பலருக்கும் கை, கால்கள் உடைந்தும், தலையில் அடிபட்டும் ரத்தம் வீணாகி உயிருக்கு போராடி வருகிறார்கள்.

    இவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏராளமான யூனிட் ரத்தம் தேவைபடுகிறது. இதுபற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது.

    இதனை அறிந்த தன்னார்வலர்கள் பலர் நேற்றிரவே ஒடிசா சென்றனர். அங்கு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று ரத்த தானம் செய்தனர். இதனை ஒடிசா மாநில தலைமை செயலாளர் பிகே ஜெனா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    நேற்று ஒரே நாள் இரவில் மட்டும் சுமார் 500 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டதாகவும், இன்னும் ஏராளமானோர் ரத்த தானம் செய்ய காத்திருப்பதாகவும் கூறினார். தற்போது இப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஆயிரம் யூனிட் ரத்தம் இருப்பதாகவும், தேவைப்படுவோருக்கு அவை உடனடியாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    • ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் 250-க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250-க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


    நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இரும்புப் பெட்டிகளைப் போலவே

    இடிபாடுகளுக்குள் சிக்கி

    இதயக்கூடும் நொறுங்கிவிட்டது

    பாதிக்கப்பட்ட

    ஒவ்வொரு குடும்பத்திற்கும்

    ஆழ்ந்த இரங்கல்

    மீட்புப் பணியாளர்க்குத்

    தலைதாழ்ந்த வணக்கம்

    இருந்த இடத்தில்

    எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன்

    கண்ணீர்

    கன்னம் தாண்டுகிறது" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரெயில்கள் உள்பட 11 ரெயில்கள் ரத்து.
    • சிலிகான் டவுனில் இருந்து எழும்பூர் வழியாக தாம்பரம் வரை செல்லும் நகூன் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து.

    சென்னை:

    ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து காரணமாக சென்னை, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரெயில்கள் உள்பட 11 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

    இன்று மாலை 5.50 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு ஹவுரா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் (எண். 12666).

    இன்று காலை சென்னை சென்ட்ரல் வரவேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (எண். 12842), பெங்களூருவில் இருந்து இன்று காலை 11.40 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் (எண்.12509).

    ஹவுராவில் இருந்து பெங்களூரு வரவேண்டிய ரெயில் (எண்.12863) ஹவுராவில் இருந்து நேற்று பகல் 11.55 மணிக்கு புறப்பட்டு நாளை அதிகாலை 3 மணிக்கு சென்னை வரும் ரெயில் (எண்.12839).

    இதேபோல் ஹவுராவில் இருந்து சென்னை வழியாக பெங்களூரு செல்லும் ரெயில் (12245), (12551), இன்று பகலில் பெங்களூருவில் இருந்து புறப்படும் வண்டி எண். 12684, 12253 ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சிலிகான் டவுனில் இருந்து எழும்பூர் வழியாக தாம்பரம் வரை செல்லும் நகூன் எக்ஸ்பிரஸ் (15630) மற்றும் பெங்களூருவில் இருந்து புறப்படும் (22503) ஆகிய ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாங்கள் அமர்ந்திருந்த பெட்டிக்கு முந்தைய பெட்டிக்கு முன்பாக இருந்த அனைத்து பெட்டிகளும் விபத்தில் சிக்கியிருந்தது.
    • சில பெட்டிகள் அருகில் 3-வது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த மற்றொரு ரெயில் மீது மோதியது.

    நெல்லை:

    நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கோரமண்டல் ரெயில் விபத்தில் இதுவரை 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    அந்த ரெயிலில் பயணித்து உயிர் தப்பியவர்களில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தப்பளகுண்டு தெருவை சேர்ந்த ரமேஷ்(வயது 45) என்பவரும் ஒருவர் ஆவார். விபத்து குறித்து அவர் கூறியதாவது:-

    நான் ஜார்கண்ட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். அங்கு சபை ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். நாங்கள் விபத்துக்குள்ளான ரெயிலில் 2-ம் அடுக்கு குளிர்சாதன பெட்டியில் பயணித்தோம். நேற்றிரவு 7 மணியளவில் திடீரென நாங்கள் அமர்ந்திருந்த பெட்டி குலுங்கியது. இதனால் இருக்கைகளில் அமர்ந்திருந்த நாங்கள் அனைவரும் பெட்டிக்குள் கீழே விழுந்தோம். உடனே ரெயில் தடம் புரண்டதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

    இதனால் ரெயில் பெட்டியில் தீப்பற்றி விடக்கூடாது என்பதற்காக அதில் இருந்து உடனடியாக அலறியடித்துக் கொண்டு அனைவரும் வெளியேறினார்கள்.

    அப்போது நாங்கள் அமர்ந்திருந்த பெட்டிக்கு முந்தைய பெட்டிக்கு முன்பாக இருந்த அனைத்து பெட்டிகளும் விபத்தில் சிக்கியிருந்தது. சுமார் 9 பெட்டிகள் வரை இந்த விபத்தில் அப்பளம் போல் நொறுங்கி கிடந்தது. இதில் சில பெட்டிகள் அருகில் 3-வது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த மற்றொரு ரெயில் மீது மோதியது. அதில் இருந்த பயணிகளின் அலறல் சத்தம் நெஞ்சை உறைய செய்தது. பின்னர் அங்கு நிற்கவே மிகவும் பயமாகவும், படபடப்பாகவும் இருந்தது. இதனால் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு புவனேஸ்வருக்கு கிளம்பி வந்து விட்டோம். இப்படியொரு சம்பவம் நடந்துவிடும் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில் விபத்து நடந்தபோது 4 பேரில் ஒருவர் ரெயிலின் ஒருபுறம் உள்ள வாசல் வழியாக வெளியே குதித்தார்.
    • ரெயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்டனர்.

    பாலாசோர்:

    ஒடிசா மாநிலம் பாலசோர் ரெயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வாலிபர்கள் ரகு, கிரண், வைசாக், விஜிஷ் ஆகியோர் பயணம் செய்தனர். அவர்கள் சென்னை வந்து கேரளா செல்ல திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால் எதிர்பாராதவிதமாக ரெயில் விபத்தில் சிக்கி கொண்டனர். இதில் 4 பேரும் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர்.

    ரெயில் விபத்து நடந்தபோது 4 பேரில் ஒருவர் ரெயிலின் ஒருபுறம் உள்ள வாசல் வழியாக வெளியே குதித்தார். மற்ற 3 பேரும் மறுபுறம் உள்ள வாசல் வழியாக தப்பினர்.

    பின்னர் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து விபத்துக்குள்ளான ரெயிலில் சிக்கிகொண்ட பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ரெயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்டனர். அவர்களுக்கு அந்த பகுதி மக்களும் உதவி செய்தனர். விபத்தில் சிக்கிய பயணிகள் படுகாயம் அடைந்து வலியால் அலறிய சத்தம் நெஞ்சை உலுக்குவதாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    • விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
    • ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சென்னை:

    ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் 847 பேர் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. விபத்தில் உயிர் இழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் விவரம் இன்னும் முழுமையாக தெரிய வரவில்லை.

    ஆனாலும் தமிழக பயணிகள் அதிகளவில் பயணித்து இருப்பதால் அவர்களை மீட்க ஒடிசா அரசுடன் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு உதவவும் அவர்களை மீட்டு சென்னை அழைத்து வரவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உதவ அமைச்சர்களும் உடனடியாக செல்ல வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் புறப்பட்டு சென்றது.

    இக்குழுவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணீந்தர ரெட்டி, குமார் ஜெயந்த் உள்ளிட்ட 5 அதிகாரிகள் இன்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் புறப்பட்டு சென்ற அதிகாரிகள் குழுவினர் அம்மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து தமிழக பயணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்து அவர்களை பற்றி தகவல்களை சேகரித்து உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் தமிழக பயணிகளை பார்த்து ஆறுதல் கூறியதோடு அவர்கள் குடும்பத்திற்கு தேவையான நிவாரண உதவிகளை செய்யவும் அங்கு முகாமிட்டு உள்ளனர்.

    தமிழக பயணிகள் குறித்து முழு விவரங்களை பெற்று அவர்கள் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை உள்ளிட்ட மற்ற பகுதிகளை சேர்ந்த பயணிகள் எத்தனை பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உதவிகள் செய்யவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.

    • கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டபோது அந்த பகுதி முழுவதும் பலத்த சத்தம் கேட்டது.
    • விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர்.

    கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டபோது அந்த பகுதி முழுவதும் பலத்த சத்தம் கேட்டது. அதோடு பயணிகள் எழுப்பிய கூக்குரலம் அந்த பகுதி முழுவதும் எதிரொலித்தது.

    இதனை கேட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் விபத்து நடந்த பகுதிக்கு ஓடிவந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாலசோர் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தங்க இடம் கொடுத்ததோடு, அவர்களுக்கு உணவும் வழங்கினர். குழந்தைகளுடன் வந்த பயணிகள் பாலசோர் பகுதி மக்களின் அன்பில் நெகிழ்ந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக அரசு ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விவரங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
    • 132 பேரில் 90-ல் இருந்து 100 பேர் வகையில் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்து நாடு முழுவதும் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

    விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில்தான் அதிக அளவில் தமிழக பயணிகள் இருந்துள்ளனர். இந்த ரெயிலில் மொத்தம் 867 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்த பலரும் முன்பதிவு செய்து பயணம் செய்திருக்கிறார்கள். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்தவர்கள் 127 பேர் பயணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேற்கு வங்கத்தில் இருந்து சென்ட்ரல் வரும் வழியில்தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கி உள்ளது. இதனால் தமிழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இந்த ரெயிலில் சென்னை நோக்கி பயணம் செய்துள்ளனர். அப்போதுதான் அவர்களில் பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    இதேபோன்று ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தமிழக பயணிகள் 5 பேர் பயணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 132 தமிழர்கள் 2 ரெயில்களிலும் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து தமிழக அரசு ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விவரங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

    அதே நேரத்தில் காயம் அடைந்த தமிழர்கள் எத்தனை பேர் என்பது பற்றிய தகவல்களையும் அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள். இது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவதற்கு இன்னும் சில மணி நேரங்கள் ஆகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    குறிப்பாக 5 அல்லது 6 மணி நேரம் கழித்தே தமிழகத்தை சேர்ந்த பயணிகள் பற்றிய விவரங்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக ஒடிசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த 132 பேரில், 90-ல் இருந்து 100 பேர் வகையில் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சுமார் 35 பேரின் செல்போன் இணைப்புகள் மட்டும் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளன என்று வருகிறது. இவர்கள்தான் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    • அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட தயார் செய்யப்பட்டனர்.
    • 15 குழுக்களை சேர்ந்த 500 பேரிடர் மீட்பு படை வீரர்கள் ஒடிசா மாநிலத்திற்கு செல்ல தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

    வேலூர்:

    ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். ரெயில் விபத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

    அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட தயார் செய்யப்பட்டனர். 15 குழுக்களை சேர்ந்த 500 பேரிடர் மீட்பு படை வீரர்கள் ஒடிசா மாநிலத்திற்கு செல்ல தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

    ஒடிசா ரெயில் விபத்து சம்பந்தமாக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தை செர்ந்த பொதுமக்களில் யாரேனும் மேற்கண்ட விபத்து நடந்த ரெயில்களில் பயணித்திருந்தால் அவர்களை மீட்க ஏதுவாக பயண விவரங்களை அவர்களின் உறவினர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள 1077 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 0416 2258016 என்ற தொலைபேசி எண்ணிலும், 9384056214 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×