என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 152997"

    தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது-

    நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல் கழக கிடங்குகளில் அரிசியினை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் கழக அரவை முகவர்களை (முழு நேரம் மற்றும் பகுதி நேரம்) மற்றும் கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுப்படுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.

    எனவே, இந்நிகழ்வில் ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், செம்மண்டலம், கடலூர், அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

    அரிசி, மருந்து உள்ளிட்ட பொருட்களை பொட்டலமிடும் பணிகள் நடைபெற்றன. கடந்த 18-ந்தேதி மாலை சென்னை துறைமுகத்தில் இருந்து முதற்கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தமிழக அரசு சார்பில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பில் 50 மெட்ரிக் டன் பால் பவுடர், ரூ.28 கோடி மதிப்பில் 137 வகையான மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து அரிசி, மருந்து உள்ளிட்ட பொருட்களை பொட்டலமிடும் பணிகள் நடைபெற்றன. கடந்த 18-ந்தேதி மாலை சென்னை துறைமுகத்தில் இருந்து முதற்கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    அடுத்தகட்டமாக விரைவில் நிவாரண பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இதற்காக அனைத்து பொருட்களும் பொட்டலமிடப்பட்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் செல்லும் சாலையில் உள்ள கோவில்பிள்ளை நகர் பெட்ரோல் பங்க் அருகே ஒரு குடோனில் வைக்கப்பட்டுள்ளது.

    அந்த பொருட்களை இன்று காலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டார். பொருட்கள் அனைத்தும் கணக்கில் உள்ளபடி சரியான அளவில் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளதா என்பதை அவர் ஆய்வு செய்தார்.

    விரைவில் அந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    ஓ.என்.ஜி.சி. சமூக பங்களிப்பு நிதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    ராமநாதபுரம்

    எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின்(ஓ.என்.ஜி.சி.) சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதுபிக்கப்பட்ட வன உயிரின காப்பாளர் அலுவலக கட்டிடத்தினையும், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், வாலந்தரவை ஊராட்சி தெற்கூர் கிராமத்தில் ரூ.32.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடத்தினையும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர் லால் குமாவத் திறந்து வைத்தார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் சுந்தரமுடையன் மற்றும் நாகாச்சி கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி தோட்டக்கலை பண்ணையின் பயன்பாட்டிற்கான வாகனத்தையும், உச்சிப்புளி, தேவிபட்டினம், திருஉத்திரகோசமங்கை, ஆர். எஸ். மங்கலம், தொண்டி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.15.4 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரங்ணகளை எரிவாயு கழகத்தின் அலுவலர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டரிடம் வழங்கினர்.

    முன்னதாக மாவட்ட வன உயிரின காப்பாளர் அலுவலத்தில் கடல் பசு உயிரினங்களை அழிவில் இருந்து பாதுகாப்பதற்காக வனத்துறையின் ராமநாதபுரம் வனஉயிரினக் கோட்டம் காப்பாளர் அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் “ உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்மார்ட் போன்களுக்கான ஆன்ட்ராய்டு செயலி ‘காம்பா’ என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள கடல் பசுவினை பாதுகாக்க ‘‘சேவ்டுகோங்’’ என்ற ஆன்ட்ராய்டு செயலியை கலெக்டர் சங்கர் லால் குமாவத்  தொடங்கி வைத்தார்.

    இந்த மொபைல் செயலியை பயன்படுத்தி, மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசுக்களை உயிருடன் மீட்டு, மீண்டும் கடலில் விடும் காட்சிகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கலாம்.அவ்வாறு எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்து கடல் பசுக்களை பாதுகாக்க வனத்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக சன்மானம் மற்றும் பரிசுத்தொகை பெறலாம். 

    கடல் பசுக்களை பாதுகாக்க, மிகப்பெரிய அளவில் மீனவர்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் பெறுவதற்கு இந்த மொபைல் செயலி பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் வன உயிரின காப்பாளர் ஜக்தீஷ் பகான் சுதாகர், உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம், உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) சுரேஷ், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பிரதாப், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் அலுவலர்கள் யாதவா, அனுராக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை போன்ற பெருநகரங்களில் வாகனப்புகையே காற்று மாசடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும், உலக சுற்றுச்சூழல் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பு ஆற்றியதற்காக மதுரை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதும் மற்றும் ஐந்து தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களைப் பாராட்டும் வகையில் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் பசுமை முதன்மையாளர் விருதுகளையும் வழங்கினார்.

    மக்கள் நலமாகவும், வளமாகவும் வாழ்ந்திட தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகும். மக்கள் சார்ந்திருக்கும் நீர், காற்று மற்றும் நிலம் ஆகியவற்றை சீர்படுத்துவதிலும், தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்குரிய தாக்கங்களை குறைப்பதிலும் சூழல் அமைப்புகள் முக்கியமான அம்சங்களாக விளங்குகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பினையும் மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    சென்னை போன்ற பெருநகரங்களில் வாகனப்புகையே காற்று மாசடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்காற்று மாசினை குறைக்கும் முயற்சியாகவும், புவி வெப்பமயமாதலை தடுக்க ஏதுவாகவும் மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தினை குறைப்பதற்காகவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 2021-ஆம் ஆண்டுக்கான பசுமை விருதினை மதுரை கலெக்டர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், விழுப்புரம் கலெக்டர் த. மோகன் மற்றும் திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

    மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயலாற்றி விருதுக்கு தேர்வான 79 பல்வேறு அமைப்புகளில், ராணிப்பேட்டை டேனரி எஃப்ளுயன்ட் டிரீட்மென்ட் கம்பெனி லிமிடெட், பெருந்துறை-அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்-சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், நீலகிரி மாவட்டம்-கிளீன் குன்னூர் மற்றும் போரூர்-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு 2021-ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதுடன், பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார்.
    • இதில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது தொடர்பான அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட காரணத்தால் மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏ.டி.ஸ். கொசுக்களால் பரவும் டெங்கு மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் நோய் தென்படுகிறது.

    பொதுமக்கள் மழைக்காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு வீடுகளைச் சுற்றியும் மொட்டை மாடிகளிலும் தேவையற்ற பொருட்களை சேமித்து வைப்பதால் இவற்றில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி ஏடிஸ் கொசுக்கள் உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

    மேலும் வீட்டின் உள்ளேயும் நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். மேலும் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்களை வாரம் இருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மழை நீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாத வகையில் நிறுவனங்களை சுத்தமாக பேணிகாக்க வேண்டும்.

    மேலும் வாகனங்களை பழுது நீக்கும் இடங்களில் உள்ள டயர்களில் மழை நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் சாமான் வாங்கி விற்கும் கடைகளில் உள்ள பொருட்களை மழை நீர் தேங்காமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். புதிய கட்டிடங்கள் கட்டும் இடங்களில் நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்வது சம்பந்தப்பட்ட உரிமையாளரின் கடமையாகும். இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது பொது சுகாதார சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி (விருதுநகர்), கலுசிவலிங்கம் (சிவகாசி) மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கால்நடை பராமரிப்புத் துறையில் ஆட்சேர்ப்பு- வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவாது:-

    கால்நடை பராமரிப்புத் துறையில் அனிமல் ஹேண்ட்லர், அனிமல் ஹேண்ட்லர் டிரைவர் ஆகிய பணியிடங்களுக்கு 90 மணி நேரம் பயிற்சி அளித்து, ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது எனவும், இதற்கான பணி நியமன ஆணை ஜுன் முதல் அல்லது 2-வது வாரத்தில் வெளியிடப்படும், ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக பதிவு செய்தி கொள்ளுமாறு செல்போன்களில் வாட்ஸ் அப் செயலி மூலம் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இவை கால்நடை பராமரிப்புத்துறைக்கு தொடர்பற்றவை என தெரிவிக்கப்படுகிறது.

    கால்நடை பராமரிப்புத் துறைக்கு தொடர்பில்லாத தவறான இத்தகவலை நம்பி பொதுமக்கள் ஏமாறவேண்டாம். இதுபோன்ற தகவல்கள் பரப்புபவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு ஊராட்சி ஒன்றிய சமத்துவபுரத்தில் 63 வீடுகளுக்கான ஆணையை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்
    • மேலும் இப்பகுதி பொதுமக்கள் அங்குள்ள புறவழிச் சாலையினை கடக்க ஏதுவாக மேம்பாலம் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு ள்ளதை யொட்டி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சித்தோடு ராயபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பள்ளி–யின் வகுப்பறை வெளிப்பு–றத்தில் புகை வண்டி மாதிரி ஓவியங்கள் வரையப்பட்டி–ருந்ததை பார்வையிட்டார். மேலும் இப்பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நடப்பாண்டிற்கான பாடப்புத்தகங்களை வழங்கினார்.

    இதனைதொடர்ந்து ஈரோடு ஊராட்சி ஒன்றியம், சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளில் 63 வீடுகளுக்குபணி ஆணை வழங்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு வீட்டிற்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் வர்ணம் பூசுதல் மற்றும் சிறு சிறு பழுது பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆ ய்வு மேற்கொண்டார்.

    மேலும் இப்பகுதி பொதுமக்கள் அங்குள்ள புறவழிச் சாலையினை கடக்க ஏதுவாக மேம்பாலம் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

    தொடர்ந்து சமத்துவ–புரத்தில் உள்ள ஈரோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் ஆசிரியர்களிடம் மாணவ, மாணவிகளின் வருகை குறித்து கேட்டறிந்து வருகை தராத குழந்தைகளை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து, சமத்து வபுரத்தில் உள்ள ரேஷன்க்கடையில் ஆய்வு செய்து பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து மாநகராட்சி ஆசிரமம் மெட்ரிக்மேல்நி லைப்பள்ளியில் கனரா வங்கியின் சார்பில் கிராமசுயவேலை வாய்ப்பு பயிற்சியில் 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ள கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள் மற்று ம்வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    மேலும், கம்ப்யூட்டர்டேலி பயிற்சி, பெண்களுக்கா ன தையற்கலை, ஆரி எம்பிராய்டரி மற்றும் பேப்ரிக் பெயின்டிங், ஜுட் பொருட்கள் தயாரித்தல், செயற்கை நகை தயாரித்தல், அழகுக்களை போட்டோ கிராபி, வீடியோ கிராபி பேப்பர் பை தயாரித்தல், பைல் தயாரித்தல், செல்போன்கள் சர்வீஸ், வீட்டு உபயோகப் பொருள் தயாரித்தல், சோப்புபவுடர், ஊதுபத்தி, மெழுகுவர்த்தி, எலக்ட்ரிக்கல் ஒயரிங் மற்றும் வீட்டுமின் சாதனப் பொருட்கள் பழுது பார்த்தல், மூங்கில், பிரம்ப நாற்காலி மற்றும் அழகு பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

    இந்த ஆய்வுகளின் போது, முதன்மைகல்விஅலுவலர் ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகலா, தங்கவேல், உதவி பொறியாளர் செந்தில்கு–மார், முதன்மை வங்கி பொது மேலாளர் ஆனந்தகுமார், உத வி பொது மேலாளர் சங்கர், கனரா வங்கி பயிற்சி நிலைய இயக்குநர் கவுரிசங்கர் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

    • கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து செயற்பொறியாளரிடம் கேட்டறியப்பட்டது.
    • சானல் தூர்வாரும் பணியையும் பார்வையிட்டார்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பள்ளி கட்டிடங்களை மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார். சானல் தூர்வாரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதி களில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. நாகர் கோவில் மாநகராட்சிக்குட்பட்ட நாகர்கோவில் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் 20 ஆண்டு களுக்கு மேல் கட்டப்பட்ட வகுப்பறையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்த பகுதிகளை சீரமைக்குமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இடலாக்குடி அரசு தொடக்கப் பள்ளி வகுப் பறை கட்டிடத்தினை யும் பார்வையிட்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து செயற்பொறியாளரிடம் கேட்டறியப்பட்டது.

    ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட ஆத்திக்காட்டுவிளை ஊராட்சி, சீயோன்புரம் அரசு தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம், கணியாகுளம் ஊராட்சி புளியடி அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறை கட்ட டம், புத்தேரி அரசு தொடக் கப்பள்ளி கட்டடத்தினை ஆய்வு மேற்கொண்டு அக் கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து தலைமை யாசிரியர்கள், ஆசிரியர்கள், துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. வட கிழக்கு பருவமழை பெய்து வருவதால் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பழுதடைந்த கட்டிடங்களை விரைந்து சரிசெய்யவும், மிகவும் பழுதடைந்த கட்டிடங்களை உடனடியாக அப்புறப்ப டுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து தர்மபுரம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட் டத்தின்கீழ் அத்திக்கடை கால்வாயினை தூர்வாரும் பணியினை நேரில் பார் வையிட்டு, வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரை வீணாக்காமல் விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நலிவடைந்த மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்வதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுர மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் முன்னேற விழையும் மாவட்டமாக ஆக மத்திய அரசால் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இ்ந்த மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியை, பொது விநியோகத்திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டைதாரா்களுக்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் மூலமாக அங்கன்வாடி குழந்தைகளுக்கும் மற்றும் பிரதமரின் போஜன் மதிய உணவுத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவா்களுக்கும் வழங்க அரசாணை வரப்பெற்றுள்ளது.

    இந்த ஆண்டு மார்ச் 2022 முதல் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவா்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மூலம் உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. பொது விநியோகத்திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டைதாரா்களுக்கும் அடுத்தாண்டு மார்ச்் வரை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசால் சாதாரண நலிவடைந்த மக்களின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்தவும் பொது சுகாதார நலன்களை கருத்தில் கொண்டு உணவுப்பொருள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே சாதாரண நலிவடைந்த மக்கள் இந்த அரிசியை பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கையில் இந்திய அரசின் தர நிலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடந்தது.
    • தரப்படுத்தப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்வதால் உற்பத்தி யாளர்களின் தரமும் மேம்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய நிர்ணய அமைவனம், மதுரை கிளை அலுவலகத்தின் சார்பில் இந்திய அரசின் தர நிலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

    நுகர்வோர் நலனை பாதுகாப்பதற்காக தரப்படுத்தப்பட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் கொள்முதலின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தரப்படுத்தப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்வதால் உற்பத்தி யாளர்களின் தரமும் மேம்படுகிறது.

    இதில் பங்கேற்பாளர் களும் தங்கள் கொள்முதல் டெண்டர்களில் இந்திய தர நிர்ணயத்தை இணைத்து கொள்வதன் திட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விளக்கத்தை அளித்துள்ளனர்.

    தயாரிப்புக்களை அடையாளம் காண புகார் தீர்க்கும் நெறிமுறைகள் போன்றவைகள் குறித்தும், தரமான பொருட்களை வாங்குவதற்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்த பொருட்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பது குறித்தும், தனிப்பட்ட துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஐ.எஸ்.ஓ. 9001 போன்ற மேலாண்மை அமைப்பு சான்றிதழ்களுடன் செயல்படுத்தப்படுவது குறித்தும் எடுத்துரைக்க ப்பட்டுள்ளது. இதனை பொதுப்பணித்துறை, கல்வித்துறை, தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம், மாநில நெடுஞ்சாலைகள் துறை , சுகாதாரத்துறை, மாவட்ட வழங்கல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவத்துறை, கூட்டுறவு சங்கம், மாவட்ட சுற்றுலா, சுய உதவிக்குழு, சட்டம் வல்லுநர்கள் போன்ற சம்பந்தப்பட்ட துறைகள் ரீதியாக விழிப்புணவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், மதுரை கிளை அலுவலக தலைமை விருந்தினர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் 28 தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 5,29,428 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 17,094 நபா்களுக்கு ரூ.48 கோடி மதிப்பீட்டில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது திருப்பூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் 28 தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலமாக 5,29,428 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 2021 ம் ஆண்டு மே 7 ந்தேதி முதல் 2022 ம் ஆண்டு அக்டோபா் 11 ந் தேதி வரையில் 17,094 நபா்களுக்கு ரூ.48 கோடி மதிப்பீட்டில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை எடுக்காதவா்கள் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குள்) ஆகிய அவணங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 3 ல் சமா்ப்பித்து அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின் போது ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பராமரிப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, விவரங்களை சரிபார்த்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பராமரிப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, விவரங்களை சரிபார்த்தார்.

    நில அளவை பதிவேடு, வழக்குகள் பதிவேடு, பொதுமக்களின் கோரிக்கைகள் விவர பதிவேடு அலுவலர்கள், பணியாளர்களின் வருகை பதிவேடு, தன்பதிவேடு, வழங்கல் துறை பதிவேடு உள்ளிட்ட அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா, ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் தங்கம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    ×