என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா"

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ராய்ப்பூர்:

    முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.

    மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இந்நிலையில், ராய்ப்பூரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.

    தொடக்க ஆட்டக்காரர் டுவைன் சுமித் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓரளவு நிலைத்து விளையாடி அரை சதம் கடந்த சிம்மன்ஸ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 50 பந்தில் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார். சச்சின் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆட்ட நாயகன் விருது அம்பதி ராயுடுவுக்கு வழங்கப்பட்டது.

    • 2-வது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்விக்கொள்கை சொல்கிறது.
    • தமிழ்நாட்டில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையை நாம் அமல்படுத்தி இருக்கிறோம். இந்த நிலையில் மும்மொழி கொள்கையை திணிப்பது எந்த விதத்தில் நியாயம். வடமாநிலங்களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். அவர்களுக்கு ஒரு மொழி தான் தெரியும். பேச்சு மொழி இந்தி, அரசு மொழி, பயிற்சி மொழி, பாட மொழி என்று அனைத்தும் இந்தி தான்.

    2-வது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்விக்கொள்கை சொல்கிறது. ஆனால் வடமாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்களையே நியமிக்கவில்லை. தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நான் பார்த்தவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படவில்லை. அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டை மட்டும் குற்றம் சாட்டி, மும்மொழி கொள்கையை அமல்படுத்தாததால் நிதி தரமாட்டோம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளிலும் தமிழையே கற்றுக் கொடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இந்த பிரச்சனையில் பா.ஜ.க.வை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஓரணியில் நிற்கிறார்கள். இதை நான் வரவேற்கிறேன்.

    பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காமல் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

    • உலகளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது
    • குவாட் கூட்டாண்மை, அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியமானது

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கொரோனா தடுப்புப் பிரிவு அதிகாரி ஆஷிஷ் ஜா, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக பாராட்டு தெரிவித்தார்.

    உலகளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், தடுப்பூசி உற்பத்தி செய்யும் அளவு அபரிமிதமாக இருப்பதால், தடுப்பூசிகளின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான குவாட் (QUAD) கூட்டாண்மை, அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியமானது என்றும் கூறினார்.

    உலக நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பனா ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவு குறித்து பேசிய அவர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கும் என்றார்.

    • இன்று நடந்த சர்வதேச ஜூனியர் ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
    • ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்ததால் ஷூட் அவுட் முறைக்கு சென்றது.

    ஜோஹார்:

    6 அணிகள் பங்கேற்ற 10-வது ஜோஹார் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) ஹாக்கி போட்டி மலேசியாவில் நடந்தது.

    லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா அணி 13 புள்ளிகளுடன் (4 வெற்றி, ஒரு டிரா) முதலிடமும், இந்தியா 8 புள்ளிகளுடன் (2 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து இறுதிச்சுற்றை எட்டின.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    இந்தியாவின் சுதீப் 14வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் ஹாலண்ட் 29வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இறுதிவரை எந்த அணியும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து ஷூட் அவுட் முறைக்கு சென்றது.

    இதில் இந்தியா 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அத்துடன் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    போட்டியை நடத்திய மலேசியா புள்ளிப்பட்டியலில் (1 புள்ளி) கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சேலத்தில் விஜிலென்ஸ் குறித்த விவாதப் போட்டி நடைபெற்றது.
    • தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த விவாதபோட்டியில் ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் உருக்காலையின் விஜிலென்ஸ் துறை சார்பில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சேலம் சோனா காலேஜ் ஆப் மேனேஜ்மென்ட் மாணவர்களுக்கு இடையே "ஊழலற்ற இந்தியா - வளர்ந்த இந்தியா" என்ற தலைப்பில் விவாதப் போட்டி நடைபெற்றது.

    மேலாண்மைத் தலைவர் பி.கே. அஞ்சலி வரவேற்று பேசுகையில், விவாதப் போட்டிக்கு சோனா கல்லூரியை தேர்வு செய்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

    சேலம் உருக்காலையின் விஜிலென்ஸ் துறை பொது மேலாளர் சுப்பா ராவ் பேசுகையில், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற, ஊழலுக்கு எதிராக போராட ஒவ்வொரு குடிமகனின் பங்கையும் வலியுறுத்தினார்.

    கடந்த 3 ஆண்டாக சோனா கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சேலம் உருக்காலைக்கு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நித்யா நன்றி கூறினார். 

    • ஜோத்பூர் விமானப்படைத் தளத்தில் இரு நாட்டு விமானப்படைகளும் பயிற்சியில் ஈடுபட்டன.
    • சுகோய், ரபேல், தேஜாஸ் மற்றும் ஜாகுவார் போர் விமானங்கள் பங்கேற்பு.

    இந்திய விமானப்படை பல்வேறு நாடுகளின் விமானப்படையினருடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய விமானப் படை மற்றும் பிரெஞ்சு வான்வெளிப் படையின் 7-வது கூட்டு விமானப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நடைபெற்று வந்தது.

    கருடா-VII என்ற பெயரில் நடைபெற்ற இந்த பயிற்சியில் பிரான்ஸ் விண்வெளிப் படையின் ரபேல் போர் விமானம் மற்றும் ஏ-330 பல்திறன் அம்சங்களுடன் கூடிய போர் விமானம் போன்றவைகள் பங்கேற்றன. இந்திய விமானப்படை சார்பாக சுகோய்-30, ரபேல், தேஜாஸ் மற்றும் ஜாகுவார் போர் விமானங்களும்,மி-17 ரக ஹெலிகாப்டர்களும் பங்கேற்றன. 


    இரு நாட்டு விமானப் படைகளுக்கும் இடையே தொழில் முறையிலான தொடர்பை ஏற்படுத்தவும், செயல்பாட்டுத் திறன் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பையும் இந்த பயிற்சி வழங்கியதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பயிற்சியின் போது இருநாட்டு விமானப்படை வீரர்களும் வான்வெளிப் போர் நடவடிக்கைகளின் நுட்பங்களை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த பயிற்சியானது இரு நாட்டு விமானப்படை வீரர்களுக்கு இடையேயான கலாச்சார பரிமாற்றத்திற்கான சூழலை வழங்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கலப்பு சீனியர் பிரிவில் இந்திய இணை, கஜகஸ்தான் ஜோடியை வீழ்த்தியது
    • ஒட்டு மொத்தமாக இந்தியா 25 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

    தென் கொரியாவின் டேகு நகரில் நடைபெற்ற 15வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணிக்கு இரண்டு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு சீனியர் பிரிவில் ரிதம் சங்வான் மற்றும் விஜய்வீர் சித்து ஜோடி கஜகஸ்தானின் இரினா யூனுஸ்மெடோவா மற்றும் வலேரி ரகிம்ஜான் ஜோடியை 17-3 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. 


    அதே போல் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் சாம்ராட் ராணா இணை, உஸ்பெகிஸ்தானின் நிகினா சைட்குலோவா மற்றும் முகமது கமலோவ் ஜோடியை 17-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இதையடுத்து இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக இந்தியா 28 தங்கப் பதக்கங்களில் 25 ஐ வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை தெளிவாக உள்ளது.
    • ரஷியாவிலிருந்தும் இந்தியாவின் இறக்குமதிகள் அதிகரித்து வருகின்றன.

    புதுடெல்லி :

    சர்வதேச தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கான உலகளாவிய மன்றமான 'ராய்ட்டர்ஸ் நெக்‌ஸ்ட்' நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காணொலி மூலம் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் நாட்டின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பணவீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் நாம் வெற்றியடைவோம். ஏனெனில் உணவுப் பொருட்களின் விலைகள் மீதான வினியோக பக்க அழுத்தங்களை நிவர்த்தி செய்ய ஒரு மிக நல்ல கட்டமைப்பு ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை தெளிவாக உள்ளது. அதாவது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அல்லது நடுப்பகுதியில் இது நெகிழ்வுத்தன்மை பிரிவுக்குள் நன்றாக இருக்கும்.

    நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் ஜனவரி முதல் ரிசர்வ் வங்கியின் ஆறுதல் அளவான 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.

    பணவீக்கம் வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படப் போகிறது. ஆனால் இந்தியாவுக்குள், விவசாய பொருட்கள் மற்றும் பிறவற்றின் அடிப்படையில் நாம் வசதியான நிலையில் இருக்கிறோம்.

    நல்ல, வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த ஆண்டும் எதிர்பார்க்கிறேன்.

    கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரை நாட்டின் நலன் சார்ந்த தனது நிலைப்பாட்டை இந்தியா கடந்த பிப்ரவரி மாதம் வெளிப்படுத்தியுள்ளது. எனக்கு மலிவு விலைகள் இருக்க வேண்டும், நிலையான விலைகளை கொண்டிருக்க வேண்டும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக உலகளாவிய பொது பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். சரக்குகளின் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டால், அது நம்மில் சிலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

    பல நாடுகளைப் போலவே, ரஷியாவிலிருந்தும் இந்தியாவின் இறக்குமதிகள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் ரஷியாவிலிருந்து வாங்குவதற்கு விலை காரணி சாதகமாக உள்ளது. இதில் இந்தியா தனிமைப்படுத்தப்படவில்லை.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • இந்தியாவில் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது.
    • அடுத்த இரு பத்தாண்டுகளில் பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வு 435 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளால் உலகளாவிய வெப்பம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பத்தின் அளவு கூடிக்கொண்டே போகிறது.

    இந்த நிலையில் உலக வங்கி, இந்தியாவின் குளிரூட்டும் துறையில் கால நிலை முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

    * 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 16 கோடி முதல் 20 கோடிப்பேர் இந்தியாவில் கொடிய வெப்ப அலைகளுக்கு ஆளாகிற அபாயம் உள்ளது.

    * இந்தியாவில் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. மாற்றுமுறை மற்றும் புதுமையான ஆற்றல் திறன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இடங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக 2040-ம் ஆண்டுவாக்கில் 1.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.131 லட்சம் கோடி) முதலீட்டு வாய்ப்பு உருவாகும்.

    * அதிக ஆற்றல் கொண்ட பாதைக்கு மாறுவது, அடுத்த இரு பத்தாண்டுகளில் கார்பன்டை ஆக்சைடு அளவை மிகவும் குறைப்பதற்கு வழிவகுக்கும்.

    * மேலும் பசுமைக்குடில் வாயுக்கள் அளவையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்க முடியும். 37 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.

    * போக்குவரத்தின்போது வெப்பத்தால் உணவு இழப்பு ஆண்டுக்கு 13 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 600 கோடி) அளவுக்கு ஏற்படலாம்.

    * தற்போதைய அளவுடன் ஒப்பிடுகையில் 2037-ம் ஆண்டுக்குள் குளிரூட்டும் தேவை 8 மடங்கு அதிகரிக்கும். அதாவது ஒவ்வொரு 15 வினாடிக்கும் ஒரு குளுகுளு சாதன (ஏ.சி.எந்திரம்) தேவை ஏற்படும். இதனால் அடுத்த இரு பத்தாண்டுகளில் பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வு 435 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஐநாபாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா சார்பில் ருச்சிரா கம்போஜ் ஏற்று இந்த மாத நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.

    வாஷிங்டன்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. அவ்வகையில் டிசம்பர் மாதங்ததிற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

    பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா சார்பில் ஐ.நா. சபைக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் ஏற்று இந்த மாத நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். இதையொட்டி அவர் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரசை சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவின் பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-

    உலகில் மிக பழமையான நாகரீகம் இந்தியா என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 2,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவின் ஜனநாயகத்தின் வேர்கள் இருந்தன. நாங்கள் எப்போதுமே ஜனநாயக நாடாகவே உள்ளோம்.

    ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் எங்களிடம் வலுவாக உள்ளது. நீதித்துறை, பத்திரிகைத்துறை, துடிப்பான சமூக ஊடகம் என உலகின் சிறந்த ஜனநாயக நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

    5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாங்கள் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை நடத்தி வருகிறோம். எங்கள் நாட்டில் யார் வேண்டுமானாலும் அவர்கள் மனதில் இருப்பதை சொல்லும் உரிமை இருக்கிறது. நாங்கள் தொடர்ச்சியாக ஏற்றங்களை, மாற்றங்களை கண்டு வருகிறோம். எங்கள் முன்னேற்றம் மிக சிறப்பாக உள்ளது. எனவே ஜனநாயகத்தை பற்றி எங்களுக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பகவத் கீதையின் உள்ளடக்கம், உலகளாவியதாக உள்ளது.
    • இந்தியா அமைதியை தான் விரும்புகிறது.

    பெங்களூரு :

    பெங்களூரு இஸ்கான் கோவில் நிர்வாகம் சார்பில் தேசிய பகவத் கீதை ஜெயந்தியை முன்னிட்டு பல மொழிகளில் தயாரிக்கப்பட்ட பகவத்கீதை நூல் வெளியீட்டு விழா வசந்தபுராவில் உள்ள ராஜாதிராஜ கோவிந்தன் கோவிலில் வைத்து நேற்று நடைபெற்றது.

    இதில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பல மொழிகளில தயாரிக்கப்பட்ட பகவத்கீதை நூலை வெளியிட்டு பேசியதாவது:-

    குருசேஷத்திர போர்க்களத்தில் தான் பகவான் கிருஷ்ணர் காவிய விரிவுரையை நிகழ்த்தினார். இது பகவத் கீதை என்று நம்மால் அறியப்பட்டது. பகவத் கீதையின் உள்ளடக்கம், உலகளாவியதாக உள்ளது. பகவத் கீதையை படிப்பதும், அதை வாழ்க்கையில் உள் வாங்வதும் ஒரு நபரை அச்சமின்றி வாழ வழிகாட்டுகிறது.

    போர், வன்முறையை இந்தியா ஒரு போதும் ஆதரிக்காது. இந்தியா அதனை விரும்புவதும் இல்லை. அமைதியை தான் விரும்புகிறது. என்றாலும், அநீதி மற்றும் ஒடுக்கு முறைக்கு நடுநிலையாக இருக்க முடியாது. அநீதி மற்றும் அடக்கு முறைக்கு நடுநிலையாக இருப்பது நமது இந்தியாவின் இயல்பு கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் மற்றும் இஸ்கான் கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ரஷிய அதிபர்தான் முடிவு செய்ய வேண்டும்.
    • நாங்கள் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட மாட்டோம்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் காரணமாக அந்நாட்டுடனான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தோனேசியாவில் அண்டையில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கவில்லை.

    இந்நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையின் துணை தலைமை அதிகாரி ஸ்வெட்லானா லுகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஷிய அரசு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

    (ரஷிய அதிபர்) நிச்சயமாக ஜி20 உச்சி மாநாட்டிற்கு செல்வார் என்று நான் நம்புகிறேன். ஆனால் இது குறித்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அடுத்த உச்சி மாநாடு நடைபெற ஒரு வருடம் இருக்கும் போது, இது குறித்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.

    நான் பார்க்கும் விதம் என்னவென்றால் இதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உள்ளன. நாங்கள் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட மாட்டோம் என்று நான் நம்புகிறேன். அது ஒரு கருத்தரங்கு அல்லது மாநாடாக இருந்தாலும் ரஷியா தனது நிலைப்பாட்டை நிரூபிக்க, தனது கருத்துக்களை வெளிப்படுத்த எந்த நிகழ்விலும் பங்கேற்பது முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×