என் மலர்
நீங்கள் தேடியது "வாக்குவாதம்"
- நிதி இல்லாததால் அனைத்து வார்டுகளிலும் முக்கிய பணிகளை செய்து வருவதாக மேயர் விளக்க மளித்தார்.
- இதேபோல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டியில் உள்ள குறைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.
ஈரோடு, அக்.31-
ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார்.துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூட்டம் தொடங்கியதும் மேயர் நாகரத்தினம் திருக்குறள் வாசித்து அதற்கான பொருள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் 30 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.
கூட்டம் தொடங்கியதும், பேசிய 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆதி பேசும் போது, தனது வார்டில் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.
இதனால் அவருக்கும் மேயர் நாகரத்தினம், துணைமேயர் செல்வராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நிதி இல்லாததால் அனைத்து வார்டுகளிலும் முக்கிய பணிகளை செய்து வருவதாக மேயர் விளக்க மளித்தார்.
இதனை ஏற்காமல் தொடர்ந்து கவுன்சிலர் ஆதி வாக்கு வாதம் செய்து கொண்டிருந்ததால் ஆவேசமடைந்த மேயர், தனது இருக்கையில் இருந்து எழுந்து கவுன்சிலர் இருக்கைக்கு சென்று அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து சமாதான ப்படுத்தினார்.
மற்ற கவுன்சிலர்களும் சமாதானப்படுத்தினர். இதனால் மாநகராட்சி கூட்டரங்கில் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாநகராட்சியில் ஒப்பந்த பணிகளை தனியாருக்கு விடும் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தீர்மானம் கொண்டு வர கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
அப்போது மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து பேசும்போது, வார்டை நான்காக பிரிப்பது குறித்து எங்களுடன் கலந்தோசி க்காமல் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எங்களையும் அந்த குழுவில் இடம் பெற செய்ய வேண்டும். அப்போதுதான் வளர்ச்சிப் பணி தங்கு தடை இன்றி நடைபெறும் என்றார்.
மேலும் தூய்மை பணியாளர்கள் அவர்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். தனியார் மயமாக்கு வதை கைவிட வேண்டும் .
அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் அ.தி.மு.க. சார்பில் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.
அப்போது பேசிய ஆணை யாளர் சிவக்குமார் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இது குறித்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
இதனை ஏற்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்யாமல் சபை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்றனர்.
36-வது வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார் பேசும்போது, என் வார்டில் நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது.
அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என் வார்டில் குண்டும் குழியுமாக ரோடுகள் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
அதனைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும் என்றார்.
இதேப்போல் 43- வது வார்டு கவுன்சிலர் சபுராமா சாதிக் பேசும்போது, என்னுடைய வார்டில் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். இதேபோல் மற்ற மாநகராட்சியில் குப்பை வரி எடுக்கப்பட்டுவிட்டது.
இதனால் சொத்து வரி வசூல் பாதிக்கப்படுகிறது.
எனவே நமது மாநகராட்சியில் குப்பை வரி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டியில் உள்ள குறைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.
- மயிலாடுதுறையில் இருந்து பயணிகள் விழுப்புரத்திற்கு டிக்கெட் பெற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.
- வருங்காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலூர்:
விழுப்புரம் பகுதியில் ெரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ெரயில்கள் இயங்காது என ெரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தனர். இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து பயணிகள் விழுப்புரத்திற்கு டிக்கெட் பெற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது கடலூர் முதுநகர் ெரயில் நிலையத்திலிருந்து ெரயில் செல்லாது என அதிகாரிகள் அறிவித்து ெரயிலில் இருந்த பயணிகளை உடனடியாக இறங்குமாறு அறிவுறுத்தினர். அப்போது இதனை கேட்ட ெரயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்து ெரயில்வே துறை அதிகாரியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது விழுப்புரம் பகுதியில் ெரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் விழுப்புரம் வரை ெரயில்கள் இயங்காது என தெரிவித்தனர்.
அப்போது பொதுமக்கள் கடும் கோபம் அடைந்து எதற்காக விழுப்புரம் வரை ெரயில் டிக்கெட் வழங்கீனர்கள்? இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? என அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் இது சம்பந்தமாக ெரயில்வே துறை உயர் அதிகாரி களிடம் தெரிவித்து வருங்காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கடலூர் முதுநகரில் இருந்து அவர் அவர்கள் எடுத்த ெரயில் கட்டணத்தை மீதி தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரயில்வே துறை அதிகாரிகள் பொது மக்களுக்கு வழங்கக்கூடிய ரயில் கட்டணத்தை வழங்கினர். பின்னர் பொதுமக்கள் அவசர அவசரமாக கொட்டும் மழையில் நனைந்தபடி பஸ்சில் செல்வதற்கு ஓடினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் நடந்தை வி.ஏ.ஓ. ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
- இந்த கூட்டத்தில் ஏராளமான 100 நாள் வேலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் நடந்தை ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த வசந்தா உள்ளார். உப தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜேஸ்வரி செயல்பட்டு வருகிறார். ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா தலைமையில் பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் நடந்தை வி.ஏ.ஓ. ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான 100 நாள் வேலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பெரியசூரம்பாளை யத்தில் கடந்த 40 ஆண்டு
களுக்கும் மேலாக செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக கூறி பலமுறை கிராமசபா கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2-ல் நடந்த கிராம சபை கூட்டங்களும் குவாரி எதிர்ப்பால் புறக்கணிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடந்த கிராம சபை கூட்டத்தில், குவாரிக்கு ஆதரவாக கிராம சபை கூட்டம் நடைபெறு வதாகவும், தீர்மானங்களை படிக்காமலேயே கையெ ழுத்து வாங்குவதா கவும், தலைவர், உபதலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் கருப்பு பேட்ச் அணிந்து கலந்து கொண்டு கேள்விகள் எழுப்பினர்.
தொடர்ந்து, வார்டு உறுப்பினர்கள் கையெழுத்து வாங்குவதிலேயே தீவிரமாக இருக்க, தீர்மானத்தை படிக்க வேண்டும் என ஒரு தரப்பு வாக்குவாதம் செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய பி.டி.ஓ
நடராஜன் கிராமசபை கூட்டத்தில் போடப்பட்டுள்ள தீர்மா னங்கள் அனைத்தும் ஏற்கப்பட்டது என அறி வித்தார். அசம்பா விதத்தை தடுக்க நல்லூர் போலீ சார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஊர்ப்பொது மக்கள் சிலர் கூறும்போது, இங்குள்ள குவாரிகளால் நாங்கள் நிம்மதி இழந்து தவிக்கிறோம். ஆனால் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் எனக் கூறி குவாரி பிரச்சனையை அப்படியே விட்டு விட்டனர் என்றனர்.
- அப்பகுதி யில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து கொள்வது வாடிக்கையாக உள்ளது.
- ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கூடலூர் கிராமத்தில் உள்ள புதிய காலனியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மழைக்காலத்தில் அப்பகுதி யில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவ டிக்கைகள் இல்லை. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியா மல் உள்ளோம். கடந்த 2 தினங்களாக பெய்த கன மழை காரணமாக அருகில் பல்வேறு பகுதிகளில் இருந்து கூடலூர் காலனி வழியாக சாலையோரம் செல்லும் வாய்க்கால்களை சிலர் ஆக்கிரமித்துள்ளது.
மழைநீர் செல்ல முடியா மல் தேங்கி குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்து கொள்வதாக கூறி அப்பகுதி மக்கள் ஒன்றுக்கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் தற்காலிகமாக கிராம பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்கள் கொண்டு வாய்க்கல்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து தண்ணீர் வெளியே செல்ல ஏற்பாடு செய்தார். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் உடனடியாக வடிகால் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் மற்றும் வணிக வளாகங்களை நடத்தி வந்தனர்.
- பேரூராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி சாலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் பேரூராட்சிக்குட்பட்ட போக்குவரத்து பகுதிகளில் பொதுமக்கள் சென்று வரும் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் மற்றும் வணிக வளாகங்களை நடத்தி வந்தனர்.
இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வணிக வளாக கடைகளை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் அரூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பேருந்து நிலைய வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு அவற்றை அகற்றக்கோரி பல்வேறு முறை
களில் அறிவுரை வழங்கப்பட்டது.
இதை பொருட்படுத்தா மல் ஆக்கிரமிப்பு கடை உரிமையாளர்கள் அலட்சி யத்துடன் இருந்து வந்த நிலையில்சுமார் -100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்போடு பேரூராட்சி செயல் அலுவலர் கலை ராணி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது தூய்மை பணியாளர்களை தி.மு.க. வினர் ஒருமையில் பேசிய தால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் ஆக்கிரமிப்பு அகற்ற உரிய கால அவகாசம் வேண்டும் என்று தி.மு.க.,அ.தி.மு.க.,அ.ம.மு.க.வினர் தி.மு.க. பேரூராட்சி துணை தலைவர் சூர்யா தனபாலிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
- கவுன்சிலர்கள் மீது தாக்குதல்
- கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
திங்கள் நகர் பேரூராட்சி யில் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடந்தது. இதற்கு பேரூராட்சி தலைவர் சுமன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை உள்ள வரவு செலவு மற்றும் தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
அவர்களுடன் மற்ற கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜ.க. கவுன்சிலர் ஜெயசேகரன், காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் பீட்டர்தாஸ் ஆகியோர் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து ஜெயசேகரன் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக அனுமதிக்க பட்டார். இதுபோல காங்கிரஸ் கவுன்சிலர் ஜேக்கப் குளச்சல் மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையே பா.ஜ.க. நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலகம் முன்பு கூடினர்.தகவல் அறிந்து போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதற்கிடையே கவுன்சிலர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக இரணியல் போலீஸ் சப்-இன்ஸ பெக்டர் பாலசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பதிவான வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நகை திருடிய வழக்கில் கைதான பெண் ஒருவரை அழைத்துக் கொண்டு, நேற்று ராசிபுரத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு வந்தனர்.
- பிரபல நகைக் கடையை அடையாளம் காட்டி, அங்கு தான் நகையை விற்றதாக கூறினார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் போலீசார், நகை திருடிய வழக்கில் கைதான பெண் ஒருவரை அழைத்துக் கொண்டு, நேற்று ராசிபுரத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு வந்தனர்.
போலீசார் அழைத்து வந்த பெண், பிரபல நகைக் கடையை அடையாளம் காட்டி, அங்கு தான் நகையை விற்றதாக கூறினார்.
இதை–யடுத்து அந்த நகைக் கடைக்கு சென்ற பரமத்தி வேலூர் போலீசார், உரிமை–யாளரிடம் விசாரணை நடத்திட, அவரை அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த ராசிபுரத்தை சேர்ந்த மற்ற நகைக்கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் திரண்டு வந்தனர்.
அவர்கள், நகைக்கடை உரிமையாளரை அழைத்து செல்வதற்கு மறுப்பு தெரிவித்து, பரமத்தி வேலூர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ராசிபுரம் போலீசாரின் அனுமதி இல்லாமல், எப்படி நீங்கள் விசாரணை நடத்தலாம்? என பரமத்திவேலூர் போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கு திரண்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் மாலை 5 மணிக்கு மேல் பரமத்தி வேலூர் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து, திடீரென்று கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து ராசிபுரம் போலீசாரின் அறிவுறுத்தலின்படி, நகைக்கடை உரிமையா–ளர்கள் பரமத்திவேலூர் போலீஸ் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று டி.எஸ்.பி.யிடம் விளக்கம் அளித்தனர்.
- தக்கலை - ராமன்பரம்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
- உண்ணாவிரதம் இருக்கலாம் ஆனால் பந்தல் அனுமதி கிடையாது என தெரிவித்த போலீசாருடன் கடும் வாக்கு வாதம்
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள பத்மனாபபுரம் நகரட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் தக்கலை - ராமன்பரம்பு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் அவதிபட்டு வந்தனர், சாலையை சீரமைக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கவுன்சிலர் கீதா பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை.
இந்த நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி தக்கலை பஸ் நிலையம் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை பாரதிய ஜனதாவினர் பேராட்டத்திற்கு திரண்ட னர். உண்ணாவிரதம் இருப்பவர் வசதிக்காக பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால் பந்தல் அனுமதி கிடையாது என தெரிவித்தனர்.
இதற்கு பாரதிய ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பந்தலை அகற்ற பாரதிய ஜனதாவினர் மறுத்தனர். தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கவுன்சிலர் கீதா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உன்னி கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்துக்கு பாஜக ஓபிசி அணி மாவட்ட தலைவர் குமாரதாஸ், மாவட்ட நிர்வாகிகள் குமரி ரமேஷ், டாக்டர் சுகுமாரன், ஷண்முகம், துளசிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தனியார் காடுகள் சட்டத்தில் சில பகுதிகளை நீக்க வேண்டும்.
- சூழல் தாங்கு மண்டல பகுதிகள் என்பதை மறு வரையறை செய்ய வேண்டும்
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. பழங்குடி மக்களின் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டி தர வேண்டும்.விலங்குகள் சரணாலயம், யானைகள் மற்றும் புலிகள் சரணாலயம் என்ற பெயரில் பூர்வீக பழங்குடி அவர்களின் நிலங்களில் இருந்து வெளியேற்றம் செய்வதை நிறுத்த வேண்டும்.
தனியார் காடுகள் சட்டத்தில் சில பகுதிகளை நீக்க வேண்டும். சூழல் தாங்கு மண்டல பகுதிகள் என்பதை மறு வரையறை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு குமரி மாவட்ட குழு தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.செயலாளர் வேலப்பன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பினு குமார் வரவேற்று பேசினார்.பொருளாளர் ரமேஷ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை தலைவர் இசக்கிமுத்து, நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், பேச்சிப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் தேவதாஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மணி,ராஜேந்திரன், சுகுமாரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனைவரையும் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க முடியாது. ஒரு சிலர் மட்டுமே கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர் .இதனால் போலீசாருக்கும் பழங்குடி மக்கள் சங்கம் நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளும் மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்து மனு அளித்தனர்.
- டெண்டரை முறையாக நடத்தக்கோரி அ.தி.மு.க.வினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
- ஒப்பந்ததாரர்கள் ஆன்லைன் மூலம் டென்டருக்கு விண்ணப்பம் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றி யத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-–2, 2022–-2023 ஆண்டுக்கான பணிகள் 5 ஊராட்சிகளில் 32 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ரூ. 2 கோடியே 11 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டது. இது குறித்து கடந்த 1-ந் தேதி நடைபெறுவதாக இருந்த டெண்டர், 5-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் டிச.8-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. வை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஆன்லைன் மூலம் டென்டருக்கு விண்ணப்பம் செய்தனர். பின்னர் அதற்கான முத்திரையிடப்பட்ட டெண்டர் படிவங்களை பி.டி.ஓ., அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க சென்றுள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் டெண்டர் படிவங்களை வாங்க மறுத்துவிட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து ஒன்றிய அதிமுக., செயலாளர்கள் கண்ணன், ராமதாஸ் ஆகியோர் தலைமையில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மற்றும் கட்சி நிர்வாகிகள் பி.டி.ஓ., அலுவலகத்தில் திரண்டனர். அப்போது பி.டி.ஓ.,க்கள் இல்லாததால் நிர்வாக மேலாளர் சண்முகம், துணை பி.டி.ஓ., ஆகியோரை முற்றுகையிட்டு, ஏன் டெண்டர் படிவங்களை வாங்க மறுக்கிறீர்கள், வாங்க முடியாது என்றால் எழுதிக்கொடுங்கள் எனக்கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தணை பி.டி.ஓ. சுபாஷ் மாலை 4.00 மணிக்கு (நேற்று) டெண்டர் படிவங்கள் திறக்கப்பட்டு முறைப்படி டெண்டர் நடைபெறும் என்றும் அதில் அனைவரும் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். இதை எடுத்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- பஸ்சின் குறுக்கே பைக்கை நிறுத்தியதால் வாக்குவாதம்
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது
திருவண்ணாமலை:
விழுப்புரம் மாவட்டம் சங்கீதவாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர், திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், திருவண்ணாமலை நகர மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரியார் சிலை அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த லியா கத்அலி (வயது 44) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென் றார். திடீரென்று பஸ்சின் குறுக்கே சென்று பிரேக் பிடித்து உள்ளார். இதனால் பஸ் டிரைவருக்கும், லியாகத்அலிக்கும் டையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இருவரும் தண்ணீர் பாட்டிலால் மாறி மாறி தாக் கிக்கொண்டனர். இதனால் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த கிழக்கு போலீசார் பஸ் டிரைவரை தாக்கிய லியாகத்அலியை கைது செய்தனர்.
இதனால் பஸ் பயணிகளை இறக்கி வேறொரு பஸ்சில் அனுப்பி வைத்தனர்.
- போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் தெற்கு உழவர் சந்தை மற்றும் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் அதிகாலையில் காய்கறிகள் வாங்கி செல்வது வழக்கம். இதனால் தினமும் தென்னம்பாளையம் பகுதி பரபரப்பாக காணப்படும்.
இந்தநிலையில் உழவர் சந்தை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் வெளியே சாலை ஓரங்களில் அதிகப்படியான கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளின் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் பல்லடம் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர காய்கறி கடைகளை அகற்றும் பணி நடந்தது.
இதற்கான பணியில் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினர் ,உழவர் சந்தை விவசாயிகள் ,நெடுஞ்சாலை துறையினர் இணைந்து செயல்பட்டனர். சாலையோர கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு தனி இடம் அமைத்து தரவேண்டி ஏற்கனவே பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் தான் நாங்கள் இங்கு கடை அமைத்துள்ளோம். எங்களுக்கு நிரந்தரமாக ஒரு இடத்தை அமைத்து தந்தால் அங்கு கடை வைப்பதாக கூறினர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.