என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்"

    • மனுதாரரும், அவரது மனைவிக்கும் நடந்த திருமணம் இருவருக்குமே 2-வது திருமணமாகும்.
    • திருமணத்துக்கு பின்பு ஒரு பெண், கணவனை தவிர மற்றவருடன் பாலியல் உறவு கொண்டால், அது விவாகரத்துக்கான காரணமாகும்.

    மதுரை:

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருந்ததாவது:-

    எனக்கும், எங்கள் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2018-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. எங்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து நாங்கள் தனித்தனியாக வசிக்கிறோம். எங்களை சேர்த்து வைக்கக்கோரி என் மனைவி கரூர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் நான் விவாகரத்து கேட்டு மற்றொரு வழக்கு தொடர்ந்தேன். இவற்றை விசாரித்த கரூர் கோர்ட்டு, என் மனைவியின் கோரிக்கையை அனுமதித்தும், என்னுடைய விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. இது ஏற்புடையதல்ல. என் வழக்கை தள்ளுபடி செய்ததை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    மனுதாரரும், அவரது மனைவிக்கும் நடந்த திருமணம் இருவருக்குமே 2-வது திருமணமாகும். அவர்களின் முதல் திருமணம் சட்டப்படி ரத்தாகி உள்ளது. இந்தநிலையில் அவர்கள் இருவரும் திருமணத்துக்கு பின்பு 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து உள்ளனர். அதன்பின்பு மனுதாரர் தன் மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.

    அதாவது, அவரது மனைவிக்கு பாலியல் நோய் இருந்ததாகவும், வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை. சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் உள்ளது. தனிமையில் ஆபாச படங்களை பார்ப்பார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். ஆனால் அவரது மனைவியோ இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் உண்மையில்லை என்கிறார்.

    பாலியல் நோயால் பாதிக்கப்பட்டவருடன் குடும்பம் நடத்தியதால் தனக்கும் நோய் பரவியதாக மனுதாரர் கூறியதற்கு எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் ஆபாச படத்தைப் பார்ப்பதில் மனுதாரரின் மனைவியின் செயல் மனுதாரருக்கு எதிரான கொடுமையாக எடுத்துக்கொள்ள முடியாது.

    திருமணத்துக்கு பின்பு ஒரு பெண், கணவனை தவிர மற்றவருடன் பாலியல் உறவு கொண்டால், அது விவாகரத்துக்கான காரணமாகும். இருப்பினும், சுய இன்பத்தில் ஈடுபடுவது திருமணத்தை முறித்துக்கொள்ள ஒரு காரணமாக இருக்க முடியாது. கற்பனையில் கூட, அது கணவருக்கு கொடுமையை விளைவிப்பதாகக் கூற முடியாது.

    இந்த வழக்கில் மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை அல்லது உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே மனுதாரர் வழக்கில் கீழ்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறோம். மனுதாரரின் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • 7 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை
    • குழித்துறை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் மெர்சி ரமணி பாய்.

    இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி நீரோடு டி துறை மீனவ கிராமத்தில் ரோந்து சென்றார். அப் போது, இரும்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நின்ற கும்பலை கலைந்து செல்ல கூறினார்.

    ஆனால் அந்த கும்பல் சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெரி பாய், சாலேட், சைஜு, வியாகுல அடிமை, யேசுதாஸ், ராஜூ, கிறிஸ்து தசன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு குழித்துறை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜராகினார்.

    இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததற்காக 2 ஆண்டுகளும், கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கு 5 ஆண்டுகளும் விதித்து உத்தரவிட்டார். இந்த 2 தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

    • சொத்தை எழுதி கேட்டு பெற்றோரிடம் மகன் தகராறு
    • போலீசார் மகனை அழைத்து அறிவுரை

    கன்னியாகுமரி:

    குளச்சலை அடுத்த மேற்கு நெய்யூர் சரல்விளை பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 67). இவரது மனைவி சுசீலா (65). இந்த தம்பதியின் மகன் பிரபாகரன் (42).

    இவர் சொத்தை எழுதி கேட்டு பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இது குறித்து பழனி குளச்சல் போலீசில் பலமுறை புகார் செய்துள்ளார். போலீசார் பிரபாகரனை அழைத்து அறிவுரை கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி பிரபாகரன் வீட்டில் தகராறு செய்து தனது தாயார் சுசீலாவை கட்டையால் தாக்கி உள்ளார்.

    இதில் காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு உடையார்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் குறித்த புகாரின்பேரில் குளச்சல் போலீசார் பிரபாகரன், அவரது மனைவி வனிதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • கடத்தி சென்று பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் சத்திரப்பட்டி தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்காக மதுரை அரண்மணலியாங்காடு பகுதிக்கு வந்தார். அப்போது அவரை ஒரு காரில் வந்த 2 பேர் வழி மறித்தனர். அவர்கள் அந்த பெண்ணை காரில் கடத்திச் சென்றனர். அந்த கார் அங்குள்ள ஒரு தோப்புக்குள் சென்றது. அங்கு கடத்தி சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அந்த மர்ம நபர்கள் கடத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்து சென்று விட்டனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் பெண்ணை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ரவுத்திரப் பாண்டி மற்றும் ஒருவர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கலா பரிதாபமாக இறந்தார்.

    பள்ளிப்பாளையம்:

    பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் கலா (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சத்யா நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் திடீரென சாலையில் நடந்து சென்ற கலா மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த கலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கலா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    • உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் அவர்கள் குறித்து எந்த வித தகவலும் இல்லை.
    • கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி போலீஸ் சரகம் கடியப்பட்ட ணம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஆன்றனி மைக்கேல் (வயது 43). மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி சபின் சஜோனா (32). இவர்களுக்கு 14 மற்றும் 12 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.

    கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி சபின் சஜோனா தனது மகன்களுடன் வீட்டிலிருந்து மாயமானார். ஆன்றனி மைக்கேல் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் அவர்கள் குறித்து எந்த வித தகவலும் இல்லை.

    இச்சம்பவம் குறித்து ஆன்றனி மைக்கேல் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான 3 பேரை தேடி வருகின்றனர்.

    • 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை அறுத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை

    கன்னியாகுமரி:

    ஆண்டார்குளத்தை சேர்ந்த சுந்தர் சிங் என்பவரது மனைவி ஜோதி ரோஸ்லின் (வயது 53). இவர் ஆண்டார்குளத்தில் இருந்து சாந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் இரவு 8 மணி அளவில் ஆண்டார்குளம் செல்வ தற்காக சாந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கண் இமைக்கும் நேரத்தில் ஜோதி ரோஸ்லின் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை அறுத்தனர்.

    உடனடியாக ஜோதி ரோஸ்லின் கூச்சலிடவே பக்கத்தில் இருந்த நபர்கள் வருவதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி மறைந்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து ஜோதி ரோஸ்லின் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரினை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே மணிவிழுந்தானில் ஒரு நூற்பாலை உள்ளது.
    • பெண் ெதாழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அதிகாரிகளிடம் கூறி கதறி அழுதனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே மணிவிழுந்தானில் ஒரு நூற்பாலை உள்ளது. இங்கு உள்ளூர் மட்டு மின்றி வடமாநில தொழி லாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். வடமாநில பெண் தொழிலாளர்கள் சிலர், பெண்கள் பாது காப்புக்கான தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, பணி கடினமாக உள்ளது. ஆலையில் இருக்க விரும்பமில்லை என புகார் கூறியுள்ளனர்.

    இதையடுத்து சேலம் மாவட்ட சமூக நலத்துறை உத்தரவுப்படி வரு வாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று நூற்பாலையில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பணியாற்றி வந்த ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஓடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண் ெதாழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அதிகாரிகளிடம் கூறி கதறி அழுதனர்.

    இதையடுத்து 35 பெண் தொழிலாளர்களை மீட்டு மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்க ளுக்கான கூலி, கருணைத் தொகை தலா ரூ.10 ஆயிரம் வழங்கினர். இதையடுத்து அவர்கள் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • இவர் கணவர் பிரிந்து சென்றதால் தனிமையில் இருந்து வந்தார்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே விழுந்து கால் உடைந்தது

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி வடக்கூர் இந்திரா நகரை சேர்ந்த ரமேஷ் மனைவி லட்சுமி (வயது50). இவர் கணவர் பிரிந்து சென்றதால் தனிமையில் இருந்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த லட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே விழுந்து கால் உடைந்த நிலையில் இன்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

    தீ வேகமாக பரவ அக்கம் பக்கத்தினர் ஆரல்வாய்மொழி போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். நாகர்கோவில் தீயணைப்பு அதிகாரிகள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் அவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருச்சி எடமலைப்பட்டி புதூர் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தி (வயது 43).
    • முதிர்வுதொகை முடிந்து அந்த சீட்டு பணத்தை தராத காரணத்தால் வசந்தி அவரிடம் பணத்தை கேட்டுள்ளார்.

    திருச்சி

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி வசந்தி (வயது 43).

    இவர் அதே பகுதியை சேர்ந்த டிசோசா மோசஸ், மற்றும் அவரது மனைவி ஏஞ்சல் தெரசா ஆகியோரிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் சீட்டு போட்டனர். முதிர்வுதொகை முடிந்து அந்த சீட்டு பணத்தை தராத காரணத்தால் வசந்தி அவரிடம் பணத்தை கேட்டுள்ளார்.

    அதற்கு அவர்கள் பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து வசந்தி எடமலைப்பட்டி புதூர் போலீசில்புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி இரண்டு பேரையும் கைது செய்தனர்.

    • திருச்சி அருகே உள்ள கடியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி பட்டு (வயது 64).
    • பட்டுவிற்கும் அவரது உறவினர் வனிதாவுக்கு சொத்து தகராறு இருந்து வந்தது.

    திருச்சி

    திருச்சி அருகே உள்ள கடியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி பட்டு (வயது 64). இவரின் குடும்பத்தினருக்கும் உறவினரான, ஊர் காவல் படையைச் சேர்ந்த வனிதா (38) என்பவரின் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    மேலும் வனிதா, பட்டுவிடம். ரூ. 50,000 கடன் வாங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை திருப்பி கேட்க பட்டு சென்ற போது குடும்ப தகராறு எழுந்துள்ளது.

    இதில் ஊர் காவல் படையைச் சேர்ந்த வனிதா அவரது கணவர் பாலசுப்பிரமணியம் மற்றும் ராஜா என்பவரின்மனைவி குணம் ஆகியோர் பட்டுவை தாக்கியுள்ளனர்.

    இதில் காயமடைந்த மூதாட்டி பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஜீயபுரம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய ஊர் காவல் படையை சேர்ந்த வனிதா உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.

    • காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
    • கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவினாசி :

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் அவினாசியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மனைவி, தாய் மற்றும் குழந்தையுடன் வந்தார். இரவு தங்கிவிட்டு இன்று காலை காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

    சேவூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது சாலிக்காட்டுப்பாளையம் அருகே சக்திநகரில் ஒரு பெண் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அந்த பெண்ணின் மீது மோதி அவரை இழுத்துக் கொண்டே போய் ரோட்டில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். காரில் சிக்கிய பெண்ணும் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த 4 பேரும் கோபி ச்செட்டி ப்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சேவூர் போலீசார் மேற்கொண்ட விசா ரணையில் வாக்கிங் சென்று விபத்தில் சிக்கி பலியான பெண் சேவூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி சாந்தாமணி என்பது தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

    ×