என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர்"

    • உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன.
    • ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா 10 லட்சம் நெப்ரான்கள் ரத்த நுண் சுத்திகரிப்பான்கள் உள்ளன.

    கோடை வெயில் தீவிரமடைந்து வருகிறது. எனவே பகல் வேளைகளில் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    கோடை வெயிலில் அலைந்தால் சின்னம்மை, உயர் ரத்த அழுத்தம், நீர்ச்சத்து இழப்பு, சரும பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்படும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். பொது நல மருத்துவ நிபுணர் டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது:-

    உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா 10 லட்சம் நெப்ரான்கள் ரத்த நுண் சுத்திகரிப்பான்கள் உள்ளன.

    அங்கிருந்து உருவாகும் கழிவுகள் யூரிடர் எனப்படும் குழாய்கள் மூலம் சிறுநீர்ப் பையில் சேருகின்றன. அவை யூரித்ரா எனப்படும் குழாய் வழியே சிறுநீராக வெளியேறுகிறது. இந்தக் கட்டமைப்பைத்தான் சிறுநீர்ப்பாதை என அழைக்கிறோம்.

    இதில் ஏதேனும் கிருமித்தொற்று ஏற்படும்போது சிறுநீர் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும்.

    இதை அலட்சியப்படுத்தினால், கிருமிகள் சிறுநீரகங்களைத் தாக்கி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கோடைக் காலத்தில் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாவிடில் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    சமீப காலமாக அத்தகைய பிரச்சனைகள் பலருக்கு ஏற்படுகிறது. அதிலும், பெண்களில் பலர் புறச்சூழ்நிலை காரணமாக சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்ற இயலாமல் இருப்பதால் அவர்களில் பெரும்பாலானோருக்கு கிருமித் தொற்று ஏற்படுகிறது.

    இதைத் தவிர்க்க நாளொன்றுக்கு குறைந்தது 4 லிட்டர் தண்ணீர், இளநீர், மோர், எலுமிச்சை சாறை அருந்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

    • ஒரு குளிர்பானத்தில் 330 மில்லி சர்க்கரை உள்ளது, இவை கலோரிகளை அதிகரிக்கின்றன.
    • குளிர்பானத்துடன் மதுவை உட்கொண்டால் சுவை நன்றாக இருக்கும்.

    மது பிரியர்கள் ரம், விஸ்கி, ஜின், பிராந்தி எதைக் குடித்தாலும் அதை ஒரு குளிர்பானம் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கிறார்கள்.

    சரி, இந்த இரண்டில் எது நல்லது, எது கெட்டது என்பது பற்றி நீண்ட விவாதமே நடத்துகிறார்கள். மதுவில் குளிர்பானம் சேர்ப்பது சுவையை அதிகரிக்கிறது. சர்க்கரை மற்றும் கார்பனேற்றம் ஆல்கஹாலின் கடினத்தன்மையைக் குறைக்கின்றன. எனவே, மதுவை எளிதாகக் குடிக்கலாம்.

    ரம், கோக், அல்லது ஸ்ப்ரைட் கலந்த ஓட்கா போன்றவை பிரபலம். ஆனால் இவை சுகாதாரக் கண்ணோட்டத்தில் மிகவும் ஆபத்தானவை என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    ஒரு குளிர்பானத்தில் 330 மில்லி சர்க்கரை உள்ளது, இவை கலோரிகளை அதிகரிக்கின்றன. மதுவுடன் குளிர்பானங்களை உட்கொள்வது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆய்வுகளின்படி, சர்க்கரை ஆல்கஹால் உறிஞ்சுதலை துரிதப்படுத்துகிறது. இது அதிகப்படியான குடிப்பழக்கத்திற்கு வழிவகுக்கும்.

    மதுவில் தண்ணீரைக் கலந்து உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மது அருந்துவது நீரிழப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் தண்ணீர் அதன் செயல்திறனைக் குறைக்கிறது. இது ஆல்கஹாலின் செறிவைக் குறைத்து உடலில் அதன் விளைவைக் கட்டுப்படுத்துகிறது. இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், விஸ்கியுடன் தண்ணீரையோ அல்லது வோட்காவுடன் தண்ணீரையோ கலப்பது ஹேங்ஓவரைக் குறைக்கும் என்று தேசிய சுகாதார நிறுவனங்கள் விளக்குகின்றன.

    குளிர்பானத்துடன் மதுவை உட்கொண்டால் சுவை நன்றாக இருக்கும். ஆனால் உடல்நலம் விரைவில் மோசமடைய வாய்ப்புள்ளது. ஒரே தண்ணீரை ஒன்றாக எடுத்துக்கொள்வது ஓரளவு நன்மை பயக்கும்.

    கூடுதலாக, மதுவை குளிர்பானத்துடன் கலப்பது அதிகப்படியான அளவை ஏற்படுத்தும். இது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதே தண்ணீருடன் சேர்த்து உட்கொள்ளும்போது, அது பல பிரச்சனைகளைக் குறைக்கிறது.

    மதுவுடன் தண்ணீரைக் கலப்பது ஹேங்ஓவரை 20 சதவீதம் வரை குறைக்கிறது. மதுவை குளிர்பானத்துடன் கலப்பது தற்காலிக இன்பத்தைத் தரும். ஆனால் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு தண்ணீர் சிறந்தது.

    நீங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் குடித்துவிட்டு, அதிகமாக குடிக்காமல், தண்ணீரில் கலந்து குடித்தால், உங்கள் உடல்நலம் கட்டுக்குள் இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    • பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    • தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. அணைகளுக்கு நீர் வரத்து அதிகம் உள்ளதால், அங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் ஆற்றில் வர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் நீர் நிலைகளில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் அரவிந்த் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆற்றுப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகாரிகளும், போலீசாரும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல் மற்றும் ஆற்றில் வரும் தண்ணீர் ஆகியவற்றை கவனித்து உள்ளூர் மக்கள் விபத்தை தவிர்த்து வருகின்றனர். ஆனால் சுற்றுலா பயணிகள் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியாகி வருவது சோக கதையாக உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு காளிகேசம் பகுதியில் தலை தீபாவளி கொண்டாட வந்த என்ஜினீயர் ஷியாம், ஆற்று நீரில் சிக்கிய தனது மனைவி சுஷ்மாவை காப்பாற்ற முயன்ற போது, தண்ணீரில் மூழ்கி பலியானார்.

    இந்த சோகம் மறைவ தற்குள் சுற்றுலா வந்த 2 பேர் மற்றொரு சம்பவத்தில் பலியாகி விட்டனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

    மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இத னைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆசியாவிலேயே மிகவும் உயரமானதும் நீள மானதுமான மாத்தூர் தொட்டிப்பாலத்தின் கீழ் பகுதியில் ஓடும் பரளி யாற்றில் குளித்து வருகின்ற னர்.

    சென்னை வியாசர்பாடி சுந்தரம் நகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சேகர் மகன் கார்த்திகேயன் (வயது 30) அவரது நண்பர் நாகராஜ் (30), இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் நாசர் (30), டிராவல் ஏஜென்சி நடத்தும் அஜித் (25) தையல் வேலை பார்க்கும் ராஜீவ் (30), தனியார் நிறுவன ஊழியர்கள் சங்கர் (25), ரமேஷ் ஆகிய 7 பேரும் கடந்த 28-ந் தேதி சென்னையிலிருந்து சுற்றுலாவாக குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றனர்.

    நேற்று மதியம் அவர்கள் குமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிபாலம் வந்தனர்.அவர்களில் கார்த்திகேய னுன், நாகராஜ் ஆகி யோர் பரணியாற்றில் குளிப்ப தற்காக இறங்கினர்.

    அப்போது வெள்ள த்தில் சிக்கி 2 பேரும் பலியானார்கள். குலசே கரம் தீயணைப்பு அலுவலர் மைக்கேல் தனபாலன் தலைமையில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கார்த்திகேயன், நாகராஜ் உடல்கள் மீட்கப்பட்டன.

    தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் நேரில் வருகை தந்து விசாரணை நடத்தினார். மாத்தூர் தொட்டிப்பா லத்தில் கூட்டம் அதிகமாக வரும் நாட்களில் கூட போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்படுவது இல்லை. தண்ணீரில் இறங்கக்கூடாது என எச்சரிக்கை பலகை வைத்திருந்தும் ஆற்றில் குளிக்க இறங்கி விபத்தில் சிக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகளே அதிகம். இதனால் தொட்டி ப்பாலத்தின் கீழ் பகுதியில் சுற்றுலா பயணி களின் நலனை கருத்தில் கொண்டு இரு காவலர்களை தொட்டி ப்பாலத்தின் கீழ் பகுதி யில் பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டியது அவசியம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    அதுபோல் பொது ப்பணித்துறை ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து எந்த வித எச்சரிக்கையும் தெரிவிக்காமல் திறந்து விட்டதால் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து. இனிமேலாவது தண்ணீர் திறந்து விடும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கருத்து தெரிவித்தனர்.

    • உடன்குடி பகுதியில்உள்ள விவசாயிகள் அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
    • சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    உடன்குடி:

    உடன்குடியில்உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். அப்போது உடன்குடி பகுதியில்உள்ள விவசாயிகள் அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் நல்ல கனமழை பொழிந்து வருகிறது.இந்த நிலையில் வறண்டு கிடக்கும் சடையனேரி கால்வாயில் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடி வட்டார பகுதியில் உள்ள விவசாயநிலங்களை பாதுகாக்கவும், விவசாய நிலங்களில் கடல்நீர்மட்டம் புகுந்து விடாமல்தடுக்கவும், உடன்குடி பகுதியில் அனைத்து குளங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ேபசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    அப்போது அமைச்சருடன் உடன்குடி யூனியன் சேர்மனும் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசிங், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, உடன்குடிகூட்டுறவு சங்க தலைவர் அங்ஸாப் அலிபாதுஷா, உடன்குடிநகர செயலாளரும் உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவருமான மால் ராஜேஷ், முன்னாள் நகர செயலாளர் ஜான் பாஸ்கர், செட்டியா பத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் உட்பட தி.மு.கவினர் பலர் உடனிருந்தனர்.

    • அமராவதி அணைக்கு நீர் பிடிப்பு பகுதிகளாக இடுக்கி மாவட்ட பகுதிகள் உள்ளது‌.
    • அணை முழுமையாக நிரம்பும் நிலையில் உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    தாராபுரம்:

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்துள்ளது‌. இந்த நிலையில் அமராவதி அணை நிரம்பும் நிலை எட்டியதை அடுத்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக 12 ஆண்டுகளில் இல்லாத அளவு அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மொத்தம் 90 அடி நீர் தேக்கும் வகையில் 4.04 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாக உள்ளது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகிறது. மேலும் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அமராவதி அணைக்கு நீர் பிடிப்பு பகுதிகளாக இடுக்கி மாவட்ட பகுதிகள் உள்ளது‌.

    வழக்கமாக‌ இந்த அணை தென் மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் தொடங்கியதும் அணை நிறைந்து விடும். இதனால் ஜுன், ஜுலை மாதத்தில் அணையில் உபரி நீர் திறக்கப்பட்டு விடும். தற்போது வடகிழக்கு பருவமழை சில நாட்களாக பெய்து வரும் நிலையில், அணை முழுமையாக நிரம்பும் நிலையில் உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    அதேபோல் பழனி மலைத்தொடரில் உற்பத்தியாகும் துணை ஆறுகளாக உள்ள வரதமாநதி, குதிரையாறு, பொறுதலாறு, சண்முகா நதி உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அமராவதி ஆற்றுடன் தாராபுரம் அருகே ஒன்றாக கலக்கிறது. இந்த ஆறுகளில் வந்த தண்ணீருடன் அமராவதி ஆற்றின் உபரி நீரும் சேர்ந்து செல்கிறது. இதன் காரணமாக புதுப்பை அருகே உள்ள மாரியம்மன் கோவிலின் சுற்றுச்சுவரை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. மேலும் கொங்கர் பாளையம் செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் கிராம மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.

    இது குறித்து மயில் ரங்கம் பகுதியை சேர்ந்த சின்னுசாமி கூறுகையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இருகரைகளையும் தாண்டி இங்குள்ள கோவில் சுவற்றை தொட்டபடி வெள்ள நீர் சென்றது. தற்போது 12 ஆண்டுகள் கடந்து தற்போது இந்த அளவுக்கு தண்ணீர் செல்வதாக தெரிவித்தார்.

    • கடந்த 5 மாதங்களாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
    • சிலை பராமரிப்பு பணி மேலும் ஒருமாத காலம் தாமதமாகலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி கள் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் கடந்த 2000-ம் ஆண்டு 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை கடலின் நடுவே நிறுவப்பட்டுள்ளதால் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி உப்புக் காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சிலையில் உள்ள உப்புத்தன்மை நீக்கப்பட்டு பின்னர் ரசாயன கலவை பூசப்படும்.

    இதன் மூலம் சிலை உப்புக் காற்றினால் சிலை சேதமடையாமல் நீண்ட காலம் நீடித்து நிற்கும். அதன்படி கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது. சிலையை சுற்றிலும் இரும்பு சாரங்கள் அமைக்கப்பட்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தினமும் இந்த பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சிலையில் உள்ள உப்புத் தன்மையை அகற்றுவதற்காக தற்போது சிலையை சுற்றிலும் காகிதகூழ் ஓட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சிலையின் மீது ஒட்டப்பட்ட காகிதத்தை ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தி உப்பு படிந்திருக்கும் அளவு கண்டறியப்படும். சிலையில் ஒட்டப்படும் காகிதகூழ் பி.எச். வேல்யூ 7 என்ற அளவில் இருந்தால், அதன் பின்னர் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன கலவை சிலையின் மீது பூசப்படும்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக சிலையின் மீது ஒட்டப்பட்டு இருந்த காகிதகூழ் மழையில் நனைந்து தண்ணீரில் கரைந்து சேதமடைந்து விட்டன. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மழை குறைந்த பின்னர் மீண்டும் காகிதகூழ் ஒட்டப்பட்டு அதன் பின்னர்தான் பராமரிப்பு பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் கடந்த 6-ந்தேதி முடிய வேண்டிய சிலை பராமரிப்பு பணி மேலும் ஒருமாத காலம் தாமதமாகலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி கள் தெரிவித்தனர். இதற்கிடையே கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியுள்ளதால் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த 5 மாதங்களாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட மேலும் ஒரு மாதம் தாமதமாகலாம் என்று தெரிய வருகிறது.

    • ஆதிரெங்கம் ஊராட்சியில் பிரதான மங்கள வாய்க்கால் அமைந்துள்ளது.
    • பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் ஆகாய தாமரை செடிகள் புதர்போல் மண்டி கிடக்கிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த ஆதிரெங்கம் ஊராட்சியில் பிரதான மங்கள வாய்க்கால் அமைந்துள்ளது.

    முள்ளியாற்றில் பிரிந்து கட்டிமேடு முதல் ஆதிரெங்கம் வரை 7-கிமீ தூரம் கொண்ட இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் ஆகாய தாமரை செடிகள் புதர்போல் மண்டி கிடக்கிறது.

    தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக தண்ணீர் வடிய வழியின்றி வாய்க்காலின் கரைகளை தாண்டி செல்லும் நிலை உள்ளது.

    இதுகுறித்து, விவசாயிகள் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரனிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து, செடிகளை எந்திரம் கொண்டு அகற்றும் பணி ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    பணியின் போது ஒன்றியக்குழு உறுப்பினர் சரஸ்வதி ராமகிருஷ்ணன்,துணைத்தலைவர் பொற்செல்வி செல்லபாண்டியன், ஊராட்சி செயலாளர் இளந்திரையன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையால் 4½ மாதங்கள் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டியுள்ளது.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்த ரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஞ்சுகிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார கடைவரம்பு பகுதி களில் உள்ள விளை நிலங்க ளுக்கு தண்ணீர் கிடைக்கா மல் உள்ளது. ஆனால், தோவாளை கால்வாயில் இருந்து கடைவரம்பு நிலங்களுக்கு செல்லும் மடையினை அடைத்து முழுவதுமாக ராதாபுரம் கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது. குமரி விவசாயி கள் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிரானவர்கள் அல்ல. கடந்த காலங்களில் தண்ணீரின் இருப்பை பொருத்து 15 முதல் 30 நாட்கள் மட்டும் ராதாபுரம் கால் வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

    தற்போது பிறப்பிக்கப்பட் டுள்ள அரசாணையால் 4½ மாதங்கள் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண் ணீர் திறந்துவிட வேண்டியுள் ளது. அரசாணையின்படி தண்ணீர் திறந்து விடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அதேநேரத் தில்நிர்ணயித்த அளவை விட கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால், குமரி மாவட்டத்தில் உள்ள 79 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்யும் விவசாயி கள் பெரும் துயரத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விவசாயிகளை திரட்டி சம்பந்தப்பட்டதுறை அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • சுரங்க பாதை பேருந்து, லாரி உள்ளிட்ட எந்த கனரக வாகனங்களும் செல்ல முடியாமல் விபத்து நேரும் வகையில் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி செல்லும் ெரயிலை மறிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே 132 c சொர்ணக்காடு ெரயில்வே பாதை உபயோகிப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் சொர்ணக்காடு தனியார் திருமண மஹாலில் வளப்பிரமன்காடு ஊராட்சி மன்ற தலைவர் சி.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

    காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் அகல ரயில் பாதையில் பேராவூரணி அருகே சொர்ணக்காடு கேட் எண் 132 சி, பல கிராமங்களை இணைக்கும் சாலையாகும். ரயில்வே நிர்வாகம் கேட்டை நீக்கி, ெரயில்வே சுரங்கப்பாதையாக மாற்றம் செய்தனர். ஆனால் இந்த சுரங்க பாதை பேருந்து, லாரி உள்ளிட்ட எந்த கனரக வாகனங்களும் செல்ல முடியாமல் விபத்து நேரும் வகையில் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக பலமுறை ரயில்வே நிர்வாகத்திலும் எடுத்துக் கூறியும் சரியாக கட்டி தருவதாக கூறி இறுதியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தவறாக வடிவமைத்து தரை கீழ் பாலம் கட்டியுள்ளனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுமார் 5 அடி அளவிற்கு மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த ரயில்வே சுரங்கப்பாதையில் எந்த வாகனமும் செல்ல முடியாத அவல நிலை உள்ளது.

    சொர்ணக்காடு ரயில்வே சுரங்கப்பாதை தவறாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் கட்டப்பட்டுள்ளது. ரயில்வே பாதையை பயன்படுத்தும் சொர்ணக்காடு, வலப்பிரமன்காடு, மாத்தூர் ராமசாமிபுரம் ஊராட்சிகளை சேர்ந்த பாலகிருஷ்ணாபுரம், பனஞ்சேரி ஆகிய ஊர்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வது எனவும், எதிர்வரும் டிசம்பர் 9ஆம் தேதி காலை 9 மணி அளவில் அனைத்து ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்களை திரட்டி மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி செல்லும் ரயிலை மறிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என போராட்டக் குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சொர்ண க்காடு விஜயபாஸ்கரன், மணக்காடு விஜயகுமார், மாத்தூர் ராமசாமிபுரம் பழனி முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரஜினி ராஜா மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு 4 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.
    • தண்ணீர் செல்லும் கால்வாய் முகப்பு மேடாகியதால் குறிப்பிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல இயலாதநிலை இருந்து வருகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை 20 ஆண்டுகளாக தண்ணீர் செல்லாத கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தொடர் முயற்சியின் காரணமாக 4 கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    வைகை ஆற்றில் கடந்த 6 மாத காலமாக தண்ணீர் நிற்காமல் சென்று கொண்டிருப்பது வரலாற்று உண்மையாகும். கடந்த கால வரலாற்று நிகழ்வுகளில் இது போன்று வைகை ஆற்றில் தண்ணீர் சென்றது கிடையாது என்று பெரிய வர்கள் பெருமிதத்தோடு கூறுகிறார்கள்.

    தண்ணீர் செல்லும் கால்வாய் முகப்பு மேடா கியதால் குறிப்பிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல இயலாத நிலை இருந்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் சங்க பொறுப்பாளர் காசிராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் தண்டியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, செயலாளர் மோகன், மானாமதுரை ஒன்றிய தலைவர் பரமாத்மா, செயலாளர் முத்துராமலிங்கம், கீழமேல்குடி வெள்ளமுத்து, கீழமேல்குடி ஊராட்சி மன்றததலைவர் தர்மராமு மற்றும் கிராம பெரியவர்கள் வைகை ஆற்றில் வெள்ளமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கும் போது கீழ்மேல் குடி கண்மாய், மானாமதுரை கண்மாய், கால்பிரவு கண்மாய், கிருங்காகோட்டை கண்மாய் ஆகிய 4 கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்லாத அவல நிலையை எடுத்து கூறி இந்த கண்மாய்களுக்கு தண்ணீர் விட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முயற்சியால் தற்போது அதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில் இருந்து ஒரு கால்வாய் செல்கிறது. தூர்ந்து போயுள்ள அந்த கால்வாயை சீரமைத்து அதன் வழியாக தற்போது தண்ணீர் சென்று கொண்டி ருக்கிறது.

    இதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காசிராஜன் நன்றி தெரிவித்தார்.

    • இன்று விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அந்த நீரோடை வாய்க்காலுக்கு மலர் தூவி பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
    • வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் மலர் தூவி வரவேற்ற விவசாயிகள், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக வரவேற்பும் நன்றியும் தெரிவித்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது வசிஷ்ட நதி. இந்த நதிக்கு கருமந்துறை கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த நீர் வசிஷ்ட நதி வழியாக கடலூர் மாவட்டத்தை சென்றடைகிறது. இதனால் வழியெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த சில காலமாக மழை இல்லாததால் வசிஷ்ட நதி வறண்டு காணப்பட்டது.

    கைக்கான் வளவு திட்டம்

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக இருந்தபோது கருமத்துறை கைக்கான் வளவு பகுதியில் இருந்து நீரை வாய்க்கால் மூலமாக கரிய கோயில் நீர் தேக்கத்திற்கு கொண்டு வந்து, அதன் பிறகு அந்த நீரை வசிஷ்ட நதியில் கொண்டு செல்ல புதிய திட்டம் தீட்டப்பட்டது. இதற்கு ரூ.7 1/2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இத்திட்டம் விவசாயிகளின் பெரும் எதிர்பார்ப்போடும், ஒத்துழைப்போடும் செயல்ப டுத்தப்பட்டு உள்ளது.

    பொங்கலிட்டு வழிபாடு

    இதையடுத்து, இன்று விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள் ஏராள மானோர் கலந்து கொண்டு அந்த நீரோடை வாய்க்காலுக்கு மலர் தூவி பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். அகில பாரதிய சந்த் சமிதி மாநில தலைவர் யுக தர்ம குரு கருடானந்த மகராஜ் சுவாமிகள் கற்பூர தீபத்தை உள்ளே இறங்கி வழிபாடு நடத்தினார்.

    இதுகுறித்து தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறுகையில், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் இந்த திட்டத்தினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். விவசாயிகள் நலன் கருதி, இந்த திட்டத்தை அறிவித்து அதனை முழுமையாக செயல்படுத்தி உள்ளார் என்றார்.

    விவசாயிகள் நன்றி

    இந்த நிகழ்ச்சிக்கு ஆத்தூர் ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ, ஏற்காடு சித்ரா எம்.எல்.ஏ, கெங்கவல்லி நல்லதம்பி எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தராஜன், நரசிங்கபுரம் நகர மன்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் வெங்கடாஜலம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சின்னத்தம்பி, பெத்தநா யக்கன்பாளையம் ஒன்றிய குழு துணை தலைவர் முருகேசன், பெத்தநாயக்கன்பாளையம் அ.தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் வாசுதேவன், தகவல் பிரிவு மாவட்டச் செயலா ளர் ஜெயகாந்தன் மற்றும் இந்த தண்ணீரை பயன்படுத்தும் ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத்தினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் மலர் தூவி வரவேற்ற விவசாயிகள், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக வரவேற்பும் நன்றியும் தெரிவித்தனர்.

    • 50 மீட்டர் தூரத்துக்குள் ஆழ்குழாய் கிணறு, கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்படுகிறது.
    • ஆழ்குழாய் கிணறு, கிணறுகளில் அமைத்த மோட்டார்களின் மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பேசியதாவது:-

    பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்துக்குள் ஆழ்குழாய் கிணறு, கிணறு மூலம் தண்ணீர் உறிஞ்ச தடை விதிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டும் இதை உறுதிப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்துக்குள் ஆழ்குழாய் கிணறு, கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்படுகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படும். அவர்கள் உரிய விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்.

    அவ்வாறான ஆழ்குழாய் கிணறு, கிணறுகளில் அமைத்த மோட்டார்களின் மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு விவசாயிகள் கூறும்போது, பி.ஏ.பி. வாய்க்கால் வெட்டுவதற்கு முன், 50 மீட்டர் தூரத்துக்குள் ஏற்கனவே கிணறு, ஆழ்குழாய் கிணறு இருந்தால் அதற்கு இந்த விதி பொருந்துமா? என்பதை தெரிவிக்க வேண்டும். வாய்க்கால் வெட்டுவதற்கு முன் விவசாயம் செய்தவர்களுக்கு இந்த விதியை காரணம் காட்டி மின் இணைப்பை துண்டிப்பு செய்வது பொருத்தமாக இருக்காது என்றனர். அவ்வாறான இணைப்புகளுக்கு உரிய ஆவணங்களை கொடுத்து பதில் தெரிவிக்கலாம் என்று சப்-கலெக்டர் தெரிவித்தார்.

    ×