என் மலர்
நீங்கள் தேடியது "எதிர்ப்பு"
- 5 செட் இடம் வாங்கி அதில் பிரத்தியங்கராதேவி கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
- படுகாயம் அடைந்த திருநங்கை வாசுகி புவனகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவன கிரி அருகே பு.மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் வாசுகி, திருநங்கையான இவர் அந்த பகுதியில் 5 செட் இடம் வாங்கி அதில் பிரத்தியங்கராதேவி கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு பூஜை நடத்தி னார். இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த கருணாகரன், சிவகுரு நாதன், கங்கா, சீராலன், முரளி, குமார் உள்ளிட்ட 7 பேர் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் திரு நங்கையிடம் இந்த பகுதி யில் கோவில் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த னர். இதனால் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் திருநங்கை வாசுகி தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த திருநங்கை வாசுகி புவனகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனை அறிந்த ஏராளமான திருநங்கைகள் திரண்டனர். அவர்கள் புவனகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். திருநங்கை வாசுகியை தாக்கியவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசம் அடைந்த னர். இது தொடர்பாக போலீ சார் திருநங்கைகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக கருணா கரன், சிவகுருநாதன், கங்கா உள்பட 7 பேர் மீது போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை எற்படுத்தியது.
- 13-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் மதுபான பார் திறக்க முயற்சி நடக்கிறது.
- இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே பொன்மனை பரவூர் பகுதியில் தனியார் மதுபான பாருக்கான கட்டுமான பணி நடைபெற்று வந்தது.
இதையடுத்து பொன் மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்மனை சந்திப்பில் நேற்று மாலை நடைபெற்றது. போராட்டத்தில் உறுப்பினர் ஜாஸ்மினி, பெண்கள், குழந்தைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் ஜான் போஸ்கோ, அ.தி.மு.க. மோகன்குமார், கம்யூனிஸ்டு பிரசாத், தி.மு.க. சேம் பெனட் சதீஷ், நாம் தமிழர் கட்சி சீலன், சமூக ஆர்வலர் சர்வேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் தனியார் மதுபான பார் திறப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் பேசினார்கள். இந்த போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வர்கள் கலந்து கொள்ள வில்லை.
இது குறித்து பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் கூறுகையில், பொன்மனை பேரூராட் சிக்குட்பட்ட 13-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் மதுபான பார் திறக்க முயற்சி நடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை.
இதனால் பொதுமக்களுடன் அனைத்து கட்சியினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உடனே தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் தொடர்ந்து அப்பகுதியில் மதுபான கடை திறக்க முயற்சி செய்தால் பொது மக்களுடன் சேர்ந்து மிக பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என கூறினார்.
போராட்டத்தின் முடிவில் வார்டு உறுப்பினர் சாந்தி நன்றியுரை கூறினார்.
- 6-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் நவீன் ராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
- வெள்ளாருக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்கு ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு தர்மக்குடிகாடு பகுதியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 6-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் நவீன் ராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் திட்டக்குடி நகராட்சி பகுதியில் இருக்கின்ற அனைத்து கழிவுநீர்களையும் தர்மகுடிகாடு பகுதி வழியாக கொண்டு சென்று வெள்ளாற்றில் கலக்கப்போவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்ததாக கூறி கடந்த மாதம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கலந்து சென்றனர். திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட தர்மகுடிக்காடு அருகே திட்டக்குடி - விருத்தாசலம் மாநில சாலையோரம் மழைக்காலத்தில் மழை நீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் திட்டக்குடி நகராட்சியிடம் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி தர கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் இன்று திட்டக்குடி நகராட்சி ஆணையர் ஆண்டவன், நகர மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், நகர துணைத் தலைவர் பரமகுரு மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் ஜேசிபி இயந்திரம் மூலம் தேங்கியுள்ள மழை நீரை வடிக்கால் வழியாக தர்மக்குடிகாட்டில் இருந்து வெள்ளாருக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்கு ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சிக்கு உட்பட்ட அப்பகுதி மக்கள் 6-வது வார்டு உறுப்பினர் நவீன்ராஜ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் பேரில் திட்டக்குடி டிஎஸ்பி காவியா, இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்ட க்காரர்கள் தற்போது தற்காலிகமாக இந்த வழியாக பள்ளம் தோண்டப்பட்டால் விரைவில் திட்டக்குடி நகராட்சி சாக்கடை நீர் அனைத்தும் இவ் வழியாக தான் அருகிலுள்ள வெள்ளா ற்றிக்கு செல்லும் எனவே இவ்வழியாக வடிகால் அமைக்க அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி சார்பில் தற்போது பருவ மழை தொடங்கிய தால் சாலை ஓரம் உள்ள மழை நீரை மட்டும் செல்வதற்கு தற்காலிகமாக பள்ளம் தோண்டி வெள்ளா ற்றில் மழை நீரை விடுவதாக தெரிவித்தனர். இதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவி த்ததால் இதுகுறித்து விருத்தாசலம் சார் ஆட்சியர் தலைமையில் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலக த்தில் சமாதான கூட்டம் நடைபெறும் என டிஎஸ்பி காவியா தெரிவி த்தார். இதையடுத்து போராட்ட க்காரர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறார்கள்.
- இந்தியை திணிப்பதன் மூலம் சமஸ்கிருதத்தை உள்ளே புகுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது
நாகர்கோவில்:
நாகர் கோவில் மாநகர தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று செம்மாங்குடி சாலையில் நடைபெற்றது.
மாநகர செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கி னார். கிழக்கு பகுதி செயலா ளர் துரை வரவேற்று பேசினார். மாநகர மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் மாநில பேச்சாளர் பொன்னேரி சிவா கூறியதாவது:-
தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறார்கள். முதல் முதலாக சென்னை, சென்னை ராஜ்தானியாக இருந்தபோது ராஜாஜி இந் தியை புகுத்தினார். இதற்கு எதிராக பெரியார் மற்றும் அண்ணா தலைமையில்பெ ரும்போராட்டம் நடைபெ ற்றது. மொழிக்காகமுதல் முதலில் சின்னச்சாமி உயிர் தியாகம் செய்தார். 1938-ல் மொழிக்காக சிறையில் சாகடிக்கப்பட்ட நடராஜன் மறைவிற்கு அண்ணாமலை செட்டியார் தனது காரை வழங்கினார். 1975-ம் ஆண்டு ஐ.நா. சபை முகப்பில் தமிழ கத்தைச் சேர்ந்த கணியன் பூங்குன்றன் எழுதிய யாதும் ஊரேயாவரும்கேளிர் என்ற வாசகம் பொறிக்கப்பட்டது.
தமிழ் மொழியின் சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. செய்தி தொடர்பு துணை செயலாளர் தமிழன் பிர சன்னா கூறியதாவது:-ஆர்.எஸ்.எஸ். உத்தரவுக்கு ஏற்ப மோடி, அமித்ஷா அகியோர் இந்தியை திணித்து வருகின்றனர். நாடு முழுவதும் மருத்துவ கல்லூரி உள்பட அனைத்து கல்விநிறுவனங்க ளிலும் இந்தி கட்டாயமாக்கப்படும்.
இவ்வாறு இந்தியை திணிப்பதன் மூலம் சமஸ்கி ருதத்தை உள்ளே புகுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. சமஸ்கிருதம் வரும்போது, சனாதானமும் தானாக வந்து விடும். இதுவே ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கம். இவ் வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், முன் னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பொர்னார்டு, ராஜன், மாவட்ட நிர்வாகிகள் தில்லைசெல்வம், ஜோசப் ராஜ் பூதலிங்கம்,
பார்த்த சாரதி, சதாசிவம், தாமரைபாரதி, ஒன்றிய, செயலார்கள் லிவிங்ஸ்டன், சுரேந்திரகுமார், செல்வம், பிராங்கிளின், மதியழகன், பாபு, தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வினாத்தாள் கட்டணம் வசூலிக்க ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
- அரசு பள்ளி மாணவர்களிடம்
திருச்சி,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் சு.குணசேகரன், பொதுச் செயலாளர் முத்துசாமி, பொருளாளர் சே.நீலகண்டன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முற்றிலும் இலவசக் கல்வியை அளித்து வருகிறது. இதை ஒரு கொள்கையாகவே அரசு பின்பற்றி வருகிறது.
மேலும் பணம் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு விலையில்லா பாடநூல், குறிப்பேடுகள், சீருடை, காலணி, புத்தகப்பை, மடிக்கணினி, மிதிவண்டி, கணித உபகரணங்கள் என 14-க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எந்தவொரு கட்டணமும் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி வசூல் செய்யப்படுவதில்லை.
இந்நிலையில் மயிலாடுதுறை தொடக்க கல்வி அலுவலர் நேற்றைய தினம் பிறப்பித்துள்ள உத்தரவில் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடமும் தேர்வுக்கட்டணம் வசூல் செய்து செலுத்த வேண்டும் கூறியுள்ளார். தேர்வுகள் 3 பருவங்களாக நடத்தப்படுவதால் நடக்க இருக்கும் இரண்டாம் பருவம் தேர்வுக்கு மாணவர் ஒருவருக்கு ரூ.40 வீதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இங்கு செயல்படும் அச்சகங்களிலேயே குறைந்த எண்ணிக்கையில் வாங்குபவர்களுக்கே கேள்வித்தாள் ரூ.6-க்கு கிடைக்கிறது. எனவே அரசு கொள்கைக்கு முரண்பட்ட இந்த உத்தரவை மயிலாடுதுறை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்த கேள்வித்தாள்களை இலவசமாக வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- சொத்துவரி, மின் கட்டணம், பால் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
- தி.மு.க. அரசை கண்டித்து கண்டண கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பேரூராட்சியில் திமுக அரசின் சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வுகளை கண்டித்து வல்லம் பேரூராட்சி கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பேருந்து நிலையம் எதிரே வல்லம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் சொத்துவரி உயர்வு மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வு விலைவாசி உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தஞ்சை திருவாரூர் மாவட்ட பால்வளத் தலைவர் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர்.காந்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நிக்கல்சன் வங்கி கூட்டுறவு தலைவர் சரவணன், முன்னாள் வல்லம் பேரூராட்சி மன்ற தலைவர் சிங் ஜெகதீசன், பேரூராட்சி செயலாளர் வழக்கறிஞர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவக் கல்லூரி பகுதி அம்மா பேரவை செயலாளர் மனோகரன் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் சிங்.ஜெ. முருகானந்தம், கவிதாகலியமூர்த்தி, வட்ட செயலாளர் மனோகரன், வல்லம் அதிமுக வார்டு செயலாளர்கள், அறிவு, மில்டன், அறிவு, சுந்தரம், வாசு, நேரு, சேட்டு நிர்வாகிகள்உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டண கோஷங்கள் எழுப்ப பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.
- துவாக்குடியை திறந்தவெளி கழிவறையில்லாத நகராட்சியாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது
- அ.தி.மு.க. கவுன்சிலர் ஆணையரிடம் ெதரிவித்தார்
திருச்சி:
திருச்சி துவாக்குடி நகராட்சியை திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நகரமாக அறிவிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆணையாளர் கேட்டுள்ளார். இந்த நிலையில் அந்த நகராட்சியின் 9-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் வக்கீல் சாருமதி ஆணையாளரிடம் ஒரு ஆட்சேபனை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
துவாக்குடி நகராட்சியில் உள்ள 1 முதல் 21 வரை உள்ள அனைத்து வார்டுகளையும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகரமாக அறிவிக்க இருப்பதை நான் அறிந்துள்ளேன். ஆனால் எனது வார்டுக்கு உட்பட்ட செடிமலை முருகன் கோவில் தெருவில் பெரும்பாலான மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கிறார்கள்.
இங்கு பொது கழிப்பிட வசதி சரியாக இல்லை. இருக்கும் ஒரு பொதுக் கழிப்பிடத்தையும் நகராட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனிவாசன் துட்டம்பட்டி ஊராட்சியில் 1 ஏக்கர் பரப்பளவில் வனத்துறை சார்பில் மரகத பூஞ்சோலை அமைக்க அனுமதி வழங்கியதற்கு பாராட்டு தெரிவித்து பேசினார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சுமதிபாபு தலைமை தாங்கினார். ஆணை யாளர்கள் விஜயலட்சுமி, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனிவாசன் துட்டம்பட்டி ஊராட்சியில் 1 ஏக்கர் பரப்பளவில் வனத்துறை சார்பில் மரகத பூஞ்சோலை அமைக்க அனுமதி வழங்கியதற்கு பாராட்டு தெரிவித்து பேசினார்.
அதனை தொடர்ந்து பேசிய தலைவர் சுமதிபாபு, பல்வேறு ஊராட்சிகளில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடாக பயனாளிகள் பட்டியல் சேர்க்கபட்டு பணி நடை பெறுவதாக குற்றம் சாட்டி னார். அதற்கு பதில் அளித்து பேசிய ஆணையாளர் ரவிச்சந்திரன் ஊராக வேலை திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கை குறித்து கண்டறியபட்டால் சம்பந்தபட்ட ஊராட்சி நிவாகத்தின் மீதும், பணித்தள பொறுப்பாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய தலைவர் சுமதிபாபு, துறை சார்ந்த அதிகாரிகள் பெரும்பாலானோர் கூட்டத்திற்கு வருவது இல்லை. இதனால் துறை சார்ந்த விளக்கம் கேட்டு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும், அனைவரும் ஒன்றிய குழு கூட்டத்திற்கு தவறா மல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
தொடர்ந்து கூட்டதில் சேலம் மேற்கு சட்ட மன்ற உறுப்பினர் கோரிக்கை யின் படி தாரமங்கலம் ஊராட்சி யில் உள்ள அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கோண கப்பாடி ஆகிய ஊரட்சி களை பிரித்து ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள 8 ஊரட்சிகளை பிரித்து முத்துநாயக்கன்பட்டியை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அனுமதி கூடாது என்று ஊராட்சி கவுன்சி லர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் நிராக ரிக்கப்பட்டது.
- ரேஷன் பொருட்கள் வாங்க 3 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது.
- திருவோடை தூக்கி தரையில் போட்டு உடைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா புளியக்குடி ஊராட்சி வடக்கு தோப்பு புளியக்குடியில் 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தற்போது உள்ள அங்காடியில் ரேஷன் பொருட்கள் வாங்க 3 கிலோமீட்டர் தூரம் ரெயில்வே இருப்புப் பாதையை கடந்து நடந்து செல்ல வேண்டி உள்ளது.
இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே வடக்கு தோப்பு புளியக்குடியில் பகுதி நேர அங்காடி அமைத்து தர வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேறாததால் இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு
புளியக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுசீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பகுதி நேர அங்காடி அமைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் திருவோடை தூக்கி தரையில் போட்டு உடைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அப்போது போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.
பொதுமக்களின் இந்த நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஈத்தாமொழி வெள்ளாளர் தெருவில் சுமார் 50 ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகின்றனர்
- 50 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த இடத்தை விட்டு அகற்றினால் நாங்கள் இந்த இடத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றனர்.
கன்னியாகுமரி:
தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈத்தாமொழி வெள்ளாளர் தெருவில் சுமார் 50 ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் தனியார் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற தர்மபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பாக தலைவர் ரெங்க நாயகி கணேசன், ஊராட்சி செயலர் பாமா ஆகியோர் சம்பவ இடம் சென்றனர்.
அவர்கள் பொக்லைன் எந்திரம் மற்றும் ஆட்களுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், வயதான முதியோர்கள், குழந்தைகள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள், 50 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த இடத்தை விட்டு அகற்றினால் நாங்கள் இந்த இடத்திலேயே தீக்கு ளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் ஈத்தா மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாமி தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். தர்மபுரம் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி ராம லெட்சுமி (பொறுப்பு), ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் செய்யது அலி பாத்திமா, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கனக பாய், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோரும் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொது மக்கள், நாங்கள் வசித்து வரும் குடியிருப்பு வீடுகளை உடனடியாக காலி செய்து மாற்று இடத்திற்கு செல்ல முடியாத நிலையில் வறுமை யில் உள்ளோம். எங்கள் மீது மாவட்ட நிர்வாகம் கருணை கூர்ந்து நாங்கள் குடியிருப்பதற்கு மாற்று இடம் தந்து உதவ வேண்டும், முடியாத பட்சத்தில் எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதன் பேரில் அதிகாரிகள் தற்காலிகமாக ஆக்கிர மிப்பு அகற்றுவதை நிறுத்தி வைத்து உள்ளனர்.
- அனைத்து வணிகர்களும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை எதிர்த்து கடைக்கு முன் போஸ்டர் ஒட்டியும் தமிழ்நாடு முழுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
- டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறை குறித்து முறைப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரை நடைமுறை படுத்த மாட்டோம்
சுவாமிமலை:
அனைத்து வணிகர்களும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை எதிர்த்து மாநில தலைவர் ஏ.எம். விக்ரமராஜா அறிவுறுத்தலின்படி சட்டையில் பேட்ச் அணிந்து மற்றும் கடைக்கு முன் போஸ்டர் ஒட்டியும் தமிழ்நாடு முழுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதல் கட்ட ஆர்ப்பாட்டத்தின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ. எம். விக்கிரமராஜாவை அழைத்து பேசி டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறை குறித்து முறைப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரை அதை நடைமுறைப்படுத்த மாட்டோம் எனவும், சிறு குறு வணிகர்களையும் எவ்வகையிலும் பாதிக்க மாட்டார்கள் எனவும் உறுதி அளித்துள்ளார்கள்.
இதற்காக டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பின் தலைவர்முகமது சுகைல், செயலாளர் உதயகுமார், பொருளாளர் ரகுராமன், கௌரவ தலைவர்அசோகன், முதன்மை துணைத் தலைவர்கள் ஜமால்முகமது, பாரதி, பாலமுருகன், ஹாஜாமைதீன் , துணைத் தலைவர்கள் சரவணன், செல்வசேகர், ஜாகிர் உசேன், கணேசன்மூர்த்தி, துணைச் செயலாளர்கள், ரவிச்சந்திரன், செல்வகுமார், அக்பர் அலி, இணைச் செயலாளர்கள், பிரபாகரன்,பாலமுருகன், கரிகாலன், ஒருங்கிணை ப்பாளர்,சந்திரசேகர், துணை ஒருங்கிணைப்பாளர் குமார், இணை ஒருங்கிணைப்பாளர், கருணாகரன், செய்தி தொடர்பாளர், லுக்மான் உமர், ஆகியோர் சார்பாகவும் மற்றும் வணிக அனைத்து உறுப்பினர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரமைப்பின் மாநில தலைவர் ஏ. எம். விக்கிரமராஜா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் உள்ள பாசன ஏரிக்கரையில் 40 ஆண்டுகாலமாக குடியிருக்கும் வீடுகளை அகற்ற வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி காலக்கெடு வைத்தனர். அதன்படி இதற்கான காலக்கெடு இன்று முடிந்ததால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர். விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையின் இருபுறங்களிலும் சுமார் 40 வீடுகள் கட்டி பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலை மற்றும் ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூறி வருவாய்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் அகற்றி வருகின்றனர்
தொரவளூர் கிராமத்தில் உள்ள பாசன ஏரி கரையில் அமைந்துள்ள 40 வீடுகளை அகற்றக்கோரி வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பினர். இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழக்கும் நிலை இருப்பதால், தங்களுக்கு மாற்று இடம் அளிக்குமாறு பலமுறை விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் மாற்றிடம் ஏதும் அரசால் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஆக்கிரமிப்பு களை இன்று அகற்ற வருவாய் துறை சார்பில் தொரவலூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.