என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்று"

    • ஒரு வருடத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டு மரமாக வளர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம்.
    • திருமலைசமுத்திரம் பகுதியில் 214 வகையான பல்வேறு மரங்களை கொண்ட மிகப்பெரிய சரணாலயம்.

    பூதலூர்:

    பூதலூர் ஊராட்சி ஒன்றியம் கச்சமங்கலம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.

    கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா வரவேற்புரை ஆற்றினார்.

    முகாமில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, பூதலூர் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    முகாமில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை ரீதியான திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 347 பேருக்கு ரூ.72 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வழங்கி பேசியதாவது :-

    ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிராமத்தை தேர்ந்தெடுத்து மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி முகாம் நடைபெற்று வருகிறது.

    முகாம் நடைபெறுவதற்கு முன்னதாக இந்த கிராமத்தில் முகாமிட்டு கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டன. பெரும்பாலான மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் கொடுக்கப்படும் மனுக்கள் மீதும் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் வீடுகள் தோறும் மரங்கள் நடுவதை ஒரு இயக்கமாக தொடங்கி நடந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் ஒரு வருட காலத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டு மரமாக வளர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறது.

    நமது கிராமத்தின் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் 214 வகையான பல்வேறு மரங்களைக் கொண்ட மிகப்பெரிய சரணாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    அனைவரும் அதை சென்று பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.மக்கள் நேர்காணல் முகாமில் பல்வேறு துறைகளில் சார்பில் காட்சி அரங்குகள் வைக்கப்பட்டிருந்தன. முகாமில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பூதலூர் தாசில்தார் பெர்சியா நன்றி கூறினார்.

    • 26,800 மரக்கன்றுகள் மதுக்கரை வனவியல் நாற்றங்கால்களில் வளர்க்கப்பட்டு நடவிற்கு தயார் நிலையில் உள்ளது.
    • விவசாய நிலங்களில் வரப்புகளில், பயிர்களுக்கு இடையில் அல்லது முழுமையாக நடவு செய்ய மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை மூலம் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தில் விவசாய நிலங்களில் வரப்புகளில் அல்லது பயிர்களுக்கு இடையில் அல்லது முழுமையாக நடவு செய்ய மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    சுல்தான்பேட்டை வட்டாரத்திற்கு 1,300 பெரு நெல்லி, 15,700 மகாகனி, 4,500 குமிழம், 5,300 மலை வேம்பு என மொத்தம் 26,800 மரக்கன்றுகள் மதுக்கரை வனவியல் நாற்றங்கால்களில் வளர்க்கப்பட்டு நடவிற்கு தயார் நிலையில் உள்ளது. விவசாயிகள் இம்மரக்கன்றுகளை பெற சுல்தான்பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்து பரிந்துரை படிவம் பெற்று வனத்துறை நாற்றாங்காலில் நேரடியாக மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் விஜய கல்பனா தெரிவித்துள்ளார்.

    • ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
    • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கல்லூரி வளாகத்தில் 75 மரக்கன்றுகளை நட்டார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண். 48, 231 சுயநிதிப்பிரிவு மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் 1 மற்றும் 2 அணிகள், வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சி மன்றம், மதர்சமூக சேவை நிறுவனம் ஆகியவை சார்பில் ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் விழாவை தொடங்கி வைத்து, இந்திய சுதந்திர அமுத பெருவிழாவை நினைவு கூறும் வகையில் கல்லூரி வளாகத்தில் 75 மரக்கன்றுகளை நட்டார். நாட்டு நலப்பணித்திட்டம் சுயநிதிப்பிரிவு அணி எண்.231 திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்று பேசினார். மதர்சமூக சேவை நிறுவனத்தலைவர் ராஜ்கமல் கலந்து கொண்டு, பசுமை இந்தியா திட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி பேசினார். விழா ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அணி எண்.48-ன் அதிகாரி கவிதா, இளையோர் செஞ்சிலுவை அணி எண்.1 திட்ட அதிகாரி மோதிலால் தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அதிகாரி பார்வதிதேவி நன்றி கூறினார். கல்லூரி பேராசிரியர்களான அந்தோணி சகாய சித்ரா, ராஜ்பினோ, சிங்காரவேலு, சிரில்அருண், கரோலின் கண்மணி ஆனந்தி, திருச்செல்வன், ரூபன்சேசு அடைக்கலம், சுமதி, செந்தில்குமாரி, டயனா ஸ்வீட்லின், கருப்பசாமி, சிவந்தி, வானொலி தொழிற்நுட்ப கலைஞர் கண்ணன், ஆய்வக உதவியாளர் ஜெயந்தி மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள், இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • 113-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா
    • துளிகள் அமைப்பு சார்பில் 20,340 மரக்கன்றுகள்

    காங்கயம்:

    காங்கயம் துளிகள் அமைப்புசார்பில் 20,340 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்தநிலையில் 113-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா குண்டடம் யூனியன் தும்பலப்பட்டியில் நடைபெற்றது. குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகாசலம் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நந்தவனம்பாளையம் ஊராட்சி தலைவர் தனசெல்வி நாச்சிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் என்.பி. பாண்டியன், 6-வது வார்டு உறுப்பினர் பிரியா பூபதி, ஊராட்சி செயலாளர் ஜெயமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   

    • தமிழகத்தில் வனப்பரப்பு 22.98 சதம் உள்ளது.
    • 3.50 கோடி இலக்கை தாண்டி மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது.

    பல்லடம் : 

    பல்லடம் அருகே கள்ளகிணறு பகுதியில் தனியார் நிறுவனத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் வனப்பரப்பு 22.98 சதம் உள்ளது. அதனை அதிகப்படுத்தும் வகையில் பசுமை தமிழகம் திட்டத்தை முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வரும் 2032 ம் ஆண்டுக்குள் வனப்பரப்பை 33 சதமாக உயர்த்தும் வகையில், இந்த ஆண்டு 2.50 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது 3.50 கோடி இலக்கை தாண்டி மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு 15 கோடி மரக்கன்று நடப்படும் .அதற்கு அடுத்த ஆண்டு 25 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி,சோமசுந்தரம்(பல்லடம்), அசோகன் (பொங்கலூர்), பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தருமதானபுரம் ஊராட்சி பகுதிகளில் 1033 மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகேகதிராம ங்கலம் கண்ணன் உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    பள்ளியின் முன்னாள் ஆசிரியர் திருவேங்கடம் 33-ம் ஆண்டு நினைவாக பள்ளி வளாகம் மற்றும் கதிராமங்கலம், தருமதானபுரம் ஊராட்சி பகுதிகளில் 1033 மரக்கன்று கள் நடப்பட்டது.

    விழாவை கதிராமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    சீர்காழி வட்டா ரக்கல்வி அலுவலர்கள் பொன்.பூங்குழலி, நாகராஜன் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

    • குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என்று தரம் பிரித்து மக்கும் குப்பைகளைக் கொண்டு இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
    • 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    வல்லம்:

    தஞ்சை அருகே வல்லம் பஸ்ஸ்டாண்டில் விவசாயிகளுக்கு தேவையான திடக்கழிவு மேலாண்மை திட்ட இயற்கை உரம், மண்புழு உரம் மற்றும் மரக்கன்றுகள் விற்பனை மையத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

    வல்லம் பேரூராட்சி க்குட்பட்ட அய்யனார் நகர் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் வளம் மீட்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை விற்பனை செய்வதற்காக இந்த விற்பனை மையம் தொடங்கப்படம்டுள்ளது. இதை திறந்து வைத்த பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    முதல்வர் உத்தரவுக்கிணங்க வல்லம் பேரூராட்சி க்குட்பட்ட அய்யனார் நகர் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது தினமும் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் மொத்த குப்பைகள் 4.230 டன்னில் மக்கும் குப்பை 2.540 டன் மற்றும் மக்காத குப்பை 1.040 டன் சேகரம் செய்யப்படுகிறது.

    இந்த குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என்று தரம் பிரித்து மக்கும் குப்பைகளைக் கொண்டு இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளொன்றுக்கு சராசரி சுமார் 200 கிலோ உரம் தயாரிக்கப்படுகிறது.

    இந்த உரம் 2021-22 ம் நிதியாண்டில் ரூ 33500க்கும், 2022-23 ம் நிதியாண்டில் ரூ.37000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட அளவில் உரங்களை வளம் மீட்பு பூங்காவில் உள்ள மரக்கன்றுகளுக்கு இடப்பட்டு அதன் மூலம் விளையும் காய், கனிகள் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியாளர்களுக்கே வழங்கப்படுகிறது. மேற்படி உரங்களை மரம் வளர்ப்பு மற்றும் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தினால் அதிகமாக மகசூல் கிடைக்கும் வளம் மீட்பு பூங்காவில் நர்சரி மூலம் மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகள் தயார் செய்யப்படுகிறது.

    உற்பத்தி செய்யப்படும் உரங்களை பற்றி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், பயன்பெறும் வகையிலும் வல்லம் பஸ்ஸ்டாண்டில் பேரூராட்சி மூலம் இயற்கை உரம், மண்புழு உரம் மற்றும் மரக்கன்றுகள் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த விற்பனை மையத்திற்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவைத் தந்து இயற்கை விவசாயத்தை ஊக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் பிரகந்தநாயகி, துணை தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • 25 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன
    • காவல் நிலையத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது


    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அறிவுறுத்தலின் பேரில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. காவல் ஆய்வாளர் உஷா நந்தினி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மா, பலா, கொய்யா, சந்தனம் மற்றும் 25 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. ஒவ்வொரு மரக்கன்றுகளுக்கும் கூண்டுகள் அமைத்து தண்ணீர் ஊற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அனைத்து போலீசார் உட்பட அருகில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • மொத்தம் 125 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 53 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
    • 10 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கல்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோயில் அருகே மேலையூர் கிராம ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலை வைத்தார். சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி வரவேற்றார். முகாமில் மாவட்ட கலெக்டர் லலிதா, எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாதம், மாதம் ஒவ்வொரு ஊராட்சியிலும் நட த்தப்படுகிறது. இம்முகாம் மூலம் தமிழ்நாடு அரசின் சார்பில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை இங்கு கண்காட்சிகள் மூலம் விளக்கப்படுகிறது. குறிப்பாக வேளாண்மை த்துறையின் மூலம் செயல்படு த்தப்படும் திட்டங்கள் பற்றி செயலி அறிமுக ப்படுத்த ப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முதலமைச்ச ரின் உயரிய நோக்கம் அனைவ ருக்கு ம் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான். முதலமைச்சர் பொறுப்பே ற்றவுடன் 4 முறை நடத்த ப்பட்ட கிராம சபைக்கூட்டம் தற்போது 6 முறையாக மாற்றி நடத்தப்படு கிறது. கிராம சபைக் கூட்டத்தில் வாசிக்கின்ற வரவு, செலவு திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்க ளுக்கு ஏற்படும் சந்தே கங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 125 மனுக்கள் பெறப்பட்டு, அதில் நேற்று 53 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மீதமுள்ள 72 மனுக்கள் பரிசீலனைக்கு வைக்க ப்பட்டுள்ளன.மேலும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு மரக்கன்றுகளும், ஆதிதி ராவிடர்நலத்துறை யின் சார்பில் 9 பயனாளி களுக்கு பட்டாவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலியும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 10 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களும் வழங்க ப்பட்டன.

    இதில் வேளா ண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்தமிழ்ச்செல்வன், தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, சமூக நலத்துறை தாசில்தார் சுந்தரி, சீர்காழி ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் இளங்கோவன், ஊராட்சி மன்றத் தலைவர் நளினி ராதாகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனை த்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நாட்டு நல பணித்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • கல்லூரி மாணவர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தெருக்களில் போடக்கூடாது என எடுத்துரைத்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரி மாணவர்கள் நாட்டு நல பணித்திட்டத்தின் கீழ் பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் உள்ள தெருக்களில் குப்பைகளை சுத்தம் செய்து வீடு வீடாக சென்று குப்பைகளை தெருக்களில் போடக்கூடாது எனவும் குப்பைத்தொட்டியில் போட வேண்டும் எனவும் எடுத்துரைத்தனர்.

    பின்னர் அதே பகுதியில் புவி வெப்பமயமாதலை தடுக்க ஒரே நேரத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன இதில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு துணைத் தலைவர் சபிதா பாபு ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி மற்றும்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    • மரக்கன்றுகளை நன்றாக வளர்க்க வேண்டும்.
    • பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சப்பைகளுக்கு மாற வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோவில் நந்தவனத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடைபெற்று வரும் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவள்ளி நேரில் பார்வையிட்டு பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ மாணவியர்களுக்கு மஞ்சப்பை மரக்கன்றுகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது: முதல்-அமைச்சர் உங்களை போன்ற பள்ளிக் குழந்தைகளுக்கு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் பள்ளி குழந்தையாகிய நீங்கள் இன்று வாங்கிச் செல்லும் மரக்கன்றை நன்றாக வளர்க்க வேண்டும். பூமித்தாயை பாதுகாக்க பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சப்பைகளுக்கு மாற வேண்டும். உலக வெப்பமயமாதலில் நம்மை பாதுகாத்து கொள்ள மரங்கள் நடுவது ஒன்றே சிறந்த வழியாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ்ஒளி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கண்மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மரக்கன்று வளர்ப்பு திட்டப்பணிகள் மந்தம் தண்ணீர் ஊற்றாததால் கருகி வருகின்றன
    • 100 நாள் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக எல்லைக்கு உள்பட்ட அபிராமம் பகுதியில் 100 நாள் வேலைத்திட்டம் மூலம் மரக்கன்று வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நட்டபோதி லும், சில நூறு மரக்கன்றுகள் கூட இப்போது இல்லை. இதனால் மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கபடுகின்றனவா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

    கிராமப்புறங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், ஒடைகள், வரத்துக்கால்வாய்கள், நீர்பிடிப்பு பகுதிகளில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் வாங்கப்பட்டு நடப்படுகின்றன. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம் (100 நாள் வேலைத்திட்டம்) பணியாளர்கள் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் பசுமை பகுதியாக மாற வாய்ப்புள்ளதால் அரசு நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஊரகப்பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக மரக்கன்றுகள் வளர்க்கப் பட்டு வருகின்றன. இவற்றில் வேம்பு, அரசு மா, பலா, புளி, தேக்கு புங்கன் போன்ற 15-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன.

    மொத்தமாக மரக்கன்று கள் நடப்பட்டுள்ள இடங்களில் தண்ணீர் ஊற்றுவதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர்தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலான இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டாலும் சில 100 குழிகளில் மட்டுமே மரக்கன்றுகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை வைத்து பெயரளவில் தண்ணீர் ஊற்றும் பணி நடந்து வருகிறது.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கூறும்போது, மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள பல குழிகளில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளமே இல்லை. ஆனாலும் அதிகாரிகள் உத்தரவின்படி 100 நாள் திட்டப் பணியாளர்கள் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. மேலும் பல கிராமங்களில் 100 நாள் திட்டம் மூலம் மரக்கன்றுகள் வளர்க்கப்படுவதாக கணக்கு எழுதப்படுகிறது. ஆனால் எங்குமே மரக்கன்றுகள் இல்லை.

    பணியாளர்கள் எண் ணிக்கை கணக்கெடுப்பு நடத்தப்பட்டவுடன் ஒருசில குழிகளில் மட்டுமே தண்ணீர் ஊற்றப்படுகிறது. பிறகு பணியாளர்கள் ஓய்வு எடுக்க சென்று விடுகின்றனர். தண்ணீர் ஊற்றியும் மரக்கன்றுகள் வளராததற்கு என்ன காரணம்? என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை.

    எனவே அரசு மரக்கன்று கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் தண்ணீர் ஊற்றுவது பெயரளவில் மட்டுமே நடக்கிறது. இதனால் முறையாக மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றவும் 100 நாள் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதுபற்றி 100 நாள் வேலைத்திட்டத்தை கண்காணிக்கும் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறும்போது, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கொண்டு வரப் பட்ட திட்டம் தான் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்.

    கடந்த 2016-ம் ஆண்டு முதல் அரசு நிலங்கள், சாலையோரங்கள், கண்மாய், குளம், ஊரணி கரைகளில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில வருடங்களில் மட்டும் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    ஆண்டுதோறும் அக்டோ பர் மாதம் முதல் டிசம்பர் வரை மட்டும் தான் பரவ லாக மழை இருக்கிறது. மற்ற 9 மாதங்களில் 55 சதவீத தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. பெரும்பாலன கிராமங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலை யில், மரக்கன்று களுக்கு தண்ணீர் ஊற்றுவது சிரம மாக உள்ளது.

    இருந்தபோதிலும் ஊராட்சிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் இருப்பு உள்ள இடங்களில் அடி பம்பு பொருத்தி தண்ணீர் எடுத்து மரக்கன்றுகளுக்கு தண்ணிர் ஊற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    ×