என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னல்"

    • இடியுடன் கூடிய மழை பெய்தது. திடீரென அங்கு மின்னல் பாய்ந்தது.
    • வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி மருங்கால்புரி அடுத்த வகுத்தால்வார்பட்டியை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 30).

    சம்பவத்தன்று இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்து லெட்சுமி(40), பெரியம்மாள் (55) ஆகியோர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. திடீரென அங்கு மின்னல் பாய்ந்தது. மணிமேகலை வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது. இதில் மணிமேகலை படுகாயம் அடைந்தார். மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து காயமடைந்த 3 பேரையும் மணபாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.
    • சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந் தது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    புதுச்சேரியில் நேற்று காலை வானம் இருண்டு காணப்பட்டது. ஆனால் பிற்பகல் வரை மழை பெய்யவில்லை. மாலை 3.30 மணிக்கு திடீரென இடியுடன் கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது.

    கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. மழை நின்றதும் வெள்ள நீர் வடிந்தது. தொடர்ந்து இரவிலும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது. பெருத்த இடி ஒசையால் வீடுகளில் தூங்கியவர்கள் அச்சமடைந்தனர். குழந்தைகள் இடி சத்தத்தை கேட்டு அரண்டு போனார்கள்.

    வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்களின் இணைப்புகளை துண்டித்தனர். தொடர்ந்து காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்படுகிறது.

    தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.

    குறிப்பாக புதுச்சேரியின் நகர பகுதியான புஸ்சி வீதி, பாரதி வீதி, சின்னசுப்புராய பிள்ளை வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.

    கனமழை காரணமாக உழவர்கரை தொகுதி மூலக்குளம் பகுதியில் வசித்து வரும் வசந்தா என்ப வர் வீட்டின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது.

    சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந் தது. வீட்டில் வசிப்போர் யாரும் அருகில் இல்லாததால் காயம் ஏற்படவில்லை.

    இதனிடையே கடலில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்புமாறு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து மீன்வளதுறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 29-ந் தேதி தாழ்வு மண்டலமாக வலுப் பெற கூடும் என வானிலை மையம் தெரித்துள்ளது. எனவே ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

    மேலும், ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு தொலை தொடர்பு உபகரணங்கள் மூலம் புதுவை மீன்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    • மேற்கு வங்க மாநிலத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மால்டா மாவட்டத்தில் இன்று (மே 16) மாலை மின்னல் தாக்கியதில் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துக்ள்ளனர்.
    • இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை உயிரிழந்த 11 பேரில் 3 பேர் குழந்தைகள் ஆவர்.

    மேற்கு வங்க மாநிலத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மால்டா மாவட்டத்தில் இன்று (மே 16) மாலை மின்னல் தாக்கியதில் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துக்ள்ளனர்.

    இன்று மதியம் முதல் மால்டா பகுதிகளில் கடுமையான இடி மின்னலுடன் மழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கி மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை உயிரிழந்த 11 பேரில் 3 பேர் குழந்தைகள் ஆவர்.

     

    நகர் பகுதியைக் காட்டிலும் அம்மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சோபாநகர் கிராமப்பகுதியில் நெல் அறுவடைப் பணிகளை முடித்துவிட்டு மரத்தின் அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

     

    இதுபோன்று பல்வேறு பகுதிகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் கணக்கிட்டு வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மால்டா அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

    • பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி பெய்து வருகிறது.
    • அவ்வப்போது லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.

    சேலம்:

    தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சேலத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று மதியம் வெயில் அடித்தது.

    மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதனை தொடர்ந்து 6 மணிக்கு இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. பின்னர் சிறிது நேரம் மழை விட்டது.

    அதன் பிறகு 2-வது முறையாக பெய்த கனமழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இந்த கனமழையால் கலெக்டர் அலுவலகம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, அன்னதானப்பட்டி அஸ்தம்பட்டி, 4 ரோடு, மேயர் நகர் உள்ளிட்ட நகரில் பல இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது.

    ஓமலூர் மெயின் ரோடு உள்ளிட்ட பல சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. சேலம் புதிய பஸ்நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    தாழ்வான பலபகுதிகளில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மழை நின்ற பிறகு வீட்டிற்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றினர்.

    சேலத்தில் அதிகபட்சமாக 86.4 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, கரியகோவில், ஓமலூர், டேனீஷ்பேட்டை ஆகிய இடங்களில் மழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஏற்காடு - 37,

    கரிய கோவில் - 58,

    ஓமலூர் - 15,

    டேனீஷ் பேட்டை - 3.2 என மாவட்டம் முழுவதும் 207.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

    • நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.
    • இரவு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசி மழை பெய்து வந்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் லேசான மழை தொடங்கிய நிலையில் இரவு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழை இன்று அதிகாலை வரை விடிய, விடிய பெய்தது.

    மேலும், மழை பெய்ய தொடங்கிய போது பலத்த காற்று வீசியதால் கடலூர் அடுத்த வழிசோதனை பாளையம், ராமாபுரம், புதுக்கு குப்பம், சின்னதானாங்குப்பம் புலியூர், சமிட்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் சுமார் 1500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன.

    இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், திடீர் காற்றுடன் கூடிய மழையால் வாழைமரங்கள் முறிந்து சாய்ந்தன. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்து வந்த வாழைத்தார்கள் வீணாகிப்போனது.

    இதன் காரணமாக ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் முதல் 1.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உரிய முறையில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.

    மேலும், கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மழை நீர் தேங்கி தற்போது குலம் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள் திரும்பி சென்றனர். மேலும், மாணவர்களும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளவில்லை. இது மட்டுமின்றி கடலூர் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. தொடர் மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு:-

    கடலூர்-79.2

    வானமாதேவி-72.8

    கலெக்டர் அலுவலகம்-62.6

    வேப்பூர்-53.0

    பண்ருட்டி-49.0

    எஸ்.ஆர்.சி. குடிதாங்கி-46.0

    குப்பநத்தம்-32.8

    விருத்தாசலம்-32.0

    கீழச்செருவாய்-30.0

    காட்டுமயிலூர்-20.0

    வடக்குத்து-16.0

    குறிஞ்சிப்பாடி-15.0

    தொழுதூர்-13.0

    ஸ்ரீமுஷ்ணம்-10.0

    மீ-மாத்தூர்-10.0

    பெல்லாந்துறை-8.4

    சேத்தியாதோப்பு-7.4

    லக்கூர்-6.4

    கொத்தவாச்சேரி-6.0

    பரங்கிப்பேட்டை-5.9

    லால்பேட்டை-4.0

    காட்டுமன்னார்கோயில்-2.4

    சிதம்பரம்-2.0

    அண்ணாமலைநகர்-1.6

    புவனகிரி-1.0

    என கடலூர் மாவட்டத்தில் 586.50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

    • சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 11-ந் தேதி சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    எனவே, மேற்கூறிய தினங்களில் மேற்கண்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

    நேற்று மதியம் 1.15 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி நெல்லை மாவட்டம் நாலுமுக்கு, கோவை மாவட்டம் சோலையாறு ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 11 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. கோவை வால்பாறை, நெல்லை ஊத்து ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    தஞ்சை கீழ் அணைக்கட்டு, மயிலாடுதுறை மணல்மேடு, நெல்லை காக்காச்சி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    மேலும் கன்னியாகுமரி, திருச்சி, கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, தென்காசி, திருப்பூர், கடலூர், மதுரை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் 1 முதல் 5 செ.மீ மழை அளவு பெய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இதை வாரத்தின் சிறந்த வானியல் புகைப்படமாக குறிப்பிட்டு சிலாகித்துள்ளது.
    • சாதாரண மின்னலை விட 50 மடங்கு அதிக சக்தியுடையதாக உள்ளது

    அமேரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளி மையம் பிரபஞ்சத்தைப் பற்றிய புதுப்புது உண்மைகளை தனது அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் செய்யும் ஆராய்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தியவாறு இருக்கிறது.

    அந்த வகையில் சீனா, பூட்டான் நாடுகளை ஒட்டிய இமயமலைப் பகுதியின்மீது சிவப்பு மற்றும் ரோஸ் வண்ணக்களஞ்சியங்களாக இரவு நேரத்தில் விண்ணில் இருந்து மின்னலாக பாய்ந்த ராட்சத ஒளித்திரள்களை [GIGANTIC JETS] படம்பிடித்து நாசா வெளியிட்டுள்ளது. அரிதினும் அரிதாக ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த நிகழவைப் படப்பிடித்துள்ள நாசா, இதை வாரத்தின் சிறந்த வானியல் புகைப்படமாக குறிப்பிட்டு சிலாகித்துள்ளது.

    இதற்குமுன் இல்லாதவகையில் 21 ஆம் நூற்றாண்டில் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வானது, இடியுடன் மின்னல் அடிக்கும்போது பூமியின் அயோனோஸ்பியர் வளிமண்டல அடுக்குகளில் ஏற்படும் சூரிய கதிர்வீச்சுகளாலும், காஸ்மிக் கதிர்வீசுகளாலும் இந்த வண்ணக்குழப்புகள் ஏற்பட்டு வானில் ஒளிதிரளான மின்னல்களாக அவை இறங்கும் காட்சி உருவாகியுள்ளது என நாசா விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    தொடர்ச்சியாக விழுந்த இந்த 4 ஒளித்திரள் ஜெட் மின்னல்களும் ஒன்றுக்கொன்று சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து விழுந்துள்ளன. வளிமண்டலத்தின் மேற் பரப்பில் உள்ளதால் மின்னலின் மேற்புறத்தில்  சிவப்பு நிறமாகவும், பூமியை நோக்கி வரும் கீழ் பகுதி ரோஸ் நிறத்திலும் உள்ளது. இது சாதாரணாமாக ஏற்படும் மின்னலாகவன்றி மிகப்பெரிய அளவுடையதாகவும் சாதாரண மின்னலை விட 50 மடங்கு அதிக சக்தியுடையதாகவும் உள்ளது.   

    • முதல்வர் நிதிஷ் குமார் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    பீகாரில் கடந்த சில வாரங்களாக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தொடர்பான சம்பவங்களில் மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    அதிகபட்சமாக மதுபானியில் 6 பேர், அவுரங்காபாத்தில் 4 பேர், பாட்னாவில் 2 பேர், ரோஹ்தாஸ், போஜ்பூர், கைமூர், சரண், ஜெகனாபாத், கோபால்கஞ்ச், சுபால், லக்கிசராய் மற்றும் மாதேபுரா மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர் என்று சிஎம்ஓ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    நீரில் மூழ்கிய சம்பவங்களில் ஒன்பது பேர், ஃபதேபூர் மற்றும் பிரதாப்கரில் தலா மூன்று பேர், எட்டாவில் இருவர் மற்றும் பண்டாவில் ஒருவர். அமேதி மற்றும் சோன்பத்ராவில் பாம்பு கடித்ததால் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில் இருந்து மழை மற்றும் மின்னல் தொடர்பான சம்பவங்களில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் நிதிஷ் குமார் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் மற்றும் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    மோசமான வானிலையின் போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும், தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், அவ்வப்போது பேரிடர் மேலாண்மைத் துறையின் அறிவுரைகளைப் பின்பற்றவும் அவர் மக்களை வலியுறுத்தினார்.

    பாட்னா உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அத்துடன், கிஷன்கஞ்ச், அராரியா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    வியாழனன்று, தங்களது வகுப்பறைக்கு அருகில் இருந்த பனை மரத்தில் மின்னல் தாக்கியதை அடுத்து பர்கா காவ்ன் கிராமத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    • விமான பயணியான பெர்ன்ஹார்டு வார் என்பவர் வீடியோ எடுத்துள்ளார்.
    • வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    பிரேசில் நாட்டின் தெற்கே சாவோ பவுலோ நகரில் கடுமையான இடி- மின்னலுடன் மழை பெய்துள்ளது. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசியது. ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களிலேயே பெய்தது.

    அப்போது அங்குள்ள குவாருலோஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் மீது மின்னல் தாக்கி உள்ளது. இதனை விமான பயணியான பெர்ன்ஹார்டு வார் என்பவர் வீடியோ எடுத்துள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து பெர்ன்ஹார்டு வார் கூறுகையில், பெரிய புயல் வீசியது. இதனால் விமானங்கள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நாங்களும் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது தான் விமானத்தின் வால் பகுதியில் கடுமையாக மின்னல் தாக்கியதை வீடியோ எடுத்தேன் என்றார்.

    மாட்டை அழைத்து சென்ற சிறுவன் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    மேலூர்

    அழகர் கோவில் கோட்டைவாசல் பகுதியை சேர்ந்த அம்மாசி.  வேன் டிரைவர். இவரது மனைவி சுனிதா. 

    இந்த தம்பதியினருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர்.   நேற்று இரவு 7 மணியளவில் மழை பெய்தது. இதனால் மாட்டை பிடித்து கட்டுவதற்காக வீட்டுக்கு வெளியே அம்மாசி, மனைவி சுனிதா, மகன்  அர்ஜூன் (6) ஆகியோர் சென்றனர்.

     அப்போது  பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியதில்,  3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அம்மாசியும், சுனிதாவும் காயமின்றி தப்பினர். சிறுவன் அர்ஜூன் பரிதாபமாக உயிரிழந்தான். 

    இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
    • கனமழையால் தஞ்சை சீத்தா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கியது.
    • தொடர்ந்து 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பருவ கால மாற்றத்தின் காரணமாக கடந்த 2 மாதங்களாக மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக மாறி மாறி பருவநிலை நிலவி வருகிறது. கடந்த மாதத்தில் பல நாட்கள் மழை பெய்தது.

    ஆனால் கடந்த மாத இறுதியில் இருந்து அக்னி நட்சத்திரம் போல் வெயில் சுட்டெரித்து வந்தது.

    கோடை காலத்தை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதி அடைந்தனர்.

    கடந்த ஒரு வாரமாகவே 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தியது. பகலில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்து வந்தது.

    இரவு 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பொழிந்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    நள்ளிரவு 12 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் இடி முழங்கியது.

    அவ்வப்போது மின்னல் அடித்துக் கொண்டிருந்தது.

    அடுத்த சில நிமிடங்களில் மழை பெய்ய தொடங்கியது.

    ஆரம்பத்தில் மிதமான அளவில் பெய்து வந்த மழை நேரம் செல்ல செல்ல அதிகரிக்க தொடங்கியது.

    கனமழையாக மாறி வெளுத்து வாங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர்ந்து 2 மணி நேரம் மழை நீடித்தது.

    அதன் பின்னர் இன்று அதிகாலை 4 மணியில் இருந்து மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

    தொடர்ந்து இரண்டு மணி நேரம் அதாவது காலை 6 மணி வரை மிதமான அளவில் மழை பெய்தது.

    இதன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    தொடர்ந்து பெய்த கனமழையால் தஞ்சை சீத்தா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கியது.

    மேலும் வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்து கொண்டது.

    இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர அவதி அடைந்தனர்.

    தஞ்சை சாந்த பிள்ளைக்கேட் ரெயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கியது.

    இதனால் அந்த வழியை கடந்து பூக்கார தெரு, விளாருக்கு செல்லும் பொதுமக்கள் மாற்று பாதையில் சென்றனர்.

    சிலர் தண்ணீரை கடந்தும் சென்றனர்.

    தஞ்சை மாவட்டம் பூதலூரில் நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை கனமழை கொட்டி தீர்த்தது.

    சாலை, தெருக்களில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பூதலூரில் தான் 167.60 மி.மீ. மழை அளவு பதிவானது.

    இதேபோல் வல்லம், செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், வெட்டிக்காடு, ஒரத்தநாடு, அய்யம்பேட்டை, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    இதற்கிடையே தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தொடர்ந்து 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக மீண்டும் தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு (மி.மீ.) :-

    பூதலூர்-167.69, கல்லணை- 155, தஞ்சாவூர் -122, நெய்வாசல் தென்பாதி -118.20, வல்லம் -117, திருக்காட்டுப்பள்ளி- 89.40, பட்டுக்கோட்டை -88, ஒரத்தநாடு- 41.60, மதுக்கூர்-36, வெட்டிக்காடு- 36.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக மேதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
    • பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.

    ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலியான பல்ராம் யாதவ் (56), மன்மதி தேவி (45) ஆகியோர் வயலில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, இடி தாக்கியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக மேதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்நிலையில், பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று துணை ஆணையர் ஆஞ்சநேயுலு டோடே தெரிவித்தார்.

    ×