என் மலர்
நீங்கள் தேடியது "சாராயம்"
- காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.
- 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் காக்கழனி கடுவையாற்று பாலம் அருகே கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் காரைக்கால் திரு.பட்டினம் போலகம், புதுகாலனியை சேர்ந்த முருகேசன் மகன் பிரவீன்குமார் (வயது22) என்பதும் காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்து, 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- மன்னம்பந்தலில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
- நீடூர் ெரயில்வே கேட் பகுதியில் சாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியின் பின்புறம் சாராய விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு சாராயம் விற்ற தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் மெயின்ரோட்டை சேர்ந்த முத்துக்குமார் (வயது 34) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல மயிலாடுதுறை கூறைநாடு அறுபத்துமூவர் பேட்டை பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (53), மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்த அம்மன் கோவில் அருகே சாராயம் விற்ற கூறைநாடு கிட்டப்பா பாலம் வேதம் பிள்ளை தெருவைச் சேர்ந்த அரவிந்தன் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
நீடூர் ெரயில்வே கேட் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த மணல்மேடு மீன் தொட்டித் தெருவை சேர்ந்த ராஜா (29), முத்து (37) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
- பிஞ்சியூர் பகுதியில் சாராயம் விற்ற செல்லத்துரை கைது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் போலீசாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது திருத்துறைப்பூண்டி அருகே அருகே சாராயம் விற்ற நந்திமாங்குடி பகுதியை சேர்ந்த செல்வராஜ்(வயது58), பிஞ்சியூர் பகுதியில் சாராயம் விற்ற செல்லத்துரை(48) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- கண்ணனின் தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர்.
- சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த கனகராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது அங்கு சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த ஆயிரப்பேரியை சேர்ந்த கனகராஜ் (வயது 31) மற்றும் பாட்டப்பத்து கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்(46) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 6 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய தோட்ட உரிமையாளரான கண்ணனை வலை வீசி தேடி வருகின்றனர்.
- சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- சட்டவிரோதமாக கடத்திய சாராயம், மது பாட்டில்கள் பறிமுதல்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்.
உத்தரவின் படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் 8 தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் நாகூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 4 இருசக்கர வாகனங்களில் சிக்கல் பகுதியை சேர்ந்தசிவா, சஞ்சய் மற்றும் வெளிப்பாளையத்தை சேர்ந்த கஜேந்திரன், சுரேந்திரன்க்ஷ, திலீப் குமார்.
ஆகிய 5 நபர்களும் சட்டவிரோதமாக 350 லிட்டர் பாண்டி சாராயம் கடத்தி வந்தனர் அனைத்து மது பாட்டில்களும் மற்றும் வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு நாகூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுவுள்ளது.
- திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் பறிமுதல்.
நாகப்பட்டினம்:
திருமருகல் அருகே சேஷமூலை பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வேகமாக 1 மோட்டார் சைக்கிள் வந்தது.
அந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.
இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குடவாசல் பருத்தியூர் ரோட்டு தெருவை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 23), ரஞ்சித் (21) என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் குடவாசல் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் உத்தூர் பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் 110 லிட்டர் சாராயம் கடத்திய சிக்கல் பனைமேடு காலனி தெருவை சேர்ந்த அஜித் (வயது 24) தனுஷ் (21) ஆகிய இருவரையும் கைது செய்து 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- பண்டிகை காலம் நெருங்குவதை ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வாகனத்தை சோதனை செய்து போது அதில் வெளிமாநில பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்ததனர்.
நன்னிலம்:
பண்டிகை காலம் நெருங்குவதை ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா பேரளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருக்கொட்டாரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காரைக்காலில் இருந்து வந்த காரை மறித்து சோதனை செய்ய முயன்றனர்.
அப்பபோது காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.
சந்தேக அடிப்படையில் வாகனத்தை சோதனை செய்து போது அதில் வெளிமாநில பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதை அடுத்து காரில் இருந்த ரூ 75 ஆயிரம் மதிப்புள்ள 2500 பாக்கெட் சாராயத்தையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடியவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
- மயிலாடுதுறையில் சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து 330 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மாப்படுகை ெரயில்வே கேட் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மயிலாடுதுறை அருகே மாப்படுகை சாந்துக்காப்புத் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 40) என்பது தெரியவந்தது.
இதேபோல திருவிழந்தூர் தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் அருகில் காவிரி கரையோரம் சாராய விற்ற அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் விமல்ராஜ் (20), பல்லவராயன்பேட்டை பகுதியில் சாராய விற்ற மயிலாடுதுறை திருவாரூர் சாலை கண்ணாரத் தெருவை சேர்ந்த சேட்டு மகன் பாலாஜி (26) ஆகிய 2 பேரையும் ைகது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் இருந்து தலா 110 லிட்டர் வீதம் 330லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- 36 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1824 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- தப்பியோடிய சாராய வியாபாரி ஆரோக்கியமேரியை தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.
இதனால் கிராம பகுதிகளில் படுஜோராக வெளிமாநில மது விற்பனை நடந்து வந்தது.இதனை கண்காணித்து மது குற்றங்களை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டத்தில் 9 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டம், கீழையூர் பகுதியில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் டாஸ்மார்க் மாவட்ட மேலாளர் வாசுதேவன், உதவி மேலாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள ஆனந்தம் நகரில் ஆரோக்கிய மேரி என்பவரது வீட்டில் புதுச்சேரி மாநில மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வீட்டுக்கு வந்த டாஸ்மார்க் அதிகாரிகளை கண்டதும், ஆரோக்கியமேரி தப்பி ஓடினார்.
தொடர்ந்து காலணி வீட்டில் 36 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதுவை மாநில 1824 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் சரக்கு வாகனம் மூலம் கொண்டுவரப்பட்ட மதுபாட்டில்களை நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்துள்ள நிலையில் தப்பியோடிய சாராய வியாபாரி ஆரோக்கியமேரியை தேடி வருகின்றனர்.
- பாண்டிச்சேரி சாராயம் விற்பனை செய்த பெண்ணை போலீசை கைது செய்தனர்.
- 110 லிட்டர் வெளிமாநில சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போலீசாருக்கு அரசவனங்காடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.
இதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு சோதனை செய்தனர்.
அப்போது அங்கு பாண்டிச்சேரி சாராயம் விற்பனை செய்த தோப்பு தெருவை சேர்ந்த கலைச்செல்வி (வயது 43) என்ற பெண்ணை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் வெளி மாநில சாராயத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.
- காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.
நாகப்பட்டினம்:
திட்டச்சேரி பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.
இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் ஒரத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த அன்பரசன் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த அஜய் (20) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கி ளையும் பறிமுதல் செய்தனர்.
- ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுஅப்துல் கபூர் தலைமையில் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் நேற்று திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதனை ஓட்டி வந்தவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அவர்களிடம் 110 லிட்டர் அளவில் சாராயம் மற்றும் 750 மி.லி அளவு கொண்ட 72 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
ரூ 1 லட்சம் மதிப்பிலான அந்த சாராயம் மற்றும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதனை கடத்தி வந்த காரைக்கால் திருமலை ராஜன்பட்டினம் போலகம் வடக்கு தெருவை சேர்ந்த கரன் (25) மற்றும் அதே தெருவை சேர்ந்த முருகேஷ் (21) இருவரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.