என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை"

    • தூய்மை இந்தியா திட்டத்தில் சுத்தம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
    • அடுத்த 6 மணி நேரத்தில் குறை நிவர்த்தி செய்யப்படும் வகையில் இத்திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் : 

    தூய்மை இந்தியா திட்டத்தில் சுத்தம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அதன்படி பிரத்யேக செல்போன் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் சார்ந்து, உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பணிகள் இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் பொதுக்கழிப்பிடங்களில் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், க்யூ ஆர் கோடு உதவியுடன் செல்போன் மூலம் புகார் செய்யும் நோக்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி தூய்மை இந்தியா திட்ட இணைய தள செயலியுடன் இணைக்கப்பட்ட க்யூ ஆர் கோடு பொதுக் கழிப்பிடங்களில் முகப்பில் வைக்கப்படும்.

    பொதுக்கழிப்பிடங்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பது, சுகாதாரம் மற்றும் தண்ணீர், விளக்கு வசதி இல்லாமல் இருப்பது போன்ற குறைகளை, தங்கள் செல்போனில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலம், தூய்மை இந்தியா திட்ட இணைய செயலியில் அது பதிவாகிவிடும். அந்த தகவல் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    அடுத்த 6 மணி நேரத்தில் குறை நிவர்த்தி செய்யப்படும் வகையில் இத்திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிகள் அளவில் இத்திட்டத்தை வேகப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு பொதுக் கழிப்பிடத்திலும் தூய்மை இந்தியா திட்டத்துடன் இணைந்த க்யூ ஆர் கோடு வைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

    • என் குப்பை எனது பொறுப்பு தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மக்கும் குப்பை ,மக்காத குப்பை அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பெருமாம்பாளையம் பகுதியில் "நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம்" திட்டத்தின் சார்பில் என் குப்பை எனது பொறுப்பு தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி பொதுமக்களிடம் மக்கும் குப்பை ,மக்காத குப்பை பிரித்து தர வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றதுணைத்தலைவர் குட்டிவரதராஜன் , சாமளாபுரம் பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி, முன்னாள் வார்டு கவுன்சிலர் பொன்னுச்சாமி, மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் , மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வழங்கிய பெருமாம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டது . 

      

    • ஜாம்புவானோடை தர்காவின் 721-ம் ஆண்டு பெரிய கந்திரி விழா நடைபெறுகிறது.
    • தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாக்கடை போன்ற அனைத்தும் துப்புர பணிகளும் நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்குள் பட்ட ஜாம் புவானோடை தர்கா 721 ம் ஆண்டு பெரிய கந்திரி விழா நடை பெறுவதை முன்னிட்டு தர்கா பகுதியில் துப்புரப் பணிகள் மருந்து அடித்தல் மற்றும் அனைத்துசாலை ஓரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாக்கடை போன்ற அனைத்து துப்புர பணிகளும் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன் தலைமையில் சாலை ஓரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாக்கடை போன்ற அனைத்து துப்புர பணிகளும் நடைபெற்றது.

    கந்திரி விழாவை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி சந்தனக்கூடு விழா மற்றும் 8-ந் தேதி அன்று புனித கொடி இறக்கும் விழா ஜாம் புவா னோடை தர்காவில் நடைபெறுவதை ஒட்டி அனைவருக்கும் தப்ரூக் (அன்னதானம்) வழங்கப்படும் என பாரம்பரிய தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் கூறினார்.

    • பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
    • சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் உட்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 11 மற்றும் 12-வதுவார்டு ஆகிய பகுதியில் பொது சுகாதாரப் பணிகளை மேற்க்கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.

    முகமிற்கு பேரூராட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் உட்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 11 மற்றும் 12-வதுவார்டு பகுதிகளான பாப்பாத்தி அம்மன் கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, காவேரி சாலை கஞ்சிமடம் தெரு, அக்ரகாரம் தெரு ஆகிய இடங்களில் பொது சுகாதாரப் பணிகளை மேற்க்கொண்டனர்.

    மேலும் பராமரிப்பு செய்தல், கொசு ஒழிப்பு மருந்து அடித்தல் மற்றும் பொது மக்களின் தேவைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

    • சமூக ஆர்வலரான ரா.பிரனேஷ் இன்பன்ட்ராஜ் இவர் இளம் விஞ்ஞானி, முனைவர் பட்டம், பல விருதுகளைப் பெற்றவர்.
    • உலகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனை பூமி வெப்பமயமாதல், நாம் நமது பஞ்ச பூதங்களை மாசில்லாமல் பாதுகாப்பது அவசியம், நோயில்லாமல் வாழ தூய்மையான காற்று அவசியம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார முதல் தெருவை சேர்ந்தவர் ரா.பிரனேஷ் இன்பன்ட்ராஜ் (வயது 23). சமூக ஆர்வலரான இவர் இளம் விஞ்ஞானி, முனைவர் பட்டம், பல விருதுகளைப் பெற்றவர். லயன் தூதர்.

    இவர் தஞ்சையில் பல இடங்களில் தனது சொந்த செலவில் மரக்கன்றுகள் வாங்கி நட்டு வருகிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனை பூமி வெப்பமயமாதல், நாம் நமது பஞ்ச பூதங்களை மாசில்லாமல் பாதுகாப்பது அவசியம். நோயில்லாமல் வாழ தூய்மையான காற்று அவசியம்.

    இன்று காற்று மாசுபடுகிறது. மரங்களை அழிக்காமல் இருந்தாலே நாம் பெரும்பாலான பிரச்சனைகளை தவிர்த்து விடலாம். நடும் மரங்களை நாம் அனைவரும் ஒன்றாக பராமரித்தல் அவசியம்.

    உலகில் மரங்களை நடுபவர்கள் மிகக் குறைவு.

    ஆனால் மரங்களைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். மரம் மனிதனின் பயன்பாட்டிற்கு தன்னை அர்ப்பணிக்கிறது. மரங்களை நடுவது நிலையான தர்மத்திற்கு நிகரானது.

    மரம் வளர்க்க முயல்பவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.

    இதன் மூலம் இயற்கை வளங்களை நிச்சயம் பாதுகாக்க முடியும்.

    பழங்காலத்தில் நமது முன்னோர்கள் 100 ஆண்டை கடந்தும் வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயற்கையை பேணி பாதுகாத்தது தான். நாம் உயிர் வாழ ஆக்சிஜன் முக்கியமானது.

    அந்த ஆக்சிஜனை மரங்கள் கொடுக்கிறது.

    தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு மரத்தை வெட்ட நேரிட்டால் அதற்கு பதில் 100 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். மற்றப்படி மரங்களை வெட்ட நினைக்க கூடாது.

    நான் ஆண்டுக்கு 500 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க முடிவு செய்து அதறகான பணிகளை தொடங்கி விட்டேன். அனைவரும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆறு, குளங்களில் கழிவுநீரை விடுவதால் அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து விட்டது.
    • மீண்டும் உற்பத்தியாகிவிடும் .மூன்று மாதங்களுக்கு தொடந்து தூய்மை செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால், குளங்களில் வெங்காய தாமரைகளைச்செடி ஆக்கிரமித்து நீர்நிலைகளையும், மீன்வளத்தையும், சுற்றுசூழலையும் பெருமளவில் பாதிக்கிறது. முன்பு கழிவு நீரில் மட்டுமே வளர்ந்த இந்த செடிகள்.

    தற்போது ஆறு, குளங்களில் கழிவுநீரை விடுவதால் அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து விட்டது.

    இதனால் பாசன மதகுகளில் அடைத்துக்கொண்டு பாசனத்திற்கு பெரிய இடையூராக உள்ளது.

    நீர் நிலைகளை இடைவெளி இல்லாமல் மூடிவிடுவதால் ஆக்ஸிஜன் குறைந்து நன்னீர் மீன் இனங்கள் உட்பட அனைத்து நீர்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகிறது.

    இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.

    உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, கோடைகாலங்களில் மக்களும், கால்நடைகளும் பயன்படுத்த முடியாமல் நீரை ஆவியாக்கிவிடுகிறது.

    எனவே மாவட்ட அளவில் வெங்காய தாமரை அகற்றும் பணியை மக்கள் இயக்கமாக மேற்கொள்ள வேண்டும்.

    ஒரு செடி கிடந்தாலும் மீண்டும் உற்பத்தியாகிவிடும் .மூன்று மாதங்களுக்கு தொடந்து தூய்மை செய்ய வேண்டும்.

    இச்செடிகளை ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் செயல்படும் நுண்ணுரம் தயாரிப்பு மையங்கள் மூலமும், அல்லது நிழலான பகுதிகளில் மூடாக்கு அமைத்து பஞ்சகவ்யா மூலம் எளிதாக மக்க வைத்து விவசாயிகளுக்கு வழங்க முடியும். எனவே தனி கவனம் எடுத்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் மகாபாரதி அரியாபிள்ளை குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • முதல் கட்டமாக குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தொடங்கியது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் அரியாப்பிள்ளை குளம் உள்ளது. பல ஏக்கரில் பறந்து விரிந்துள்ள இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப் படாமல் அப்பகுதியில் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தற்போது சீர்காழி நகராட்சி மூலம் ரூ.1 கோடியே 11 லட்சம் செலவில் குளத்தை அழகுப்படுத்தும் விதமாக கரைகளை பலப்படுத்தி, நீர் நிரப்பி, சுற்றி நடைபாதை அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கடந்த வாரம் பணிகளை தொடங்க நகராட்சி நிர்வாகம் முற்பட்டபோது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி அரியா பிள்ளை குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தொடங்கிட நகராட்சி ஆணையர் வாசுதேவனுக்கு அறிவுறுத்தினார்.

    இதனை அடுத்து சீர்காழி டிஎஸ்பி லாமெக் தலைமையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் குளத்தை சுற்றி குவிக்கப்பட்டு முதல் கட்டமாக குளத்தை தூய்மைப்படுத்த ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தொடங்கியது. நகராட்சி ஆணையர் வாசுதேவன், பொறியாளர் சித்ரா, நகர்மன்ற உறுப்பினர் நாகரத்தினம்செந்தில் ஆகியோர் மேற்பார்வையில் ஜேசிபி எந்திரம் கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    போலீஸ் பாதுகாப்புடன் குளம் தூர் வாரும் முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தூய்மை பணி முகாம் 6-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
    • இதில் 90-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 6-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.

    முகாமில் பேரூராட்சி மன்றத் தலைவர் கருணாநிதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கிளர்க்குகள் குணசேகரன், பன்னீர்செல்வம், வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 90-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.

    இதில், பொது சுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வாறுதல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெரு மின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது.

    • மேட்டூர் பஸ் நிலையத்தில் இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அல்லது பழைய ஒப்பந்ததாரருக்கு பணி நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியில் 99 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்ற பணியாளர்களு டன் சேர்ந்து தூய்மைப் பணியினை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த ஒப்பந்த பணியா ளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு இன்று பணி வழங்கப்படவில்லை என தெரிய வருகிறது.

    இதனை கண்டித்து மேட்டூர் பஸ் நிலையத்தில் இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இதற்கு மாற்றாக புதிய ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

    அல்லது பழைய ஒப்பந்ததாரருக்கு பணி நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும். ஆனால் இது எதுவுமே நடந்ததாக தெரியவில்லை என்றனர்.

    இதற்கிடையே, ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் பணியினையும் நிரந்தர பணியாளர்களே மேற்கொண்டு வருவதால், மேட்டூரில் துப்புரவு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    • தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டது.
    • பேரூராட்சி தலைவர் தலைமை தாங்கினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் குளியல் சோப், சலவை சோப், பற்பசை, பல் துலக்கும் பிரஷ், தலைக்கு எண்ணெய், நாப்கின் அடங்கிய 'ஹெல்த் கிட்' எனப்படும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் சுந்தரம், செயலாளர் ரமேஷ், யூத் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், தொண்டி பகுதி மேலாண்மைக்குழு உறுப்பினர் கமாலுதீன், கவுன்சிலர் அபுதாகிர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதாரப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

    • கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள்.
    • கோவிலை சுற்றி 4 வீதிகிலும் மெகா தூய்மை பணி முகாம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சட்டைநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற மே மாதம் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இதற்காக கோவில் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின் நகராட்சி சார்பில் கும்பாபிஷேகத்தின் போது 5 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வரக்கூடும் என்பதால் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி, சுகாதாரம் ஆகியவை பக்தர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக முதற்கட்டமாக சட்டைநாதர் ஆலயத்தில் நான்கு வீதிகளிலும் மெகா தூய்மை பணி முகாம் துவங்கியது.

    இதில் சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை விரைவு படுத்தினர்.

    மேலும் நகராட்சி சார்பில் கும்பாபிஷேகத்தின் போது நான்கு விதிகளிலும் நகராட்சி தூய்மையான குடிநீர் பக்தர்களுக்கு கிடைக்கவும், நான்கு வீதிகளிலும் தற்காலிக கழிப்பறை அமைக்கவும், நகர் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக நகராட்சி ஆணையர் வாசுதேவன் தெரிவித்தார்.

    • தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
    • கழிவை அகற்றி தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை கோவில் நகரமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சாமி தரிசனம் செய்யவும், சுற்றுலா இடங்களை பார்வையிடமும் வருகின்றனர். ஆனால் மதுரை நகரை தூய்மையாக பராமரிப்பதில் தொடர்ந்து மெத்தனம் காட்டப்பட்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் குப்பை மேடுகளும், கழிவுநீர் தேங்கியிருப்பதையும் காணமுடியும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குறிப்பாக பஸ் நிலையங்களை தூய்மைப்ப டுத்தும் பணிகள் தினமும் காலையில் தாமதமாகவே தொடங்குகிறது. மக்கள் நடமாட்டம் அதிகரித்த பின் சரியாக பணிகளை மேற்கொள்ளாமல் சென்று விடுகின்றனர். இதனால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கியும் கழிவுகள் தேங்கியும் கிடக்கின்றன.

    நகரின் முக்கிய பகுதிகளை தூய்மை செய்யாமலேயே விட்டு விடுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மேம்பாலங்களின் அடிப்பகுதிகளில் சரியான தூய்மைப் பணிகள் நடப்பதில்லை. இதனால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். இதே போல் பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள மேம்பாலம் பகுதிகளிலும் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது.

    மேலும் இந்தப் பகுதிகளை சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பகுதியை சுத்தமாக பராமரித்து மரக்கன்றுகளை நட்டால் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இங்கு மர்ம நபர்களின் நடமாட்டத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க நகரில் ஆங்காங்கே கூடு தலாக சுகாதார வளாகங்கள் கட்டப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதுமட்டுமின்றி வரலாற்று சிறப்பு வாய்ந்த திருமலை நாயக்கர் மகாலை சுற்றி குப்பைகள், கழிவுகள் கொட்டும் இடமாக மாறி உள்ளது. மகாலை ஓட்டியுள்ள பந்தடி தெரு வில் அசுத்தம் நிலவுகிறது. தெப்பக்குளத்தில் அண்மையில் பெய்த கோடை மழை மற்றும் வைகையில் திறந்தவிடப்பட்ட நீர் மூலம் மாரியம்மன் தெப்பக்குளம் நிரப்பப்பட்டது. ஆனால் அங்கு நிரம்பிய தண்ணீரில் கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தெப்பக்குளத்தில் தேங்கியிருப்பதால் தண்ணீர் மாசுபட்டுள்ளதோடு, துர்நாற்றம் காரணமாக தெப்பக்குளம் பகுதிக்கு மக்கள் செல்வதை தற்போது தவிர்த்து வருகின்றனர். எனவே தெப்பக்குளத்தில் உள்ள கழிவை அகற்றி தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×