என் மலர்
நீங்கள் தேடியது "ஒத்திகை"
- ஜெயங்கொண்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
- தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீ தடுப்பு போலி ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காண்பிக்கப்பட்டது. மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், தீத்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. தற்செயலாக வீடுகளில் தீவிபத்து ஏற்படும் அப்போது எண்ணெயினால் ஏற்படும் தீயை எவ்வாறு அனைப்பது. சமையல் எரிவாயுவினால் ஏற்படும் எரிவாயு கசிவு அதனால் ஏற்படும் தீ இவைகளை எவ்வாறு கையாள்வது தீயை கட்டுப்படுத்தி அணைப்பது, தீ ஏற்பட்ட வீடுகளில் இருந்து மக்களை எவ்வாறு வீட்டிலிருந்து வெளியே கொண்டு வருவது போன்றவைகளைப் பற்றி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செயல்முறைகள் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி காண்பித்தனர். இந்த போலி ஒத்திகை நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் வீரர்கள் செய்து காண்பித்தனர்.
- பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் பயிற்சி நடைபெற்றது.
- வீட்டிற்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல், டீசல், வெடி பொருட்கள் போன்றவற்றை சேமித்து வைக்காதீர்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாசில்தார் அலுவலக வளாகத்தில் தாசில்தார் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் துறை சார்பில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் மாவட்ட அலுவலர் குமார் உத்தரவின் பேரில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
ஒத்திகையின் போது திட்டக்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகம் கூறுகையில் பெண்கள் சமையல் செய்யும்போது பருத்தி ஆடை அணிவது நல்லது, குழந்தைகளை அடுப்பின் அருகில் தீப்பெட்டியுடன் விளையாட அனுமதிக்காதீர்கள், வீட்டிற்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல், டீசல், வெடி பொருட்கள் போன்றவற்றை சேமித்து வைக்காதீர்கள். ஆடையில் தீப்பற்றிக் கொண்டால் எங்கேயும் போகாமல் கீழே படுத்து உருளுங்கள். பின் தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஒத்திகை யில் திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட கலந்து கொண்டனர்..
- முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு வீரர்கள் தீபாதுகாப்பு ஒத்திகை மற்றும் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்
- பெரம்பலூர் மாவட்டத்தில் பேரிடர்கால ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
- 100 இடங்களில் தீ தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி வெள்ளத் தடுப்பு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு
பெரம்பலூர்,
பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில் தீ தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி வெள்ளத் தடுப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், தொழிற்சாலைகள் , அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் என 100 இடங்களில் தீ தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி வெள்ளத் தடுப்பு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி மாவட்ட அலுவலர் அம்பிகா உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில் பெரம்பலூர் உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் நிலைய அலுவலர் (போக்குவரத்து) முருகன் மற்றும் முன்னணி தீயணை ப்பாளர் இன்பஅரசன் ஆகியோர் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு தீத்தடுப்பு செயல்முறை விளக்கமும், தீத்தடுப்பு சாதனங்களை கையாளும் விதம் குறித்தும், குடியிருப்பு மற்றும் பணிபுரியும் இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாளுவது, பாதுகாப்பாக வெளியேறுவது எவ்வாறு என்பது குறித்து செயல் விளக்கம், ஒத்திகை மூலம் விழி ப்புணர்வு ஏற்படு த்தினர். இதனை அரசு அலுவ லர்கள், பணியாளர்கள், மாணவ , மாணவிகள், வாசகர்கள் மற்றும் பொது மக்கள் பார்வையிட்டு தெரிந்து கொண்டனர்.
- பள்ளியில் தீ விபத்து ஒத்திகை நடந்தது.
- ஒத்திகையும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செல்வநாயகபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீவிபத்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிலைய அலுவலர் கா.வெங்கடேஷ் தலைமையில், மார்ட்டின் ஸ்டிபன் ராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நிலைய காவலர்கள் தமிழ்வாணன், கஜேந்திரகுமார், பாலமுருகன், பாரதிதாசன் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு தீ தடுப்பு குறித்து ஒத்திகையும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
- சாலையில் சென்ற ஒரு பஸ்சில் 21 பேர் பயணித்தனர்.
- சிறிய அளவில் காயம் அடைந்த 8 பேருக்கு சாதாரண பிரிவில் சிகிச்சை தரப்பட்டது.
கோவை,
கோவை ஆர்.டி.ஓ அலுவலக பிரதான சாலையில் ஒரு பஸ் வேகமாக வந்தது. அதில் 21 பேர் பயணித்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்தது. எனவே அந்த பஸ் சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் பயணிகள் காயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. அதில் இருந்த ஊழியர்கள் மின்னல் வேகத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதன்ஒருபகுதியாக படுகாயத்துடன் இருந்த 12 பேரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 4 பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிறிய அளவில் காயம் அடைந்த 8 பேருக்கு சாதாரண பிரிவில் சிகிச்சை தரப்பட்டது.
கோவை ஆர்.டி.ஓ பிரதான சாலையில் விபத்து பற்றி தெரிய வந்ததும் அங்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அப்போது தான் அவர்களுக்கு சாலை விபத்து ஒத்திகை பயிற்சி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் நிம்மதி பெருமூச்சுடன் கலைந்து சென்றனர்.
ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய விபத்து ஒத்திகை சோதனையில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் உள்ளிட்ட பலர் நேரடியாக பங்கேற்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து கோவை ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரி நிர்வாகிகள் கூறுகையில், பொதுமக்கள் மத்தியில் சாலைவிபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று முடிவு செய்தோம். இதற்காக 21 பேர் பயணிகள் வேடத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதன்பிறகு அவர்கள் ஒரு பஸ்சில் அமர வைக்கப்பட்டு மின்கம்பத்தில் மோதுவது போல ஒத்திகை சோதனை நடத்தப்பட்டது.
கோவையில் விபத்து ஏற்படும்போது பொது மக்கள் எப்படி செயல்பட வேண்டும், படுகாயம் அடைந்த வருக்கான முதலுதவி சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடைமுறைகள் ஆகியவை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் போலீசார் அறியும்வகையில் விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டதாக தெரி வித்தனர்.
- சுதந்திர தினவிழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- சுதந்திரதினத்தன்று முதலமைச்சரை காவல்துறை வாகன அணி வகுப்புடன் அழைத்து வருவது போன்று ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை:
76-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (15-ந்தேதி) நாடு முழுவ தும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
சென்னை காமராஜர் சாலையில் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
சுதந்திர தினவிழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி இதற்கான இறுதி ஒத்திகை நிகழ்ச்சி இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்தது. இதில் போலீசார் சீருடையில் அணி வகுத்தனர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் சுதந்திரதினத்தன்று முதலமைச்சரை காவல்துறை வாகன அணி வகுப்புடன் அழைத்து வருவது போன்று ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து கமாண்டோ படை, குதிரைப் படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படைப்பிரிவினர் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டு தேசிய கொடியைஏற்றி பேசுவது போன்று ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
அதன் பின் தகைசால் தமிழர் விருது, ஏபிஜே அப்துல்கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகள் வழங்குவது போன்று ஒத்திகை நடந்தது.
இதையொட்டி இன்று காலை காமராஜர் சாலை பகுதியில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
காலை 8 மணி முதல் ஒத்திகை நிகழ்ச்சி முடிவடைந்த 10 மணி வரையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை, கொடிமரச் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது
போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகையையொட்டி இன்று சென்னை தலைமைச்செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளம், மற்றும் காமராஜர் சாலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதில் ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
- ஈரோடு ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது
- ஒத்திகையை கலெக்டர், எஸ்.பி. பார்வையிட்டனர்
ஈரோடு,
ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுத ந்திர தின விழா கொண்டா டப்பட்டு வருகிறது. தற் போது விளையாட்டு மைதா னத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை (செவ்வாய்க்கி ழமை) சுதந்திர தின விழா ஈரோடு ஆணைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதா னத்தில் நடக்கிறது. நாளை காலை கலெக்டர் ராஜகோ பால் சுன்கரா தேசியக்கொ டியை ஏற்றி வைத்து மரியா தை செலுத்துகிறார்.
அதை த்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் சுத ந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களுடைய வாரிசுதாரர்கள் கவுரவி த்து, அரசு துறையில் சிறப்பாக பணியா ற்றிய அலுவல ர்கள், பணியாள ர்கள் மற்றும் தன்னார்வ லர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து ஈரோடு அரசு இசைப்பள்ளி மற்றும் பள்ளி மாணவ-மாணவி களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று காலை ஆணைக்கல்பாளை யம் ஆயுதப்படை மைதா னத்தில் இன்று காலை சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த அணி வகுப்பு ஒத்திகையை கலெ க்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் திறந்த வெளி ஜிப்பில் சென்று பார்வையிட்டனர். இதில் போலீசாருடன், ஊர் காவல் படையினர், தேசிய மாணவர் படையி னர் கம்பீரமாக நடந்து சென்றனர். இதைத் தொட ர்ந்து கலெக்டர் நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இதில் டவுண் டி.எஸ்.பி. ஆறுமுகம், ஏ.எஸ்.பி. தானஸ் பிரியா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
- மாவட்ட நிர்வாகத்திற்கு, சென்னை கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.
- பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கடலூர்:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புயல் சூழ்நிலைகளை எதிர்கொள்வது தொடர்பான மாதிரி ஒத்திகை பயிற்சியினை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு, சென்னை கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.
அதன்படி, கடலூர் செம்மங்குப்பத்தில் புயல் பேரிடர் மாதிரி ஒத்திகை பயிற்சி இன்று காலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் விடுக்கப்படும் புயல் பேரிடர் ஒத்திகை அறிவிப்புகள் மற்றும் தகவல் பரிமாற்றமானது, அரசுத்துறைகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது என்பது குறித்தும், மீட்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்தும் விரிவாக விளக்கி கூறி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புத்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குறிஞ்சிப்பாடி சிறுபாளையூர் (வடக்கு), புவனகிரி சிலம்பிமங்கலம், சிதம்பரம் பெராம்பட்டு, காட்டுமன்னார்கோவில் சர்வராஜன்பேட்டை ஆகிய இடங்களிலும் புயல் பேரிடர் மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
- வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பது குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி
- உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் பங்கேற்பு
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி கேரளா மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டம் உள்ளது.
ஆண்டு தோறும் இப்பகுதி களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும். இதேபான்ற நேரங்களில் பில்லூர் அணைக்கு அந்த பகுதிகளில் பொழியும் மழைநீர் வந்தடையும். அப்போது மின் உற்பத்தி போக மீதமுள்ள நீர் பவானி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்போது மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரை யோரத்தில் உள்ள மக்கள், வருவாய் துறையினர் சார்பில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது வழக்கம்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையையொட்டி மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் சார்பில் வெள்ள பாதிப்பு நேரங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி வனபத்ர காளியம்மன் கோவில் அருகே நடத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் 10-க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஒத்திகை நிகழ்ச்சியில் வெள்ள பாதிப்பு காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ரப்பர் படகு மூலம் எப்படி மீட்பது. அவர்களுக்கு எப்படி பாது காப்பு கவசம் வழங்குவது, பரிசல் மூலம் சென்று எப்படி காப்பாற்றுவது? என்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் உள்ளூர் பொது மக்கள் மட்டுல்லாமல், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் பங்கேற்றனர்.
- திருச்சி விமான நிலையத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது
- எரிபொருள் நிரப்பும்போது தீ விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கும் முறைகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது
கே.கே.நகர்,
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் நிறுவனம் எரிபொருள் நிரப்பும் பணி செய்து வருகின்றன. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும்போது தீ விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கும் முறைகள் குறித்த ஒத்திகை செய்து காட்டப்பட்டது. இதில் விமான நிலைய ஆணையைக்குழு அதிகாரிகள் திருச்சி விமான நிலையம் தீயணைப்பு துறை விமான எரிபொருள் நிரப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
- வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒத்திகை நடைபெற்றது
- தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மழை வெள்ளம் வரும்போது, கிடைக்கும் பொருட்களை கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்வது, மற்றவர்களை காப்பாற்றுவது குறித்து செயல்முறை ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் தீவிபத்தின் போது தற்காத்து கொள்வது குறித்தும், தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். காட்டினார்கள். இதில் பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.