என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்தி"

    • பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பைகளில் திடீரென சோதனை நடத்தப்பட்டது.
    • கத்தி, இரும்புச் சங்கிலி, காண்டம் பாக்கெட் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் கோட்டி என்ற பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பைகளில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. அப்போது கத்திகள், இரும்புச் சங்கிலிகள், சைக்கிள் சங்கிலிகள், காண்டம் பாக்கெட்டுகள், சீட்டுக்கட்டுகள் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையறிந்த அந்தப் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இதுதொடர்பாக, துணை முதல்வர் கூறுகையில், மாணவர்களில் சிலர் போதைப்பொருள்களுக்கு அடிமையாகி இருக்கலாம் என்றும், பள்ளி உள்ளேயே போதைப் பொருட்களை பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுபோல் பல நாட்கள் நடத்திய சோதனையில் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    மாணவர்களின் தவறான நடத்தை மட்டுமின்றி சமூக ஊடகங்களில் காணப்படும் தீய உள்ளடக்கங்களும், தவறான நட்பு வட்டங்களின் பாதிப்புகளும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. கண்டிப்பான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

    • கைதான ரவுடி வாக்குமூலம்
    • மோட்டார் சைக்கிளில் முந்தி செல்வதில் தகராறு

    நாகர்கோவில்:

    கருங்கல் கப்பியறை புதுக்காட்டு வெட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் பாபு (வயது 57), நில புரோக்கர்.

    இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். தற்பொழுது சேவியர் பாபு நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசித்து வந்தார். நிலம் சம்பந்தமான பணிகளுக்காக சேவியர் பாபு அடிக்கடி நாகர்கோ விலிலுள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்வார்.

    நேற்று முன்தினம் மதியம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு அவரது நண்பர் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த செல்வராஜ் (48) என்பவருடன் மோட் டார் சைக்கிளில் வந்தி ருந்தார். பின்னர் செல்வ ராஜ், சேவியர் பாபு இரு வரும் கலெக்டர் அலுவ லகத்தில் இருந்து நெடுஞ்சா லைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபருக்கும் இவர்க ளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திர மடைந்த வாலிபர் சேவியர் பாபுவை கத்தியால் குத்தி னார். அதை தடுக்க வந்த செல்வராஜுக்கும் கத்தி குத்து விழுந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பிணமாக கிடந்த சேவியர் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.செல்வராஜை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகள் ஆய்வு

    கொலை நடந்த பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் உணவுப் பொருட்கள் டெலிவரி செய்யும் பேக் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.அப்போது சேவியர் பாபுவை கொலை செய்தது ராணி தோட்டம் பெஞ்சமின் தெருவை சேர்ந்த சுபின் (33) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்ய நடவ டிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவதை அறிந்த சுபின் தலைமறை வானார்.

    இந்த நிலையில் சுபின் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சுபினை கைது செய்த னர்.கைது செய்யப்பட்ட சுபின் நாகர்கோவிலுக்கு அழைத்துவரப்பட்டார்.அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப் பட்டது.

    போலீசாரிடம் சுபின் அளித்துள்ள வாக்கு மூலத் தில் கூறியிருப்பதாவது:-.

    நான் உணவுப் பொருட் கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். நேற்று முன்தினம் மதியம் உணவு பொருட்களை டெலிவரி செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் சேவியர் பாபு, செல்வராஜ் ஆகியோர் வந்தனர்.

    மோட்டார் சைக்கிளை முந்தி செல்வது தொடர்பாக எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. திடீரென அவர்கள் என்னை தாக்கி னார்கள். இதனால் ஆத்திர மடைந்த நான் அவர்களை கத்தியால் குத்தினேன். பின்னர் எனது மோட்டார் சைக்கிளையும் உணவு பொருள் டெலிவரி செய்யும் பேக்கையும் அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்று விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    தொடர்ந்து போலீசார் சுபினிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட சுபின் மீது ஏற்கனவே கோட்டார் வடசேரி நேசமணி நகர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள் ளது.

    ரவுடிகள் பட்டியலி லும் சுபின் பெயர் இடம் பெற்று உள்ளது குறிப்பி டத்தக்கதாகும்.

    கொலை செய்யப்பட்ட சேவியர் பாபு மகள்கள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள்.சேவியர் பாபு கொலை செய்யப்பட்ட தகவல் வெளி நாட்டில் உள்ள அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சொந்த ஊருக்கு வர தயாரானார்கள். இந்த நிலையில் இன்று சேவியர் பாபுவின் மகள் ஊருக்கு வருகிறார். அவரிடம் சேவியர் பாபுவின் உடலை ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    • கரூரில் வெவ்வேறு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர்
    • கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கரூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த திருநாவுக்கரசர்(வயது39) கரூர் தான்தோன்றி மலை டாஸ்மார்க் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ராயனூரை சேர்ந்த குடியரசு (22) என்பவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 பறித்தார். இது குறித்த புகாரின் பேரில் குடியரசை தாந்தோணிமலை போலீசார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன்(20). இவர் கரூர் காமராஜர் மார்க்கெட் அருகே நின்று கொண்டிருந்தபோது கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையை சேர்ந்த சண்முகசுந்தரம் (28) கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார். இதுகுறித்து விசாரித்த கரூர் டவுன் போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த ராஜா(33) கரூர் அருகம்பாளையம் டாஸ்மார்க் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது நாமக்கல்லை சேர்ந்த ஸ்ரீராம் கார்த்திக்(32) அவரிடம் இருந்த பர்சை திருடி சென்றார். இதுகுறித்து வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீராம் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கரூர் முத்துராஜபுரத்தை சேர்ந்த குணசேகரன்(23) மக்கள் பாதை பிரிவு சாலையில் நடந்து சென்ற போது கரூர் மாவடியான் கோவில் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(23) அவரிடம் கத்திய காட்டி மிரட்டி பணம் பறித்தார். இதையடுத்து போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குடிபோதையில் தகராறு செய்த மகனை, தந்தை கத்தியால் வெட்டிார்.
    • கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ்.ராமச்சந்திராபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மலைச்செல்வன். இவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு சூர்யபிரகாஷ்(வயது21) என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று சூர்யபிரகாஷ் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து தாய் கல்யாணியிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து மலைச்செல்வனுக்கு, அவர் போனில் தகவல் தெரிவித்தார்.

    இந்தநிலையில் இரவு மலைச்செல்வன் வீட்டிற்கு வந்தபோது சூர்யபிரகாஷ் வாசலில் குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அதைப்பார்த்து மலைச்செல்வன் அவரை கண்டித்தார். ஆனால் தந்தையுடனும் சூர்யபிரகாஷ் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மலைச்செல்வன், சூர்யபிரகாஷ் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை கை, கால்களில் வெட்டினார். சூர்யபிரகாஷின் நண்பர்கள் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கல்யாணி கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
    • திருவிழாவில் சாமி கும்பிட்டு விட்டு பூர்விக வீட்டிற்கு சென்றனர்.

    விருதுநகர்

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது42). இவர்களது அண்ணன் இவரது அண்ணன் சோமு (53). இவர்களுக்கு விருதுநகர் அருகே உள்ள பாவாலி சங்கரநாராயணபுரத்தில் பூர்வீக வீடு உள்ளது. இந்த நிலையில் இவர்கள் குடும்பத்துடன் விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவிற்காக சென்றனர்.

    திருவிழாவில் சாமி கும்பிட்டு விட்டு பூர்விக வீட்டிற்கு சென்றனர். அங்கு வைத்து சுந்தர், சோமு இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது குடும்பப் பிரச்சனை தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றிய கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சோமு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரை குத்தினார்.

    உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுந்தரின் மகன் அரவிந்த் ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சோமுவை கைது செய்தனர்.

    • மோஷின், மனைவி மற்றும் குழந்தையுடன், ஆண்டிபாளையம் முல்லை நகரில் வசித்து வருகிறார்.
    • அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.

    திருப்பூர் :

    மது போதையில் தனக்கு தானே கத்தியால் குத்திக்கொண்ட நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பீகாரை சேர்ந்த மோஷின், (36). மனைவி மற்றும் குழந்தையுடன், ஆண்டிபாளையம் முல்லை நகரில் வசித்து வருகிறார்.

    பனியன் தொழிலாளியான அவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். நேற்றும் வழக்கம் போல் மது அருந்தி விட்டு வந்த அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

    சிறிது நேரத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தன்னைத் தானே பல இடங்களில் குத்திக் கொண்டு மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து திருப்பூர் மத்திய பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபரை கைது செய்தனர்.
    • எதற்காக கத்தியுடன் சுற்றித்திரிந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை செல்லூர்அருள்தாஸ்புரத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 55).இவர் செல்லூர் 50 அடி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்லபாண்டியிடம் இருந்து ரூ. 1300- ஐ பறித்து சென்றார்.

    இந்த சம்பவம் குறித்து செல்லப்பாண்டி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட செல்லூர் குலமங்கலம் மெயின் ரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்த ஜெயம் மகன் கழுவ நாதன் என்ற ரஞ்சித் குமாரை (27) கைது செய்தனர்.

    சுப்பிரமணியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ரகுநாத் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது முத்துப்பட்டி பகுதியில் கத்தியுடன் பதுங்கியிருந்த சதீஷ்குமார்(32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக கத்தியுடன் சுற்றித்திரிந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காண்டிராக்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்டது.
    • அவரை கைது செய்த போலீசார் எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மதிச்சியம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பானுகோபன்(வயது36). கட்டிட காண்டிரக்டரான இவர், சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துச் சென்றான். இதுகுறித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்த மாரிமுத்து மகன் விஜய்(27) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை தெற்குவாசல் போலீசார் சம்பவத்தன்று மகால் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மகால் 4-வது தெருவில் காளவாசலை சேர்ந்த பாண்டி மகன் நாகேந்திரன்(19) என்பவர் வாளுடன் சுற்றித்திரிந்தார். அவரை கைது செய்த போலீசார் எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதை தலைக்கேறிய நிலையில் ஸ்ரீரேகாவை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார்.
    • நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பழனியப்பா கவுண்டன்புதூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26). கூலித் தொழிலாளி.

    இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி பாலக்காடு ரோட்ைட சேர்ந்த ஸ்ரீரேகா (24) என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீரேகா கணவரை பிரிந்து மகனுடன் பொள்ளாச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று விக்னேஷ் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த இவர் அவரது மனைவியின் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்ற அவர் ஸ்ரீரேகாவை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் மனைவியின் இடுப்பு, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்ரீரேகாவின் தாயார் தீபா ராணி தடுக்க முயன்றார். அவரையும் விக்னேஷ் கத்தியால் குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    கத்திக்குத்தில் தாய், மகள் ஆகியோர் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பழிவாங்குவதற்காக கத்தியுடன் மறைந்திருந்தது தெரிந்தது.
    • இரண்டரை அடி நீளமுள்ள பெரிய பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

    ராயபுரம்:

    பாரிமுனை ராஜாஜி சாலை, கடற்கரை ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் சிலர் கத்தியுடன் சுற்றுவதாக வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அங்கு கத்தியுடன் சுற்றிய 3 பேரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்களான தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த சாமுவேல் (3-ம் ஆண்டு), கும்மிடிப்பூண்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லோகேஷ் (2-ம் ஆண்டு), மீஞ்சூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த் (3-ம் ஆண்டு) என்பது தெரியவந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பகையாக மாறியது. இதனால் அவர்களை பழிவாங்குவதற்காக கத்தியுடன் மறைந்திருந்தது தெரிந்தது.

    அவர்களிடம் இருந்து இரண்டரை அடி நீளமுள்ள பெரிய பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கைதான மாணவர்கள் லோகேஷ், சாமுவேல், ஸ்ரீகாந்த் ஆகிய 3 பேர் மீது ஆயுத தடைச் சட்டம் உள்பட 3 பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது பற்றி போலீசார் மாணவர்களின் பெற்றோருக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.
    • எதைச் சொல்லியும் கேட்காமல் 4 மணிநேரம் பிடித்து வைத்திருந்தனர்.

    பாலிவுட்டில் பிரபலமான நடிகர் நீல் நிதின் முகேஷ். இவரது தாத்தா முகேஷ் பிரபலமான பாடகர். அப்பா நிதினும் பாடகர். இப்படி சினிமாவில் பிரபலமாக நடிகராக நிதிஷ் அறியப்படுகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு வெளியான விஜயின் 'கத்தி' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

    இந்த நிலையில், இந்தியர் என்பதை சொல்லியும் கேட்காமல் 4 மணி நேரம் நியூயார்க் காவல்துறையினர் காவலில் வைத்திருந்த சம்பவத்தை நீல் நிதின் முகேஷ் மிகவும் வருத்தத்துடன் நினைவு கூர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும் போது:- நான் 'நியூயார்க்' படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயம். பார்ப்பதற்கு இந்தியர் போல இல்லை, போலி பாஸ்போர்ட்டில் அமெரிக்காவில் நுழைந்ததாக குற்றம்சாட்டி நியூயார் விமான நிலையத்தில் காவலர்கள் சிறைபிடித்தனர். எதைச் சொல்லியும் கேட்காமல் 4 மணிநேரம் பிடித்து வைத்திருந்தனர்.

    4 மணி நேரத்துக்குப் பின் அவர்கள் என்னிடம் வந்து, 'என்ன சொல்ல போகிறாய்?' எனக் கேட்டனர். அதற்கு நான் 'என்னைப் பற்றி கூகுளில் தேடிப் பாருங்கள்' என்றேன். அதன் பிறகே விடுவிக்கப்பட்டேன்" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    ×