என் மலர்
நீங்கள் தேடியது "கொள்ளை"
- பள்ளிபாளையம் பேப்பர் மில் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அமாவாசை நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
- பள்ளிபாளையம் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆராய்ந்து வருகின்றனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேப்பர் மில் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அமாவாசை நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
மேலும் ஆடி 18 திருவிழா வெகு விமரிசையாக இந்த கோவிலில் நடைபெறும். ஆடி 18 திருவிழாவில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் கோவில் பூசாரி பூஜை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு பூசாரி வந்து பார்க்கும்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. நள்ளிரவில் கொள்ளையர்கள் கோவிலுக்குள் புகுந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆராய்ந்து வருகின்றனர்.
- புறாவை யாரும் நெருங்கவில்லை எனில், வீட்டில் புகுந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான்
- நகரம் முழுவதும் குறைந்தது 50 கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தகவல்.
கர்நாடக மாநிலத்தில் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நகரத்பேட்டையைச் சேர்ந்த கொள்ளையன் மஞ்சுநாதன் என்பவர் போலீசிடம் வசமாக சிக்கியுள்ளான்.
புறாக்களை பயன்படுத்தி தான் கொள்ளையடிக்கும் முறை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளான்.
மஞ்சுநாதன் ஒவ்வொரு முறை கொள்ளையடிக்க செல்லும்போதும், புறாக்களை தன்னுடன் எடுத்துச் செல்வது வழக்கம். அப்போது, வீடுகளை நோட்டமிடும் மஞ்சுநாதன், இலக்கை எட்டியவுடன் சம்பந்தப்பட்ட வீட்டின் மீது இரண்டு புறாக்களை விடுவிப்பான்.
பறவைகள் பெரும்பாலும் கூரை அல்லது பால்கனிக்கு பறந்து, சிறிய கவனத்தை ஈர்க்கும். ஆர்வமுள்ள குடியிருப்பாளர்கள் புறாக்களை எதிர்கொண்டால், மஞ்சுநாதன் அங்கு செல்வதில்லை. ஒரே வேளை புறாவை யாரும் நெருங்கவில்லை எனில், வீட்டில் புகுந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான்.
பூட்டிய வீட்டை அடையாளம் கண்டவுடன், மஞ்சுநாத் இரும்பு கம்பியை பயன்படுத்தி வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, தங்க நகைகள் மற்றும் பணத்தை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளான்.
இவ்வாறு, நகரம் முழுவதும் குறைந்தது 50 கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விசாரணையை தொடர்ந்து, மஞ்சுநாதன் இதுவரை கொள்ளையடித்த பொருட்களை போலீசார் மீட்டெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கண்ணில் மிளகாய் பொடி தூவி கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
- சம்பவ இடத்தில் கொள்ளை நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை என தகவல்.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏடிஎம்மில் பணம் நிரப்ப காரில் கொண்டு சென்ற ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரில் பணத்துடன் சென்றவரை கட்டி வைத்து, கண்ணில் மிளகாய் பொடி தூவி கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
ஆனால், சம்பவ இடத்தில் கொள்ளை நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், இந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகித்த போலீசார், பாதிக்கப்பட்ட நபர் உள்பட 2 ஊழியர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர், "பர்தா அணிந்திருந்த பெண் கும்பல், காரில் லிப்ட் கேட்டு ஏறியதாகவும், தன் மீது மிளகாய் பொடியை தூவி, ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாகவும்" போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முதல் தளத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
- ரூ.6 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. நேற்று இரவு அங்குள்ள வியாபாரிகள் வழக்கம்போல் கடைகளை அடைத்து வீடுகளுக்கு சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை வணிக வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. தொடர்ந்து அருகே உள்ள மேலும் 7 கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் உடனடியாக விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடைகளில் இருந்த பணம் மற்றும் விலை உயர்ந்த காமிராக்கள் என ரூ.6 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி அதில் பதிவான உருவங்களை கொண்டு, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு
- வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி அசம்பு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சாந்தி (வயது 56).
இவர் தற்பொழுது குலசேகரபட்டினம் கோவி லுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார். நேற்று மாலை வீட்டிலிருந்து சாந்தி பக்கத்து தெருவில் சீட்டு பணம் கட்டுவதற்காக சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப் பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி அவரது மகன் முகேஷ் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டில் இருந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மேல் கூரை வழியாக ஏறி குதித்து தப்பி ஓடினார்.
இதையடுத்து அவரை பிடிக்க முயன்றனர்.ஆனால் அவர் தப்பி ஓடி விட்டார். வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் பீரோவை உடைத்து அதிலிருந்த 4½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை திருடி சென்று இருந்தார். இதுகுறித்து வடசேரி போலீ சுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது .
சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்திய சோபன்,மாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- புதுப்பள்ளியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் பேசியுள்ளனர்.
- கருகாபட்டினம், வடமலை ஆகிய இடங்களில் பலரிடம் பல லட்ச ரூபாய் திருடியது தெரியவந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம்பகுதியில் 5 மாதங்களாக வேட்டைக்கா ரனிருப்பு, கள்ளிமேடு, கரியாப்பட்டினம், தலை ஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் எடுப்பவரை குறிவைத்து பல லட்ச ரூபாய் கொள்ளை நடைபெற்றது.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் டி.எஸ்பி. முருகவேல், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பசுபதி, தனிப்படை எஸ்ஐ. வெங்கடாஜலம், துரைராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் வேட்டை க்காரனிருப்பு அருகில் உள்ள புதுப்பள்ளியில் சந்தேகப்படும்படி நின்று கொ ண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில்முன்னுக்கு பின் பேசி உள்ளனர்.
இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து மேலும் விசாரித்ததில் வேதாரண்யம் பகுதிவங்கிகளில் பணம் எடுத்து வந்தவர்களிடம் பணத்தை திருடி வந்தது தெரியவந்தது.மேலும் வேட்டைக்கா ரனிருப்பு, கள்ளிமேடு, கருகாபட்டினம், வடமலை ஆகிய இடங்களில் பலரிடம் பல லட்ச ரூபாய் திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த குண்டு கார்த்திக் (வயது 33), அவரது மனைவி காயத்திரி(32), கார்த்திக் மாமனார்கணேசன்(60) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 3 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து்நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கபட்டனர்.
காயத்திரி திருவாரூரில் மகளிர் சிறையில் அடைக்க ப்பட்டார்.
- கடையின் மேற்கூரையை பிரிந்து உள்ளே இறங்கிய மர்மநபர் கடையில் இருந்த அரிசி மற்றும் பணத்ைத கொள்ளையடித்து சென்றார்.
- அரிசி மூட்டை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
கோவை :
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தாபுரத்தை சேர்ந்தவர் ஜெபஸ்டின் ரஜேஷ் (வயத 36). இவர் அந்த பகுதியில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையை பூட்டி விட்டு மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றார்.
அப்போது கடையில் மேற்கூரையை பிரிந்து உள்ளே இறங்கிய மர்மநபர் கடையில் இருந்த 5 கிலோ அரிசி மூட்டை 6, 1 கிலோ அரிசி மூட்டை 7 என ரூ.2,345 மதிப்பிலான அரிசி மூட்டைகள், ரூ. 3 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து ஜெபஸ்டின் ராஜேஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அரிசி மூட்டை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.