என் மலர்
நீங்கள் தேடியது "லிப்ட்"
+2
- தீயணைக்கும் படை வீரர்கள் மீட்டனர்
- 4 நபர்கள் மட்டும் செல்லக்கூடிய அந்த லிப்டில் அதிகப்படியாக 9 நபர்கள் ஏறி மேல் மாடிக்கு சென்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி வடக்குத் தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்த வட மாநில சுற்றுலா பயணிகள் 9 பேர் இன்று அதிகாலை சூரியன் உதயமாகும் காட்சியைக் காண கன்னியாகுமரி கடற்கரைக்கு சென்றனர்.
அவர்கள் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்து விட்டு காலை 6.30 மணிக்கு அவர்கள் தங்கி இருக்கும் லாட்ஜுக்கு திரும்பி வந்தனர். இந்த லாட்ஜில் 4 நபர்கள் மட்டும் செல்லக்கூடிய "லிப்ட்" அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அதிகப்படியாக 9 நபர்கள் அந்த லிப்டில் ஏறி மேல் மாடிக்கு சென்றனர்.அப்போது"லிப்ட்" பழுதாகி பாதிவழியில் நின்றது.
இதனால் அவர்கள் 9 பேரும் அந்த லிப்டில் சுற்றி தவித்துக் கொண்டிருந்தனர். இது பற்றி தகவல் அறிந்த லாட்ஜ் ஊழியர்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கியதாஸ் தலைமையில் தீயனைக்கும் படை வீரர்கள் அந்த லாட்ஜுக்கு விரைந்து வந்தனர்.
தீயணைக்கும் படை வீரர்கள் மீட்பு கருவி மூலம் லிப்டில் சிக்கி இருந்த 9 வடமாநில சுற்றுலா பயணிகளை சுமார் 1 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
- இரும்பு கம்பியுடன் மின்வயரும் அறுந்ததால் தரைதளம் வரை செல்லாமல் முதல் மாடியிலேயே ‘லிப்ட்’ நின்றுவிட்டது.
- அருகில் இருந்தவர்கள் ‘லிப்ட்’டின் கதவை உடைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3-வது தளத்தில் உள்ள 'லிப்ட்'டை நோயாளிகள், டாக்டர்கள், ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 4½ மணியளவில் 3-வது மாடியில் இருந்து ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் உள்ளிட்ட 12 பேர் 'லிப்ட்'டில் ஏறினர். அப்போது திடீரென 'லிப்ட்'டை தாங்கி செல்லும் இரும்பு கம்பி அறுந்து மளமளவென முதல் தளத்தில் இறங்கி நின்றது. மேலும் இரும்பு கம்பியுடன் மின்வயரும் அறுந்ததால் தரைதளம் வரை செல்லாமல் முதல் மாடியிலேயே 'லிப்ட்' நின்றுவிட்டது. இதனால் 'லிப்ட்'டில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் 'லிப்ட்'டின் கதவை உடைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதுபோன்ற சம்பவம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 4-வது முறையாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண் தனியாக நிற்பதை அறிந்த வாலிபர் அந்த பெண்ணுக்கு லிப்டுக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார்.
- 31 வினாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பொது இடங்களில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அப்படி தன்னிடம் அத்துமீறிய வாலிபரை பெண் ஒருவர் தாக்கி நிலைகுலைய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லிப்டில் பெண் ஒருவர் தனியாக பயணம் செய்கிறார். அதே லிப்டுக்குள் வாலிபர் ஒருவரும் நின்று கொண்டிருக்கிறார். பெண் தனியாக நிற்பதை அறிந்த வாலிபர் அந்த பெண்ணுக்கு லிப்டுக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார்.
தனது அருகில் வாலிபர் வருவதால் அந்த பெண் சற்று தள்ளி நிற்கிறார். ஆனால் அந்த வாலிபரோ பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க மீண்டும் நெருங்கினார்.
இதனால் அந்த பெண் திடீரென்று வாலிபரின் கன்னத்தில் பளார் என்று அறைவிட்டார். அத்துடன் நிற்காமல் அந்த நபரின் மர்ம உறுப்பில் எட்டி உதைத்தார். இதில் அந்த வாலிபர் அப்படியே நிலை குலைந்தார். இந்த சம்பவம் லிப்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது.
31 வினாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த வீடியோவை 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் தைரியத்தையும் பாராட்டி உள்ளனர்.
- புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் முழு வீச்சில் பணிகள் நடந்து வருகின்றன.
- மூத்த குடிமக்கள் பிளாட்பாரங்களுக்கு எளிதாக செல்ல வசதியாக லிப்ட் வசதி செய்யப்படுகிறது.
சென்னை புறநகர் மின்சார ரெயில் பயணிகளுக்கு அடிப்படையான வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் தங்கள் உடமைகளுடன் நடை மேம்பாலத்தை கடந்து செல்ல சிரமப்படுகிறார்கள்.
அவர்கள் எளிதாக பிளாட்பாரங்களுக்கு செல்ல வசதியாக லிப்ட் வசதி செய்யப்படுகிறது. அரக்கோணம், வில்லிவாக்கம், பேசின்பாலம், வியாசர்பாடி, ஆவடி, கொரட்டூர், வண்ணாரப் பேட்டை, கொருக்குப் பேட்டை உள்ளிட்ட 20 ரெயில் நிலையங்களில் லிப்ட் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் முழு வீச்சில் இப்பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஏழுமலை கூறியதாவது:-
புறநகர் மின்சார ரெயில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. ரெயில் நிலையங்கள் தூய்மைப் பணி, குடிநீர், கழிப்பிடம் மற்றும் லிப்ட் வசதி போன்றவை படிப்படியாக மேம்படுத்தப் படுகின்றன. இந்த பணிகள் 3 மாதத்தில் நிறைவடையும். மூத்த குடிமக்கள் பிளாட்பாரங்களுக்கு எளிதாக செல்ல வசதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சி.சி.டி.வி. காமிராவில் சிக்கிய கொள்ளையன் உருவம்
- போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் பள்ளி விளை ரெயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 59 )டிரைவர். இவர் நேற்று வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு டிப் டாப் உடையில் வந்த வாலிபர் குமரேசனிடம் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டுள்ளார்.
இதையடுத்து குமரேசன் அவரை வடசேரி பஸ் நிலையத்தில் விடுவதற்காக அழைத்து வந்தார். வெள்ளா ளர் தெரு பகுதியில் வந்த போது அந்த வாலிபர் தன்னை இங்கேயே இறக்கி விடுமாறு கூறினார். உடனே குமரேசன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது திடீரென குமரேசன் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துவிட்டு அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து குமரேசன் திருடன்... திருடன்....என கூச்சலிட்டார். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து மறைந்து விட்டார். இது குறித்து குமரேசன் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் குமரேசன் மோட்டார் சைக்கிள் செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூகுள்பே கணக்கில் இருந்து ரூ.75 ஆயிரத்தையும் திருடிய கும்பல்
- வடசேரி பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்
நாகர்கோவில் :
நாகர்கோவில் பார்வதி புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று மாலை தனது காரில் பூதப்பாண்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
வடசேரி அண்ணாசிலை அருகே வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் கையை காட்டி காரை நிறுத்தினார். இதையடுத்து கார் நின்றது. அப்போது அந்த வாலிபர் தான் தாழக்குடி செல்ல வேண்டும் என்றும் தன்னை அழைத்து செல்லுமாறும் கூறினார். உடனே அவர் தனது காரில் அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். தாழக்குடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென 4 பேர் காரை வழிமறித்தனர்.
காரை நிறுத்தியதும் அந்த கும்பல் காரை ஓட்டி சென்றவரிடமிருந்த ரூ.2000 ரொக்கப்பணத்தை பறித்தனர். மேலும் அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் செயினை பறித்த கும்பல் அவரது கூகுள்பே கணக்கிலிருந்து ரூ.75 ஆயிரம் பணத்தையும் திருடியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. காரில் லிப்ட் கேட்டு வந்தவரும் தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து பூதப் பாண்டி போலீசில் காரை ஓட்டி வந்தவர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். லிப்ட் கேட்டு வந்த வாலிபர் தான் திட்டமிட்டு இந்த கை வரிசையில் ஈடு பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வடசேரி பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் தாழக்குடி பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். காரில் வந்தவரிடம் லிப்ட் கேட்டு வந்து நகை பணத்தை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திடீரென லிப்ட் கதவு மூடப்பட்டு மேலே சென்றது. அங்கிருந்து பலத்த சத்தம் எழுப்பியபடி வேகமாக கீழே விழுந்தது.
- அங்கிருந்த தொழிலாளர்கள் லிப்டை உடைத்து 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், என்.டி.ஆர். மாவட்டம், கொண்டப்பள்ளியில் உள்ள நர்லா தட்டாராவில் அனல் மின் நிலையம் உள்ளது.
இங்கு 5-ம் கட்ட என்டிபிஎஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக 800 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனுமின் நிலைய கட்டுமானப் பணி நடந்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சில நாட்களாக வேலை செய்து வருகின்றனர்.
70 மீட்டர் உயரத்தில் வேலை செய்ய தொழிலாளர்கள் 310 டிகிரி கொண்ட லிஃப்டில் ஏறினர். ஜிதேந்திரசிங், சோட்டூசிங் உள்ளிட்ட 20 தொழிலாளர்கள் லிப்டில் மேலே சென்று கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் மீண்டும் லிப்டில் கீழே வந்தனர். லிப்ட் கதவு திறக்காததால், தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கினர். சாவியை போட்டு லிப்டை திறந்தனர்.
அப்போது 20 தொழிலாளர்களில் 18 பேர் வெளியே வந்தனர். மேலும் 2 பேர் வர முற்பட்ட போது, திடீரென லிப்ட் கதவு மூடப்பட்டு மேலே சென்றது. அங்கிருந்து பலத்த சத்தம் எழுப்பியபடி வேகமாக கீழே விழுந்தது. இந்த விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜித்தேந்திரா சிங், சோட்டு சிங் ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர்.
அங்கிருந்த தொழிலாளர்கள் லிப்டை உடைத்து 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியிலேயே அவர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
- மாற்றுத்திறனாளிகள் மலைக்கோவிலுக்கு செல்ல லிப்ட் வசதி அமைத்து தரப்படும்.
சுவாமிமலை:
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன், தமிழகம் முழுவதும் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார்.
முன்னதாக கோவில் செயல் அலுவலர் உமாதேவி வரவேற்றார்.
கோவிலில் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசனம் செய்ய லிப்ட் வசதி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கோவில் பிரசாத ஸ்டாலுக்கு சென்று அங்கு விநியோகம் செய்யப்படும் உணவு வகைகளை ஆய்வு செய்து மேலும் உயர்தரத்துடன் வழங்க அறிவுரை வழங்கினார்.
கோவிலில் சுற்றுப்புறங்களில் உள்ள தேவையற்ற செங்கல் கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டார்.
ஆய்வின்போது இணை ஆணையர் மோகனசுந்தரம், கும்பகோணம் உதவி ஆணையர் சாந்தா, மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
- சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி:
நொய்டாவில் உள்ள ஒரு ஓட்டல் லிப்டில் அளவுக்கு அதிகமானோர் சென்றனர். அப்போது அந்த லிப்ட் பாரம் தாங்காமல் 3-வது தளத்தில் இருந்து வேகமாக கீழே வந்து தரை தளத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் லிப்டில் பயணம் செய்த 9 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 3 பேருக்கு எலும்புகள் முறிந்தது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
- தீயணைப்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
போரூர்:
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் நேற்று போரூரை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
பின்னர் இரவு 7.30மணி அளவில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது தளத்தில் இருந்து ஜெகதீசன் உள்பட 7பேர் லிப்ட் மூலம் தரை தளத்திற்கு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லிப்ட் தரை தளத்திற்கு கீழே சென்று திடீரென நின்று விட்டது. இதனால் ஜெகதீசன் மற்றும் கர்ப்பிணி பெண் உள்பட அவரது குடும்பத்தினர் 7பேரும் லிப்டில் சிக்கி தவித்து கூச்சலிட்டனர். தீயணைப்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
- பொதுமக்கள் வசதிக்காக பாலத்தில் எஸ்கலேட்டர் வசதி, லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
- பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு வருபவர்கள் மட்டுமே இந்த பாதையை பயன்படுத்துகிறார்கள்.
சென்னை:
தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் பஸ் நிலையம் வரை ரூ.28.5 கோடி செலவில் பிரமாண்ட ஆகாய நடை மேம்பாலம் கட்டப்பட்டது. இதை கடந்த மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பொதுமக்கள் வசதிக்காக பாலத்தில் எஸ்கலேட்டர் வசதி, லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பாலத்தில் உள்ள எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதையொட்டி நகரும் படிக்கட்டுகள் வருகிற 13-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் 14-ந்தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மூடப்பட்டிருக்கும்.
14-ந்தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மார்க்கெட் சாலை ரெயில் நிலைய லிப்டும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும்.
பணி நடைபெறும் நேரத்தில் எஸ்கலேட்டர்கள் மூடப்பட்டிருப்பின் லிப்ட் மற்றும் படிக்கட்டுகளையும், லிப்ட் மூடப்பட்டிருப்பின் எஸ்கலேட்டர்களையும் பயன்படுத்தி கொள்ள மாநகராட்சி சார்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேம்பாலம் திறக்கப்பட்டு இரண்டு, மூன்று முறை எஸ்கலேட்டரில் பழுது ஏற்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. பின்பு கோளாறு சரி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
திறக்கப்பட்ட சில வாரங்கள் ஆர்வமிகுதியால் அதிகளவு பொதுமக்கள் பாலத்தை பயன்படுத்தினார்கள்.
தி.நகரை பொறுத்தவரை ரங்கநாதன் தெருவுக்குதான் பொருட்கள் வாங்க அதிக அளவில் மக்கள் வருகிறார்கள். அவர்கள் ரெயில் நிலையத்துக்கோ அல்லது பஸ் நிலையத்துக்கோ செல்ல ஆகாய நடை மேம்பாலம் தேவைப்படுவதில்லை.
மேலும் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இறங்கி பஸ் நிலைய பகுதிக்கு செல்பவர்களும் குறைவு. ஏனெனில் அங்கு பெரிய அளவில் வணிக நிறுவனங்கள் இல்லை.
பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு வருபவர்கள் மட்டுமே இந்த பாதையை பயன்படுத்துகிறார்கள்.
அதே போல் தெற்கு உஸ்மான் ரோட்டில் உள்ள கடைகளுக்கு செல்பவர்களும், பொருட்கள் வாங்கி விட்டு திரும்புபவர்களும் பஸ் நிலையத்துக்கோ அல்லது ரெயில் நிலையத்துக்கோ செல்வதாக இருந்தாலும் ஆகாய நடை மேம்பாலத்தை விரும்புவதில்லை.
இதனால்தான் கூட்டம் குறைகிறது. பயணிகள் நெரிசலில் சிக்கி திண்டாடுவதை தவிர்க்கவே இந்த நடை மேம்பாலம் கட்டப்பட்டது. எனவே பொதுமக்கள் ஆகாய நடை மேம்பாலத்தை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.
- 2021-ல், மருதமலையில் ‘லிப்ட்’ அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.
- 2024 ஜூன் மாதத்துக்குள் பணியை முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
வடவள்ளி,
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலை மீதுள்ள இந்த கோவிலுக்கு, 'பார்க்கிங்' வரை வாகனங்களில் செல்லலாம். அதன்பிறகு படிக்கட்டுகள் வழியாக ஏறிச் சென்று தான் சுவாமி தரிசனம் செய்ய முடியும்.
இங்கு வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டில் ஏறுவதற்கு சிரமமாக உள்ளது. இதனால், 'லிப்ட்' அல்லது நகரும் படிக்கட்டுகள் அமைக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து 2021-ல், மருதமலையில் 'லிப்ட்' அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பின், திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம், ரூ.5.20 கோடி மதிப்பில், 'லிப்ட்' அமைக்கும் பணியை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து லிப்ட் அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. 2024 ஜூன் மாதத்துக்குள் பணியை முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹர்ஷினி கூறுகையில். "மருதமலையில் ராஜகோபுரம் அருகில் 'லிப்ட்' அமைக்கப்படுகிறது. பாறைகள் உள்ளதால், 'கெமிக்கல்' செலுத்தி வெட்டி எடுக்கப்படுகின்றன.
பணிகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுகின்றன," என்றார்.