என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிகள்"

    • தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.966.62 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட 103 பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீ்ழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.966.62 கோடி மதிப்பீட்டில் பொழுது போக்கு பூங்கா, பஸ் நிலையம், குடிநீர் வினியோகம், அங்கன்வாடி மையம் மேம்படுத்துதல், குளங்களை பாதுகாத்தல், புதிய பஸ்நிலையத்தில் வாகனம் நிறுத்துமிடம், மழைநீர் வடிகால் மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட 103 பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்ட பணிகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாகவும், தரமாகவும் முடித்து கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. உத்தரவிட்டார்.

    இதில் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.3.32 கோடியில் பணிகள் நடந்து வருவதை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
    • உற்பத்தி பணியை அந்தந்த பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய ரூர்பன் திட்டம் வாணியங்குடி தொகுப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் வாணியங்குடி, சோழபுரம், சக்கந்தி, காஞ்சிரங்கால், அரசனிமுத்துப்பட்டி, கொட்டகுடி, கீழ்பாத்தி மற்றும் இடையமேலூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் தலா ரூ.47.42 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு பஞ்சா யத்திலும் சூரிய உலர்த்தி, கடலைமிட்டாய், பால்கோவா உற்பத்தி, கால்நடை தீவனம் உற்பத்தி, தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிப்பு ஆகிய 6 எந்திரங்கள் அமைக்கப்பட்டு உற்பத்தி பணி நடைபெற உள்ளது.

    உற்பத்தி பணியை அந்தந்த பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் தோட்டக்கலைத்துறை மூலம் எந்திரங்கள் நிறுவும் பணி மற்றும் காஞ்சிரங்கால் பஞ்சாயத்து கிராமத்தில் ரூ.25லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஹெக்டேர் பரப்ப ளவில் செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை ரூர்பன் நர்சரி செயல்பாடுகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, மகளிர் திட்ட அலுவலர் வானதி, தோட்டக்கலை துணை இயக்குநர் அழகுமலை, வேளாண்மை துணை இயக்குநர் தமிழ்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சீர்காழி விளந்திடசமுத்திரம் முதல் பள்ளிவாசல் வரை சுமார் 800 மீட்டர் தூரம் உள்ள சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • சாலையின் இருபுறமும் கூடுதலாக அகலப்படுத்தப்பட்டு முழுமையாக தார்சாலை அமைக்கப்படுகிறது.

    சீர்காழி:

    சீர்காழி விளந்திடசமுத்திரம் முதல் பள்ளிவாசல் வரை சுமார் 800 மீட்டர் தூரம் உள்ள சாலை கைவிடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யும் பணிக்காக ரூ.1.90கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதில் சாலையின் இருபுறமும் கூடுதலாக அகலப்படுத்தப்பட்டு முழுமையாக தார்சாலை அமைக்கப்படுகிறது.

    இந்த பணிகளை சீர்காழி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சசிகலாதேவி திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினார்.

    அப்போது சாலை ஆய்வாளர் பிரபு உடனிருந்தார்.

    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிப்படை பணிகள் கூட நடைபெறவில்லை.
    • தொடர்ந்து ஒன்றிய அமைச்சரிடம் 10 முறை மனு அளித்துள்ளோம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை மைய கட்டிடம், மருத்துவ மாணவர் மன்றம் நவீன சமையலறை கூடம் ஆகியவைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்விற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது, பான் மசாலா, குட்காவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிப்படை பணிகள் கூட நடைபெறவில்லை.

    இப்போது அடிப்படை பணிகளை தொடங்கினாலும் கட்டுமான பணிகளை தொடங்க 6 மாதம் ஆகும்.

    மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்கிய அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் தொடங்கப்பட்ட பிற மாநிலங்களில் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்காக தொடர்ந்து ஒன்றிய அமைச்சரிடம் 10 முறை மனு அளித்துள்ளோம்.

    மாவட்டத்திற்கு ஒரு அரசு செவிலியர் கல்லூரி என்ற கொள்கை முடிவின்படி திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் கல்லூரி தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தாட்கோ தலைவர் மதிவாணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பால்பண்ணைச்சேரி பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடம் கட்டப்பட உள்ளது.
    • ரூ 20 லட்சம் மதிப்பில் கடைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 26-வது வார்டு பாரதி மார்கெட் பகுதியில், ரூ.12 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடம் மற்றும் பால்பண்ணைச்சேரி பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    அதே போல், ரூ 20 லட்சம் மதிப்பில், நாகை தம்பிதுரை பூங்கா மேம்படுத்துதல், கடைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன.

    இந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, உறுப்பினர்கள் முகம்மது நத்தர், திலகர், பிரதீப், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் முத்துவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பேராவூரணி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    பேராவூரணி:

    மின் நிலையத்தில்மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் பேராவூரணி உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் வெளியி ட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    பேராவூரணி துணை மின் நிலையத்தில் நாளை 4-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்விநியோகம் பெறும் பேராவூரணி, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், கட்டயங்காடு, மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், துறவிக்கா டு, செருவாவிடுதி, சித்துக்காடு, வா.கொல்லைக்காடு, ஆவணம், பைங்கால், சித்தாதிக்காடு, படப்பனா ர்வயல், மணக்காடு, ரெட்டவயல், பெருமகளூர் மற்றும் சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் நாட்டாணி க்கோட்டை, குருவிக்கரம்பை, கள்ளம்பட்டி, பள்ளத்தூர், நாடியம், திருவத்தேவன், மல்லிபட்டினம், சேதுபாவா சத்திரம், குப்பத்தேவன், கழனிவாசல், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு, பேராவூரணி சேது ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனவும், மின்தடை தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மின் விபரங்கள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு மக்கள் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
    • மார்ச் மாதத்தில் பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வெட்டாறு பாலம் பழுதடைந்த காரணத்தால், அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஆனால் பணியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக நாகப்பட்டினம் நாகூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனால் வெட்டாறு பாலத்தின் சீரமைப்புப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்நிலையில் வெட்டாறு பாலம் சீரமைப்புப் பணி யினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது, பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும், மார்ச் மாதத்தில் பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விளைச்சலும் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    • பூக்கள் அதிகம் இருந்தாலும் அவை உதிராமல் இருந்தால் தான் அதிக காய்களை மகசூலாக பெற முடியும்.

    குடிமங்கலம்:

    உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் மரப்பயிர்களுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ளது. இதனால் அதிகப்படியான இடங்களில் மா விவசாயத்தில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.அதன்படி மாந்தோப்புகள் அதிகமாக உள்ளன. தற்போது மாமரங்களில் அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளன. ஏப்ரல் முதல் இவை காய்ப்புக்கு வரும் என்பதால் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விளைச்சலும் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மாங்கன்றுகள் நட்டு 4 ஆண்டுகளில் இருந்து பலன் தரும். கோடை காலங்களில் இதன் விளைச்சல் உச்சநிலையில் இருக்கும்.இப்பகுதியில் விளையும் மாங்காய்கள் அதிக தசைப்பிடிப்புடன் இனிப்புத்தன்மை நிறைந்ததாக இருப்பதால் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. பூக்கள் அதிகம் இருந்தாலும் அவை உதிராமல் இருந்தால் தான் அதிக காய்களை மகசூலாக பெற முடியும்.

    குறைவான பராமரிப்பு, கூலி ஆட்கள் தேவை குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பலரும் மா விவசாயத்திற்கு மாறி கொண்டிருக்கின்றனர். விளைச்சல் அதிகரிப்புக்கு பராமரிப்புப்பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • பி.ஏ.பி., திட்டம், பாலாறு படுகை பாசன அமைப்பு முறையின் கீழ் 134 பாசன சங்கங்கள் உள்ளன.
    • முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம் 6 மாதம் நீடிக்கப்பட்டது.

    உடுமலை:

    பி.ஏ.பி., பாசன திட்டத்தில் விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தின் கீழ் நீரினைப்பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களை அத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் ஓட்டுப்பதிவு முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.

    பி.ஏ.பி., திட்டம், பாலாறு படுகை பாசன அமைப்பு முறையின் கீழ் 134 பாசன சங்கங்கள் உள்ளன. 9 பகிர்மான குழு தலைவர்கள், 45 பகிர்மான குழு உறுப்பினர் மற்றும் திட்டக்குழு தலைவர் ஆகிய பதவிகள் உள்ளன. இம்முறையில் முதல் கட்டமாக கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சிமண்டல தொகுதி உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

    பின்னர் பகிர்மானக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் பகிர்மான குழு தலைவர்களில் ஒருவர் திட்டக்குழு தலைவராகவும், மற்றவர்களை திட்டக்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் நிர்வாக முறை இருந்தால் மட்டுமே பாசன திட்டங்கள் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்படும்.

    மேலும் தேர்வு செய்யப்படும் பாசன சபை நிர்வாகிகள், தண்ணீர் வழங்குவது, விவசாயிகளுக்கு நீர் பிரித்து கொடுப்பது, வாய்க்கால் பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுவர். இந்த பதவிகளுக்கான தேர்தல் கடந்த 2009-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

    முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம் 6 மாதம் நீடிக்கப்பட்டது. பதவியில் இருந்தவர்களின் பதவிக்காலம் கடந்த 2014 டிசம்பர் 31-ந்தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பின் 8 ஆண்டாக தேர்தல் நடத்துவது இழுபறியாகி வந்தது.இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 17-ந் தேதி தேர்தல் நடந்தது. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற முதல் கூட்டம் ஏப்ரல் 19-ந்தேதி நடந்தது.

    பி.ஏ.பி., திட்டத்தில் முதற்கட்ட தேர்தல் நடந்த நிலையில் தொடர்ந்து நடத்த வேண்டிய பகிர்மான குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் திட்டக்குழு தலைவர் தேர்தல் 10 மாதமாக நடத்தப்படவில்லை.தொடர்ந்து நடத்த வேண்டிய தேர்தல்களையும் உடனடியாக நடத்த வேண்டும் என பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட, எண் 2 மற்றும் 3க்கான பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 18ந் தேதி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பகிர்மான குழு தலைவர் மற்றும் 10 பகிர்மான குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 112 பாசன சங்க தலைவர்கள் ஓட்டளித்து 7 பகிர்மான குழு தலைவர் மற்றும் ஒரு பகிர்மான குழுவிற்கு 5 உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் 35 பேர் தேர்வு செய்ய வேண்டும்.

    கோவை மாவட்ட பகுதியில் தேர்தல் நடந்துள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அதிக பதவிகள் உள்ளதால் திருப்பூர் மாவட்ட பகுதியிலும் உடனடியாக நடத்த வேண்டும். திட்ட குழு தலைவர் தேர்தலையும் நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற மார்ச் 10-ந்தேதி நடக்கிறது.உடுமலை, தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகங்கள், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சேலம்‌ மாவட்டம்‌, கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட காகாபாளையம்‌ பகுதியில்‌ சேலம்‌- கோவை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
    • பாலப்‌பணியானது கடந்த ஆண்டு 2022 மார்ச்சுக்குள்‌ முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால்‌ கிட்டதட்ட காலக்கெடு முடிந்து ஒரு ஆண்டு ஆகியும்‌ பாலப்பணி ஆமை வேகத்தில்‌ நடைபெற்று வருகிறது.

    சேலம் மாவட்டம், கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட காகாபாளையம் பகுதியில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்தும், உயிரிழப்பும் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் காகாபாளையம் பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அரசின் ஒப்பந்த அடிப்படையில் ரூ.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகிறது.

    இந்த உயர்மட்ட மேம்பாலமானது சேலத்தில் இருந்து 16-வது கிலோ மீட்டரில் செல்லியம்பாளையம் - கனககிரி ஏரி வரை 1 கிலோ மீட்டர் தூரம் வரை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலப்பணியானது கடந்த ஆண்டு 2022 மார்ச்சுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கிட்டதட்ட காலக்கெடு முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் பாலப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த பாலம் பணி நடைபெறும் வழியாக ஈரோடு, கோவை , கொச்சின், கேரளா, உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், ஆம்புலன்சில் செல்லும் நோயாளிகள் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல் கனரக வாகனங்கள் இவ்வழியே ஊர்ந்து சென்று வருவதால் இவ்விடத்தில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்தும், உயிரிழப்பும் நடைபெற்று வருகிறது.

    பாலம் கட்டுமான பணி நடைபெறும் அருகாமையில் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இப்பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் ஏராளமான பள்ளி கல்லூரி வாகனங்கள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காலதாமதமாக செல்கின்றன.சேலத்தில் இருந்து மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் கோவை நோக்கி செல்ல இந்த சாலையை பயன்படுத்து வதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக மிக காலதாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

    இது குறித்து நிர்வாக தரப்பில் கூறியதாவது:

    இந்த பாலவேலை ஒரு ஆண்டு காலதாமதமாக காரணம் மண் அள்ளுவதில் கடும் சிக்கல் எழுந்துள்ளது.ஏனெனில் நாங்கள் முறையாக ஆவணம் பெற்று மண் எடுத்தால் தனிநபர் தன் செல்வாக்கை பயன்ப டுத்தி அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கிறார்.அதிகாரிகள் எங்கள் வாகனங்களை பறிமுதல் செய்துவிடுகின்றனர்.

    இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மாநில, மத்திய அரசின் டெண்டர் வேலைகளுக்கு தேவையான மண் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் பாமரர்கள் முதல் பெரும் ஒப்பந்த நிறுவனங்கள் வரை கடும் சிக்கலில் உள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை முறைப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுவாக எந்த பணிகள் என்றாலும் குறித்த காலத்தில் நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பதுதான் அரசின் நோக்கமாக உள்ளது. அதற்கான தடைகளை சரிசெய்து மேம்பாலம் பணியை விரைந்து முடிக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

    • மார்க்கெட் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
    • பழமையான கட்டிடத்தை விதிமுறைகளின்படி இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் முடிவடைந்த பஸ் நிலைய பராமரிப்பு பணிகள் மற்றும் ரூ.2.8 கோடி மதிப்பீட்டில் புதிய மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுவதை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் நேரடியாக ஆய்வு செய்தார்.

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் நடந்த பணிகளை பார்வையிட்ட கலெக்டர் பின்னர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது கலெக்டர் பஸ்நிலையத்திற்குள் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக வைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகள், மற்றும் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும். பஸ் நிலையத்தில் உள்ள பழமையான ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் உள்ள கட்டிடத்தை விதிமுறைகளின்படி இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

    பஸ் நிலைய மேம்பாட்டு திட்டத்தில் நிதி பெற்று பேரூராட்சிக்கு வருமானம் வரத்தக்க வகையில் நிரந்தர கடைகள் கட்டி வாடகைக்கு விட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்து பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    • பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை பகுதிகள் செயல்பட்டு வருகின்றது.
    • வெளிநோயாளிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது

    கோத்தகிரி 

    கோத்தகிரியில் உள்ள பழமையான கட்டிடங்களில் ஒன்று அரசு மருத்துவமனை கட்டிடமாகும். இந்த கட்டிடத்தில் வெளிநோயாளிகள் பிரிவு பகுதி, அவசர சிகிச்சை பிரிவு பகுதி, பெண்கள் மகப்பேறு பகுதி என பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை பகுதிகள் செயல்பட்டு வருகின்றது. இங்கு ரத்த வங்கி கட்டிடமும், பிணவறை கட்டிடமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக கட்டப்பட்டது. நாளுக்குநாள் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வரும் நோயாளிகளின் வருகையும், வெளிநோயாளிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பழைய அவசர சிகிச்சை பிரிவில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த சிக்கலை போக்கும் விதமாக அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய நவீன வசதியுடன் கூடிய கட்டிடத்தை கட்டும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த கட்டிட பணியானது மேலும் விரைவாக முடிக்க வேண்டி கடந்த சில வாரங்களாக இரவும், பகலாக நடைபெற்று வருகிறது. இதனால் கட்டிட பணி வேகமாக முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

    ×