என் மலர்
நீங்கள் தேடியது "Jamabandhi"
- வருகிற 9-ந்தேதி வாடிப்பட்டி தாலுகாவில் ஜமாபந்தி தொடங்குகிறது.
- இதில் அந்தந்த கிராம மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை நேரில்கொடுத்து பயனடையலாம்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. வாடிப்பட்டி தாலுகாவில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி என 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் உள்ள 7 உள்வட்டங்களில் 77 வருவாய் கிராமங்களின் கணக்கு தணிக்கை ஆய்வு செய்தும், பொதுமக்களின் குறைதீர்க்கும் மனுக்கள் பெற்று உரியஆவணங்கள் உள்ளவைகளுக்கு உடனடி தீர்வு செய்தும் நலத் திட்டங்கள் வழங்கப்படும்.
வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வருகிற 9-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணிக்கு மதுரை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஜமாபந்தி தொடங்குகிறது. முதல்நாள் தென்கரை உள்வட்டத்தை சேர்ந்த அயன்தென்கரை, கோவில் தென்கரை, முள்ளிப்பள்ளம், கருப்பட்டி, நாச்சிகுளம், இரும்பாடி, அயன் குருவித்துறை, கோவில் குருவித்துறை, மேலக்கால், கச்சிராயிருப்பு, மன்னாடி மங்கலத்தில் ஜமாபந்தி நடக்கிறது.
2-ம்நாளான 10-ந்தேதி (புதன்கிழமை) சோழவந்தான் உள்வட்டத்தை சேர்ந்த திருமால்நத்தம், நெடுங்குளம், திருவேடகம், சித்தலாங்குடி, திருவாலவாயநல்லூர், நகரி, தட்டான்குளம், சேலைக் குறிச்சி, பேட்டை, சோழ வந்தானிலும் 3-ம்நாளான 11-ந்தேதி (வியாழக்கிழமை) தனிச்சியம் உள்வட்டம் சின்ன இலந்தைக்குளம், அமரடக்கி, கொண்டையம் பட்டி, தனிச்சியம், சம்பக்குளம், கள்வே லிப்பட்டி, பெரிய இலந்தைக்குளம், கட்டிமேய்க்கிப்பட்டி, கீழக்கரையிலும் ஜமாபந்தி நடக்கிறது.
4-ம்நாளான 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அலங்காநல்லூர் உள்வட்டம் அழகாபுரி, தண்டலை, மணியஞ்சி, குமாரம், அலங்காநல்லூர், அச்சம்பட்டி, இலவன்குளம், பண்ணைக்குடி, கல்லணை, வாவிடமருதூர், பரளி யிலும், 5-ம் நாளான 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) பாலமேடு உள்வட்டம் வலையபட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, மேட்டுப்பட்டி, ராஜாக்காள் பட்டி, கிருஷ்ணாபுரம், கோணப்பட்டி, ராமக்கவுண்டன்பட்டி, செம்பட்டி, சேந்தமங்கலம், தெத்தூர், பாலமேட்டிலும் ஜமாபந்தி நடக்கிறது.
6-ம்நாளான 17-ந்தேதி (புதன்கிழமை) முடுவார்பட்டி உள்வட்டம் சுக்காம்பட்டி, கோடாங்கி பட்டி, பாறைப்பட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி, தேவசேரி, அய்யூர், ஊர்சேரி, அ.கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, எர்ரம்பட்டியிலும், 7-ம்நாளான 18-ந்தேதி (வியாழக்கிழமை) நீரேத்தான் உள்வட்டம் டி.ஆண்டிபட்டி, தும்பிச்சம்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, கட்டக்குளம், நீரேத்தான், தாதம்பட்டி, ஜாரி விராலிப்பட்டி, குலசேகரன்கோட்டை, கச்சைகட்டி, போடிநாயக்கன்பட்டியிலும் ஜமாபந்தி நடக்கிறது.
இதில் அந்தந்த கிராம மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை நேரில்கொடுத்து பயனடையலாம் என்று வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
- வருகிற 19-ந்தேதி நாஞ்சிக்கோட்டை சரகத்திற்கும் நடைபெறுகிறது.
- மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் கொடுத்து தீர்வு காணலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை தாலுகாவில் பசலி 1432-க்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்குகள் தணிக்கையானது கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெறுகிறது.
இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தொடக்க நாள் அன்று பெரம்பூர் சரகத்திற்கும், வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வல்லம் சரகத்திற்கும், 17-ந்தேதி (புதன்கிழமை) தஞ்சை சரகத்திற்கும், 18-ந்தேதி (வியாழக்கிழமை) ராமாபுரம் சரகத்திற்கும், 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நாஞ்சிக்கோட்டை சரகத்திற்கும் நடைபெறுகிறது.
மொத்தம் 5 நாட்கள் நடைபெறும்.
இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தஞ்சை வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் வருவாய் தீர்பாய நாட்களில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் கொடுத்து தீர்வு காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒரு மாதம் என்பது இலக்கு தான். 15 நாட்களுக்குள் தீர்வு காண்கிறோம்.
- 2900 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. அந்த மனுக்களும் விரைவில் தீர்வு காணப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை தாலுகாவில் பசலி 1432-க்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்குகள் தணிக்கை யானது இன்று தஞ்சை தாலுகா அலுவலகத்தில் தொடங்கியது.
இதற்கு கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா தலைமை தாங்கினார். தாசில்தார் சக்திவேல் முன்னிலை வகித்தார்.
தொடக்கநாளான இன்று தஞ்சை தாலுகா பெரம்பூர் சரகத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களை கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் வழங்கினர்.
அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காவிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் வரப்பெற்றன. பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு அளிக்கப்பட்டு வருகிறது. மனு அளிக்கப்பட்டதில் இருந்து அதனை பரிசீலித்து அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்பட்டு வருகிறது.
ஒரு மாதம் என்பது இலக்கு தான். 15 நாட்களுக்குள் தீர்வு காண்கிறோம். தமிழ்நாடு அரசின் புதிய அரசாணைப்படி பட்டா மாற்றத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின் பேரில் உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 13650 மனுக்கள் நிலுவையில் இருந்தது.
ஆனால் தற்போது பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 2900 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. அந்த மனுக்களும் விரைவில் தீர்வு காணப்படும். இவைகள் அனைத்தும் அரசு புதிய அரசாணை மற்றும் மாவட்ட கலெக்டரின் நடவடிக்கைகளை காரணமாகும்.
இது தவிர பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களுக்கு உடனடி தீர்வு காண தற்போது வி.ஏ.ஓ.க்களுக்கும் சர்வேயர் மூலம் தகுந்த பயிற்சி அளிக்கபட்டு வருகிறது. இதன் மூலமும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது.
இன்று தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சி அடுத்ததாக வருகிற 16-ஆம் தேதி வல்லம் சரக்கத்திற்கும், 17-ந் தேதி தஞ்சை சரக்கத்திற்கும், 18-ந் தேதி ராமாபுரம், 19-ந் தேதி நாஞ்சிகோட்டை சரகத்திற்கும் நடைபெற உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு) சீமான், மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் ஐயம்பெருமாள் ,தனி வட்டாட்சியர் பாலசுப்ரமணியம், ஆதிதிராவிடர் நலன் ரகுராமன், ஏ.டி.எஸ்.ஓ. ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தாலுகா அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் 23.05.23 வரை தினமும் காலை 10 மணிக்கு உதவி கலெக்டர் கவுரவ் குமார் தலைமையில் நடக்கிறது.
- 23-ந் தேதி சங்கரப்பேரி, தூத்துக்குடி பகுதி 1, 2 ஆகிய கிராமங்களுக்கும் ஜமா பந்தி நடக்கிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி தாலுகாவில் கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தாலுகா அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் 23.05.23 வரை தினமும் காலை 10 மணிக்கு உதவி கலெக்டர் கவுரவ் குமார் தலைமையில் நடக்கிறது. 16-ந் தேதி உமரிக்கோட்டை, மேலதட்டப்பாறை, கீழதட்டப்பாறை, அல்லிகுளம், மறவ ன்மடம், செந்திலாம்பண்ணை, தெற்கு சிலுக்கன்பட்டி, 17-ந் தேதி முத்துசாமிபுரம், வடக்கு சிலுக்கன்பட்டி, அய்யனடைப்பு, ராமசாமிபுரம், தளவாய்புரம், கூட்டுடன்காடு, பேரூரணி, 18-ந் தேதி திம்மராஜபுரம், வர்த்தகரெட்டிபட்டி, ராமநாதபுரம், முடிவைத்தானேந்தல், கட்டாலங்குளம், சேர்வைக்காரன் மடம், குலையன்கரிசல், 19-ந் தேதி கோரம்பள்ளம் பகுதி1, 2, குமாரகிரி, முள்ளக்காடு பகுதி 1, 2, மீளவிட்டான் பகுதி 1, 2, ஆகிய கிராமங்களுக்கும், 23-ந் தேதி சங்கரப்பேரி, புலிப்பாஞ்சான்குளம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி பகுதி 1, 2 ஆகிய கிராமங்களுக்கும் ஜமா பந்தி நடக்கிறது.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், அந்தந்த நாட்களில் தங்களது குறைகள் தொ டர்பான மனுக்களை கொடுத்து உரிய தீர்வுகள் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வருவாய்த்துறை அதிகாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்யும் ‘ஜமாபந்தி’ முகாம், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
- இன்று அருநூற்றுமலை குறுவட்ட கிராமங்களுக்கும், நாளை காரிப்பட்டி குறுவட்ட கிராமங்களுக்கும், நாளை மறுதினம் வாழப்பாடி குறுவட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கிராம நிலவரி கணக்குகளை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்யும் 'ஜமாபந்தி' முகாம், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை) கவிதா தலைமையில் நடைபெற்ற முதல் நாள் ஜமாபந்தியில், பேளூர் வருவாய் குரு வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களின், நிலவரி கணக்குகள் மற்றும் நில உடமை ஆவணங்கள் தணிக்கை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், இலவச வீட்டு மனை பட்டா கோரி 100-க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.
பேளூர் பேரூராட்சியில் குடியிருந்து வரும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், பயனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையை மீண்டும் வழங்க கோரியும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.
இன்று அருநூற்றுமலை குறுவட்ட கிராமங்களுக்கும், நாளை காரிப்பட்டி குறுவட்ட கிராமங்களுக்கும், நாளை மறுதினம் வாழப்பாடி குறுவட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
ஜமாபந்தியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து, தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என, வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை கலெக்டர் நாணயம் பங்கேற்று மனுக்கள் பெற்றார்.
- முதல் நாள் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் குறு வட்டத்துக்குட்பட்ட மீரான்குளம் உட்பட்ட கிராமமக்களிடம் பட்டாமாறுதல், முதியோர் உதவிதொகை கேட்டு 145 மனுக்கள் பெறப்பட்டன.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி முகாம் நேற்று தொடங்கியது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை கலெக்டர் நாணயம் பங்கேற்று மனுக்கள் பெற்றார்.
முதல் நாள் ஸ்ரீவெங் கடேஸ்வரபுரம் குறு வட்டத்துக்குட்பட்ட மீரான்குளம், 1, 2 கிராமம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கருங்கடல், கட்டாரிமங்கலம், பழங்குளம் கிராமமக்களிடம் பட்டாமாறுதல், முதியோர் உதவிதொகை கேட்டு 145 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் தாசில்தார் ரதிகலா, தங்கையா, கலெக்டர் அலுவலக மேலாளர் இளங்கோ, அலுவலர்கள் ஜவகர்லால், ஜெயச்சந்திரன், பழனி வேலாயுதம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலாதேவி, மாசானமுத்து உள்ளிட்ட வர்கள் பங்கேற்ற னர்.
2-ம் நாளான இன்று ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் குறுவட்டம் பிடானேரி, எழுவரைமுக்கி கிராமம், சாத்தான்குளம் குறு வட்டம் பன்னம்பாறை, சாத்தான்குளம், செட்டி யிருப்பு, புதுக்குளம், ஆகிய கிராமத்துக்கும், நாளை (18-ந்தேதி) நெடுங்குளம், கோமானேரி, கொம்பன்குளம், தச்சமொழி ஆகிய கிராம மக்களுக்கும், பள்ளக்குறிச்சி குறு வட்டத்துக்குள்பட்ட முதலூர், பள்ளக்குறிச்சி, சாஸ்தாவிநல்லூர் ஆகிய கிராமத்துக்கும், 19-ந்தேதி கொம்மடிக்கோட்டை, நடுவக்குறிச்சி, அரசூர் பகுதி 1, 2, திருப்பணி புத்தன்தருவை, படுக்கப்பத்து ஆகிய கிராம மக்களிடமிருந்தும் மனுக்கள் பெறப்படுகிறது.
- சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா தலைமையில் கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் ஜமாபந்தி நடைபெற்றது.
- ஜமாபந்தி முகாமில் கடந்த 3 நாட்களில் பொது மக்களிடம் இருந்து 151 மனுக்கள் பெறப்பட்டது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் மேலாண்மைத் துறை சார்பில் சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா தலைமையில் கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் ஜமாபந்தி நடைபெற்றது.
முகாமில் ஏற்காடு தாசில்தார் தாமோதரன், தனி தாசில்தார் தீபசித்தரா, துணை தாசில்தார் ஹரிபிர சாத் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஜமாபந்தி முகாமில் கடந்த 3 நாட்களில் பொது மக்களிடம் இருந்து 151 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா மற்றும் துணை ஆய்வுக்குழு அலுவலர் முருகேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அந்த மனுக்களில் வாரிசு சான்று, பட்டா மாறுதல், இறப்புச் சான்றிதழ் உட்பட்ட மனுக்களில் 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அதை தொடர்ந்து தீர்வு காணப்பட்ட மனுக்களின் சான்றிதழ்களை பயனாளர்களுக்கு நேற்று ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா வழங்கினார்.
மேலும் மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு விரைவில் தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா கூறினார்.
- வருவாய்த் துறையின் ஓராண்டு கணக்கு விவரங்களை தணிக்கை செய்து சரி பார்த்து ஒப்புதல் அளிக்க ஜமாபந்தி நடத்தப்படுகிறது.
- ஜமாபந்தியில் அவற்றை சமர்ப்பித்து ஜமாபந்தி அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
உடுமலை:
உடுமலையில் வரும் 23-ந் தேதி ஜமாபந்தி துவங்குகிறது.வருவாய் துறை சார்பில் உடுமலை தாலுகாவில் வரும் 23-ந் தேதி ஜமாபந்தி துவங்குகிறது.வருவாய்த் துறையின் ஓராண்டு கணக்கு விவரங்களை தணிக்கை செய்து சரி பார்த்து ஒப்புதல் அளிக்க ஜமாபந்தி நடத்தப்படுகிறது.
வருவாய் கிராம அளவில் பட்டா ,சிட்டா, புல வரைபடம் ,அ பதிவு, பிறப்பு, இறப்பு ,விவசாயப் பணி மகசூல் என 24 வகையான பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. மேலும் நிலஅளவைக்கு பயன்படுத்தப்படும் நில அளவை சங்கிலிகளும் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ளன.
ஜமாபந்தியில் அவற்றை சமர்ப்பித்து ஜமாபந்தி அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும். மேலும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் முன்னிலையில் நடக்கும் ஜமாபந்தி நிகழ்வில் கிராம வாரியாக பொது மக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது.
அவ்வகையில் உடுமலை வட்டத்தில் உள்ள கிராமங்களின் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) திருப்பூர் தனி துணை ஆட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையில் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 23-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
23-ந்தேதி உடுமலை உள் வட்டம் சின்ன வீரம்பட்டி, குறுஞ்சேரி ,அந்தியூர் ,வெனசுப்பட்டி, கணபதிபாளையம், உடுமலை, பெரியகோட்டை ,கணக்கம்பாளையம், தென்பூதி நத்தம், பூலாங்கிணறு ,ராகல் பாவி, ரா .வேலூர் ,வடபுதினத்தம், போடி பட்டி, கணக்கம்பாளையம், 1 கணக்கம்பாளையம் 2 ஆகிய கிராமங்கள்.
24 ந் தேதி குறிச்சி கோட்டை உள் வட்டம் ஜல்லிபட்டி, லிங்கம்மாவூர், வெங்கடாபுரம் ,சின்ன குமாரபாளையம். குறிச்சிக்கோட்டை, பள்ளபாளையம், ஆலாம்பாளையம், தும்பலபட்டி, தளி , போகி கவுண்டன் தாசர்பட்டி ,குரல் குட்டை, குருவப்பநாயக்கனூர், ஆண்டிய கவுண்டனூர் 1, ஆண்டிய கவுண்டனூர் 2,மானுப்பட்டி,எலையமுத்தூர், கல்லாபுரம் உள்ளிட்ட கிராமங்கள்.
25 ந் தேதி பெரிய வாளவாடி உள் வட்டம் வலைய பாளையம், எரிசனம்பட்டி,கொடுங்கியம் ,தின்னப்பட்டி, சர்க்கார் புதூர், ரெட்டிபாளையம், ஜிலேபி நாயக்கன்பாளையம், அரசூர் ,கிருஷ்ணாபுரம் ,சின்ன பாப்பனூத்து,பெரிய பாப்பனூத்து ,உடுக்கம்பாளையம், புங்க முத்தூர் ,செல்லப்பம்பாளையம், தேவனூர் புதூர் ,ராவணாபுரம் ,பெரிய வாளவாடி, சின்ன வாளவாடி, தீபாலப்பட்டி ,மொடக்குபட்டி உள்ளிட்ட கிராமங்கள்.
26 ந் தேதி குடிமங்கலம் உள் வட்டம் பூளவாடி ,ஆத்து கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, பெரிய பட்டி ,குப்பம்பாளையம் ,ஆமந்தகடவு, வடுகபாளையம் ,குடிமங்கலம், கோட்டமங்கலம், பொன்னேரி, புக்குளம் உள்ளிட்ட கிராமங்கள்.
30ந் தேதி பெதப்பம்பட்டி உள் வட்டம் மூங்கில் தொழுவு ,வாகை தொழுவு ,வீரம்பட்டி, பொங்கல் நகரம், சோமவாரப்பட்டி, தொட்டம்பட்டி, முக்கூடு, ஜல்லிபட்டி, கொசவம்பாளையம், அணிக்கடவு, விருகல்பட்டி ,புதுப்பாளையம், இலுப்ப நகரம் ,பண்ணை கிணறு ஆகிய கிராமங்கள்.
- திருச்சுழியில் ஜமாபந்தி 2-ந் தேதி வரை நடக்கிறது.
- மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நேற்று முதல் வருகிற 2-ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும் என கலெக்டர் ஜெயசீலன் அறிவித்திருந்தார். அதன்படி திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. இதில் சென்னிலைகுடி, புலிக்குறிச்சி, விடத்தக்குளம் உள்ளிட்ட 8 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 28 வருவாய் மற்றும் கூடுதல் வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
இதில் தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சிவக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களிடம் இருந்து 125 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
- 3 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.
காங்கயம் :
காங்கயத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 125 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
காங்கயம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திருப்பூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் மகாராஜ் தலைமையில், ஊதியூா் உள்வட்டதைச் சோ்ந்த ஆரத்தொழுவு, வட சின்னாரிபாளையம், சம்மந்தம்பாளையம், காங்கயம்பாளையம், குருக்கபாளையம், நெழலி, ஊதியூா், முதலிபாளையம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 125 போ் மனு அளித்தனா். இந்த மனுக்களில் முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட 3 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.
- பெறப்பட்ட மனுக்கள் மீது உதவி கலெக்டர் விசாரணை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் தச்சம்பட்டு பகுதியில் ஜமாபந்தி நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தலைமை தாங்கினார். தாசில்தார் சரளா, தலைமையிடத்து துணை தாசில்தார் சாந்தி, மண்டல துணை தாசில்தார் சிவலிங்கம், வருவாய் ஆய்வாளர் பாரதி உட்பட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த ஜமாபந்தியில் காட்டாம்பூண்டி, சின்னகல்லப்பாடி, தலையாம்பள்ளம், நரியாப்பட்டு, பழையனூர், கண்டியங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
பெறப்பட்ட மனுக்கள் மீது உதவி கலெக்டர் மந்தாகினி விசாரணை மேற்கொண்டார். மேலும் கிராமங்களின் வருவாய் ஆவணங்களையும் தணிக்கைக்கு உட்படுத்தினார்.
- ஜமாபந்தி கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்
- வந்தவாசி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த பெலகாம்பூண்டி கிராம பழங்குடியினர் மயானத்துக்கு பாதை வசதி கோரி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள மயானத்துக்கு செல்ல உரிய பாதை வசதி இல்லை. எனவே மயானத்துக்கு பாதை வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.