என் மலர்
நீங்கள் தேடியது "கஞ்சா விற்பனை"
- எலவனாசூர்கோட்டை பகுதியில் போலீசார்தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- எஸ். மலையனூர் கிராமத்தில் சுபாஷ் என்பவர் தெருவில் கஞ்சா விற்றார்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் மேற்பார்வையில் தமிழ்வாணன் இன்ஸ்பெக்டர் தலைமையில் உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை பகுதியில் போலீசார்தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எஸ். மலையனூர் கிராமத்தில் சுபாஷ் என்பவர் தெருவில் கஞ்சா விற்றார். உடேன போலீசார் அவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- 800 கிராம் பறிமுதல்
- வேலூர் ெஜயிலில் அடைப்பு
வேலூர்:
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர வாகன தணிக்கை மற்றும் கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் நேற்று மாலை சத்துவாச்சாரி வ.உ.சி நகர் மலையடிவாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மலை அடிவாரத்தில் 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து அவர்களிடம் இருந்து 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் 2 பேரும் வ. உ.சி நகரை சேர்ந்த அண்ணன் தம்பிகளான குமார் (வயது25), மணி (24) என தெரிய வந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
- போலீசாரை கண்டவுடன் அங்கு நின்று கொண்டிருந்த 3 நபர்கள் தப்பிஒட முயன்றனர்.
- திண்டிவனத்தை சேர்ந்த செல்வகுமார் (22), அன்பழகன் (44) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் ஏரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக திண்டிவனம் போலீஸ் உதவி சுப்பிரண்டு அபிஷேக் குப்தாவிற்கு தகவல் வந்தது. அவரின் உத்தரவின் பேரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டவுடன் அங்கு நின்று கொண்டிருந்த 3 நபர்கள் தப்பிஒட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் வந்து விசாரித்ததில் சாரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (வயது 28), திண்டிவனத்தை சேர்ந்த செல்வகுமார் (22), திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியை சேர்ந்த அன்பழகன் (44) ஆகியோர் என்பது தெரிய வந்தது இவர்கள் வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தூத்துக்குடிமாவட்டம் முழுவதும் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வனராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தனிப்படையினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆத்தூர் பகுதியில் தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி சென்றார். மற்றொறுவரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர் அதில், அவர் ஆத்தூர் புல்லாவெளியை சேர்ந்த அய்யப்பன் (வயது21) என்பதும், தப்பி ஓடியவர் அதேபகுதியை சேர்ந்த அதிபன் (25) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் 2 செல்போன்கள், 64 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சாயர்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கூட்டாம்புளியை சேர்ந்த வனராஜ் (21) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து செல்போன் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரம்பூரை சேர்ந்த முகமது மசூத், கொளத்தூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், நெற்குன்றத்தை சேர்ந்த பரத் ஆகிய 3 பேரை கைது போலீசார் செய்தனர்.
- பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த சத்யரஞ்சன் என்பவரையும் பிடித்தனர்.
போரூர்:
போரூர் அடுத்த லட்சமி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக இன்ஸ்பெக்டர் சந்திரசேகருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரம்பூரை சேர்ந்த முகமது மசூத், கொளத்தூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், நெற்குன்றத்தை சேர்ந்த பரத் ஆகிய 3பேரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் படி பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த சத்யரஞ்சன் என்பவரையும் பிடித்தனர். அவர்கள் திரிபுரா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்று வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசாரை கண்டதும் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களில் 3 பேரை போலீசார் விரட்டி பிடித்தனர்.
- விசாரணையில் தப்பி ஓடியவர்கள் மகேஷ்குமார்,ராமகிருஷ்ணன் என்பதும் தெரிய தெரியவந்தது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கோவில்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். எனினும் போலீசார் அவர்களில் 3 பேரை விரட்டி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கோவில்பட்டி ஸ்ரீராம் நகரை சேர்ந்த பொன்பிரகாஷ் (வயது 26), செக்கடி 3-வது தெருவை சேர்ந்த ராகேஷ் சர்மா (26), ராஜூ நகர் இ.பி. காலனியை சேர்ந்த விஷ்ணு (22) என்பது தெரியவந்தது.
மேலும் தப்பி ஓடியவர்கள் பசும்பொன் நகரை சேர்ந்த மகேஷ்குமார் ( 27), ஸ்ரீராம் நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் ( 27) என்பதும் தெரிய தெரியவந்தது. மேலும் அவர்கள் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கஞ்சா விற்ற வாலிபர் கைது
- 14 கிலோ பறிமுதல் போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை திருக்கோ விலூர் சாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெ றுவதாக திருவண்ணாமலை கிழக்குபோலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஆண் கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசா ரணை நடத்தினர்.
விசாரணையில் திருவண்ணாமலை-போளூர் சாலையை சேர்ந்த முருகன் (வயது 30) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- எலவனாசர் கோட்டை பகுதிக்குட்பட்டஆசனூர் ரோடு ஓரத்தில் மோசின் (27) என்பவரும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்ட பகுதிகளில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது களமருதூர் பகுதி ஒரத்தூர் காலனி சேர்ந்தவர் தினேஷ் (வயது 18). கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் எலவனாசர் கோட்டை பகுதிக்குட்பட்டஆசனூர் ரோடு ஓரத்தில் மோசின் (27) என்பவரும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்.
போலீசார் பார்த்தவுடன் அவர் ஓடத் தொடங்கினார். ஆனால், போலீசார் அவரை சிறிது தூரம் துரத்திச் சென்று மடக்கி பிடித்து கைது செய்து அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தையும், பறிமுதல் செய்து கொண்டு வந்து உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இதுபோல் தொடர்ந்து சம்பவங்களை ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உளுந்தூர்பேட்டை டிஎஸ்.பி. மகேஷ் எச்சரித்துள்ளார்.
- கஞ்சா விற்பனையை கண்டித்த ஒருவரை வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்று விட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரை கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை வைத்து சிறுவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை கண்டித்த அப்பகுதியை சேர்ந்த ஒருவரை அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் (30) என்பவரை கைது செய்தனர்.
- சுப்புக்குட்டி என்ற கார்த்திக் கஞ்சா பவிற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கார்த்திக் வீட்டில் 1 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது சோதனையில் தெரிய வந்தது.
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் சுப்புக்குட்டி என்ற கார்த்திக்(வயது 28). இவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஆலங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் கார்த்திக் தனது வீட்டில் 1 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- போலீசார் ரோந்தில் சிக்கினார்
- 200 கிராம் பறிமுதல்
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்சால மோன் ராஜா தலைமையி லான போலீசார் கிரு பில்ஸ்பேட்டை, பெருமுச்சி, செய்யூர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செய்யூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தே கிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபர் பிடித்து விசாரித்தனர். அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்து 200 கிராம் கஞ்சாவை போலீ சார் பறிமுதல் செய்தனர்.
- ரோந்து பணியில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மர்மநபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் இன்று கிரிவலப் பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நித்தியானந்தா ஆசிரமம் அருகே கிரிவலப்பாதையில் காவி உடை அணிந்த ஒருவர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
அவரை போலீசார் சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கஞ்சா பறிமுதல்
விசாரணையில் அவர், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, ஜீவா நகரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 48) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புடைய கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் ஆந்திராவில் கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து திருவண்ணாமலையில் சாமியார் போல் வேடமணிந்து கஞ்சா விற்றது தெரிந்தது.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவை கைது செய்தனர். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.