என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neem tree"

    • அதிகாலையில் எழுந்து வழக்கம்போல் முருகன் தனது மொபட்டில் வெளியே சென்றவர் மீண்டும் காலை வீடு திரும்பினார்.
    • அப்போது வீட்டின் முன்புறம் இருந்த தேனீக்கள் அவரை சூழ உடனடியாக அங்கிருந்து வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை காமராஜர் வீதியில் ஆற்றோரத்தில் குடியிருப்பவர் முருகன் (60). முடி திருத்தும் கூலித்தொழிலாளி. இவர் தனியாக குடியிருந்து வருகிறார்.

    இவரது வீட்டின் எதிரே ஒரு வேப்ப மரம் உள்ளது. இன்று அதிகாலையில் எழுந்து வழக்கம்போல் முருகன் தனது மொபட்டில் வெளியே சென்றவர் மீண்டும் காலை 8 மணிக்கு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்புறம் இருந்த தேனீக்கள் அவரை சூழ உடனடியாக அங்கிருந்து வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டார். பின்னர் அவ்வப்போது வெளியே எட்டி பார்த்துள்ளார்.

    வெளியே வந்தால் தேனீக்கள் அவரை நோக்கி வருவதால் அவர் மீண்டும் வீட்டுக்குள்ளேயே சென்று விட்டார்.

    அதனால் அவர் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். இது குறித்து செல்போன் மூலம் அவருக்கு தெரிந்தவர் களுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இருப்பினும் அப்பகுதிக்கு செல்ல மற்றவர்களும் அச்சப்படுகின்றனர்.

    மேலும் ஆற்றங்கரையில் ஆடு, மாடு மேய்ப்பவர்களும் அவ்வழியே மரத்தை ஒட்டியவாறு தான் செல்ல வேண்டும். ஆனால் இதுவரை அப்பகுதியில் யாரும் செல்லவில்லை.

    இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வேப்பமரத்திற்கு மஞ்சள், சந்தனம் பூசி, குங்குமம் இட்டு தீபாராதனை காட்டி அக்கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
    • வேப்ப மரத்தில் இருந்து வடிந்த பாலை மக்கள் ஆர்வமுடன் தண்ணீ பாட்டிலில் பிடித்து செல்கின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆத்தூர் கிராமத்தில், கோபால் என்பவருக்கு சொந்தமான வேப்பமரத்தில் பால் போன்ற திரவம் இன்று காலை முதல் வெளி வந்தது.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வமுடன் கூட்டம் கூட்டமாக சென்று வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதை வியப்புடன் கண்டு வருகின்றனர்.

    இதையடுத்து அந்த வேப்பமரத்திற்கு மஞ்சள், சந்தனம் பூசி, குங்குமம் இட்டு தீபாராதனை காட்டி அக்கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டனர். வேப்ப மரத்தில் இருந்து வடிந்த பாலை அந்தப் பகுதி மக்கள் ஆர்வமுடன் தண்ணீ பாட்டிலில் பிடித்து செல்கின்றனர்.

    மேலும் இதனை அறிந்த சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் சாரை சாரையாக வந்து வேப்பமரத்தை வழிபட்டு, பாலை பிடித்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. 

    • மரத்தின் வளர்ச்சிக்கு ஹியூமிக் ஆசிட் 1 கிலோவும், கூடுதல் வளர்ச்சிக்கு வேப்ப புண்ணாக்கு 5 கிலோவும் அந்த பள்ளத்தில் போடப்பட்டது.
    • சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வேரோடு சாய்ந்த மரத்தை நட்டு முடித்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள முகமது அலி தெருவில் கோலம் கொண்ட அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா, ஜாத்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த கோவிலின் முன்பு 150 ஆண்டு பழமையான வேப்பமரம் உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதில் கோவில் முன்பு இருந்த பழமையான வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

    அந்த மரத்தை அதே இடத்தில் நட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்த வேண்டுகோளை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ரா தேவி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி கோவில் தக்கார் பிரகாஷ், மற்றும் வேளாண்மை துறை சார்பில் விஜயகாந்த், மின்சாரத்துறை சார்பில் உதவி பொறியாளர் தட்சிணா மூர்த்தி உள்பட அதிகாரிகள் வேரோடு சாய்ந்த வேப்ப மரத்தை மீண்டும் அதே இடத்தில் நடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    சாய்ந்த மரத்தின் கிளைகளை முழுவதுமாக முதலில் அகற்றினர். பின்னர் அந்த இடத்தில் 5 அடி ஆழத்திற்கு வேர்கள் ஊடுருவும் பகுதி வரை ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத கிரேன் உதவியுடன் வேப்பமரத்தை அதே இடத்தில் நட்டனர். பணி நடைபெற்றபோது, மரம் மின்கம்பத்தின் மீது படாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    மேலும் வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் பரிந்துரையின் பேரில் காப்பர் ஆக்சி குளோரைடு 50 சதவிகித சத்து பவுடர் அரை கிலோவில் மரத்தின் வேரின் அடி பாகத்தில் நன்கு நனையும்படி மெழுகு பதத்தில் பூசப்பட்டது. மரத்தின் வளர்ச்சிக்கு ஹியூமிக் ஆசிட் 1 கிலோவும், கூடுதல் வளர்ச்சிக்கு வேப்ப புண்ணாக்கு 5 கிலோவும் அந்த பள்ளத்தில் போடப்பட்டது.

    சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வேரோடு சாய்ந்த அந்த மரத்தை நட்டு முடித்தனர். இதனை கண்டு அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அந்த மரத்திற்கு பக்தர்கள் மஞ்சள், குங்குமம் பூசி வழிபட்டு சென்றனர்.

    • மூதாட்டி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை கண்ட பொதுமக்கள் சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மரத்தில் தூக்கு போட்டு மரத்தில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த மூதாட்டி உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த மூதாட்டி பச்சை கலர் பூ போட்ட சேலையால் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற எந்த விபரமும் தெரியவில்லை. இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அரச மரத்திற்கும் வேட்டியும், வேப்பமரத்திற்கு புடவையும் கட்டி பூஜைகள் செய்யப்பட்டது.
    • திருமண தடை உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வாய்மேடு சிந்தாமணிக்காடு பகுதியில் உள்ள வேம்படி மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடைபெற்றது.

    முன்னதாக அரசு, வேம்பு மரங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராத னைகள் நடைபெற்றது.

    பின், அரச மரத்திற்கும் வேட்டியும், வேப்பமரத்திற்கு புடவையும் கட்டி பூஜைகள் செய்யப்பட்டு வேப்பமரத்திற்கு சிவாச்சாரியார் மூலம் தாலி கட்டப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்து கொண்டால் திருமண தடை உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    முடிவில் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

    • காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது.
    • தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தை சி.ஆர்.சி டெப்போ அருகில் எம்ஜிஆர் நகர் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோயிலில் முனீஸ்வரர், நாகம்மன் சன்னதிகளும் பரிவார தெய்வங்களாக உள்ளன. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். இங்கு சுமார் 40 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் உள்ளது.

    இந்நிலையில் இந்த வேப்பமரத்தில் இருந்து திடீரென வெள்ளை நிறத்தில் பால் வடிந்தது. தொடர்ந்து இடைவிடாமல் பால் வடிந்து வருகிறது.

    தகவல் அறிந்த பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டு வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தை கண்டு வியந்து தரிசனம் செய்து வருகின்றனர். பலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர்.

    இது பற்றி பக்தர்கள் கூறும்போது, காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது. தற்போது 3 இடங்களில் வடிந்து ஓடி கொண்டிருக்கிறது என்றனர்.

    தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது. 

    • ஏற்காடு அடிவாரம், கோரிமேடு, ஓமலூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது.
    • மழையினால் குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்திற்கு எதிரே இருந்த நாகராஜன்- லட்சுமி தம்பதிக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.

    சேலம்:

    தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயிலும் கொளுத்தி வருவதால், பொதுமக்கள் யாரும் பகல் நேரத்தில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருக்கிறது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பல நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவானது. காலை 7 மணிக்கு தொடங்கும் வெயில் மாலை 4 மணி வரை அனலாக கொளுத்தியது. இரவிலும் காற்று குறைந்து வெப்ப அலை வீசியது. இதனால் இரவில் தூக்கமின்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று 1.30 மணி அளவில் இடியுடன் கூடிய கன மழை பெய்த தொடங்கியது. இந்த மழை மதியம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. கன மழையால் சேலம் 4 ரோடு, கலெக்டர் அலுவலகம், சாரதா கல்லூரி சாலை, செவ்வாய்ப்பேட்டை, நெத்திமேடு உள்ளிட்ட மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    புறநகர் பகுதிகளான எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி, தேவூர், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, அரசிராமணி, கல்வடங்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் காற்றினால் வாழை மரங்கள், பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தது.

    ஏற்காடு, ஏற்காடு அடிவாரம், கோரிமேடு, ஓமலூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது.

    பல நாட்களுக்கு பிறகு பெய்த இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது. வெப்ப சலனம் நீங்கி இரவில் வீடுகளில் குளிர்ச்சி நிலவியது.

    மேட்டூரில் நேற்று சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில் மாலை 3 மணிக்கு மேட்டூர், ஆர்.எஸ்.புரம், பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் உள்ள 60 ஆண்டு பழமையான பெரிய வேப்பமரம் ஒன்று சாய்ந்து சாலையில் சென்ற அரசு பஸ் மீது விழுந்தது. இந்த பஸ் சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஆகும்.

    மரம் சாய்ந்து விழுந்ததில் பஸ்சின் முன்புற கண்ணாடிகள் உடைந்தன. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். சாலையோரம் மின் கம்பத்தில் உள்ள மின் கம்பி மீதும் வேப்பமர கிளைகள் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் பஸ்சில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    நடுரோட்டில் பஸ்சின் மீது இந்த வேப்பம் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டூரில் இருந்து சேலம், தர்மபுரி செல்லும் வாகனங்கள் தங்கமாபுரி பட்டணம், சிட்கோ, கருமலைக்கூடல் வழியே உள்ள மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேட்டூர் தீயணைப்பு குழுவினர் மரத்தை வெட்டி அகற்றினர். ஒரு மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, பள்ளிப்பாளையம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, ராசிபுரம், புதுச்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல் குமாரபாளையத்தில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் குமாரபாளையம் நகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் குமாரபாளையம் சுற்றுப்புற பகுதிகளான எம்.ஜி.ஆர். நகர், சானார்பாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், சீராம்பாளையம், ஆல ங்காட்டு வலசு, கல்லாங்காடு வலசு, சத்யா நகர், தட்டான் குட்டை, வேமன் காட்டு வலசு, வளையக்காரனூர், வட்டமலை, சடைய ம்பாளையம், சாமிய ம்பாளையம், கத்தேரி மற்றும் புளியம்பட்டி உள்பட பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்ததையொட்டி பொதுமக்களும் மற்றும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த மழையினால் குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்திற்கு எதிரே இருந்த நாகராஜன்- லட்சுமி தம்பதிக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் தப்பினர். பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நகரில் மின்சாரம் தடைபட்டது. 

    • மரத்தை சுற்றி சந்தனம் குங்குமம் தேய்த்து வழிபாடு செய்தனர்.
    • மரத்தில் பால் வடிவதை மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பெருங்குளம் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு மேல்புறத்தில் சிவகளைக்கும், பெருங்குளத்துக்கும் இடையே குளம் உள்ளது.

    இந்த குளத்துக்கரை பகுதியில் உள்ள ஒரு வேப்பமரத்தில் இருந்து நேற்று மாலை பால் வடிந்துள்ளது. இதை அந்த வழியாகச் சென்றவர்கள் அருகே உள்ள ஊர்மக்களிடம் கூறியுள்ளனர்.


    இதையடுத்து அங்கு வந்த ஊர்மக்கள் அம்மன் விரும்பும் மரமான வேப்பமரத்தில் இருந்து பால் வருவதை பார்த்து அம்மன் தான் இதை உருவாக்கி உள்ளார் என்று அந்த மரத்தை சுற்றி சந்தனம் குங்குமம் தேய்த்து சூடம் ஏற்றி வழிபாடு செய்துள்ளனர். தொடர்ந்து நேற்றும் பால் வடிந்ததை பார்த்து அவர்கள் வழிபாடு செய்தனர்.

    அதை பார்த்து அந்த வழியாகச் சென்ற இளம்பெண் தனது தாயுடன் ஆட்டோவில் வந்துள்ளார். இங்கு நின்ற கூட்டத்தை பார்த்து ஆர்வத்துடன் அந்த இடத்தில் இறங்கி சாமி கும்பிட்டு விட்டு சென்றார். அந்த நேரத்தில வேப்பமரத்தில் இருந்து நுரை பொங்கியபடி பால் போன்ற வெள்ளை நிறத்தில் வடிந்தது.

    இந்த செய்தி அந்த பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் காட்டுத் தீ போல் பரவவும் ஊர்மக்கள் மற்றும் அந்த வழியாக சாலையில் செல்பவர்கள் என அனைவரும் இறங்கி வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதை ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், வேப்பமரத்தில் இருந்து பால் வடிவது மிகவும் அபூர்வமாகும். இது தெய்வ சக்தியான மரம் என்று கூறுகிறார்கள்.

    அரச மரமும், வேப்ப மரமும் அருகிலேயே வளர்ந்ததால் தெய்வமாக வணங்கி வந்த கிராம மக்கள், ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சமுத்திராபட்டியை சேர்ந்தவர் கைலாசம். விவசாயி. இவரது மனைவி அழகம்மாள். இவர்களுக்கு 6 மகள்கள் உள்ளனர். தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்பிய கைலாசம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு பொதுவான கோம்மைபட்டி மந்தை பகுதியில் அரச மரக்கன்றை நட்டு வைத்து அதை பிள்ளைபோல் நினைத்து வளர்த்து வந்தார்.

    சில நாட்களிலேயே அரச மரக்கன்றின் அருகிலேயே வேப்ப மரக்கன்றும் தாமாகவே வளர்ந்தது. அரச மரமும், வேப்ப மரமும் அருகிலேயே வளர்ந்ததால் கிராம மக்கள் அதனை தெய்வமாக வணங்கி வந்தனர். ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தை வரம் வேண்டிய ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் முருகன் வைகாசி மாத வளர்பிறை முகூர்த்த நாளை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், தொடர் மழை பெய்ய வேண்டியும் அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இது தொடர்பாக மரங்களை பராமரித்து வரும் கைலாசத்திடம் தெரிவித்தனர்.

    இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டது. அதில் மணமகன் அரசன் என்றும், மணமகள் வேம்பு நாயகி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. சமுத்திராப்பட்டி, கோம்பைபட்டி, சம்பபட்டி, பூதகுடி, அம்மாபட்டி, சடையம்பட்டி, புதுப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வினியோகம் செய்யப்பட்டது.

    இதனையடுத்து கிராம மக்கள் அந்தப் பகுதிக்கு திரண்டு வந்தனர். அரச மரத்துக்கு பட்டு வேட்டியும் வேப்ப மரத்துக்கு சேலையும் கட்டப்பட்டது. பின்னர் திருமண சடங்கு நடந்தது. மேலும் இரண்டு மரங்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டன. தீபாராதனையை தொடர்ந்து மந்திரங்கள் ஓத மேளதாளம் முழங்க கிராம மக்கள் புடைசூழ அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் நடந்தது.

    புதுக்கோட்டை மாவட்டம் தேனிமலை முருகன் கோயில் குருக்கள் வேப்ப மரத்திற்கு தாலி கட்டி திருமணத்தை நடத்தி வைத்தார். வினோத திருமணத்துக்கு விருந்தாளிகளாக வந்து இருந்த கிராம மக்களுக்கு அறுசுவை உணவுடன் விருந்து நடந்தது குறிப்பிடத்தக்கது.



    ×