search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய ரெயில்வே மந்திரி"

    சீர்காழி வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் மத்திய மந்திரிக்கு ஆயிரம் அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
    சீர்காழி:

    சீர்காழியில் கடந்த 2 ஆண்டுகளாக 13க்கும் மேற்பட்ட விரைவு ரெயில்கள் நின்று செல்வதில்லை. இதனை வலியுறுத்தி அனைத்து ரெயில்களும் நின்று செல்ல பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். 

    அதன்படி வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஞானமணி, செயலாளர் வெங்கட்ராஜ், பொருளாளர் சத்தியநாராயணன் மற்றும் மதி, கார்த்திக் உள்ளிட்டோர் கோரிக்கைகள் அடங்கிய 2 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் எழுதப்பட்ட நிலையில் தலைமை அஞ்சல் அலுவலகம் மூலம் முதல் கட்டமாக ஆயிரம் அட்டைகளை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஸ்ணவுக்கு அனுப்பி வைத்தனர்.

    ×