search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுத்தேர்வு"

    • பொதுத்தேர்வு பணியில் நாள்தோறும் 40,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
    • போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 56 பேர் மீது இறுதி தீர்ப்பு வர உள்ளது.

    சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்பான கண்காணிப்பு அலுவலர்கள், ஆய்வு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஆலோசனையின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்,

    * பார்வை மாற்றுத் திறனாளிகள் 12-ம் வகுப்பு தேர்வை கணினி வழியாக எழுத உள்ளனர்.

    * பார்வை திறன் குறைபாடு உள்ள மாணவரின் கோரிக்கையை ஏற்று கணினி வழியில் தேர்வெழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    * 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.21 லட்சம் பேரும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.23 லட்சம் பேரும் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9.13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

    * பொதுத்தேர்வு பணியில் நாள்தோறும் 40,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர் என்று கூறினார்.

    இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பள்ளிக்கல்வித்துறையில் 238 போக்சோ வழக்குகள் உள்ளன. அதில் 11 பேர் குற்றமற்றவர்கள். 7 பேர் இறந்து விட்டார்கள்.

    * போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 56 பேர் மீது இறுதி தீர்ப்பு வர உள்ளது.

    * புகார்கள் தொடர்பாக தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த பள்ளிக்கூடமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரும் பயப்பட தேவையில்லை. உங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

    * தவறு என்று வரும்போது அது எப்படிப்பட்ட தவறாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் விதத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

    • போட்டியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சியுங்கள்.
    • மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம் யாருக்கும், எந்த நேரத்திலும் ஏற்படலாம்.

    புதுடெல்லி:

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி ஆண்டுதோறும் கலந்துரையாடி வருகிறார். அந்த வரிசையில் இந்த ஆண்டும் கடந்த 10-ந்தேதி மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

    அதேநேரம் இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. அதன்படி உள்ளரங்கில் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியை இந்த ஆண்டு பூங்கா ஒன்றில் பிரதமர் மோடி நடத்தினார்.

    இதைப்போல, பிரதமர் மோடி மட்டுமே மாணவர்களுடன் கலந்துரையாடி வந்த நிலையில், இந்த முறை பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களையும் மாணவர்களுடன் கலந்துரையாடி தங்கள் அனுபவங்களை அவர்களுடன் பகிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அந்தவகையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியதுடன், தனது சிறுவயது போராட்டங்கள் மற்றும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

    நேற்று ஒளிபரப்பப்பட்ட இந்த கலந்துரையாடலில் தீபிகா படுகோன் மாணவர்களிடம் கூறியதாவது:-

    போட்டிகளும், ஒப்பிடுதலும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைக்கிறேன். போட்டி ஒன்றும் மோசமானது கிடையாது. மாறாக நமது பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொண்டு பலத்தை அதிகரிக்கவும், பலவீனத்தை மாற்றவும் உதவுகிறது.

    எனவே போட்டியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சியுங்கள். அவர்களை விட வித்தியாசமாக என்ன செய்ய முடியும் என்பதைப் பாருங்கள்.

    மன அழுத்தம் கண்ணுக்கு புலப்படாது. ஒரு காலத்தில் நான் ஓய்வின்றி உழைத்துக்கொண்டு இருந்தேன். 2014-ம் ஆண்டு ஒரு நாள் மயங்கி விழுந்து விட்டேன். அப்போது பெங்களூருவில் இருந்து என்னை பார்ப்பதற்காக மும்பை வந்த எனது அம்மா, நான் சரியாக இல்லை என்பதை உணர்ந்து விட்டார்.

    எனக்கு எதாவது நடந்ததா? என அவர் கேட்டார். ஆனால் நான், 'அப்படி எதுவும் இல்லை, அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் முற்றிலும் ஆதரவற்றவளாகவும், நம்பிக்கையற்றவளாகவும் உணர்கிறேன். எனக்கு இனி வாழ விருப்பமில்லை' எனக்கூறினேன். அப்போது எனது நிலையை உணர்ந்து கொண்ட என் அம்மா ஒரு மனநல மருத்துவரை அழைக்க முடிவு செய்தார். அப்போது நான் அதிர்ஷ்டசாலியாக உணர்ந்தேன்.

    மனநலம் என்பது நம் நாட்டில் ஒரு களங்கமாக இருந்தது. இந்த நோயைப் பற்றிப் பேச ஆரம்பித்தவுடன், நான் மிகவும் சுதந்திரமாகவும், லேசாகவும் உணர ஆரம்பித்தேன். அங்கிருந்து, மனநல விழிப்புணர்வை நோக்கிய எனது பயணம் தொடங்கியது. மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம் யாருக்கும், எந்த நேரத்திலும் ஏற்படலாம்.

    எனவே உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் தேர்வுக்கு முன்தினம் இரவு உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள். உங்கள் மன அழுத்தத்துக்கான காரணத்தை கண்டறியுங்கள். அதை நம்பிக்கையான ஒருவரிடம் தெரிவியுங்கள்.

    பிரதமர் மோடிஜி தனது 'தேர்வு வீரர்கள்' புத்தகத்தில் கூறியிருப்பது போல, நீங்கள் தேர்வுக்காக தயாராகும்போது சிறப்பாக உணரத்தொடங்குவீர்கள். ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.

    தூக்கம் மிகவும் முக்கியமானது. அது இலவசமாகக் கிடைக்கும் ஒரு வலிமை. வெளியே சென்று போதுமான சூரிய ஒளி மற்றும் புதிய காற்றை பெற வேண்டும்.

    திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியை நான் ஒரு குறிப்பிட்ட முறையில் செய்திருந்தால், அடுத்த முறை நான் அதை எப்படி வித்தியாசமாகச் செய்வது, சிறப்பாக செய்வது என திட்டமிடுவேன். அதைப்போல நீங்களும் உங்களுக்கு சவால் விட்டு செயல்படுங்கள்.

    இவ்வாறு நடிகை தீபிகா படுகோன் கூறினார்.

    மேலும் தனக்கு இந்த வாய்ப்பு வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கும் அவர் நன்றி கூறினார்.

    ஜூன் 23-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவ-மாணவிகள் 10, 11, 12-ம் வகுப்பு பொது தேர்வினை எழுதி முடித்துள்ளனர்.

    மே மாதம் 5-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. சுமார் 28 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்.

    பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு இடையே மாற்றி அனுப்பப்பட்டன. முகாம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பாடம் மற்றும் மொழி வாரியாக திருத்தம் செய்யப்படுகிறது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. 83 முகாம்களில் இந்த பணி நடைபெறுகிறது.

    8 லட்சத்து 37 ஆயிரம் மாணவ-மாணவிகள் விடைத்தாள்களை 76 ஆயிரம் ஆசிரியர், ஆசிரியைகள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் 87 முகாம்களில் 87 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 9 லட்சத்து 56 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர்.

    விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் மிகுந்த கவனத்துடன் ஈடுபட வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தேர்வுத்துறை விதித்துள்ளது. இதற்காக கையேடு வெளியிடப்பட்டு விடைத்தாள் முகாம் அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் என்னென்ன பணிகள் என்பதை பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

    மண்டல முகாம் அலுவலர், முகாம் அலுவலர், முதன்மை தேர்வாளர் பணிகள், கூர்ந்தாய்வு அலுவலரின் பணிகள், உதவி தேர்வாளரின் பணிகள் என தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு பொதுவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மதிப்பீட்டு எண் மிக முக்கியமாக மற்றும் இன்றியமையாத பணியாகும். மைய மதிப்பீட்டு பணியில் ஒவ்வொரு வேலையும் சுமூகமாகவும், சரியாகவும் மற்றும் கடும் மந்த தன்மையுடன் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    முகாம் அலுவலர் தனது மைய மதிப்பீட்டு பணியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு வேகமாகவும், துல்லியமாகவும், விழிப்புணர்வுடனும் செய்யப்பட்டு முகாமினை உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும். முகாம் அலுவலரே முகாம்களுக்கு முழு பொறுப்பு. மைய மதிப்பீட்டு பணி நடைபெறும் முகாம்களுக்கு வெளிநபர் யாரையும் அனுமதிக்க கூடாது.

    முகாமில் நடைபெறும் எந்தவொரு குளறுபடிகளும் முகாம் அலுவலரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    விடைத்தாள்கள் 10 நாட்களுக்குள் திருத்தி முடிக்கப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கும். ஜூன் 23-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ×