என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு"
- ஈரோடு பகுதியில் 568 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் புதிதாக பட்டு வளர்ப்பு சாகுபடிக்குள் வந்துள்ளனர்.
- ஈரோடு உதவி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 100 விவசாயிகள், தாளவாடி பகுதியில் 15 விவசாயிகளுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் குச்சி வெட்டும் எந்திரம், புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கப்படும்.
ஈரோடு:
பட்டு வளர்ச்சி துறை ஈரோடு உதவி இயக்குனர் சிவநாதன், தாளவாடி உதவி இயக்குனர் திலகவதி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பகுதி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5,480 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 3,000 ஏக்கருக்கு மேல் மல்பெரி சாகுபடி செய்து பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.
நடப்பாண்டில் ஈரோடு பகுதியில் 568 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் புதிதாக பட்டு வளர்ப்பு சாகு படிக்குள் வந்துள்ளனர்.
தற்போது வெண் பட்டுக்கூடு ஒரு கிலோ 650 முதல் 750 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையாகிறது. சேதமடைந்த சுமாரான பட்டுக்கூடுகள் கூட ஒரு கிலோ 580 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர்.
கோபிசெட்டிபாளையம், தாராபுரம், காங்கேயம் பகுதியில் 'மொபைல் மார்க்கெட்டிங் பணியாளர்கள்' நியமித்துள்ளதால் பட்டு உற்பத்தி அமைப்பு உள்ள இடத்துக்கு அருகிலேயே அவற்றை விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்ல ஏற்பாடு செய்கிறோம். இதனால், விவசாயிகள், வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது.
விவசாயிகளை ஊக்கப்படுத்தி பட்டு வளர்ப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு தலா ரூ.72,500 மதிப்பிலான தளவாட கருவிகள் வழங்குகிறோம்.
இந்தாண்டும் ஈரோடு உதவி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 100 விவசாயிகள், தாளவாடி பகுதியில் 15 விவசாயிகளுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் குச்சி வெட்டும் எந்திரம், புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கப்படும்.
கூடுதலாக மினி கட்டர், மருந்து அடிக்கும் ஸ்பிரேயர் போன்றவை வழங்க உள்ளோம். மீதமுள்ள தொகைக்கு பிற உபகரணங்கள் வழங்கப்படும். இவற்றுக்கு டெண்டர் முடிந்துள்ளதால் விரைவில் விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
- கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
- ஏக்கருக்கு ரூ.10,000/- என்ற மானியத் தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம்கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம்சேலம்:
கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டிற்கான புதிய அறிப்பில் கால்ந டைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ரூ.1.00 கோடி செலவில் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 900 ஆதி திராவிடர் மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 லட்சம் மானியமும், 100 பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம் மானியமும் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது உறுப்பினராக சேர வேண்டும். பயனாளிக்கு விதைத் தொகுப்பு, புல் கறணைகளுடன் அத்தீவனங்களை வளர்க்கத் தேவையான பயிற்சி, கையேடு மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றின் செலவினங்கள் உள்ளிட்டவை ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000/- என்ற மானியத் தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, எருமாபாளையம் சாலை, சீலநாயக்கன்பட்டி, சேலம் என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
- கிசான் சம்மான் நிதி பெறும் விவசாயிகள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
- மேலும் பி.எம்.கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும்.
ஈரோடு:
பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி பெறும் விவசாயிகள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத் தெகையாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆதார் மூலம் விபரங்களை சரி செய்தால் மட்டுமே பி.எம்.கிசான் திட்டத்தில் அடுத்த (13-வது) தவணைத்தொகை பெற முடியும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தற்போது சுமார் 28,000 தகுதியான விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாமல் உள்ளனர்.
பி.எம்.கிசான் நிதித்திட்டத்தில் பயன் பெற்றுவரும் அனைத்து விவசாயிகளும் தங்களது ஆதார் எண்ணை சரிபார்க்க வேண்டும். அதற்கு தங்களது ஆதார் எண்ணுடன் செல்பேசி எண்ணை ஏற்கனவே இணைத்துள்ள விவசாயிகள் www.pmkisan.gov.in என்ற பி.எம்.கிசான் வலைதளத்தில் தங்களின் ஆதார் எண் விவரத்தினை உள்ளீடு செய்தால் ஓ.டி.பி. எண் தங்களது செல் போனுக்கு அனுப்பப்படும்.
அந்த ஓ.டி.பி. எண்ணை உள்ளீடு செய்து ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இது நாள் வரை ஆதார் எண்ணுடன் செல்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று ரூ.15 செலுத்தி பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களின் விரல் ரேகையினை பதிவு செய்து விவரங்களை சரிபார்த்து உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.
விவசாயிகள் தங்கள் பகுதி அஞ்சல் அலுவலகம் மூலமும் ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைத்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பி.எம்.கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும்.
எனவே இத்திட்டத்தில் பயனடைந்து வரும் அனைத்து விவசாயிகளும் அடுத்த (13-வது) தவணைத்தொகையை பெறுவதற்கு தங்கள் ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்வதுடன் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டு ள்ளதால் உடனடியாக துரிதமாக செயல்பட்டு வரும் 31-ந் தேதிக்குள் பதிவை புதுப்பித்து திட்டப்பயன்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் வட்டி இல்லாத பயிர் கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு.
- நபர் ஜாமீன் பேரில் ரூ.1,60,000-வரையிலும், அடமானத்தின் பேரில் ரூ.3,00,000- வரையிலும், பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மீராபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில், மாவட்டங்களில் உள்ள 370 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 9 லேம்ப் சங்கங்கள், 4 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 1 உழவர் பணி கூட்டுறவு சங்கம் மூலம் விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் வட்டி இல்லாத பயிர் கடன் பெறலாம். மேலும் இதுவரை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இல்லாதவர்கள் புதிய உறுப்பினராக சேர்ந்து கடன் பெற்று கொள்ளலாம்.
கடன் மனுவுடன் நடப்பு பசலியில் பயிர் சாகுபடி செய்ய உள்ள பயிர் குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று பெற்று இணைக்க வேண்டும். நடப்பு பசலியில் பயிர் சாகுபடி செய்ய உள்ள பயிர் குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று பெற இயலாத நேர்வில், கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சென்ற ஆண்டு பயிர் சாகுபடி செய்ததற்கான அடங்கல் பெற்று நடப்பாண்டில் சாகுபடி செய்ய உள்ள பயிர் விபரம் குறித்து சுய உறுதிமொழி சான்றுடன்விண்ணப்பிக்க வேண்டும்.
நபர் ஜாமீன் பேரில் ரூ.1,60,000-வரையிலும், அடமானத்தின் பேரில் ரூ.3,00,000- வரையிலும், பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் வசதிக்கேற்ப நிலம் அல்லது குடியிருப்பு பகுதியிலுள்ள கூட்டுறவு சங்கங்களை அணுகி பயிர்க்கடன் பெற்றுக் கொள்ளலாம். எனவே, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி பயிர்க்கடன் பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- நடப்பாண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 178 ஹெக்டேர் பரப்பளவுக்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
- 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 178 ஹெக்டேர் பரப்பளவுக்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி சிறு, குறு விவசாயிகள் 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.
விருப்பமுள்ள விவசாயிகள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், நிலவரைபடம், சிறு குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்க உள்ள விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மெயின் பைப் லைன் அமைக்க அதிகபட்சமாக ரூ.10 ஆயிரமும், புதிதாக
பயன்பாட்டிற்கு கொண்டு
வரும் கிணறு அல்லது போர்வெல்லில் மின்
மோட்டார் பொருத்திக்
கொள்ள ரூ.15 ஆயிரம் மற்றும் பாசனத்திற்காக நீர் தேக்க தொட்டி 116 கன அடி அளவில் அமைத்திட மானியமாக ரூ.40 ஆயிரமும் வழங்கப்படும் என கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சின்னதுரை தெரிவித்து உள்ளார்.
- விளை நிலங்களில் வரப்புகள் அல்லது பயிர்களுக்கு இடையில் மரக்கன்றுகள் நடவு செய்ய இலவசமாக வழங்கப்பட உள்ளது.
- மொத்தம் 19,000 மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்ற புதிய வேளாண்மை காடுகள் வளர்ப்பு திட்டத்தில் விளை நிலங்களில் வரப்புகள் அல்லது பயிர்களுக்கு இடையில் அல்லது முழுமையாக மரக்கன்றுகள் நடவு செய்ய இலவசமாக வழங்கப்பட உள்ளது.
கொடுமுடி வட்டாரத்திற்கு சந்தனமரம் 2,150, செம்மரம் 6,400 , ரோஸ்வுட் 1,800, மகாகனி 4,800, பெருநெல்லி 1,600, கடம்பு 100, கடுக்காய் 100, வேங்கை 100, நாவல் 300, மருதம் 100, தான்றிக்காய் 100, இலுப்பை 100, புளியமரம் 200, இலவங்கம் 100, வாகை 150, புங்கம் 500, வில்வம் 100, விளாமரம் 100, எட்டி மரம் 100, தூபமரம் 100 என மொத்தம் 19,000 மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் மரக்கன்று களை இலவசமாக பெறுவதற்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரைஅணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம். கொடுமுடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்து, பரிந்துரை படிவம் பெற்ற பின் அலுவலகத்தில் அறிவிக்கப்படும் நாற்றங்காலில் நேரடியாக சென்று மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா தெரிவித்துள்ளார்.
- பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம் கூடச்சேரி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
- மேலும் தீவன வகைகள், மாட்டுத் தீவனத்தில் குறைந்த விலையில் அசோலா மற்றும் அசோலா சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம் கூடச்சேரி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
அசோலாவில் அதிகளவு புரதச்சத்து இருப்பதால் கோழி மற்றும் கால்ந
டைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. அசோலா வளர்ப்பு செயல் விளக்கத்தினை பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில், கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் கலந்து கொண்ட தனியார் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள் செய்து காண்பித்தனர்.
மேலும் தீவன வகைகள், மாட்டுத் தீவனத்தில் குறைந்த விலையில் அசோலா மற்றும் அசோலா சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவீனா, வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ஆகியோர் செய்திருந்தனர்.
இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
- அங்கக சான்று உதவி இயக்குநர் விதைப்பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார்.
- தரமான சான்று பெற்ற விதைகளை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய பருவத்தில் விதைப்பு செய்வதற்கு தேவைப்படும் தரமான சான்று பெற்ற விதைகளை வழங்கும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அவ்விதைப்பண்ணை கள் அனைத்தும் வளர்ச்சி ப்பருவம், பூ பருவம் மற்றும் முதிர்ச்சி பருவங்களில் விதைச்சான்று அலுவலர்களால் வய லாய்வு மேற்கொ ள்ளப்பட்டு அவ்விதை களின் தரம் உறுதிபடு த்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் பவானி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஓடத்துறை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து வம்பன் 10 சான்று நிலை விதைப்பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் விதைப்பண்ணையின் விதை ஆதாரம், பிற ரக விதைகள் கலப்பு, களை மற்றும் பூச்சிநோய் மேலாண்மை ஆகியவை ஆய்வு செய்ய ப்பட்டு உற்பத்தியாளர் மற்றும் விவசாயிக்கு தரமான சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நு ட்பங்களை வழங்கினார்.
இதேபோல பவானி அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வை யிட்டு விதை இருப்பு விபரம், வயல்மட்ட விதைக்குவியல் அளவு, விதை சுத்திப்பணி, சுத்தி செய்யப்பட்ட விதைக்குவி யல்கள், சிப்பங்களின் எடை, ஈரப்பதம் சரிபார்த்தல் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
அனைத்து விதைச்சான்று நடைமுறை களையும் பின்பற்றி விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகளை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டுமென அதிகாரி களுக்கு உதவி இயக்குநர் மோகனசுந்தரம் உத்தர விட்டார்.
ஆய்வின் போது, விதைச்சான்று அலுவலர் தமிழரசு, உதவி விதை அலுவலர் குருமூர்த்தி, வேளாண்மை அலுவலர் முருகேசன், கண்கா ணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு வயது உச்ச வரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டது.
- மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
ஈரோடு:
உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெறும் விவசாயி களின் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தற்போது பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபட்டு வருபவர்கள் முதியவர்களாக மட்டுமே இருப்பதால் விவசாயிகள் பெரும்பாலானோர் பயிர் கடன் பெற முடியாத சூழ் நிலை ஏற்பட்டது.
எனவே பயிர் கடன் பெறுவதற்கு விவசாயிக ளுக்கு வயது வரம்பை தளர்த்த வேண்டும் என விவசாயிகள், விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற கூட்டுறவு த்துறை மானியக் கோரிக்கை யின் போது கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு வயது உச்ச வரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அனைத்து மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
- ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட பெருங்குறிச்சி கிராமத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கும், மேலும் அனைத்து கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 1 ெஹக்டர் நிலமும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கபிலர்மலை வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம்-மானாவாரி பகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட பெருங்குறிச்சி கிராமத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கும், மேலும் அனைத்து கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயிர்கள் சாகுபடி மற்றும் தீவன பயிர்கள் பயிரிடுவதுடன் கறவை மாடு, தேனீ வளர்ப்பு, மண்புழு உர உற்பத்தி, பழச்செடிகள் வளர்ப்பு ஆகியவற்றுக்கு 50 சதவீதம் மானியம், அதாவது அலகு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 1 ெஹக்டர் நிலமும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கும், முன்பதிவுக்கும் கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தும் மரமாக பனை விளங்குகிறது.
- விவசாயிக்கும் அதிகப்பட்சம் 50 விதைகள், 15 நாற்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குனர் மரகத மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் மாநில மரமும், தமிழர்களின் வாழ்வோடு இணைந்தது பனை மரம். நிலத்தடி நீரை அதிகரித்தும், மண் அரிப்பை தடுத்தும், மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தும் மரமாக பனை விளங்குகிறது.
மண்ணுக்கு உகந்த மரமாக விளங்குவதுடன் அடி முதல் நுனி வரை பயனளித்து வாழ்வாதாரம் தருகிறது.
எனவே பனை சாகுபடியை ஊக்குவிக்க, ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் 30 ஆயிரம் மற்றும் நாற்றுகள் 250 வினியோகம் செய்யப்பட உள்ளது.
ஒவ்வொரு விவசாயிக்கும் அதிகப்பட்சம் 50 விதைகள், 15 நாற்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
விருப்பம் உள்ள விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது அருகே உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவல கத்தை தொடர்பு கொண்டும் பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- விவசாயிகளுக்கு பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் வழங்க ஒது க்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தாளவாடி வட்டாரத்தில் இக்கலூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது.
ஈரோடு:
வேளாண்மை எந்திர மயமாக்குதலின் உப இயக்கத் திட்டத்தின் கீழ் 2023-24-ம் நடப்பு நிதி யாண்டில் ஈரோடு மாவட்ட த்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் வழங்க ஒது க்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சிறு, குறு பெண் விவசாயிகள், ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவின ருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளது. இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்திற்கு 2023-2024-ம் ஆண்டில் 42 கிராம ஊராட்சியில் இத்திட்டம் செயல்படுத்த ப்பட உள்ளது. அதன்படி அம்மாபேட்டை வட்டா ரத்தில் சிங்கம்பேட்டை, ஓடப்பாளையம், பூதப்பாடி, படவல்கால்வாய், அந்தியூர் வட்டாரத்தில், கெட்டி சமுத்திரம், மூங்கில்பட்டி, பவானி வட்டாரத்தில் பருவாச்சி, வைரமங்கலம், ஆலத்தூர், பவானி சாகர் வட்டாரத்தில் மாதம் பாளையம், நொச்சிகுட்டை, புங்கார்.
கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் நாகதேவம் பாளையம், பெருந்தலையூர், குள்ளம்பாளையம், பாரியூர், நம்பியூர் வட்டாரத்தில் பொலவபாளையம், கடத்தூர், தாழ்குனி, சத்திய மங்கலம் வட்டாரத்தில் குமாராபாளையம், இக்கரை நகமம், புதுப்பீர்கடவூர். டி.என்.பாளையம் வட்டா ரத்தில் கொங்கர்பாளையம், புள்ளப்ப நாயக்கன் பாளை யம், தாளவாடி வட்டாரத்தில் இக்கலூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் செயல்படுத்த ப்படுகிறது.
ஈரோடு வட்டாரத்தில் பிச்சாண்டாம்பாளையம், சென்னிமலை வட்டாரத்தில் ஈங்கூர், குப்பிச்சிபாளையம், முகாசிபுலவன்பாளையம், குட்டப்பாளையம், கொடு முடி வட்டாரத்தில் அஞ்சூர், நஞ்சை கொளாநல்லி. மொ டக்குறிச்சி வட்டாரத்தில் குலவிளக்கு, குளூர், விள க்கேத்தி, பெருந்துரை வட்டாரத்தில் சிங்காநல்லூர், கருக்குபாளையம், பாப்ப ம்பாளையம், பெரிய வில்லாமலை, பொலவ நாயக்கன்பாளையம், பெரிய வீரசங்கிலி ஆகிய கிராம ஊராட்சிகள் தேர்வாகி உள்ளது.
இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மானி யத்தில் பவர்டில்லர் அல்லது களைஎடுக்கும் கருவி பெற உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல விப ரங்களுக்கு உதவி செயற் பொறியாளர், வேளா ண்மை ப்பொறியியல்துறை, ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்ப ங்களை உடனடியாக அலு வலகத்தில் பதிவு செய்து பயனடையலாம் என கலெ க்டர் ராஜகோபால் சுங்கார கேட்டு க்கொண்டுள்ளார்.