என் மலர்
நீங்கள் தேடியது "வேலை நிறுத்தம்"
- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
- இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன
கடலூர்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத ஊழியர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணி புரியும் அரசு பணியாளர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் ஏராளமானோர் பணிக்கு வரவில்லை. ஆனால் அரசு அலுவலகங்கள், ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. இந்த வேலை நிறுத்தத்தில் கடலூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும், கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
- சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர்.
- வேலை நிறுத்த போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் என்ற இடத்தில் கடந்த வாரம் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தாள். இந்த சம்பவம் மாநில அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு, ஏராளமானோர் காலியாகஞ்ச் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர். அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர். எனினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை.
வெளிநபர்களை கொண்டு வந்து காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பழங்குடியினர் சமூகத்தின் மீது அராஜகம் நடப்பதாக கூறி, மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் நாளை 12 மணி நேர பந்த் நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் சுகந்த மஜூம்தார் கூறுகையில், 'மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் பயங்கர ஆட்சியை கட்டவிழ்த்து விட்டுள்ளது. வடக்கு வங்காள மாவட்டங்களில் பழங்குடியினர் சமூகத்தின் மீது மாநில நிர்வாகம் மற்றும் ஆளும் கட்சியினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 12 மணி நேர பந்த் நடத்த முடிவு செய்துள்ளோம். இது போன்ற அட்டூழியங்கள், முன்னெப்போதும் இருந்ததில்லை. வேலை நிறுத்த போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும். மாணவர்களின் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் அவசரகால சேவைகள் வழக்கம்போல் இயங்கும்' என்றார்.
இந்த போராட்ட அழைப்பு தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேற்கு வங்காளத்தின் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளது.
- ஸ்விகி உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு.
- ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, வேலூர், ஆரணி, குடியாத்தம் மாவட்டங்களை சேர்ந்த ஸ்விகி மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
உணவு மற்றும் இதர பொருட்கள் வினியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உணவு டெலிவரி சேவை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
ஸ்விகி சேவையில் புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஸ்லாட் முறையை திரும்ப பெற்று, ஏற்கனவே வழங்கிவந்த "டர்ன் ஒவர்" தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஸ்விகி உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரேசன் கடை ஊழியர்கள் 14-ந்தேதி முதல் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
- 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் மாவட்ட தலைவருமான தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுவிநியோகத் திட்டத்திற்கு தனித்துறை, பொருட்களை பொட்டலங் களாக வழங்க வேண்டும், 60 வயது வரை பணி செய்து விட்டு பணிநிறைவு பெற்று வீட்டிற்கு செல்லும் போது எந்த பண பலனும் கிடைக் காமல் பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஓய்வூதியம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு மிகவும் திண்டாடுகிறார்கள். அவர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஒரு பொருளுக்கு இருமுறை பில் போடும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.
விற்பனை முனையங்களில் 4ஜி இணைப்பு வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் வழங்கப் பட்ட பின்னர் காலிப்பணியி டங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டுள்ளது.
இதனை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை மாநில பதிவாளர் அலுவலகம் முன்பு வருகிற 9-ந்தேதி மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். அதன் பின்பும் கோரிக்கைகள் ஏற்கப்படா விடில் வருகிற 14-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் எழும்பூரில் இன்று நடந்தது.
- அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை:
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் எழும்பூரில் இன்று நடந்தது.
ஆன்லைனில் வழக்கு போடுவதை ரத்து செய்ய வேண்டும், காலாவதியான சுங்கச் சாவடிகளை நீக்க வேண்டும், 21 இடங்களில் உள்ள பார்டர் சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும், மணல், சவுடு ஆகியவற்றை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சி.தனராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பி.ராமசாமி, பொருளாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
தலைவர் பி.கோபால் நாயுடு, அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் எஸ்.யுவராஜ், நிர்வாகிகள் அரவிந்த் அப்பாஜி, சுந்தரராஜன், வேலு, செந்தில்குமார், சுப்பு, வி.ஆறுமுகம், என்.முருகேசன், வி.பி. செல்வ ராஜா, கே.சின்னுசாமி, டி.சுப்பிரமணி, நாராயணன், ஜெயக்குமார், எம்.மாது, ராஜேஷ், சாத்தையா, நிஜாத் ரகுமான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
நிர்வாகிகள் துரைலிங்கம், கமலக்கண்ணன், ஜானகி ராமன், மயிலை செல்வம், டி.சேகர், ஏ.மணி, ரெட்டி, ரமேஷ்குமார், குணசேகரன், தரணிபதி, செல்வகுமார், எம்.சங்கர், பாஸ்கர், ஏகாம் பரம், முருகன், பிரான்சிஸ் சேவியர், பாரதிராஜா, அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமான லாரி உரிமையாளர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சேர்மன் சண்முகப்பா, மாநில லாரி உரிமையா ளர்கள் சங்க தலைவர் தனராஜ் ஆகியோர் நிருபர்க ளிடம் கூறுகையில், "லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் லாரிகள் ஓடாது, பிற மாநில லாரிகளும் வராது" என்றனர்.
- 3 சிற்றாலயங்களும் பூட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படவில்லை.
- மாலை 3 மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காணிக்கை அன்னை ஆலய வளாகத்தில் நடக்கிறது
கன்னியாகுமரி :
குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயம் 423 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் கோட்டார் மறை மாவட்டத்தால் உருவாக்கப்பட்ட அன்பியங்கள் இல்லை என்ற காரணத்தால் கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி முதல் தினசரி திருப்பலி, நினைவு திருப்பலி, ஒப்புரவு அருட்சாதனம், முதல் திருவிருந்து, மந்திரிப்புகள், தவக்காலத்தில் குருக்களால் நடத்தப்படும் சிலு வைப்பாதை ஆகியவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. காணிக்கை அன்னை ஆலய பங்கு நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 3 சிற்றாலயங்களும் பூட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படவில்லை.
இந்த தடைகளை நீக்கி ஆலய வழிபாடுகளை தொடர்ந்து நடத்திட வலியுறுத்தி குளச்சல் பங்கு மக்கள் மற்றும் கோட்டார் மறை மாவட்ட கடற்கரை பங்குகளின் கூட்டமைப்பு குழு சார்பில் இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காணிக்கை அன்னை ஆலய வளாகத்தில் நடக்கிறது. மீனவர்கள் இன்று காலை அடையாள வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
வேலை நிறுத்தத்தை முன்னிட்டு இன்று காலை முதலே வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் இன்று குளச்சல் மீன் ஏலக்கூடம் வெறி ச்சோடி காணப்பட்டது. மீன் வாங்க வந்த பொதுமக்களும், வியாபாரிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஏற்கனவே மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடந்த 1-ந்தேதி முதல் 60 நாட்கள் தடை அமலில் இருந்து வருகிறது. வள்ளம், கட்டுமரங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் குளச்சலில் இன்று மீன் வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலய பங்கு மக்கள் அறிவித்த ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தம் தொடர்பாக கோட்டார் பிஷப் ஹவுசில் நேற்றிரவு வரை பேச்சுவார்த்தை நடந்தது. இதில் குளச்சல் பங்கு நிர்வாக குழுவினர் மற்றும் ஆதரவு ஆலய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதனால் இன்று 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் அறிவிக்கப்பட்டது
- எங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்
ஈரோடு
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்குவாரி, கிரஷர் மற்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் சுப்பிரமணி கூறியதாவது:- எங்களது சங்கத்தின் மா நில நிர்வாக குழுக் கூட்டத்தின் முடிவின்படி, எங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.
ஈரோடு மாவட்டத்தில் 16 கல்குவாரிகள், 1,500 லாரிகள் உள்ளன.இத்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எனவே, எங்களது கோரிக்கையை அரசு பரிசீலித்து இத்தொழிலையும், அதை நம்பியுள்ளோரையும் பாதுக்காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 50 கல்குவாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
- சேலம் மாவட்டத்திலும் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளன.
நாமக்கல்:
கடந்த 26 ஆண்டுக்கு முன்னதாக உரிமம் பெற்று இயங்கி வந்த கல்குவாரிகளுக்கு, உரிமம் புதுப்பித்தலின் போது கேட்கப்படும் ஆழ நிர்ணய அளவு குறித்த விதியை நீக்க வேண்டும், கல்குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவை சுரங்க பகுதி என அறிவித்து வேறு எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
கனிமவள அலுவலகத்தில் உரிமம் கொடுக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழக முழுவதும் உள்ள கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், எலச்சிபாளையம், பரமத்தி, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள 50 கல்குவாரிகளில் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நாமக்கல் கனிமவள உதவி இயக்குனர் பூரணவேல் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 50 கல்குவாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குவாரிகளில் இருந்து உரிமம் கேட்டு நேற்று யாரும் வரவில்லை என்றார்.
சேலம் மாவட்டத்திலும் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி கல்குவாரிகள் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குவாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
- கடந்த 26 ஆண்டுக்கு முன்னதாக உரிமம் பெற்று இயங்கி வந்த கல்குவாரிகளுக்கு, உரிமம் புதுப்பித்தலின் போது கேட்கப்படும் ஆழ நிர்ணய அளவு குறித்த விதியை நீக்க வேண்டும்,
- கல்குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவை சுரங்க பகுதி என அறிவித்து வேறு எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
நாமக்கல்:
கடந்த 26 ஆண்டுக்கு முன்னதாக உரிமம் பெற்று இயங்கி வந்த கல்குவாரிகளுக்கு, உரிமம் புதுப்பித்தலின் போது கேட்கப்படும் ஆழ நிர்ணய அளவு குறித்த விதியை நீக்க வேண்டும், கல்குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவை சுரங்க பகுதி என அறிவித்து வேறு எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
கனிமவள அலுவலகத்தில் உரிமம் கொடுக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழக முழுவதும் உள்ள கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், எலச்சிபாளையம், பரமத்தி, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள 50 கல்குவாரிகளில் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நாமக்கல் கனிம வள உதவி இயக்குனர் பூரணவேல் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 50 கல்குவாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குவாரிகளில் இருந்து உரிமம் கேட்டு நேற்று யாரும் வரவில்லை என்றார்.
சேலம் மாவட்டத்திலும் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி கல்குவாரிகள் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குவாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
- குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
நாமக்கல்:
தமிழகம் முழுவதும், 2,500 கல் குவாரிகளும், 3 ஆயிரம் கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ரோடுகள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும், கனிம வளத்தொழில் மூலம் கிடைக்கும் ஜல்லி கற்கள் அடிப்படை ஆதாரமாகவும், அத்தியாவசியமாகவும் உள்ளது.
தற்போது, பெரிய கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட திட்டங்களை, சிறிய மினரல் என்றழைக்கப்படும், கல், ஜல்லி உடைக்கும் சிறு வளத்துறை அமல்படுத்தி உள்ளது. அதனால், ஏற்கனவே தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு, தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.
சமூக விரோதிகள் சிலர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் அச்சுறுத்துவதாகவும், கனிம வளக் கடத்தல், கனிம வளக் கொள்ளை என தகவல்கள் பரவுவதாகவும், அதன் காரணமாக, குவாரி மற்றும் கிரஷர் தொழில் பாதிக்கப்படுவதாகவும் அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில், குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது.
சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 75-க்கும் மேற்பட்ட கல் குவாரி மற்றும் கிரஷர்கள் மூடப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, தேவையான ஜல்லி கற்கள் கிடைக்காமல் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் மாநில தலைவர் செல்ல ராசாமணி கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் நடக்கின்ற அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளை, தங்கள் சுயலாபத்திற்காக முடக்கும் வகையில், தமிழக கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம், கடந்த, 26-ந் தேதி முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழகம் முழுவதும், முற்றிலும் முறைகேடாக நடந்து வரும் கல்குவாரி, கிரஷர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, குவாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, கல்குவாரி, கிரஷர்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று 7-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
- அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படை க்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும். இதற்காக நடைபெறவுள்ள டெண்டர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
பணி நிரந்தரம், குறைந்தபட்ச அரசு நிர்ணயித்த கூலி, முதல் தேதியில் ஊதியம் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்பி.எப். உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் சார்பில் தூய்மை பணியாளர்கள், குடிநீர் வினியோகப் பணியா ளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் கடந்த 23-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே நடந்த பேச்சு வார்த்தை தோ ல்வியில் முடிவடைந்தது. தங்களது கோரிக்கைகள் அரசு கவனத்திற்கு செல்லும் வகையில் ஒவ்வொரு நாளும் தூய்மை பணியாளர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலக ங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர். நேற்று காளை மாட்டு சிலை பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இன்று 7-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக என்ன போராட்டத்தில் ஈடுபடுவது என்பது குறித்து இன்று ஈரோடு மாவட்டம் சி.ஐ.டி.யு தலைமை அலுவலகத்தில் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் ஏ.ஐ.டி.யு.சி. சின்னசாமி, சி.ஐ.டி.யு. சுப்பிரமணியம், எல்.பி.எப் கோபால் உள்பட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசித்து வருகின்றனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும். முன்னதாக 7-வது நாளாக குப்பை அள்ளும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மலை போல் குப்பை தேங்கி உள்ளது.
மாநகராட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்ட நிரந்தர துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பை அள்ளும் பணி நடைபெற்று வருகிறது.
- மாநிலம் முழுவதும் எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு கட்டுமான தொழில் முழுமையாக ஸ்தம்பித்து விட்டது.
- கட்டுமான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் 2500 கல்குவாரிகளும், 3 ஆயிரம் கிரஷர்களும் செயல்பட்டு வந்தன. வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ரோடுகள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளுக்கும் கனிம வளத் தொழில் மூலம் கிடைக்கும் ஜல்லி கற்கள் அடிப்படை ஆதாரமாகவும் அத்தியாவசிய தேவையானதாகவும் உள்ளது.
தற்போது பெரிய கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட திட்டங்களை சிறிய மிரைல் என்றழைக்கப்படும் கல், ஜல்லி உடைக்கும் சிறு வளத்துறை அமல்படுத்தி உள்ளது. அதனால் ஏற்கனவே தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, சமூக விரோதிகள் சிலர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் அச்சுறுத்துவதாகவும், கனிம வளக் கடத்தல், கனிம வளக் கொள்ளை என தகவல் பரப்புவதால் குவாரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் அதன் உரிமையாளர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் குவாரிகளில் பல்வேறு குறைகளை கண்டறிந்து பல கோடி ரூபாய் அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கல்குவாரி. கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை கடந்த 26-ந் தேதி முதல் தொடங்கினார்கள்
இதன் காரணமாக 2 ஆயிரத்து 500 கல் குவாரிகள், 3 ஆயிரம் கிரஷர்கள் இயங்கவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு கட்டுமான தொழில் முழுமையாக ஸ்தம்பித்து விட்டது. சென்னையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கனிம வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் கல்குவாரி உரிமையாளர்களிடம் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு தலைவர்கள், லாரி உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனாலும் இந்த விஷயத்தில் அரசு இன்னும் இணக்கமான முடிவை அறிவிக்காததால் போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது. குவாரிகள் மட்டுமின்றி கட்டுமான தொழில்கள் அனைத்தும் முடங்கி உள்ளதால் இந்த விஷயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் குவாரி அதிபர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.