என் மலர்
நீங்கள் தேடியது "union meeting"
- சமீபகாலமாக கடமான், கரடி, யானை, காட்டுபன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
- மருத்துவதுறையினரின் பரிந்துரையின் பேரிலும், கலெக்டர் உத்தரவின் படியும் தான் 20 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
களக்காடு:
களக்காடு யூனியன் கூட்டம் சேர்மன் இந்திரா ஜார்ஜ்கோசல் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் விசுவாசம், ஆணையாளர் மங்கையர்கரசி முன்னிலை வகித்தனர்.
இதில் கவுன்சிலர்கள் ஜார்ஜ்கோசல், தமிழ்செல்வன், சத்ய சங்கீதா, விஜயலெட்சுமி, வனிதா, சங்கீதா மற்றும் யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர் தமிழ்செல்வன் பேசுகையில், களக்காடு வட்டார பகுதி விவசாயம் நிறைந்த பகுதி ஆகும். இங்கு சமீபகாலமாக கடமான், கரடி, யானை, காட்டுபன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளால் வாழை, நெல், தென்னை, பனை உள்ளிட்ட பயிர்கள் சேதமாகி வருகிறது.
இதற்கு இழப்பீடு வழங்க வேண்டிய வனத்துறையினர் வனவிலங்குகள் அட்டகாசத்தை மறைக்கவும், மக்களை திசை திருப்பவும் விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூர் வாரி விளைநிலங்களுக்கு செல்ல பாதை ஏற்படுத்த வேண்டும். ஜெ.ஜெ, நகரில் மழைநீர் தேங்காத வண்ணம் முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். டெங்கு தடுப்பு பணிக்கு அதிக பணியாளர்கள் நியமிக்கப்படுவதால் பொதுநிதி வீணாகிறது என்றார்.
இதற்கு பதிலளித்த ஆணையாளர் மங்கையர்கரசி, "மருத்துவதுறையினரின் பரிந்துரையின் பேரிலும், கலெக்டர் உத்தரவின் படியும் தான் 20 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். டெங்கு பரவல் குறைந்ததால் பணியாளர்களின் எண்ணிக்கையும் 8 ஆக குறைக்கப்படும்" என்றார்.
அதனைதொடர்ந்து ஜெ.ஜெ.நகரில் யூனியனுக்கு சொந்தமான 11 ஏக்கர் 64 செண்ட் நிலத்தை குத்தகை காலம் முடிந்த பின்னரும் யூனியனிடம் ஒப்படைக்காமல் உள்ளதால் யூனியனுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதை தடுக்க அந்த நிலைத்தை மீட்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- போகலூர் யூனியன் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதலைவர் கூறினார்.
- மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போகலூர் யூனியன் கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சிவசாமி வரவேற்றார்.
இதில் துணைத் தலைவர் பூமிநாதன் பேசுகை யில், அரியகுடி, முத்துசெல்லா புரம், அ. புத்தூர், முஸ்லிம் குடியிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் ஒரு வரு டத்திற்கும் மேலாக காவிரி கூட்டுக் குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். விசேஷ நிகழ்ச்சிகளுக்கு கூட நாங்கள் ஊர்களுக்குள் நுழைய முடியவில்லை என்றார்.
அதற்கு பதில் அளித்த காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட உதவி பொறியாளர், சாலை அமைக்கும் பணியின் போது காவிரி குடிநீர் குழாய் உடைந்துள்ளது. அதை சீரமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு முடி யும் நிலையில் உள்ளது. கூடிய விரைவில் சரி செய்யப்படும் என்றார்.
தலைவர் சத்யா குணசேகரன் பேசுகையில், 15-வது நிதி குழு மூலம் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் அத்தியாவசிய பணிகள் நடைபெற உள்ளது. யூனி யன் கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை, மின்வாரிய துறையில் இருந்து அதி காரிகள் வருவது கிடை யாது. பலமுறை வலியுறுத்தியும் அலட்சியமாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.
கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில், உரத்தூர் முதல் எஸ்.கொடிக்குளம் செல்லும் சாலை, அனுமனேரி முதல் கோரைக்குளம் செல்லும் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். ஆகவே அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தேன்மொழி, முருகேஸ்வரி, காளிஸ்வரி ஆகியோர் கலந்து கொண்ட னர், மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.
- வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் யூனியன் கூட்டம் நடைபெற்றது.
- 4 குழுக்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் யூனியன் கூட்டம் நடைபெற்றது. யூனியன் சேர்மனும் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நியமனக்குழு,கல்விக்குழு, வேளாண்மைக் குழு, பொது நோக்க குழு ஆகிய 4 குழுக்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்வி ஏசுதாஸ், ஜெயராம், அருணாதேவி பாலசுப்ரமணியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, லில்லி புஷ்பம், கிராம ஊராட்சி மேலாளர் தில்லை, மேலாளர் கருத்தப்பாண்டியன், அலுவலர்கள் சிலம்பரசன், முத்துக்குமார், கூடலூர் கிளை செயலாளர் குருசாமி பாண்டியன், உள்ளார் மணிகண்டன், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது
- 11 வார்டுகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் உட்பட 48 பணிகள் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
உடன்குடி:
உடன்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் கூட்ட அரங்கத்தில் நடந்தது. யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார்.
துணை சேர்மன் மீராசிரா சுதீன், ஆணையாளர்கள் ஜான்சிராணி, பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் முருங்கை மகாராஜா, செல்வின், லோ போரின், செந்தில், முருகேஸ்வரி ராஜதுரை, ஜெயகமலா, ராமலெட்சுமி, மெல்சி ஷாலினி, தங்க லெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் யூனியனுக்கு உட்பட்ட 11 வார்டுகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், சிமெண்ட் சாலை, சின்டெக்ஸ் தொட்டி, கால்நடை குடிநீர் தொட்டி உட்பட 48 பணிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்காக ரூ.79 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் சேர்மன் பாலசிங் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு திட்டப் பணிகள் உடன்குடி யூனியனில் தான் நடந்து வருகிறது. தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடி பகுதி வளர்ச்சி திட்டப் பணியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது தேர்வு செய்யப்பட்ட பணிகள் அனைத்தும் கவுன்சிலர்கள் கோரிக்கையாக கொடுத்த பணிகள்தான். இதில் அத்தியாவசிய பணிகள் மட்டும் தேர்வு செய்யப் பட்டுள்ளது. இனி பணிகள் தேர்வு செய்யும் போது சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனை கேட்டு பணிகள் தேர்வு செய்யப்படும் என்றார்.
- பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
- தொழிலாளர் விடுதலை முன்னணி அதிவீரபாண்டியன் நன்றி கூறினார்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில் அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் காளிமுத்து, மாவட்ட செயலாளர் ரங்கசாமி, துணை தலைவர்கள் ராமசாமி, மூர்த்தி, சுப்பையா முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் சிந்தனை வளவன் வரவேற்றார்.
பேரூராட்சி பணியாளர்கள் சங்க தலைவர் பிச்சைமுத்து சிறப்புரையாற்றினார். இதில் 15 பேரை கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டு மாவட்ட பேரூராட்சி தூய்மை பணியாளர் சங்கம் அமைத்து செயல்படுவது, அரசாணை எண் 115, 139, 152-ல் உள்ள பேரூராட்சி, மாநகராட்சி பகுதியில் பகுதி நேரமாக பணியாற்றும் கீழ்த்தல பணியாளர்களை நீக்கி தனியார் மயமாக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும், வருகிற 9-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகள் உட்பட 3 அரசாணையை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழிலாளர் விடுதலை முன்னணி அதிவீரபாண்டியன் நன்றி கூறினார்.
- பரமக்குடி யூனியன் கூட்டம் நடந்தது.
- பரமக்குடி யூனியனில் 39 பஞ்சாயத்துகள் உள்ளது.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யூனியன் கூட்டம் தலைவர் சிந்தாமணி முத்தையா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சரயு ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா முன்னிலை வகித்தனர். மேலாளர் லட்சுமி வரவேற்றார். கவுன்சிலர் சுப்பிரமணியன் பேசுகையில், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அறிவு சார் மையம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் இடம் கேட்கப்பட்டுள்ளது. யூனியன் அலுவலகத்தில் அதற்கான இடமில்லை.
அறிவு சார் மையத்தை பரமக்குடி நகரின் மையப் பகுதியான பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், எமனேசுவரம் பகுதி, சந்தை கடை பகுதிகளில் அமைத்தால் பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்கும். அதேபோல் மையப் பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளது. மாணவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா, கலெக்டர் கேட்டுக் கொண்டதன் பேரில் அறிவு சார் மையம் அமைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். உடனே அனைத்து கவுன்சிலர்களும் அறிவுசார் மையத்திற்கு இடம் வழங்க முடியாது என்று ஏக மனதாக அந்த தீர்மானத்தை நீக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி அந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் நீக்கப்பட்டது.
துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன் பேசுகையில், பரமக்குடி யூனியனில் 39 பஞ்சாயத்துகள் உள்ளது. ஆனால் நிதி ஒவ்வொரு மாதமும் குறைவாகத்தான் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. யூனியனில் இருக்கும் நிதியையும் எங்கள் அனுமதி இல்லாமலேயே மாவட்ட நிர்வாகம் வங்கி கணக்கில் எடுத்து விடுகின்றனர். இதனால் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், வளர்ச்சி திட்ட பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். தற்போது மழைக்காலமாக இருப்பதால் கூடுதலாக நிதி ஒதுக்கினால்தான் திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும். ஆகவே கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
- ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் யூனியன் கூட்டம் நடந்தது.
- கவுன்சிலர்களின் கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் தலைவர் தெரிவித்தார்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் ஆத்தி, முன்னாள் தலைவர் முனியசாமி பாண்டியன், ஆணையாளர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா. கவுன்சிலர்கள் குமரையா, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
இதில் கவுன்சிலர் பார்வதி பேசுகையில், மேலக் கிடாரம் கிராமத்தில் கண்மாய் கரையை சேதப் படுத்தியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த ஆணையாளர் கண்மாய் கரையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.
கவுன்சிலர் மாய கிருஷ்ணன் பேசுகையில், ஓரிவயலுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகளை சரி செய்ய நிதி ஒதுக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர் ஜெயச்ச ந்திரன் பேசுகையில், மீனங்குடி, கருங்குளம் கடுகு சந்தை ஆகிய ஊராட்சிகளில் உள்ள தெருக்களுக்கு பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனங்குடி கிராமத்தில் இருந்து அம்மன் கோவில் செல்லும் சாலையை மெட்டல் சாலையாக அமைக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர் அம்மாவாசி:- சிக்கல் பாண்டியன் ஊரணியை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும். கவுன்சிலர் காதர் சுல்தான் அலி:- வாலிநோக்கம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் பிச்சை:- ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும். கவுன்சிலர் பைரோஸ் பானு ஜலில்:- ஒப்பிலான் கிராமத்தில் இருந்து செல்லும் கடற்கரை சாலை தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பனையூர் கிராம பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர் வசந்தா கதிரேசன்:- மாரியூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெறவில்லை. மக்களின் அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் ராஜே ந்திரன்:- வாலிநோக்கம் கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உசவன் குளம் கிராமத்தில் இருந்து வாலிநோக்கம் செல்லும் சாலையை தார்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காமராஜர்புரம் சாலை முதல் ராஜாக்கள் பாளையம் வரை தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தெரிவித்தார்.
- ராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
- செலவினங்களுக்கு மட்டும் இந்த கூட்டம் நடத்தப்படுவதாக கவுன்சிலர் கூறினார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர்-வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சதாசிவம் வரவேற்றார்.
இதில் பா.ஜ.க. கவுன்சிலர் ராமசாமி பேசுகையில், மக்கள் திட்ட பணிகள் எதுவும் இந்த கூட்டத்தில் இடம் பெறவில்லை. செலவினங்களுக்கு மட்டும் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. பணிகள் நடந்தால் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்றார்.
பா.ஜ.க. கவுன்சிலர் கதிரவன் பேசுகையில், போகலூர் யூனியனில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் தர வேண்டும். நிதி ஆதாரத்தை அனைவருக்கும் சமமாக பகிர்ந்து அளித்து பணிகள் வழங்க வேண்டும் என்றார். அதற்கு துணைத்தலைவர் பூமிநாதன் பதில் அளிக்கையில், இது குறித்து அனைவரும் பேசி முடிவு எடுப்போம் என்றார்.
பின்பு பா.ஜ.க. கவுன் சிலர்கள் 3 பேரும் இந்த அஜெண்டாவில் எந்தவித வளர்ச்சி திட்ட பணிகளும் இடம் பெறவில்லை.
ஆகை யால் இந்த கூட்டத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறி வெளி நடப்பு செய்தனர். பின்பு மற்ற கவுன்சிலர்களில் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. யூனியன் தலைவர் சத்யா குணசேகரன் கூறியதாவது:-
பரமக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.70 லட்சத்தில் சாலை வசதிகள், பள்ளிகளில் சுத்திகரிப்பு குடிநீர் வசதி செய்து கொடுத்தல், சுகாதார வளாகங்கள் கட்டுதல் உட்பட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.
சரிவர மழை பெய்யாததால் போகலூர் ஒன்றியத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்றுஎம். எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன் ஆகியோரது பரிந்துரையுடன் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். யூனியன் மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.
- களக்காடு யூனியன் கூட்டம் தலைவர் இந்திரா ஜார்ஜ் கோசல் தலைமையில் நடந்தது.
- கவுன்சிலர் சத்ய சங்கீதா கூறுகையில், புலியூர்குறிச்சி பஞ்சாயத்தில் பணிபுரியம் 100 நாள் திட்ட ஊழியர்களுக்கு ரூ.230 வரை தான் அதிகபட்சமாக சம்பளம் வழங்கப்படுகிறது. இது ஏன்? என்று கேள்வி விடுத்தார்.
களக்காடு:
களக்காடு யூனியன் கூட்டம் தலைவர் இந்திரா ஜார்ஜ் கோசல் தலைமையில் நடந்தது.
ஆணையாளர்கள் அப்துல்லா, மணி, துணை தலைவர் விசுவாசம் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கவுன்சிலர்கள் ஜார்ஜ் கோசல், தமிழ்செல்வன், சத்ய சங்கீதா, சங்கீதா, விஜய லெட்சுமி, வனிதா, தளவாய் பாண்டியன், மேலாளர் சங்கரன் மற்றும் யூனியன் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
யூனியன் ஊழியர் முத்தரசன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் செங்களாகுறிச்சி, கோவிலம்மாள்புரம், புலியூர்குறிச்சி, வடுகச்சி மதில், படலையார்குளம், தேவநல்லூர், செங்களா குறிச்சி, சிங்கிகுளம் பஞ்சாயத்துகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், கல்லடிசிதம்பரபுரத்தில் தடுப்பு சுவர் கட்டுவது உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதனைதொடர்ந்து கவுன்சிலர் தமிழ்செல்வன் பேசுகையில், டெங்கு பணியாளர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் செலவு செய்யப்படுகிறது. அவர்களை கண்காணிப்பது யார்? ஜெ.ஜெ.நகர், படலையார்குளம் மக்களுக்கு பட்டா வழங்கவும், சத்திரம் கள்ளிகுளத்தில் புதிய ரேசன் கடை கட்டிடத்தை திறக்கவும், 16 குளங்கள் பாசன வசதி பெறும் வகையில் களக்காடு சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் புதிய அணை கட்டவும், சில் ஓடை, பெரிய ஓடைகளை அளவீடு செய்து, பாதை அமைக்கவும், சிதம்பராபுரம் வழியாக அரசு பஸ்கள் இயக்கவும், தலையணையில் உள்ள தென்வீதிக்காலை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதுபோல கவுன்சிலர் சத்ய சங்கீதா கூறுகையில், புலியூர்குறிச்சி பஞ்சாயத்தில் பணிபுரியம் 100 நாள் திட்ட ஊழியர்களுக்கு ரூ.230 வரை தான் அதிகபட்சமாக சம்பளம் வழங்கப்படுகிறது. இது ஏன்? என்று கேள்வி விடுத்தார்.
இதற்கு பதிலளித்த ஆணையாளர் மணி, அவர்கள் பணி செய்ததற்கு ஏற்றாற் போல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- கடையநல்லூர் யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமையில் நடந்தது.
- கூட்டத்தில் கவுன்சிலர்கள் சிங்கிலிப்பட்டி மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமையில் நடந்தது.துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஆணையாளர் ராதா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் சிங்கிலிப்பட்டி மணிகண்டன், கீதா மணிகண்டன், அருணாசல பாண்டியன், சத்தியகலா தீபக் உள்பட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 2023-24-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியில் இருந்து போகநல்லூரில் ரூ.4.50 லட்சத்தில் மயான நன்மை கூடம் அமைத்தல், புன்னையாபுரம் ஊராட்சி சிங்கிலிபட்டி தெற்கு தெரு, நாயக்கர் தெரு, முத்தாலம்மன் கோவில் மற்றும் புதுக்காலனியில் ரூ.17.50 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைத்தல், புன்னையாபுரம் முந்தல் சாலையில் ரூ.8.75 லட்சத்தில் வாறுகால் அமைத்தல், திரிகூடபுரம் ஊராட்சி ராமகிருஷ்ணர் தெருவில் ரூ.4.23 லட்சத்தில் பேவர் பிளாக் கற்கள் பதித்தல், பாத்திமா நகர் வடக்கு தெருவில் ரூ.6.86 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைத்தல், காசிதர்மம் சுடுகாட்டில் எரிமேடை அமைத்தல், குலையனேரி தேவர் வடக்கு தெருவில் ரூ.10.31லட்சத்தில் சிமெண்டு தளம் அமைத்தல், சங்குபுரம் அப்துல் கலாம் நகரில் ரூ.4.32 லட்சத்தில் வாறுகால் அமைத்தல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மனும் வாசு. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்வி ஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணாதேவி பாலசுப்பிரமணியன், விஜயபாண்டியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, லில்லிபுஷ்பம், உதவி பொறியாளர் மார்கோனி, மேலாளர் முனியப்பன், ஓவர்சீஸ் முத்துமாரி மற்றும் அலுவலர்கள் முத்துகுமார், சுரேஷ், உள்ளார் மணிகண்டன், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்புல்லாணி யூனியன் கூட்டம் பெயரளவில் நடந்தது.
- பிரச்சினை செய்தது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் புல்லாணி தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் துணைத் தலைவர் சிவலிங்கம் பங்கேற்ற மறுப்பு தெரி வித்து பார்வையாளர் அமரும் இடத்தில் உட்கார்ந்தார்.
கூட்டம் தொடங்கிய வுடன் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான் பேசுகையில், 8-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் தற்போ தைய திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையாவின் மனைவி கமலா தொடர்ந்து 3 கூட்டங்களில் பங்கேற்கவில்லை.
இதற்கு முழு ஆதாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பதிவேட்டில் உள்ளது. அவர் கடந்த கூட்டத்தில் பங்கேற்றதாக போலியாக கையொப்பம் பெற்றுள்ளீர்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.
அவருக்கு ஆதரவாக துணை சேர்மன் சிவலிங்கம், காங்கிரஸ் கவுன்சிலர் திருமுருகன் ஆகியோர் போலி கையொப்பம் தவறா னது என்று தெரிவித்தனர்.அப்போது வெளியே நின்றிருந்த சிலர் கோஷ மிட்டனர். இதை கண்டித்து காங்கிரஸ் கவுன்சிலர் திருமுருகன் ஆவேசமாக சேரை எடுத்து வீசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.
அவரை தொடர்ந்து கவுன்சிலர்கள் மற்றும் துணைத்தலைவர் வெளி நடப்பு செய்தனர். பின்னர் 5 கவுன்சிலர்கள் மற்றும் தலைவர் மட்டுமே பங்ேகற்ற கூட்டரங்கில் சிறிது நேரம் விவாதம் நடந்தது. இதையடுத்து பெயரளவில் திருப்புல்லாணி யூனியன் கூட்டம் முடிந்தது.
மக்கள் பிரச்சினைகளை பேசி தீர்வு காண வேண்டிய யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்களின் நடவடிக்கை முகம் சுழிக்கும் வகையில் இருந்தது. பொது மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்காமல் தேவையில்லாத விவாதங்களை கூட்டத்தில் எழுப்பி பிரச்சினை செய்தது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.