search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ட்ரோன்"

    • மோடி AI குறித்து 'டெலிப்ராம்ப்டர்' பார்த்து உரையாற்றும் வேலையில் நமது போட்டியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
    • தனது எக்ஸ் பக்கத்தில் 9 நிமிட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இந்தியாவில் திறமைக்குப் பஞ்சமில்லை, ஆனால் இளைஞர்களைப் பணியமர்த்தவும் தொழில்நுட்பத் துறையை முன்னேறவும் வலுவான உற்பத்தித் தளம் தேவை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது தொடர்பான அரசின் கொள்கைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் 9 நிமிட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ட்ரோன்கள் போர்க்களத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளன. பேட்டரிகள், மோட்டார்கள் மற்றும் ஒளியியல் ஆகியவற்றை இணைத்து ட்ரோன்கள் போரில் புதிய உத்திகளை உருவாகியுள்ளன.

    ட்ரோன்கள் வெறும் ஒரு தொழில்நுட்பம் மட்டுமல்ல. அவை ஒரு வலுவான தொழில்துறை அமைப்பால் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகள்.

    துரதிர்ஷ்டவசமாக, பிரதமர் மோடி இதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். அவர் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து 'டெலிப்ராம்ப்டர்' பார்த்து உரையாற்றும் வேலையில், நமது போட்டியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

    இந்தியாவுக்கு வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தித் தளம் தேவை.

    இந்தியாவுக்கு மகத்தான திறமை, வாய்ப்பு மற்றும் உந்துதல் உள்ளது. நமது இளைஞர்களுக்கு வேலைகளை வழங்கவும், இந்தியாவை எதிர்காலத்தில் வழிநடத்தவும் நமக்கு தெளிவான தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான தொழில்துறை வலிமையை உருவாக்க வேண்டும் என்று அதில் பதிவு செய்துள்ளார்.

    இதற்கிடையே இந்திய குடிமக்கள் தங்கள் கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் கவலைகளைப் பகிர்ந்து கொள்ள 'ஆவாஸ் பாரத் கி' என்ற முன்னெடுப்பை ராகுல் காந்தி தொடங்கியிருந்தார்.

    இதில் தற்போது AI மற்றும் ட்ரோன்கள் துறையில் பணிபுரிந்தால் அல்லது இந்த தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏதேனும் ஆலோசனை வழங்க விரும்பினால் அதையும் பகிர்ந்து கொள்ளுமாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

    விவசாயிகள் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வதை நாங்கள் கண்டுள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான பாரத் ட்ரோன் மஹாத்சவ் 2022-ஐ பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு ட்ரோன் செயல் விளக்கங்கள், 70-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ஆளில்லா விமானங்களின் பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளையும் காட்சிப்படுத்தப்பட்டன.

    பின்னர் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    தொழில்நுட்பத்தால் விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டு வருகிறது. மண் சுகாதார அட்டைகள், இ-நாம் அல்லது ட்ரோன்கள் எதுவாக இருந்தாலும் அவை விவசாயத் துறையில் கேம் சேஞ்சராக உருவாகி வருகின்றன.

    கடந்த எட்டு ஆண்டுகளில், தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை நாங்கள் கண்டுள்ளோம். விவசாயிகள் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வதை நாங்கள் கண்டுள்ளோம்.

    விவசாயத் துறை இப்போது தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாறுகிறது. கடைசி மைல் சுகாதார விநியோகத்தை மேம்படுத்துவதில் ட்ரோன்கள் முக்கியமானதாக இருக்கும். கோவிட் காலத்தில் கூட ட்ரோன்கள் தடுப்பூசிகளை நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு வழங்க உதவியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. சென்னை விமான நிலையத்தில் சந்திப்பு- அ.தி.மு.க. தலைவர்களை சமரசம் செய்த மோடி
    ×