என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selection"

    • 2 மில்லியன் பயணிகளை கையாண்ட பிரிவில் சிறந்த விமான நிலையமாக தேர்வு
    • விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி பேட்டி

    கே.கே.நகர், 

    திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் அனைத்திலும் விமான நிலைய சேவை மற்றும் தரத்தினை கையாளும் குழுவின் சார்பில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்ப–டும். அந்த வகையில் 28 விமான நிலையங்களிலும் மேற்கண்ட குழுவின் சார் பில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.இவ்வாறு மேற்கொள்ளப் படும் ஆய்வில் விமான நிலையத்தில் ஒவ்வொரு நிலைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகா–ரிகளின் பணிகள், பயணிக–ளுக்கான சேவையின் போது மன நிறைவு அளிக்கும் வகையில் உள்ளதா என ஆய்வு நடத்தப்படும்.பாதுகாப்பு, சுங்கத்துறை, குடியுரிமை பிரிவு, விமான நிறுவனங்களின் சேவை போன்ற பல்வேறு பிரிவுக–ளின் மூலம் மேற்கண்ட குழுவின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சிறந்த விமான நிலையம் தேர்வு செய்யப்படுவது வாடிக் கையாகும்.

    அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடத் தப்பட்ட சோதனையில் 2 மில்லியன் பயணிகளை கையாளும் விமான நிலைய பட்டியலில் திருச்சி விமான நிலையம் பசிபிக் நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் முதலி–டத்தை பிடிததுள்ளது.அத்துடன் பயணிகள் விரும்பும் வகையில் சேவை வழங்கி வருவதாகவும் மேற்கொள்ளப்பட்ட ஆய் வின் மூலம் அறிக்கை அளிக் கப்பட்டது. மேலும் வளர்ந்து வரும் விமான நிலையங்க–ளில் அதிக அளவில் பயணிகளை கையாளும் திறன் கொண்ட விமான நிலையமாகவும் அதனை தற்போது அதிகரித்து வரும் பயணிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையம் ஆசிய பசிபிக் நாடுகளில் 2 மில்லியன் பயணிகளை கையாளும் பிரிவில் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இந்தோனே–சியாவில் உள்ள மற்றொரு விமான நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறி–னார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் 13-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது.
    • சிறப்பு பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் அரசுத்தேர்வுகள் இயக்குநர் அறிவிக்கையின்படி, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு அரசுப் பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதிவரை நடைபெற உள்ளது. விருதுநகர் கல்வி மாவட்ட த்தில் 44 தேர்வுமையங்களும், 2 தனித்தேர்வர்களுக்கான தேர்வு மையங்களும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 53 தேர்வுமையங்களும், 1 தனித்தேர்வர்களுக்கான தேர்வுமையத்திலும் தேர்வு நடைபெற உள்ளது.

    இந்த தேர்வில் வருவாய் மாவட்ட அளவில் 12-ம் வகுப்பில் 23 ஆயிரத்து 368 தேர்வர்களும், 11-ம் வகுப்பில் 22 ஆயிரத்து 36 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வுகளில் மாற்றுத்தி றனாளி மாணவர்களாக 12-ம் வகுப்பில் 105 தேர்வர்களும், 11-ம் வகுப்பில் 102 தேர்வர்களும் தேர்வெழுத உள்ளனர். இந்த தேர்வுகளில் 104 முதன்மை கண்காணிப்பா ளர்களும், 104 துறை அலுவலர்களும், 1236 அறைக்கண்கா ணிப்பா ளர்ளும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சொல்வதை எழுதுப வர்களாக 110 ஆசிரியர்களும் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    அனைத்து தேர்வு மையங்களையும் கண்காணிக்க பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உத்தமர் கோவிலில் சித்திரை தேராட்டம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளுள் ஒன்றானதுமான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் உத்தமர்கோவில் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் புருஷோத்தம பெருமாளுக்கு ஆதியில் சத்கீர்த்திவர்த்தனன் என்கிற சோழ அரசரால் ஏற்படுத்தப்பட்ட சித்திரை பெருந்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து புருஷோத்தம பெருமாள் அனுதினமும் முறையே சூரியபிரபை வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம் யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் புருஷோத்தம பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு புருஷோத்தம பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் புருஷோத்தம பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதனைத்தொடர்ந்து கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் கோவிலை சுற்றி தேரோடும் வீதியில் வீதியுலா வந்து நிலையை அடைந்தது. இந்த தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர் வழங்கப்பட்டது.

    • பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

    பரமக்குடி

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ராமநாதபுரம் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி லக்சிதா ஸ்ரீ 579 மதிப்பெண்களும், மாணவர்கள் அதீஸ்வரன் 576 மதிப்பெண்களும், பாலாஜி 571 மதிப்பெண்களும் பெற்றனர்.

    அதேபோல் தரணி என்ற மாணவி பொருளியல், கணக்குப்பதிவியல் ஆகிய படங்களில் தலா 100 மதிப்பெண்களும், மாணவன் பிரவீன் பாண்டி வணிகவியல், வரலாறு ஆகிய பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தனுஸ்ரீ என்ற மாணவி கணிப் பொறியியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவி துர்கா கணிப்பொறியியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவன் இந்திரஜித் தாவரவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவி பிரியா வணிகவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும் பெற்றனர்.

    இந்த மாணவ-மாணவிகளை பள்ளியின் கல்வி குழு தலைவர் ராசி போஸ், இணைத்தலைவர் பாலுசாமி, பள்ளியின் தாளாளர் லெனின் குமார், ஆயிர சபை செயலாளர் செல்வராஜ், கவுரவ செயலாளர் வக்கீல் செந்தில்குமார், தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகர், உதவி தலைமை ஆசிரியை சுமதி, கல்விக்குழு உறுப்பினர்கள் சுதர்சன், பூபாலன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

    • வீராங்கனை தேர்வு, வரும் 14ம் தேதி பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில் நடக்கிறது.
    • 13 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர் விண்ணப்பிக்க தகுதியானவர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டமா வட்ட கிரிக்கெட் சங்க, மேலாளர், வேல்முருகன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருப்பூர் மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கான வீராங்கனை தேர்வு, வரும் 14ம் தேதி, அவிநாசி, பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில் நடக்கிறது.

    1999, மே 14ல் அல்லது அதற்கு பின் பிறந்தவர்கள், 2010, மே, 14 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள்; அதாவது, 13 முதல், 24 வயதுக்கு உட்பட்டவர் விண்ணப்பிக்க தகுதியானவர்.பிறப்புச் சான்றிதழ், ஆதார் அல்லது பாஸ்போர்ட் நகல், போட்டோவுடன் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். நாளை (13ம் தேதி)மாலை, 6:00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். நாளை மறுநாள் (14ம் தேதி) வீராங்கனைகள் தேர்வு நடக்கும்.தேர்வு நடக்கும் நாளில், தங்கள் கிரிக்கெட் உடையில் வர வேண்டும். ஷூ, சீருடை முக்கியம். தேர்வுக்கு குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு முன்னதாக மைதானத்தில் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு பயிற்சி தரப்படும். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

    • சி.பி.எஸ்.இ. தேர்வில் மாவட்ட அளவில் செல்லப்பன் வித்யா மந்திர் சர்வேதச பள்ளி முதலிடம் பிடித்தது.
    • ஆசிரியர்கள் பாராட்டினர்.

    காரைக்குடி

    மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தது. பிளஸ்-2 மாணவர் லோகேஷ் 483/500 மதிப்பெண்களைப் பெற்று மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றார்.

    ஆங்கிலத்தில் 96, கணிதம் 95, உயிரியல் 97, இயற்பியல் 95, வேதியியல் 100 என மதிப்பெண்களை பெற்றார். 2-ம் இடத்தை மாணவர் கவுரிசங்கர நாராயணன் 482/500 மதிப்பெண் பெற்றார். 3-ம் இடத்தை மாணவர் பிரியதர்ஷன் 481/500 மதிப்பெண் பெற்றார்.

    10-ம் வகுப்பு தேர்வில் மாணவர் தியாகராஜன் 493/500 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். அவர் ஆங்கிலம் 99, பிரெஞ்சு 100, கணிதம் 99, அறிவியல் 97, தகவல் தொழில்நுட்பம் 100 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

    2-ம் இடத்தை விஷால் 487 மதிப்பெண் பெற்றார். 3-ம் இடத்தை மாணவி சுவாதி 485 மதிப்பெண் பெற்றார். சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின் நிறுவனர் செல்லப்பன், தாளாளர் செ.சத்தியன், நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன், கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • மாதத்தில் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை பணி இருக்கும்.
    • எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் தற்காலிக மாவட்ட வள நபர் (பண்ணை சாரா) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதற்கு இளங்கலை பட்டபடிப்பு - ரூரல் டெவலப்மண்ட், சமூக வேலை, பிஸ்னஸ் மேனேஜ்மண்ட் மற்றும் முதுகலை பட்டபடிப்பு- பிஸ்னஸ் மேனேஜ்மண்ட் கல்வி தகுதியாகும்.

    தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதன்மை பணி கிராமப்புறங்களில் இருப்பதால், தமிழில் நல்ல வாய்மொழி மற்றும் எழுத்து தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்.

    மேலும் அலுவலக நடைமுறைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆங்கில அறிவு இருத்தல் அவசியம்

    கணினி இயக்குவதில் போதுமான அறிவு இருத்தல் அவசியம். 10 அல்லது அதற்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு தினமும் ரூ.3500 ஊதியமும், 6 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்களுக்கு தினமும் ரூ.2500, 2 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.2500 ஊதியமும் வழங்கப்படும்.

    மாதத்தில் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை பணி இருக்கும்.

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 2-ந் தேதி ஆகும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி- இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், எண்.223, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தஞ்சாவூர்-613010.

    மேற்குறிப்பிட்டுள்ள தற்காலிக காலிபணியிடத்திற்கு மாவட்ட தேர்வுக்குழு வாயிலாக எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படும்.

    தகுதிவாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியல் சென்னை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்படும்.

    உரிய காலத்திற்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை காலை 10 மணியளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
    • வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஆட்களை முகாமில் கலந்து கொண்டு நேரடியாகத் தோ்வு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பாக வேலை தேடும் இளைஞா்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே காலை 10 மணியளவில் நடத்தப்படுகின்றன.

    இதன்படி, நாளை ( வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணி யிடங்களுக்கு தகுதியானோ ரைத் தோ்வு செய்யவுள்ளனா்.

    இந்த முகாம் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முகாமில் எட்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம்.

    மேலும் வேலை யளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஆட்களை முகாமில் கலந்து கொண்டு நேரடியாகத் தோ்வு செய்து கொள்ளலாம்.

    முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றி தழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 04362- 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் கோப்பை சிறந்த காவல் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டது.
    • சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி வாழ்த்தினார்.

    காரைக்குடி

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிறந்த போலீஸ் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கோப்பையை, சென்னையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையமானது, குற்ற நடவடிக்கைகள் குறைப்பு, பொதுமக்களின் புகார் மீது தீர்வு காண்பது, ேபாலீஸ் நிலைய பராமரிப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வந்தது.

    இதன் அடிப்படையில் 2021-ம் ஆண்டுக்கான சிவகங்கை மாவட்ட அளவிலான சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காரைக்குடி உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு, காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி வாழ்த்தினார்.

    • வருகின்ற 13-ந் தேதி சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    • பயனாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் மற்றும் உணவு தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில கூறி இருப்பதாவது:- கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வருகின்ற 13-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இதில் 18 வயது முதல் 26 வயது வரை உள்ளமாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் மற்றும் உணவு தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ முடித்துள்ள மாணவர்கள் இந்த சிறப்பு வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உத்திரிய மாதா ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரை மீனவ பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா கோவில் ஆண்டு திருவிழா கடந்த 6, ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மாதா கோவிலின் முக்கிய திருவிழாவான தேர்பவனி நேற்று விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக பேராலயத்திலிருந்து எழுந்தருளிய புனித உத்திரிய மாதா தேரினை மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவ பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.

    தேரானது வேளாங்கண்ணி கடற்கரை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றபொழுது இருபுறமும் நின்றிருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித உத்திரியமாதா,செபஸ்தியர், அந்தோணியர் ஆகிய தேர் மீது மலர்களை தூவி தங்க ளுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினர்.

    தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    • ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள புனித வியாகுல அன்னை ஆலயம் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயத்திற்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை திருமணம் ஆகாத பெண்கள், கர்ப்பிணி பெண்கள் வந்து குத்துவிளக்கிற்கு எண்ணெய் ஊற்றி சென்றால் கேட்டவரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வழிபட்டு செல்கின்றனர்.

    இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இறுதிவாரத்தில் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நவநாள் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான வியாகுல அன்னை தேர்பவனி நேற்றுஇரவு நடைபெற்றது. முன்னதாக திருவிழா கூட்டுப்பாடல் திருப்பலி மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. இதில் பேராலய பங்குதந்தை பிரபாகர், உதவி பங்குதந்தை பிரவீன் மற்றும் குருக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தேர்கள் புனிதம் செய்யப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. முதலாவதாக மைக்கேல் சம்மனசு தேரும், தொடர்ந்து புனிதசவேரியார், புனிதசூசையப்பர், புனிதஅந்தோணியார் சொரூபங்களை தாங்கிய தேரும், இறுதியாக வியாகுல அன்னை தேரும் பவனியாக வந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பா டுகளை உதவி பங்குதந்தை பிரவீன் அடிகளார் தலைமையில் பங்கு பேரவை துணைத் தலைவர் வின்சென்ட், செயலாளர் குழந்தைராஜ், பக்த சபைகள், அன்பிய பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

    ×