என் மலர்
நீங்கள் தேடியது "அறுவடை"
- ஒரு போக சம்பா சாகுபடி செய்யும் நிலையில், பலர் தாளடி சாகுபடியில் இறங்கி உள்ளனர்.
- நாற்று நன்றாக வளர்ந்துள்ள நிலையில் ஆட்களை விட்டு பறித்து கட்டும் பணி நடக்கிறது.
வல்லம்:
தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு முன்கூட்டியே மே மாதத்திலேயே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் மும்முரம் காட்டினர்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி குறுவை சாகுபடி நடந்தது.
மழையால் பாதிப்புகள் இருந்தாலும் குறுவை அறுவடையை முடித்துள்ளனர் விவசாயிகள்.
நெல்லை காயவைத்து நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவ்வபோது பெய்யும் மழையால் நெல் நனைந்தாலும் தொடர்ந்து காயவைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பகுதியில் தாளடி சாகுபடிக்காக நாற்று விட்டு அதை பறித்து கட்டும் பணிகளில் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தீவிரம் காட்டினர். ஒரு சில விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடி செய்யும் நிலையில், பலர் தாளடி சாகுபடியில் இறங்கி உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, குறுவை நெல் போட்டு இப்போதுதான் அறுவடை முடிந்து விற்பனை செய்தோம். அடுத்ததாக தாளடி சாகுபடிக்காக 50 குழியில் விதை தெளித்து நாற்று விட்டோம்.
இது மூன்று ஏக்கருக்கு நடலாம். நாற்று நன்றாக வளர்ந்துள்ள நிலையில் ஆட்களை விட்டு பறித்து கட்டும் பணி நடக்கிறது. பின்னர் வயலில் தாளடி நாற்றுக்கள் நடப்படும்.
140 நாட்கள் வயதுடைய ரகத்தை சாகுபடி செய்துள்ளோம். தை மாதம் இறுதியில் அறுவடைக்கு தயாராகி விடும். மாசியில் அறுவடை செய்வோம் என்றனர்.
- நடவு செய்த 8 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை
- வெளிச்சந்தையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை
மடத்துக்குளம்,நவ.21-
மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டுப் பயிரான கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, கரும்புக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளிட்ட காரணங்களால் கரும்பு சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் குறைய தொடங்கியுள்ளது. தற்போது கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மடத்துக்குளம் மட்டுமில்லாமல் சுற்று வட்டார தாலுகாக்களில் நடைபெற்று வரும் கரும்பு விவசாயத்தை அடிப்படையாக கொண்டு கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான கரும்பு விவசாயிகள் இந்த ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வழங்கி வந்தனர். இதனால் கரும்புக்கு சீரான விலை, நிரந்தர வருமானம் என்ற நிலை இருந்ததால் பல விவசாயிகள் ஆர்வமுடன் கரும்பு சாகுபடி செய்து வந்தனர்.
இந்தநிலையில் சர்க்கரை ஆலையில் நிகழ்ந்த பல்வேறு குளறுபடிகளால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. அதாவது கரும்பு சாகுபடியை பொறுத்தவரை நடவு செய்த 8 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை செய்தால் மட்டுமே சரியான அளவில் சாறு இருக்கும். ஆனால் உரிய பருவத்தில் அறுவடை செய்ய நடவடிக்கை எடுக்காததால் சாறு வற்றி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பல கரும்பு விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு மாற்றுப்பயிர்களை நாடிச்சென்றனர்.
சில விவசாயிகள் கரும்பை சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்யாமல், வெளிச்சந்தையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் உரிய பருவத்தில் அறுவடை செய்ய முடிவதுடன் லாபகரமானதாகவும் உள்ளது. அதே நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்துக்கு சரியான விலை கிடைக்காத நிலை நீடித்து வருவதால் பலரும் வெல்ல உற்பத்தியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
இதே நிலை நீடித்தால் வெல்லம் உற்பத்தியாளர்களும் கரும்பை வாங்க தயங்கும் சூழல் ஏற்படும். இதனால் பணப்பயிராக கருதப்படும் கரும்பு சாகுபடி படிப்படியாக குறையும் நிலை ஏற்படும். எனவே கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். குறிப்பாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தி உரிய பருவத்தில், உரிய அளவில் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். குளறுபடிகளைக் களைந்து உரிய பருவத்தில் விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
- எலிகளின் எண்ணிக்கையை குறைக்க அறுவடைக்கு பின் எலிகளின் வளைகளை கண்டறிந்து வெட்டி அழிக்கலாம்.
- தேங்காய் மட்டை தண்ணீரில் மூழ்கி களிமண் கரைசலில் விழுந்து இறந்துவிடும்.
நீடாமங்கலம்:
குடவாசல் பகுதியில் சம்பா, தாளடி நெற்பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து குடவாசல் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுவாக எங்கெ ல்லாம் ஆட்டுக்கிடை போடுகிறோமோ அந்த வயல்களில் எலி தொல்லைகள் இருக்காது.
மேலும் நெல் வயல்களில் ஒரு ஏக்கரில் 10 இடங்களில் டி வடிவ குச்சிகளை நட்டால் அதில் இரவு நேரங்களில் ஆந்தைகள் அமர்ந்து வயலில் சேதப்படுத்தும் எலிகளைப் பிடித்து தின்றுவிடும்.
இதேபோன்று காய்ந்த தென்னை மட்டைகளை வயல்களில் தலைகீழாக சொருகி வைத்தாலும், அதில் ஆந்தைகள் அமர்ந்து பூச்சிகள் மற்றும் எலிகளை பிடிக்கும்.எலிகளின் எண்ணிக்கையை குறைக்க அறுவடைக்குப் பின்பு எலிகளின் வளைகளை கண்டறிந்து வெட்டி அழிக்கலாம்.
ஒரு பெரிய வட்ட வடிவில் மண் பானையை வயலில் தரை மட்டத்தில் புதைத்து, அதில் களிமண் கரைசலை பாதிஅளவு நிரப்பி, அதன்மேல் தேங்காய் மட்டையில் நெல் பொரிகளை தேங்காய் எண்ணெய் கலந்து வைத்தால் எலிகள் அதனை சாப்பிடும் போது தேங்காய் மட்டை தண்ணீரில் மூழ்கி களிமண் கரைசலில் விழுந்து இறந்துவிடும்.
அல்லது வேர்கடலை பொடி, வறுத்த எள்ளு பொடி, வெல்லம், நெய் இவற்றுடன் சிமெண்ட் ½ கிலோ கலந்து கொதிக்க வைத்து, பிசுபிசுப்பான தன்மையுடன் இருக்கும் போது உருண்டையாக உருட்டி வரப்புகள் மற்றும் எலி வளைகள் அருகே வைத்தால் வாசனையாக உள்ள உருண்டையை சாப்பிட்டு அதில் உள்ள சிமெண்டு இறுகும் போது எலிகள் தானாக இறந்து விடும்.
இதேபோன்று கருவாட்டு பொடியுடன் சம அளவு சிமெண்டு கலந்து உருண்டையாக உருட்டி எலி நடமாட்டம் உள்ள இடங்களில் வைத்தாலும் அதனை சாப்பிட்டு எலி இறந்து விடும்.
மேற்கண்ட வழிமுறைகளை விவசாயிகள் கையாண்டால், நெற் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை அழித்து அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகளின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக மஞ்சள் சாகுபடியை மேற்கொண்டுள்ளோம்.
- ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொங்கல் பண்டிகையின் போது விற்பனைக்காக உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது.
குடிமங்கலம்:
அறுவடைதிருநாளான பொங்கல் பண்டிகையின் போது விளைந்தும் விளையாத நிலையிலுள்ள பச்சை மஞ்சளை செடியுடன் கொத்தாக பொங்கல் பானையில் கட்டும் பழக்கம் உள்ளது. இதனாலேயே பொங்கல் பண்டிகையின் போது செங்கரும்புக்கு இணையான இடத்தை மஞ்சள் கொத்து பிடிக்கிறது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் கொத்து விற்பனை செய்யும் வகையில் மஞ்சள் சாகுபடியில் குடிமங்கலம் பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பொங்கலன்று முக்கிய இடம் பிடிக்கும் மங்கலப் பொருளான மஞ்சள் கொத்து சாகுபடி விவசாயிகளுக்கு மன நிறைவைத் தருகிறது. பெரும்பாலும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொங்கல் பண்டிகையின் போது விற்பனைக்காக உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகளின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக மஞ்சள் சாகுபடியை மேற்கொண்டுள்ளோம். உணவுக்காகவோ மற்ற பயன்பாட்டுக்காகவோ மஞ்சள் உற்பத்தி செய்யும்போது சுமார் 9 மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும். அதேநேரத்தில் பொங்கலுக்கு மஞ்சள் கொத்து உற்பத்தி செய்வதற்காக ஆடிப்பட்டத்தில் சாகுபடி மேற்கொண்டால் மார்கழி கடைசியில் அறுவடை செய்து விடலாம். வியாபாரிகள் நேரடியாக விளைநிலத்துக்கே வந்து வாங்கிச் செல்கின்றனர். மனதுக்கு மகிழ்ச்சி தரும் அதேநேரத்தில் நல்ல வருவாயும் தரக்கூடியதாக மஞ்சள் சாகுபடி உள்ளது.இவ்வாறு விவசாயிகள் கூறினார்.
- அணை யின் நேரடி தண்ணீர் பாசனத்தை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபடுகிறார்கள்
- தோவாளை சேனல், அனந்தனார் சேனல் உள்பட அனைத்து சேனல்களிலும் ஷிப்டு முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி விவசாயி கள் சாகுபடி செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசனக் குளங் கள் உள்ளது. மேலும் அணை யின் நேரடி தண்ணீர் பாசனத்தை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபடுகிறார்கள். தற்பொழுது மாவட்டம் முழுவதும் கும்பப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு இருந்தனர்.
தேரூர், சுசீந்திரம், அருமநல்லூர், பூதப்பாண்டி, தக்கலை, குலசேகரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டரில் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். விவசாயிகளுக்கு பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து தங்கு தடை இன்றி தண்ணீர் வழங் கப்பட்டு வருகிறது.
தோவாளை சேனல், அனந்தனார் சேனல் உள்பட அனைத்து சேனல்களிலும் ஷிப்டு முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தங்கு தடை இன்றி வழங் கப்பட்டது. இந்த நிலை யில் தேரூர், சுசீந்திரம் பகுதியில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதையடுத்து அறுவடை பணி தற்போது தொடங்கியுள்ளது.
சுசீந்திரம், தேரூர் பகுதி களில் அறுவடை எந்திரம் மூலமாக அறுவடை பணி நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெற்களை உடனடியாக விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள். டிராக்டர் மூலமாக கொண்டு செல் லப்படும் நெற்கள் கோட் டார் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வருகிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட் டத்தை பொறுத்த மட்டில் இன்று காலை 42.36 அடியாக உள்ளது.அணைக்கு 797 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 731 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.55 அடியாக உள்ளது. அணைக்கு 41 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணை யில் இருந்து 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.
பேச்சிபாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து 1121 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக வெளி யேற்றப்பட்டு வருகிறது.
- அறுவடை செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
- கொள்முதல் நிலையம் முன்பு நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருந்தனர்.
மெலட்டூர், ஜன.19-
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை வட்டம், இரும்புதலை பகுதியில் சம்பா பருவத்தில் பல நூறு ஏக்கர் அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நன்கு விளைந்து தற்போது அறுவடை செய்யும் பணி கடந்த சிலநாட்களாக நடைபெற்று வந்தது.
அரசுகொள்முதல்நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் இரும்புதலை பகுதியில் அரசு கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி வைத்து கடந்த சிலநாட்களாக விவசாயிகள் காத்திருந்தனர்.
கொள்முதல் நிலைய த்தை உடனடியாக திறக்க வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி மூலமாக விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் இரும்புதலை பகுதியில் அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க உத்திரவிட்டனர் இதனையடுத்து நேற்று புதன்கிழமை இரும்புதலை அரசு கொள்முதல் நிலையம் ஊராட்சிமன்ற தலைவர் பாலாஜி முன்னிலையில் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொள்முதல்நிலையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு நுகர்பொருள்வாணிப கழக அதிகாரிகளுக்கும், மற்றும் முயற்சிகள் மேற்கொண்ட ஊராட்சி மன்ற தலைவருக்கும் விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.
- விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.
- நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா முன்பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.
மெலட்டூர் அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து விற்க முடியாமல் கடந்த ஒருவார காலமாக காத்து கிடக்கின்றனர்.
கொள்முதல்நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.
எனவே மெலட்டூரில் அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து நெல்கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காரையூர் பகுதியில் 1000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை பணி நடந்து வருகிறது.
- வசாயிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் பகுதியில் 1000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது இங்கு அறுவடை பணி நடைபெற்று வருகிறது.அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிட்டது.இந்நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி காரையூர் பகுதியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாராணி உத்திராபதி தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன் முன்னிலை வகித்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
இதில் வார்டு உறுப்பினர் கார்த்திக் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- விவசாயிகள் தீவிரம்
- பசுமையாக வளர்ந்துள்ள அழகு
கரூர்,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சூரியகாந்தி அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பாக்கா பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, சரவணபுரம், பாம்பன் பட்டி, நடுப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது, செடிகள் பசுமையாக வளர்ந்து சூரியகாந்தி செடிகளில் பூக்கள் பிடித்து, முற்றிய விதைகள் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தண்ணீர் தேக்கம்.
- தற்போது அறுவடை நேரத்திலும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் வேதனை.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தில் தற்போது வரை 85 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 19 மில்லி மீட்டர், செம்பனார்கோவிலில் 15.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும் மயிலாடுதுறையில் 8.60 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது.
காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் தற்காலிகமாக பல்வேறு பகுதிகளில் கொள்முதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நல்லத்குடி,கோடங்குடி ஆனந்ததாண்டவபுரம், சேத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொள்முதல் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
சம்பா சாகுபடி தொடங்கும் காலத்தில் மழை பெய்ததால் விளைச்சல் பாதித்து தற்போது அறுவடை நேரத்திலும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
- பயறு வகை பயிர்களை ஏக்கருக்கு 10 கிலோ விதை என்ற அளவில் விதைக்க வேண்டும்.
- 4 கிலோ எஏ.பி உரத்தினை 4-6 லிட்டர் தண்ணீரில் ஊர வைக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது ;-
தஞ்சாவூர் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் சுமார் 14000 ஏக்கர் பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் தரிசில் உளுந்து பயிர் சாகுபடி செய்ய அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும்.
நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த நாளில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பயறு வகை பயிறுகளின் சாகுபடியை ஊக்கப்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் விதமாக நெல்லுக்குப் பின் உளுந்து சாகுபடி திட்டம் இவ்வாண்டில் சிறப்பு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி நெல்லுக்கு ப்பின் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உளுந்து விதை ஏக்கருக்கு 8 கிலோ வீதம் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யபடுகிறது.
இவ்வட்டாரத்தில் தஞ்சாவூர் விரிவு, சூரக்கோட்டை, வல்லம் மற்றும் மானங்கோரை வேளாண்மை விரிவாக்க மையங்கள் விதை உளுந்து இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தங்கள் விபரத்தை உழவன் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.
நெல் தரிசில் சம்பா, தாளடி சாகுபடிக்குப்பிறகு மார்கழி தை மாதங்களில் பயறு வகை பயிர்கள் சாகுபடியை மேற்கொள்ளலாம். உளுந்து -ஆடுதுறை 3, ஆடுதுறை 5, ஆடுதுறை 6, வம்பன் 6, வம்பன் 8
பாசிபயிறு - ஆடுதுறை 3. கோ8 ஆகும்.
சரியான அளவு பயிர் எண்ணிக்கையை பராமரிப்பதால் அதிக விளைச்சல் பெற வாய்ப்புள்ளது.
எனவே பயறு வகை பயிர்களை ஏக்கருக்கு 10 கிலோ விதை என்ற அளவில் விதைக்க வேண்டும்.
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் அல்லது 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி உயிர்ப் பூஞ்சாணம் என்ற அளவில் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்கவும்,
சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு 7-10 நாட்களுக்கு முன் மண் ஈரம் மெழுகுப்பதத்தில் இருக்கும் போது விதைக்க வேண்டும்.
நெல் தரிசு பயிறுவகைப்பயிர்களை பயிறுகளின் ஆரம்ப கால வளர்ச்சி பருவத்தில் பல்வேறு களைகள் போட்டியிட்டு மகசூலை பாதிப்பதால் களை நிர்வாகம் இன்றியமையாதது நெல் தரிசுப்பயிரில் விதைத்த 18-20 ஆம் நாள் அதாவது சம்பா நெல் அறுவடை செய்த 10 ம் நாள் குயிஸலாபாப் ஈத்தைல் என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 400 மி.லிட்டர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லிட்டர் அளவில் தெளிப்பதால் வயலில் உள்ள புல் வகைகள், நெல் மறுதாம்பு பயிர மற்றும் அறுவடையின் போது விழுந்து முளைத்த நெல் நாற்றுகள் ஆகியவை நன்கு கட்டுப்படுத்தப்படுவதால் உளுந்து பயிருக்கு மண்ணில் உள்ள எஞ்சிய ஈரம் மற்றும் கிடைக்கப்படுகிறது.
ஏக்கருக்கு 4 கிலோ எஏ.பி உரத்தினை 4-6 லிட்டர் தண்ணீரில் ஊர வைக்க வேண்டும்.
பிறகு தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து 200 லிட்டர் தண்ணீரில கலந்து கைத்தெளிப்பான் கொண்டு இலைகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
பூக்கும் தருணத்தில்(விதைத்த 25ம் நாள்) ஒரு முறை மற்றும் 15 நாட்கள் கழித்து அதாவது காய்கள் பிடிக்கும் தருணத்தில் விதைத்த 40ம் நாள் மறுமுறையும் தெளிக்க வேண்டும்.
எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நிறைந்த மகசூலும் வருவாயும் மண்வளத்தையும் கொடுக்கும் உளுந்து சாகுபடியை அனைத்து விவசாயிகளும் மேற்கொண்டு பயனடைய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 90 சதவீத அறுவடை பணிகள் நடைபெறவில்லை.
- கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்ய வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது 10 சதவீத அறுவடை பணிகள் மட்டுமே நிறைவடைந்தது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மீதமுள்ள 90 சதவீத அறுவடை பணிகள் நடைபெறாமல் கேள்விக்குறி ஆகியுள்ளது.
இந்நிலையில், காப்பீடு நிறுவனம் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் அறுவடை பரிசோதனையை முடித்துவிட்டதாக கூறுவது வேதனை அளிக்கிறது.
விவசாயிகள் வங்கிகளில் வட்டிக்கு பணம் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சாகுபடி செய்துள்ளனர்.
எனவே, காப்பீட்டு நிறுவனம் மீண்டும் அந்த பகுதிகளில் புதிய அறுவடை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பாதிக்கபட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும், மேலும், மேம்படுத்தபட்ட பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் 100 சதவீத இழப்பீடு பெற்று தர வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க நாகை மாவட்ட செயலாளர் கமல்ராம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.