என் மலர்
நீங்கள் தேடியது "tag 99754"
மடத்துக்குளம்:
காய்கறி சாகுபடியில் தட்டை பயர், பீன்ஸ் வரிசையில் பொரியல் தட்டையும் ஒன்றாகும். கேரளா மாநிலத்தில் அவியல், பொரியல், கூட்டு என உணவில் அதிக அளவு பயன்படுத்தப்படுவதால், அம்மாநிலத்திற்கு அதிக அளவு விற்பனைக்கு செல்கிறது.
உடுமலை பகுதியில் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், நீர்ப்பற்றாக்குறை, பராமரிப்பு செலவு ஆகிய காரணங்களினால் 60 நாட்களில் பயனுக்கு வரும் பொரியல் தட்டை சாகுபடியிலும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குடிமங்கலம் வட்டாரம் உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் தற்போது அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் பொரியல் தட்டை கேரளா மாநிலம், மூணாறு, மறையூர் மற்றும் பாலக்காடு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. கேரள மாநில வியாபாரிகள் வயல்களுக்கு நேரடியாக வந்து விளையும் பொரியல் தட்டை அனைத்தையும் கொள்முதல் செய்து வருகின்றனர்.
உடுமலை பகுதியில் அறுவடை செய்யப்படும் பொரியல் தட்டைக்கு கூடுதல் விலை கிடைத்து வந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக நிலையில்லாத விலை நிலவுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பொரியல் தட்டை அனைத்து வகை நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். குளிர் சீதோஷ்ண நிலை உள்ள உடுமலை சுற்றுப்பகுதிகளில் நல்ல மகசூல் கிடைக்கிறது. விதைப்பு செய்த 50 வது நாள் முதல் காய்கள் தினமும் பறிக்கலாம்.
தினமும் ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வரை கிடைக்கிறது. ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. 10 டன் வரை மகசூல் கிடைக்கிறது.கடந்த வாரம் கிலோ 30 ரூபாய் வரை சந்தை நிலவரம் இருந்தது. தற்போது 20 ரூபாயாக குறைந்துள்ளது. கேரளா மாநில வியாபாரிகள் மட்டுமே கொள்முதல் செய்வதால், நிலையில்லாத விலை கிடைக்கிறது.
விவசாயிகளிடம், குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். எனவே, கேரளா மாநிலத்திற்கு அதிக அளவு விற்பனைக்கு செல்லும் நிலையில் வேளாண் மற்றும் வணிகத்துறை சார்பில் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
கர்நாடகத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஹம்பி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹெலி டூரிசம் அமைக்கப்பட்டுள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவில் ஹெலி டூரிசம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஹெலி டூரிசம் தொடங்கிய முதல் 2 நாட்கள் விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகளுக்கு இலவசமாக ஹெலிகாப்டரில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி அப்பகுதி விவசாயிகள், ஆடு மேய்க்கும் தொழிலாளிகள் ஹெலிகாப்டரில் இலவசமாக பயணித்து சுற்றுவட்டார பகுதிகளை கண்டு களித்தனர். 2-வது நாளான நேற்றும் ஏராளமானோர் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். இந்த 2 நாட்களிலும் காலை 8 மணி முதல் மாலை 2.30 மணி வரை ஹெலிரைடு நடத்தப்பட்டது. சுமார் 200 விவசாயிகள் ஹெலிகாப்டரில் இலவசமாக பறந்து சென்றனர்.
அதேபோல் வாணிவிலாஸ் அணைக்கட்டில் இலவச படகு சவாரியும் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒசநகர் தொகுதி எம்.எல்.ஏ. கூலிகட்டி சேகர் செய்திருந்தார். இதைதொடர்ந்து வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணத்துடன் ஹெலிரைடு நடத்தப்பட உள்ளது.
- கொல்லன் சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது.
- கருடன் சம்பா தலா 200 கிலோவும், மாப்பிள்ளை சம்பா 100 கிலோவும் மதுக்கூர் வட்டாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வரப்பெற்றுள்ளது.
மதுக்கூர்:
மதுக்கூர் பகுதிவேளாண் உதவி இயக்குனர் திலகவதி செய்திக்குறிப்பில் கூறியுள்ள தாவது,
தமிழகத்தில் உள்ள வேளாண் பெருமக்களின் நலன் காத்து வருவாயை பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக மரபுசார் ரகங்களை பாதுகாக்கும் வகையில் 21- 22 ம் நிதி ஆண்டில் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் எனும் திட்டம் அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது.
அதன்படி அறுபதாம் குறுவை, ஆத்தூர் கிச்சிலி சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, கருடன் சம்பா, கருங்குருவை, கருப்பு கவுனி, கீரை சம்பா, கொல்லன் சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது என்பதால் இந்த மரபு சார் நெல் ரகங்களை திரட்டி பல மடங்காக பெருக்கி விவசாயிகளுக்கு விநியோகம் செய்து அதிக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் 33 அரசு விதைப் பண்ணைகளில் 15 பாரம்பரிய நெல் ரகங்களை 200 டன் அளவு உற்பத்தி செய்துள்ளது.
இவ்வாறு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாக்கோட்டை அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பு கவுனி, கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா ஆகிய ரகங்களில் கருப்பு கவுனி மற்றும் கருடன் சம்பா தலா 200 கிலோவும், மாப்பிள்ளை சம்பா 100 கிலோவும் மதுக்கூர் வட்டாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வரப்பெற்றுள்ளது.
ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் மட்டுமே விவசாயிக்கு வழங்கப்பட உள்ளதுமதுக்கூர் வட்டாரத்தில் முன்னுரிமை அடிப்படையில் 20 விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதால் ஆர்வமுள்ள விவசாயிகள் உடன் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலரை அணுகி அவர்களுடைய பரிந்துரையின் அடிப்படையில் மதுக்கூர் வேளாண் விரிவாக்க மையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
மேற்கண்ட 3 பாரம்பரிய நெல் ரகங்களும் 50% மானியத்தில் ஒரு கிலோவுக்கு ரூபாய் 12.50 என்ற மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
மரபுசார் நெல் ரகங்களை பாதுகாப்பதற்காக அமைச்சர் அறிவுரைப்படி வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் ஜஸ்டின் அறிவுரைபடியும் பாரம்பரிய விதை நெல்கள் உற்பத்தி செய்யப்பட்டு உண்மை நிலை விதைகளாக மரபு சார் நெல் ரகங்கள் இனத்தூய்மையுடனும் விதை தரத்துடனும் விநியோகம் செய்யப்படுவதால் விவசாயிகள் மானிய விலையில் விதைகளை பெற்று மரபுசார் நெல் ரகங்களை வருங்கால தலைமுறைக்கும் பயன்படும் வகையில் பாதுகாத்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எனவே நமது மதுக்கூர் வட்டார விவசாயிகள் மேற்கண்ட பாரம்பரிய ரகங்களின் விதைகளை வாங்கி பயன்படுத்தி விதைகளை தங்களுக்கு என சேமித்து வைக்கவும் அரிசி ஆக்கி விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.
மேற்கண்ட 3 பாரம்பரிய ரகங்களும் 500 கிலோ மட்டுமே வரப் பெற்றுள்ளதால் முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவே தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர்களை அணுகி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
