search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நாட்டில் நல்லாட்சி நடைபெற தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்- கனிமொழி பிரசாரம்
    X

    நாட்டில் நல்லாட்சி நடைபெற தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்- கனிமொழி பிரசாரம்

    நாட்டில் நல்லாட்சி நடைபெற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுமாறு கனிமொழி எம்பி பிரசாரத்தில் பேசியுள்ளார். #kanimozi #dmk #parliamentelection
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை  திருச்செந்தூர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். திருச்செந்தூர் பேரூராட்சி கலையரங்கம் அருகில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் ஜீவாநகர், துர்க்கையம்மன் கோவில் தெரு, நாடார் தெரு, சண்முகர் மஹால் வழியாக சன்னதி தெரு, மறக்குடி தெரு, மணல்மேடு, சபாபதிபுரம் தெரு, புளியடி தெரு, வீரராகபுரம் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு, வீரகாளியம்மன் கோவில் தெரு வண்ணாந்திரவிளை, கரம்பவிளை, தோப்பூர் தெற்கு ரதவீதி, பாரதியார் தெரு, மேல நாடார் தெரு வழியாக வந்து தீயணைப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-  

    தி.மு.க. சொன்னதைதான் செய்வோம். செய்வதை தான் சொல்வோம். மத்தியில் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆட்சி அமைந்ததும் மாணவர்களின் கல்விக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்வோம். விவசாயிகளின் வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 

    நாட்டில் நல்லாட்சி நடைபெற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×