search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamil nadu governor banwarilal purohit"

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சுற்றுப்பயணம் செய்வதை குறைத்துக்கொள்வது நல்லது என்று திருநாவுக்கரசர் கூறினார்.#banwarilalpurohit
    புதுடெல்லி:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி கடந்த வாரம் டெல்லி வந்தார். ஒரு வாரம் டெல்லியில் தங்கியிருந்த அவர் நேற்று தமிழகத்துக்கு புறப்பட்டார். முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர்கள் அசோக் கெலாட், முகுல்வாஸ்னிக் உள்ளிட்டோரை சந்தித்து கட்சி நிர்வாகம் சம்பந்தமாக பேசினேன். கட்சிப்பணிக்காக ஏற்கனவே 26 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தேன். அடுத்து நாளை (புதன்கிழமை) மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன். இன்னும் 16 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டியுள்ளது.

    ஜூலை முதல் வாரத்தில் முகுல்வாஸ்னிக் தமிழகம் வந்து 4 மாவட்ட சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்கிறார். தமிழகத்தில் கவர்னரின் ஆய்வு பயணத்தை நானும் கண்டித்து இருக்கிறேன். கவர்னர் என்பவர் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒரு பாலமாக இருந்து, மாநிலத்துக்கு தேவையான நிதி கிடைக்க உதவியாக இருக்க வேண்டும். அதை விடுத்து ஊர் ஊராக சுற்றுப்பயணம் செய்ய தேவை இல்லை. இதை குறைத்துக்கொள்வது அவருக்கு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குஷ்பு விவகாரம் குறித்து திருநாவுக்கரசரிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி. இங்கு ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வார்கள். நான் தலைமை ஏற்றபின்னர் கட்சியில் எந்த பிரச்சினையும் ஏற்பட்டது இல்லை. யாருடனும் கருத்துவேறுபாடு இல்லை. தமிழகம் முழுவதும் ராகுல்காந்தி அணியாகத்தான் உள்ளது. குஷ்புவை பற்றியே ஏன் அதிகம் கேட்கிறீர்கள்? குஷ்பு என்ன பெரிய தலைவரா? குஷ்புவுடன் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. பத்திரிகைகள் தான் அதுபற்றி பெரிதாக பேசிக்கொள்கின்றன’ என்றார்.

    பேட்டியின்போது மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் அமீர்கான், வக்கீல் சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #banwarilalpurohit
    கல்வித்துறையில் தமிழகம் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்று சென்னையில் நடந்த செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமங்களின் பொன்விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
    சென்னை:

    செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமங்களின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் பங்கேற்றார்.

    செயின்ட் ஜான்ஸ் பள்ளிகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை பன்வாரிலால் புரோகித் வழங்கி கவுரவித்தார்.

    முன்னதாக பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

    சுவாமி விவேகானந்தர் கூறியபடி செயின்ட் ஜான்ஸ் கல்வி அறக்கட்டளை கல்வியை மேம்படுத்த தங்களை அர்ப்பணித்து முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறது. நான் கவர்னராக பொறுப்பு ஏற்று 8 மாதங்கள் ஆகின்றன. இதுவரையிலும் 17 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளேன். கல்வித்துறையில் நமது மாநிலம் பெற்றுள்ள வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. பள்ளிக்கு செல்லாமல் இடையில் நிற்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

    30 முதல் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் இருக்கிறார்கள். சுமார் 45 சதவீத மாணவர்கள் பள்ளி கல்வியை முடித்துவிட்டு மேல் படிப்புகளுக்கு செல்கிறார்கள். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இங்கு ஏராளமான மருத்துவ கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே, தமிழக அரசு கல்வித்துறையை துடிப்புடன் மேம்படுத்திவருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளை ஊக்குவிப்பதிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×