search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamil writer thangappam died"

    இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் லெனின் தங்கப்பா புதுச்சேரியில் இன்று காலமானார். #MLThangappa #SahityaAcademyAward
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்டம் அவ்வை நகரில் வசித்து வருபவர் தமிழ் எழுத்தாளர் லெனின் தங்கப்பா (84). இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் குறும்பலாபேரி. இவர் தாகூர் கலைக்கல்லூரி மற்றும் பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

    இவர் 50-க்கு மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். மேலும், பாரதியார், அரவிந்தர் மற்றும் பாரதிதாசன் ஆகியோரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

    இவர் எழுதிய, சோளக்கொல்லை பொம்மை என்ற நூலுக்கு 2010-ம் ஆண்டுக்கான குழந்தை இலக்கிய பிரிவில் சாகித்ய விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #MLThangappa #SahityaAcademyAward
    ×