என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tanker water charge hike
நீங்கள் தேடியது "tanker water charge hike"
டீசல் விலை உயர்வு காரணமாக சென்னையில் லாரி தண்ணீர் கட்டணம் கடந்த 21-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு விற்கப்படும் லாரி தண்ணீர் விலை 5 சதவீதம் அதிகமாகி உள்ளது.
சென்னை:
டீசல் விலை உயர்வு காரணமாக சென்னையில் லாரி தண்ணீர் கட்டணம் கடந்த 21-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் லாரிகள் மூலம் இலவசமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டாலும் வீடு, நிறுவனங்களுக்கு குடிநீர் வாரியத்தில் பதிவு செய்தால் தனியாக லாரி தண்ணீர் அனுப்பும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மினி லாரி தண்ணீர் ரூ.400-க்கு விற்கப்பட்டது. இப்போது இதன் விலை ரூ.475 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் ரூ.510-ல் இருந்து ரூ. 700 ஆக உயர்ந்துள்ளது.
9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி தண்ணீர் ரூ.600-ல் இருந்து ரூ.700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு ரு.765-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது.
16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரி தண்ணீர் ரூ. 1070-ல் இருந்து விலை உயர்த்தப்பட்டு ரூ.1200-க்கு விற்கப்படுகிறது. நிறுவனங்களுக்கு வழங்கப்படும் லாரி தண்ணீர் ரூ.1360-ல் இருந்து ரூ.1700 ஆக உயர்ந்துள்ளது.
இதுபற்றி சென்னை குடிநீர் வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. பல்வேறு கால கட்டங்களில் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதால் கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளோம்.
வீடுகளுக்கு விற்கப்படும் லாரி தண்ணீர் விலை 5 சதவீதம் அதிகமாகி உள்ளது. கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விற்கப்படும் தண்ணீர் விலை 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Diesel
டீசல் விலை உயர்வு காரணமாக சென்னையில் லாரி தண்ணீர் கட்டணம் கடந்த 21-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் லாரிகள் மூலம் இலவசமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டாலும் வீடு, நிறுவனங்களுக்கு குடிநீர் வாரியத்தில் பதிவு செய்தால் தனியாக லாரி தண்ணீர் அனுப்பும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மினி லாரி தண்ணீர் ரூ.400-க்கு விற்கப்பட்டது. இப்போது இதன் விலை ரூ.475 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் ரூ.510-ல் இருந்து ரூ. 700 ஆக உயர்ந்துள்ளது.
9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி தண்ணீர் ரூ.600-ல் இருந்து ரூ.700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு ரு.765-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது.
16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரி தண்ணீர் ரூ. 1070-ல் இருந்து விலை உயர்த்தப்பட்டு ரூ.1200-க்கு விற்கப்படுகிறது. நிறுவனங்களுக்கு வழங்கப்படும் லாரி தண்ணீர் ரூ.1360-ல் இருந்து ரூ.1700 ஆக உயர்ந்துள்ளது.
இதுபற்றி சென்னை குடிநீர் வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. பல்வேறு கால கட்டங்களில் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதால் கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளோம்.
வீடுகளுக்கு விற்கப்படும் லாரி தண்ணீர் விலை 5 சதவீதம் அதிகமாகி உள்ளது. கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விற்கப்படும் தண்ணீர் விலை 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Diesel
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X