என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Technology"

    • படம் குறித்து படக்குழு அதன் போஸ்டரை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
    • ரஜினியின் 171வது படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் அவ்வபோது வருகிறது.

    ரஜினி நடிக்கும் 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதுதொடர்பான அறிவிப்பை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் படக்குழு அதன் போஸ்டரை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இந்நிலையில், ரஜினியின் 171வது படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் அவ்வபோது வருகிறது.

    அந்தவகையில், இந்த படத்தில் ரஜினியை இளமையாகக் காட்ட டீ- ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் நடிக்கும் G.O.A.T திரைப்படத்தில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.
    • ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஏ.ஐ. வீடியோக்களும் முக்கிய பங்காற்ற தொடங்கி உள்ளன.

    இந்த தேர்தல் களத்தில் இதனை ஆளும் கட்சியான தி.மு.க. முதல் முறையாக கையில் எடுத்து செயல்படுத்தி உள்ளது. சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டையொட்டி மறைந்த தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டை வாழ்த்துவது போன்ற ஏ.ஐ. வீடியோ வெளியிடப்பட்டது.

    தி.மு.க. மாநாட்டு பந்தலிலும் இது ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் கருணாநிதியே மாநாட்டுக்கு நேரில் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இதே போன்று முன்னாள் மத்திய மந்திரியும் தற்போதைய எம்.பி.யுமான டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.

    இப்படி தி.மு.க. சார்பில் இரண்டு வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகி அது தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.

    இதேபோன்று மறைந்த தங்கள் தலைவர்கள் ஏ.ஐ. வீடியோ மூலம் பேசுவதற்கான ஏற்பாடுகளையும் மற்ற கட்சியினரும் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடியோவை தயாரித்து வெளியிட அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதே போன்று மற்ற அரசியல் கட்சியினரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோக்களை தயாரிக்க முடிவு செய்து உள்ளனர். இந்த வீடியோக்கள் மூலம் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் உள்ளன என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

    குறிப்பாக இரண்டு பிரிவாக பிரிந்து கிடக்கும் கட்சியினர் மறைந்த தங்களது தலைவர்களை பயன்படுத்தி மாற்று அணியினரை விமர்சிக்க முடியும் என்ப தால் அது அரசியல் களத்தில் மோதல் போக்கை உரு வாக்க வழிவகுக்கும் என்கிறார்கள்.



    உதாரணத்துக்கு தமிழகத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

    அவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பது போன்று ஏ.ஐ. வீடியோக்களை வெளியிட்டால் அது இரண்டு பிரிவினருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறி உள்ளனர்.

    தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. இந்த அணிகளை சேர்ந்தவர்களும் மறைந்த தங்களது தலை வர்களை ஏ.ஐ. வீடியோக்கள் மூலமாக உருவாக்கி விமர்ச னம் செய்யவும் வழி வகுக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது. அதே நேரத்தில் அதனை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கணிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ஏர்டெல் நிறுவனம் 7.35 லட்சம் புதிய பயனாளர்களை இணைந்துள்ளது.
    • புதிய இணைப்புகளுடன், ஜியோவின் சந்தைப் பங்கு 40.48 சதவீதமாகும்.

    முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், ஏர்டெல் நிறுவனத்தை ஒப்பிடும்போது 2024 ஏப்ரல் மாதத்தில் 26.87 லட்சத்துக்கும் அதிகமான புதிய மொபைல் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதுவே, ஏர்டெல் நிறுவனம் 7.35 லட்சம் புதிய பயனாளர்களை மட்டுமே இணைந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் மாத இறுதியில் 1,199.28 மில்லியனிலிருந்து 24, ஏப்ரல் இறுதியில் 1,201.22 மில்லியனாக உயர்ந்துள்ளது, இதன் மூலம் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.16 சதவீதமாக உள்ளது.

    நகர்ப்புற தொலைபேசி சந்தா மார்ச் இறுதியில் 665.38 மில்லியனில் இருந்து ஏப்ரல் இறுதியில் 664.89 மில்லியனாக குறைந்துள்ளது.

    இருப்பினும் அதே காலகட்டத்தில் கிராமப்புற சந்தா 533.90 மில்லியனில் இருந்து 536.33 மில்லியனாக அதிகரித்துள்ளது.

    ஏப்ரல் மாதத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொலைபேசி சந்தாக்களின் மாதாந்திர வளர்ச்சி விகிதம் முறையே 0.07 சதவீதம் மற்றும் 0.45 சதவீதமாக இருந்தது.

    எவ்வாறாயினும், வோடபோன் ஐடியா இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கூடுதலா 7.35 லட்ச சந்தாதாரர்களை இழந்ததால் தொடர்ந்து வீழ்ச்சியில் இருந்து வருவதாக டிராய் தெரிவித்துள்ளது.

    இந்த புதிய இணைப்புகளுடன், ஜியோவின் சந்தைப் பங்கு 40.48 சதவீதமாகவும், ஏர்டெல் 33.12 சதவீதமாகவும், வோடபோன் ஐடியா 18.77 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

    ஏப்ரல் மாத இறுதியில் மொத்த தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தாதாரர்களின் பங்கு முறையே 55.35 சதவீதம் மற்றும் 44.65 சதவீதம் ஆகும்.

    • இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியது.
    • வங்கிப் பரிவர்த்தனை, டெலிவரி அப்டேட்கள், பணப் பரிவர்த்தனை அலெர்ட்கள் போன்ற அனைத்திற்கும் ஓடிபி பயன்படுகிறது.

    ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஓடிபி [OTP] எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. வங்கி சேவைகள், டெலிகாம் சேவைகள் என பல துறைகளில் ஓடிபி இன்றியமையாததாக உள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஓடிபி மெசேஜ் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று டெலிகாம் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியது.

     

    ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட அந்த அந்த விதிப்படி எல்லா ஓடிபி மெசேஜ்களையும் டிராய் கண்காணிக்கும். அப்படி டிராக் செய்யப்பட்ட ஓடிபிகள் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலம் பயனர்களுக்கு சென்றால் அது தடுத்து நிறுத்தப்படும்.

    இதனால் தங்களுக்கு அனுப்பும் ஓடிபிகளை பயனர்களால் பார்க்க முடியாது. வங்கிப் பரிவர்த்தனை, டெலிவரி அப்டேட்கள், பணப் பரிவர்த்தனை அலெர்ட்கள் போன்ற அனைத்திற்கும் ஓடிபி பயன்படுத்தப்படும் நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஓடிபிகளை நேரடியாக அல்லாமல் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மூலம் ஓடிபி எண்களை அனுப்புகிறது.

    எனவே அவ்வாறு செயல்படும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் வங்கியால் அங்கீகரிக்கப்படாத, அடையாளம் காணக்கூடியதாக இல்லாவிட்டால், அந்த மெசேஜ்கள் தடைபடும். தற்போதுள்ள பல டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு இந்த சிக்கல் உள்ளது.

    குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் - ஐடியா ஆகிய நிறுவனங்கள் சார்ந்திருக்கும் டெலி மார்கெட்டிங்கில் இந்த சிக்கல் உள்ளதால் அந்த அவற்றின் ஓடிபி சேவைகள் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று இந்நிறுவனங்கள் டிராய் இடம் கோரிக்கை வைத்துள்ளது.

    • ஒரு மனிதனைக் கழுவ 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.
    • சரி, இது உடலை மட்டும்தான் சுத்தம் செய்கிறதா என்றால், இல்லை.

    இன்றைய காலகட்டத்தில் குளிப்பதே பெரும்பாடாக உள்ளதாக ஜென் Z தலைமுறையினர் நொந்துகொள்கின்றனர். அனைத்து பிரச்சனைக்கும் தீர்வை வைத்திருக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தற்போது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான் மனிதர்களைக் குளிப்பாட்டும் நவீன ஹியூமன் வாஷிங் மெஷின்.

    ஜப்பானின் ஒசாகாவைச் சேர்ந்த ஷவர்ஹெட் நிறுவனமான சயின்ஸ் கோ. நிறுவனம் இந்த நவீன வாஷிங் மெஷினை கண்டுபிடித்து 'மிராய் நிங்கன் சென்டகுகி' என்று பெயர்வைத்துள்ளது. இதற்கு எதிர்காலத்தின் மனித வாஷிங் மெஷின் என்பது பொருளாகும்.

     

    இந்த சலவை எந்திரம் ஒரு மனிதனைக் கழுவ 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. நீங்கள் அதன் பிளாசிக் நாற்காலி மீது ஏறியதும் மெஷினில் பாதியளவு வெதுவெதுப்பான நீர் நிரம்பும். பின்னர் மெஷினில் இருந்து நீர் குமிழிகளாக வெடிக்கிறது.

    இது உங்கள் தோலில் இருந்து அழுக்குகளை நீக்குகிறது. நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியில் உள்ள மின் உணரிகள், உங்களின் உடலின் உயிரியல் தகவல்களைச் சேகரித்து நீங்கள் பொருத்தமான வெப்பநிலையில் கழுவப்படுவதை உறுதிசெய்யும்.

    இதில் பிளாஸ்டிக் 'மசாஜ் பந்துகள்' அடங்கும். சரி, இது உடலை மட்டும்தான் சுத்தம் செய்கிறதா என்றால் இல்லை. இது உங்கள் மனதையும் அமைதிப்படுத்துகிறது.

     

    மெஷினில் உள்ள செயற்கை நுண்ணறிவு ஏஐ [AI] சென்சார் உங்களின் சேகரிக்கப்பட்ட உடலின் உயிரியல் தகவல்களை ஆராய்ந்து உங்கள் மனதை அமைதிப்படுத்தும் காட்சி மற்றும் ஒலி அடங்கிய வீடியோவை நாற்காலி முன் ஒளிபரப்புகிறது. விளைவு, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விரைவான குளியல்.

    இந்த அதிநவீன மனித வாஷிங் மெஷின் ஒசாகா கன்சாய் எக்ஸ்போவில் விரைவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அங்கு 1,000 விருந்தினர்கள் இந்த குளியலை முயற்சிக்க உள்ளனர்.

    • கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் கூகுலின் குவாண்டம் ஆய்வகம் உள்ளது
    • 30 ஆண்டுகால சவாலை முறியடித்து ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

    குவாண்டம் கம்ப்யூட்டிங் என்பது குவாண்டம் கோட்பாட்டின் கொள்கைகளின் அடிப்படையில் கணினிகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் கணினி அறிவியலின் ஒரு பகுதியாகும். இயற்பியலின் கூறுகளை பயனப்டுத்தி மிகவும் சிக்கலான சிக்கல்களைத் தீர்க்க குவாண்டம் கம்ப்யூட்டிங் பயன்படுத்துகிறது.

    குவாண்டம் கம்ப்யூட்டிங் ஒரு வளர்ந்து வரும் அறிவியல் துறையாக உள்ள நிலையில் தற்போது அதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

     

     

    கூகிள் நிறுவனம் சார்பில் புதிய குவாண்டம் கம்பியூட்டிங் சிப் [CHIP] ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய குவாண்டம் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்த புதிய சிப்-க்கு வில்லோ [WILLOW] என்று பெயரிடப்பட்டுள்ளது.

     

    ஒரு சிக்கலான கணித பிராப்லம் -ஐ இன்றைய சூப்பர் கம்ப்யூட்டர்கள் தீர்க்க 10 செப்டில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொண்டால், அதே சிக்கலை 'வில்லோ' 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் தீர்க்கிறது என்று கூறப்பட்டுள்ளது. [1 (24 சைபர்கள்) = 1 செப்டில்லியன்]

     

     

    எங்கள் புதிய அதிநவீன குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் 30 ஆண்டுகால சவாலை முறியடித்து ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    • தகுதி வாய்ந்த சொந்த நாட்டில் பிறந்த அமெரிக்கர்கள் தொழில்நுட்பத்தில் வேலை பெற முடியாத சூழல் உருவாகிறது.
    • தொழில்நுட்பத் துறையில் இன்னும் ஆயிரக்கணக்கில் வேலைகள் நிரப்பப்படாமல் உள்ளதே என்று தெரிவித்தார்.

    பையன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறான் என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தொழில்நுடபத்துறையில் வெளிநாட்டவர்கள் அதிகம் வேலை செய்து வருகின்றனர். கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை முதல் பலர் இதில் அடங்குவர்.

    இந்நிலையில் வெளிநாட்டு தொழிநுட்ப ஊழியர்கள் அமெரிக்க ஊழியர்களின் வேலை வாய்ப்பை பரிக்கிறார்களா என்றும் அமெரிக்காவின் வேலை சந்தையில் வெளிவந்தவர்களின் தாக்கம் குறித்தும் Replit நிறுவனத்தின் CEO அம்ஜத் மசாத் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

    தொழில்நுட்பத் துறையில் தகுதிவாய்ந்த அமெரிக்கர்களை வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

     வெளிநாட்டினர் அனைத்தையும் எடுத்துக்கொண்டதால், தகுதி வாய்ந்த சொந்த நாட்டில் பிறந்த அமெரிக்கர்கள் தொழில்நுட்பத்தில் வேலை பெற முடியாத சூழல் உருவாகி வருகிறதா என்று மசாத் தனது பதிவில் சந்தேகம் தெரிவித்தார். இது உண்மை என்றால் ஆச்சர்யம் தான், ஏனெனில் தொழில்நுட்பத் துறையில் இன்னும் ஆயிரக்கணக்கில் வேலைகள் நிரப்பப்படாமல் உள்ளதே என்று தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்துள்ள உலக பணக்காரருக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், சிறந்த பொறியியல் திறமைகளுக்கு இங்கு நிரந்தர பற்றாக்குறை உள்ளது. இது சிலிக்கான் பள்ளத்தாக்கில் காணப்படும் அடிப்படை காரணியாகும் என்று பதில் அளித்துள்ளார்.

    சிலிகான் பள்ளத்தாக்கு அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கும் பிரதான இடமாகும். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய மஸ்க்கின் கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமெரிக்க அதிபராகும் டொனால்டு டிரம்ப் ஆட்சியில் மஸ்க் முக்கிய பங்காற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் GEN-BETA ஆவர்.
    • இவர்கள் 22 ஆம் நூற்றாண்டை பார்க்க அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியார்கள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது ஜென் Z தலைமுறை டிரெண்டிங்கில் உள்ள நிலையில் 2025 ஜனவரி 1 முதல் Gen-Beta என்ற புதிய தலைமுறை உருவாக உள்ளது.

    2025 முதல் 2039 வரை பிறப்பவர்கள் ஜென் பீட்டா என்று அழைக்கப்படுவர். இந்த தலைமுறையினர் பெரும்பாலும் Gen Alpha மற்றும் Gen Z-க்களின் வாரிசுகளாக இருப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    1998 முதல் 1996 வரை மில்லினியல்கள் என்றும், 1996 முதல் 2010 ஆம் வரை பிறந்தவர்கள் Gen Z என்றும் 2010 முதல் 2024 க்கு இடையில் பிறந்தவர்கள் Gen Alpha ஆல்பா என்றும் அழைக்கப்பட்டு வரும் நிலையில் வரும் புத்தாண்டுடன் இந்த லிஸ்டில் பீட்டா தலைமுறை சேர உள்ளது.

     

    வரும் 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் GEN-BETA-ஆக இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் 22 ஆம் நூற்றாண்டை பார்க்க அதிக வாய்ப்புள்ளது.

    பீட்டா குழந்தைகளின் அன்றாட வாழ்வில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக AI தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவை, பீட்டாவினரின் அன்றாட வாழ்க்கை, கல்வி மற்றும் பணியிடங்களில் சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் முழுமையான ஆதிக்கம் செலுத்தும்.

    தொழில்நுட்பம் அவர்களின் விரல் நுனியில் இருக்கும். அதே வேளையில், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் உலகளாவிய மக்கள்தொகை மாற்றங்கள் போன்ற பல குறிப்பிடத்தக்க சவால்களைக் கொண்ட ஒரு சமூக வாழ்க்கையை பீட்டா தலைமுறையினர் எதிர்கொள்வார்கள். 

    • இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) தெரிவித்துள்ளது.
    • OEMகள் மற்றும் ஆண்ட்ராய்டின் பயனர்களுக்கு இந்த ஆபத்தானது ஏற்படும்.

    ஆண்ட்ராய்டு - Android 12, 12 12L, 13, 14, 15 ஆகிய வெர்ஷன்களை கொண்ட சாதனங்களை பயன்படுத்துவோருக்கு அரசு அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் உபயோக சாதனங்களிலும் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) தெரிவித்துள்ளது.

    மேற்கூறிய வெர்ஷன்களை பயன்படுத்தும் ஆண்டிராய்டு சாதனங்களில் கண்டறியப்பட்ட பாதுகாப்பு கோளாறுகளால் தனிநபர் தகவல்களைத் திருடி தன்னிச்சையாக arbitrary code குறியீடுகளைச் செயல்படுத்தி denial of service (DoS) கட்டமைப்பு மூலம் சைபர் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது.

    CERT-In இன்கூற்றுப்படி அனைத்து OEMகள் மற்றும் ஆண்ட்ராய்டின் பயனர்களுக்கு இந்த ஆபத்தானது ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டிராய்டில் உள்ள, சிஸ்டம், கூகுள் பிளே சிஸ்டம் அப்டேட்கள்,கர்னல் எல்டிஎஸ், இமேஜினேஷன் டெக்னாலஜிஸ், மீடியாடெக், குவால்காம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளால் இந்த பாதுகாப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இதற்கான தீர்வாக, பயனர்கள், தங்கள் சாதனங்களில் பொருத்தமான அப்டேட்களை மேற்கொள்ள CERT-In அறிவுறுத்தியுள்ளது. CERT-In என்பது மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையப் பாதுகாப்பு பணிகளைக் கையாள்வதற்கான அமைப்பாகும்.  

     

    • கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • உலகிலேயே தமிழ் அதிகம் பேசும் மொழி வாிசையில் 15-வது இடத்தில் உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், "உலகை ஆளும் உள்நாட்டுத் தொழில் நுட்பங்கள்" என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், ஆட்டோமொபைல், கட்டிடக்கலை துறை சார்பில் நடந்தது. பல்கலைக்கழக துணைத்தலைவா் எஸ்.சசிஆனந்த் தலைமை தாங்கினார். டி.ஆர்.டி.ஓ. மூத்த விஞ்ஞானி டில்லிபாபு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், உலகிலேயே தமிழ் அதிகம் பேசும் மொழி வாிசையில் 15-வது இடத்தில் உள்ளது.

    இதனை முதல் இடத்திற்கு கொண்டு வரவேண்டும். தமிழில் அறிவியல் தொழில் நுட்பங்களை பதிவு செய்யவேண்டும் என்றார். மெக்கானிக்கல் துறை மூத்த பேராசிரியா் சரவணசங்கா், டீன் ராஜேஷ் வரவேற்று பேசினர். ஐ.எஸ்.ஆர்.ஓ. முன்னாள் இணை இயக்குநா் வளா்மதி "இந்திய பலவகை செயற்கை கோள்கள்" பற்றி பேசினார்.

    புதுடெல்லி – விஞ்ஞான் பிரசார் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன், விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய "அறிவியல் கருத்தரங்கு மலரை" வெளியிட்டார். பேராசிரியா்கள் மெய்யப்பன், உதயகுமார், லிங்கா குளோபல் பள்ளி முதல்வா் அல்கா சா்மா மற்றும் பள்ளி, கல்லுரி மாணவா்கள் கலந்து கொண்டனா். பேராசிரியை கவிதா விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். துறைத்தலைவா் ஆறுமுகபிரபு நன்றி கூறினார்.

    • தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்த மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக கவர்னர் பேசினார்.
    • பட்டங்களை பெற்ற மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    தாயில்பட்டி

    சிவகாசி பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலை அரங்கில் நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். மணிப்பூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பாஸ்கர், விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி, கல்லூரி முதல்வர் மாரிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    சிறப்பு விருந்தினராக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 635 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ஒவ்வொரு துறையிலும் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பட்டமளிப்பு விழா என்பது மாணவர்களுடைய கற்றல் மற்றும் கடின உழைப்பின் வெளிப்பாடாக உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கின்றனர். கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் நடைபெறும் ஒரு செயலாகும்.

    கற்றல், கற்பித்தலில் உள்ள புதிய பரிமான வளர்ச்சியால் மாணவர்கள் கடினமான பாடங்களை எளிய முறையில் கற்றுக்கொள்ள முடிகிறது. இதற்கு உதாரணமாக பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி என்.ஏ.ஏ.சி. ஏ-பிளஸ் தரச்சான்றிதழ் பெற்று மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குகிறது.

    நமது விஞ்ஞானிகள் கொரோனா நோய் தொற்று காலத்தில் புதிய வகை நோய் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து உலக அளவில் திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்கள் மக்களின் உயிர்களை காத்து நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தனர்.

    இன்றைய இளைய தலைமுறையினர், மாணவர்கள் ஆச்சரியப்ப டத்தக்க வகையில் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுமைகளை கண்டுபிடித்து நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றில் வளர்ச்சியை ஏற்படுத்தி நாட்டை வல்லரசாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

    அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிக முக்கியமானது. இது இந்தியாவை வல்லராசாக்கும். தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்துபவராக விளங்க மாணவர்கள் விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும். எழுந்திரு, விழித்திரு வெற்றி அடையும் வரை முயற்சி செய் என்று விவேகானந்தர் கூறினார்.

    மாணவர்கள் தங்களது ஆரோக்கியத்தை ேபணிக்காக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஒழுக்கம், கடினஉழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை, ஆரோக்கியம் ஆகியவற்றை பற்றி எடுத்துக்கூற வேண்டும். இதன் மூலம் இளைய தலைமுறையினர் வளர்ந்து வரும்போது அவர்களது குடும்பம், சமுதாயம் மகிழ்ச்சிஅடைகிறது. இதனால் நாடும் வளர்ச்சி அடைகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பட்டங்களை பெற்ற மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ராஜேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கடந்த ஆண்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் 187 அரிய புராதன சிலைகளை மீட்டு சாதனை புரிந்துள்ளனர்.
    • திருடப்பட்ட சிலை எங்கு இருக்கிறது என்பதனை எளிதாக கண்டறியும் வகையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்திற்கு வருகை தந்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நாகேஸ்வரன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கும்பகோணம் சரக சிலை திருட்டு தடுப்பு பிரிவிற்கான புதிய அலுவலக கட்டிடத்திற்கான கல்வெட்டினை திறந்து வைத்தார். தொடர்ந்து, கும்பகோணம் மற்றும் மதுரையில் சிறப்பாக பணியாற்றிய சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு வெகுமதியுடன், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    இதில், சிலை தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் 187 அரிய புராதன சிலைகளை மீட்டு சாதனை புரிந்துள்ளனர். குறிப்பாக, 1962-ம் ஆண்டு திருடு போன நடராஜர் சிலை மீட்கப்பட்டது சிறப்பிற்குரியது. இந்த சிலைகள் அனைத்தும் இனி எக்காலத்திலும் யாராலும் திருட முடியாத வகையில், சென்னை ஐ.ஐ.டி. உதவியுடன், சமீபத்தில் கைப்பற்றிய 300 சிலைகள் உட்பட அனைத்து சிலைகளும், முப்பரிமான முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரேடியோ ப்ரீக்குவன்ஸி முறையில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும், அப்படி மீறி சிலை திருடப்பட்டால், இது எங்கு இருக்கிறது என்பதனை எளிதாக கண்டறியும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து மேலும் 60 சிலைகளை விரைவில் மீட்க சிலை தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறிளார்.

    ×