search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The woman fell down and died"

    • தலையில் பலத்த காயம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள சித்தாமூர் கிராமம், பாடசாலை தெருவை சேர்ந்த ஏழுமலை வயது 55, விவசாயி.

    இவரது மனைவி பச்சையம்மாள் வயது 50, பச்சையம்மாளுக்கு கண் பரிசோதனை செய்ய அவரது மகன் சந்திரசேகரன் பைக்கில் பச்சையம்மாளை அழைத்து க்கொண்டு செய்யாறு பால் குளிரூட்டும் நிலையம் எதிரில் வந்தவாசி செய்யாறு சாலையில் இரு சக்கர வாகனத்தில் செய்யாறு நோக்கி வந்து கொண்டிருந்தபோது பைக்கில் இருந்து நிலைத்திடுமாறு பச்சையம்மாள் கீழே விழுந்தார்.

    இதில் பச்சையம்மாள் தலையில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது. செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இது சம்பந்தமாக அனக்காவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×