search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The youth who beat the worker to death"

    • தனது மனைவிக்கும், மாரியம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்தவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
    • இவர்களது விஷயம் கணவருக்கு தெரியவரவே அவரை கண்டித்தார். இருந்தபோதும் அவர் தொடர்ந்து மனைவியுடன் பழகி வந்தார்.

    தேனி:

    தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி மாரியம்மன் கோவில்பட்டி மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்குமார் (வயது 38). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மீனாவுக்கும், மாரியம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த தங்கமாயன் மகன் விக்ரம் (28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இவர்களது விஷயம் ஜெகதீஷ்குமாருக்கு தெரியவரவே அவர் விக்ரமை கண்டித்தார். இருந்தபோதும் அவர் தொடர்ந்து மீனாவுடன் பழகி வந்தார்.

    இதனால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி விக்ரமை ஜெகதீஷ்குமார் அடித்துக் கொலை செய்தார். இந்த வழக்கில் ஜெகதீஷ்குமார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். திருப்பூரில் இருந்து தீபாவளி விடுமுறைக்காக ஜெகதீஷ்குமார் தேனிக்கு வந்தார். இதை அறிந்ததும் விக்ரமின் சகோதரர் கவுதம் (31) அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

    ஜெகதீஷ்குமார் தனது வீட்டுக்கு பின்புறம் மது குடித்துக் கொண்டு இருந்ததை பார்த்ததும் அங்கு வந்த கவுதம் மற்றும் அவரது நண்பர்கள் மண்வெட்டி, உருட்டுக்கட்டை மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெகதீஷ்குமார் உயரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து கவுதம் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    ×