என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Theft of money and jewelery"
- வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கம் பணம் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே உள்ள பஞ்சலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி பெரிய தாயி (60). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இருவரு க்கும் திருமணம் ஆகிவிட்டது. கணவர் முத்து ஏற்கனவே இறந்து விட்டார். பெரிய தாயி வீட்டின் அருகிலேயே டிபன் சென்டர் வைத்து நடத்தி வருகிறார்.
பெரியதாயின் 2-வது மகள் அம்பிகா, மருமகன் கருணாகரன் 2 பேரும் பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால் அம்பிகாவின் 3 குழந்தைகளுடன், பெரிய தாய் பஞ்சலிங்க புரத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சம்ப வத்தன்று பெரியதாயி தனது 3 பேரக் குழந்தை களுடன் சின்னம்மாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இரவு அங்கேயே தங்கி விட்டனர்.
பின்னர் காலை பஞ்சலிங்க புரத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் பணம் ரூ.24 ஆயிரம் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வை யிட்டு விசாரணை நடத்தி னர். மேலும் கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்