search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "They are studying in a private college"

    • கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்ததில் சிக்கினார்
    • 3 செல்போன்கள் பறிமுதல்

     கலவை:

    திருவண்ணாமலை மாவட் டம் தண்டராம்பட்டு தாலுகா தென்முடியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்வந்த் (வயது 19), இவர் தனது நண்பர்கள் சரவணன், நித்தீஷ் ஆகியோருடன் ஆற்காடு தோப்புக்கானா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விளாப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை அடுத்த திருவலம் பகுதியில் நடைபெற்ற நண்பரின் திருமணத்திற்கு செல்வதற்காக பைக்கில் 3 செல்போன்களை வைத்துவிட்டு வீட்டின் உள்ளே சென்றுவிட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தனர்.

    அப்போது பைக்கில் வைத்திருந்த 3 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜஸ்வந்த் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் ஆற்காடு நல்ல தண்ணீர் குல தெருவை சேர்ந்த விக்னேஷ் (29) என்பவர் செல்போன்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    ×