search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupali"

    • கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றவும் வழிபாடு நடத்தப்பட்டது.
    • கடந்த ஆண்டில் நடந்த நன்மைகளுக்காக நன்றி செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    நள்ளிரவு 12 மணிக்கு 2023-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதனை முன்னிட்டு தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திரு இருதய பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு நன்றி வழிபாடு திருத்தொண்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. இதில் கடந்த ஆண்டில் நடந்த நன்மைகளுக்காக நன்றி செலுத்தப்பட்டது.

    மேலும் உலக அமைதிக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றவும் வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின்னர் பேராலய பங்கு தந்தை பிரபாகர் தலைமையில் புத்தாண்டு கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. இதில் உதவி பங்குத்தந்தை பிரவீன் மற்றும் பங்கு பேரவையினர், இளைஞர் மன்றத்தினர் உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    இதேப்போல் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயம், தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயம், தஞ்சை குழந்தை ஏசு திருத்தலம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டு கூட்டுத்திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

    • கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு கூட்டு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
    • கேக் வெட்டி முகத்தில் பூசியப்படி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்திற்குட்பட்ட வடக்கு வீதியில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புனித பாத்திமா அன்னை ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது.

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்த புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு கூட்டுத் திருப்பலியில் கலந்து கொண்டனர். முன்னதாக சிலுவை ஆலயத்திற்குள் எடுத்துவரப்பட்டு தூபம் காண்பிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் கூடியிருந்த கிறிஸ்தவர்களுக்கு அருட்தந்தை ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் ஆலயத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூரையில் அமர்ந்து பலர் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

    மேலும் சரியாக 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஆலயமணி ஒலித்தது.அதனைத் தொடர்ந்து திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது.

    இந்த ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் திருவாரூர் நகரத்தின் முக்கிய வீதிகளான தெற்கு வீதி வடக்கு வீதி கீழ வீதி உள்ளிட்ட இடங்களில் தடுப்புகளை வைத்து இருசக்கர வாகனங்களை அனுமதிக்காமல் தடை செய்தனர்.

    சிலர் வீட்டு வாசலில் வைத்து கேக் வெட்டி முகத்தில் பூசியப்படி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ங்களை சோதனைக்கு பிறகே நகரத்திற்குள் அனுமதித்தனர்.

    • கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் மரியாள் எளிமையின் எடுத்துக்காட்டு என்ற பொருளில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.
    • தேர் பவனியை பிஷப் அந்தோனிசாமி புனிதம் செய்து தொடங்கி வைக்கிறார்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் மாதா பிறப்பு பெருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியே ற்றத்தினை தொடர்ந்து நவ நாட்கள் என அழைக்கப்படும் விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர‌பவனியும் திருப்பலியும் நடைபெற்றது.

    மாதா பிறப்பு பெருவிழா வின் 9ம் நாளான இன்று (புதன் கிழமை) மாலை மறைவட்ட‌முதன்மை குரு இன்னசென்ட் மரியாள் -தியாகத்தின் சிகரம் என்ற‌ பொருளில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    விழாவின்‌10 ம்நாள் மற்றும் மாதாவின் பிறப்பு நாள் ஆன‌நாளை (வியாழன்) மாலை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் மரியாள்-எளிமையின் எடுத்துக்காட்டு என்ற பொருளில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    திருப்பலி முடிந்ததும் இரவு 9.30 மணிக்கு மாதாவின் பிறப்பு பெருவிழா தேர் பவனி நடைபெறுகிறது.வண்ண‌மின் விளக்கு அலங்காரத்திலும், மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில்அன்னையின் சுருபம் வைக்கப்பட்டு தேர் பவனியை பிஷப் அந்தோனிசாமி புனிதம் செய்து தொடங்கி வைக்கிறார்.

    தேர்பவனியின் போது நாடெங்கும் இருந்து திரண்டு வந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று வாழ்த்துஒலி முழக்கங்களை எழுப்பி வணங்குவர்.

    தேர்பவனி முடிந்ததும் நாளை மறுநாள் (வெள்ளி கிழமை) காலை 6மணிக்கு திருவிழா திருப்பலி மரியாள் தாய்மையின்‌ தலைப்பேறு என்ற தலைப்பில் கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் நிறைவேற்றுவது டன் கொடி இறக்கப்பட்டு பூண்டி மாதா பேராலயத்தில் மாதா பிறப்பு பெருவிழா நிறைவு பெறும்.

    மாதா பிறப்பு பெருவிழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தையர்கள் அருளானந்தம், ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.மாதாவின் பிறப்பு பெருவிழாவை முன்னிட்டு பேராலய‌ வளாகம்‌ வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

    • திருக்கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்து பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு பெருவிழாவை தொடங்கி வைக்கிறார்.
    • நவநாட்கள் எனப்படும் விழா நாட்களில் தினமும் மாலையில் சிறுதேர்பவனியும் சிறப்பு திருப்பலியும் நடைபெறும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் அமைந்துள்ளது பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா பேராலயம்.

    பூண்டி புதுமை மாதா பேராலயத்தில் மாதா பிறப்பு பெருவிழா நாளை (செவ்வாய்) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது.

    நாளை மாலை பூண்டி மாதாவின் உருவம் வரையப்பட்ட திருக்கொடியை பக்தர்கள் ஏந்தி வர பூண்டி மாதா பேராலயத்தின் முன்புறமுள்ள கொடி மரத்தில் கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் திருக் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்து பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு பெரு விழாவை தொடங்கி வைக்கிறார்.

    கொடியேற்றத்தினை தொடர்ந்து மரியாள்-புதுமைகளின் அன்னை என்ற தலைப்பில் கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படும்.

    நவநாட்கள் எனப்படும் விழா நாட்களில்தினமும் மாலையில் சிறுதேர்ப வனியும் சிறப்பு திருப்பலி அருட்தந்தையர்கள் பீட்டர் பிரான்சிஸ், ஜான்சன், சேவியர் டெரன்ஸ், அடைக்கலம், ஆல்பர்ட், அகிலன் சர்பிரசாதம், பெர்க்மான்ஸ் அருள்தாஸ், சூசை மாணிக்கம், இன்ன சென்ட் ஆகியோரால் நிறைவேற்றப்படும்.

    பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு நாளாக கருதப்படும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ம் தேதி மாலை மரியாள் -எளிமையின் எடுத்துக்காட்டு இன்று மையக்கருத்தை வைத்து சிறப்பு திருப்பலியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் நிறைவேற்றுவார்.

    அதனை தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மல்லிகை மலர்களாலும் சிறப்பு மின் விளக்கு அலங்காரத்திலும் பூண்டி அன்னை யின் சொரூபம் வைக்க ப்படும்.

    அலங்காரத் தேர்ப வனியை பிஷப் அந்தோ ணிசாமி புனிதம் செய்து தொடங்கி வைப்பார்.

    தேர்பவனி நிறைவடைந்த உடன் (செப்டம்பர்) 9-ம்தேதி காலை மரியாள் -தாய்மையின் தலைப்பேறு என்ற பொருளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    அதன் பின்னர் கொடி இறக்கப்பட்டு பூண்டி மாதா திருத்தல பேராலயத்தில்பூண்டி புதுவை மாதாவின் பிறப்பு பெருவிழா நிறைவு பெறும்.

    விழா ஏற்பாடுகளை அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தையர்அருளானந்தம், ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    பூண்டி மாதாவின் பிறப்பு பெரு விழாவை ஒட்டி கோயில் வளாகத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை பூண்டி பேராலய அதிபர் சாம்சன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் திருஇருதய ஆண்டவர் ஆலய பெருவிழா நடந்தது.
    • தினமும் மாலையில் நவநாள் திருப்பலி நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அனைத்து பணிக்குழுக்களின் இயக்குநர் பெனடிக்ட் பர்னபாஸ் தலைமையில் மறைவட்ட அதிபர் சந்தன சகாயம், உதவிப் பங்குத் தந்தை ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய கூட்டுத் திருப்பலியுடன் விழா தொடங்கியது.

    தினமும் மாலையில் நவநாள் திருப்பலி நடந்தது. இறுதிநாளில் மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோனிமுஸ் தலைமையில் மறைவட்ட அதிபர் சந்தன சகாயம், உதவிப்பங்குத் தந்தை ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. அதனைத் தொடர்ந்து விழாவின் சிறப்பு நிகழ்வாக நற்கருணை பவனி ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்பு நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்று கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவுபெற்றது.

    ×